Contact us at: sooddram@gmail.com

 

ஓசோன் படலத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம்

உலகில் வாழும் உயிரி னங்களை சூரியனின் புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்து பாதுகாத்து வரும் ஓசோன் படலத்தின் பாதுகாப்பின் அவசியத்தை உலகமக்கள் அனைவருக்கும் உணர்த்தும் பொருட்டு, ஆண்டுதோறும் செப்டம்பர் திங்கள் 16ம் நாளினை ஓசோன் படலம் பாதுகாப்பு தினமாக பன்னாட்டு அமைப்புகள் அனுசரித்து வருகின்றன. மண்ணில் உயிரினம் பிணியின்றி வாழ்ந்திட விண்ணில் ஓசோன் படலம் ஆற்றிவரும் பணி மகத்தானது. அதனை நினைத்து அதற்கு நன்றி நவிலவும் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உறுதி செய்திடவும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பன்னாட்டு அமைப்புகளும் செப்டம்பர் திங்கள் 16ம் நாளினை ஓசோன் நாளாக ஆண்டுதோறும் அனு சரிக்கின்றன. தற்போது ஓசோன் படலத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அதன் விரிவான சுற்றுச்சூழலின் பாதுகாப்பற்ற தன்மை குறித்தும் அனைவரும் பேசி வருகின்றனர்.

ஓசோன் இருப்பிடம்:

பூமியிலிருந்து சுமார் 15 கி.மீ. முதல் 60 கி.மீ. உயரம் வரை உள்ள வளிமண்டலப் பகுதி படை மண்டலம் என்றழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் தான் ஓசோன் படலம் அமைந்துள்ளது.

இந்த பகுதியில் இயல்பாக இடம்பிடித்துள்ள பிராணவாயு மூலக்கூறு மீது சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சு தாக்குதல் ஏற்படுத்தி இரண்டு பிராணவாயு அணுவாக பிரிக்கப்பட்டு பின் இந்த அணுக்கள் பிராணவாயு மூலக்கூறுடன் கூடி ஓசோன் பிராணவாயு வடிவமாக உருவாகின்றது.

ஓசோனை முதன் முதலாக கண்டறிந்தவர் சி.எப். ஸ்கோன்பின் என்பவராவார்.

ஓசோன் படை மண்டலத்தில் உற்பத்தியானாலும் இதன் 90 விழுக்காடு படை மண்டலத்தின் கீழ் பகுதியில் மட்டுமே உள்ளது. ஓசோன் படலம் முழுமையாக பூமியின் மேற்பரப்பில் மாற்றப்பட்டால் அதன் திண்மம் 25மி.மீ. முதல் 35 மி.மீ. வரை இருக்கும்.

ஓசோன் அளவிடல்:

வளிமண்டலத்தில் ஓசோன் அடர்த்தி டாப்சன் அலகினால் அளவிடப் படுகிறது. ஓர் இடத்தின் மொத்த ஓசோன் உலகில் 230 மி.மீ. முதல் 500 மி.மீ. வரை வேறுபடுகின்றது. ஓசோன் அடர்த்தி கணக்கிட பத்தொன்பது வகையான கருவிகள் உள்ளன.

இந்தியாவில் முதன் முதலாக ஓசோன் அளவிடும் பணி பேராசிரியர் ராமநாதன் என்பவரால் 1919ம் ஆண்டு கொடைக்கானலில் தொடங்கப்பட்டது. 1957ம் ஆண்டு முதல் இந்திய வானிலை ஆய்வுத்துறை ஓசோன் அளவிடும் பணியை ஆரம்பித்தது. இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கீழ் தேசிய ஓசோன் மையம் இயங்கிவருகின்றது. ஓசோன் அடர்த்தியை அளவிட உலகெங்கிலும் சுமார் 450 நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இந்தியாவில் கொடைக்கானால், மவுண்ட் அபு, புதுடில்லி, ஸ்ரீநகர், அகமதாபாத், வாரணாசி, புனே, நாக்பூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஒன்பது இடங்களில் இந்த நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இவற்றில் புதுடெல்லி, புனே மற்றும் திருவனந்தபுரத்தில் மாதமிருமுறை ஓசோன் சோன்ட் பலூன் பறக்கச் செய்து வளிமண்டலத்தின் செங்குத்தான ஓசோன் மற்றும் வெப்ப வடிவுருவம் அளவிடப்படுகின்றன.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் ஓசோன் நிலையங்களால் ஓசோன் அளவினை கண்டறிய டாப்சன் ஸ்பேக்ட்ரோ போட்டோ மீட்டர், ஓளித் திரு சியமானி, சர்பேஸ் ஓசோன் பப்ளர் மற்றும் எலக்ட்ரோ கெமிக்கல் செல் முதலான கருவிகள் பயன்படுத் தப்படுகின்றன. இந்தியாவின் மீதான ஓசோன் அளவு சராசரியாக 280 மி.மீ. முதல் 300 மி.மீ. வரை வேறுபடுகிறது.

அந்தாட்டிக்காவில் ஓசோன் ஓட்டை

அந்தாட்டிகா பனி கண்டத்தில் ஓசோன் அளவு பருவநிலைக்கேற்ப சிறிய அளவிலான மாறுதலுடன் சராசரியாக 300 மி.மீ. நிலவுகிறது. ஆனால் வசந்த காலத்தில் (ஆகஸ்ட்- நவம்பர்) ஓசோன் அளவு சராசரி அளவில் 50 முதல் 60 விழுக்காடு வரை குறைந்து காணப்படுகின்றது. இந்த ஓசோன் குறைவேஓசோன் ஓட்டைஎன்று அழைக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜெ. போர்மன் தலைமையிலான ஆய்வுக் குழு அந்தாட்டிகாவின் ஹாலேபே என்ற நிலையத்தில் 1970 ம் வருட மத்தியில் ஓசோன் அளவான அதன் சராசரி அளவு 350 மி.மீ. ல் இருந்து வெகுவாக குறைந்து 1986ல் இதன் அளவு 190 மி.மீ. ஆக குறைந்து காணப்பட்டதை முதன் முதலாக கண்டறிந்தது.

ஓசோன் அடர்த்தி குறைவிற்கான காரணங்கள்:

குளிர்காலத்தில் அந்தாட்டிகா பனிப்பிரதேசம் மேல் நிலவும் துருவ இரவு அதிவேக காற்று ஓசோன் செறிவு மிகுந்த காற்றினை கீழ் அட்சரேகை பகுதியிலிருந்து துருவப் பிரதேசத்தினுள் அனுமதிக்காதது வசந்த காலத்தில் ஓசோன் அடர்த்தி குறைந்து இருப்பதற்கு ஒரு காரணமாகும்.

ஓசோனின் செங்குத்தான வடிவுருவம் ஆய்வின் வழியே அதன் அடர்த்தி சுமார் 10 கி.மீ. முதல் 20 கி.மீ. உயரத்தில் குறைந்து இருப்பது தெளிவாக காணப்படுகின்றது.

துருவப் பிரதேசத்தில் ஓசோன் அடர்த்தி குறைவதற்கு காரணமாக விளங்குவது துருவ படை மண்டல மேகங்கள். இந்த மேகங்கள் மீது நிகழும் பல்வேறு வகையான வேதியியல் செயல்பாடுகளின் போது குளோரின் வெளிப்படுகின்றது. இந்த குளோரின் அணு ஓசோனுடன் தாக்கம் புரிந்து குளோரின் ஒக்சைட்டை வெளிப் படுத்துவதால் ஓசோன் செறிவு குறைகின்றது.

வளிமண்டலத்தில் படை மண்டல பகுதியில் மேகங்கள் இல்லா திருந்தாலும் அதிவேக காற்று நிலவு வதாலும் அதிகவேக ஜெட் விமானங்கள் வானில் பயணிக்க இந்த பகுதியை பயன்படுத்துகின்றன.

இந்த பகுதியில் பறக்கும் ஒரு ஜெட் விமானம் ஒரு மணி நேரத்தில் சுமார் 3 தொன் நைத்திரிக் ஒக்சைட்டை இயந்திரத்திலிருந்து வெளிப்படுத்து கின்றன. இந்த நைத்திரிக் ஒக்சைட் ஓசோனுடன் தாக்கம் புரிந்து நைதரசனீரொட்சைட்டாகவும் பிராண வாயுவாகவும் மாறி ஓசோனின் அடர்த்தியை குறைக்கின்றன.

குளிர்சாதன பெட்டியில் பயன் படுத்தும் குளோரோ புளோரோ காபன்கள் வளிமண்டலத்தில் வெளிப்படும் போது நுண்ணுயிரிகளால் சிதைவுறுகிறது. படை மண்டலத்தின் கீழ்ப்பகுதியில் கலந்து ஓசோனுடன் தாக்கம் புரிந்து ஓசோனின் அடர்த்தியை குறைத்து குளோரின்களாகவும், பிராணவாயுவாகவும் மாற்றி விடுகின்றன. அண்மையில் பசும் கடில் வாயுக்களும் ஓசோன் குறைவிற்கு காரணமாய் இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது.

ஓசோன் ஓட்டையின் சமீபகாலத்திய நிலை:

சமீப காலங்களில் ஓசோன் ஓட்டையின் பரப்பையும் ஓசோன் செறிவு குறைவினையும் அறிவியல் வல்லுனர்கள் செயற்கை கோள்கள் உதவியுடன் கணக்கிட்டு வருகின்றனர். அந்தாட்டிகாவில் ஓசோன் ஓட்டையின் பரப்பு 1980ம் ஆண்டு முதல் கணக்கிடப்பட்டுள்ளது.

அந்தாட்டிக் காவில் அமைக்கப்பட்டுள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறையின் மைத்தரி ஆய்வகமும் 15 ஆண்டுகளாக ஓசோன் ஓட்டையின் நிலவரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றது. 2000ம் ஆண்டு வசந்த காலத்தில் (ஆகஸ்ட் - நவம்பர்) மிகக் குறைந்த அளவு ஓசோன் 113 மி.மீ. இருந்ததாக இந்த ஆய்வு மையம் பதிவு செய்துள்ளது.

ஓசோன் ஓட்டையின் பரப்பு ஆகஸ்ட் மாதத்தில் 10 மில்லியன் ச.கி.மீ. அளவில் தொடங்கி செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிக அளவிற்கு விரிவடைந்து நவம்பர் மாத இறுதியில் குறைய ஆரம்பித்து டிசம்பர் முதல் வாரத்தில் ஓசோன் ஒட்டை முழுமையாக மறைந்து விடுகின்றது.

கடந்த பத்தாண்டுகளில் ஓசோன் ஒட்டையின் பரப்பு அதிகபட்ச நிலையில் 25 மில்லியன் ச.கி.மீ. ஆக இருந்த நிலைமாறி 2000 ம் ஆண்டில் 28.3 மில்லியன் ச.கி.மீ. ஆக அதிகரித் திருந்தது. இந்த பரப்பளவு அவுஸ் திரேலியாவின் பரப்பளவினை போல் மூன்று மடங்கானது. ஆனால் 2002ம் ஆண்டில் இதன் பரப்பு வெகுவாக குறைந்து 15 மில்லியன் ச.கி.மீ. ஆக இருந்தது.

இது கடந்த இருபது ஆண்டுகளில் மிகக் குறைந்த பரப்பளவு கொண்ட ஓசோன் ஒட்டை என்று கண்டறியப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டில் படை மண்டலத்தின் கீழ்ப் பகுதியின் வெப்பம் அதிகரித்திருந்ததும் மற்றும் துருவ சுழற்சி வலுவிழந்து குறைவான பகுதிக்குள் இருந்ததும் ஓசோன் ஒட்டையின் பரப்பு குறைவிற் கான காரணங்கள் என்பது விஞ் ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

ஓசோன் பூமியில் வாழும் உயிரி னங்களை சூரியன் வெளிப்படுத்தும் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து காப்பாற்றும் போர்வையாக (கம்பளமாக) வளிமண்டலத்தில் இருந்து செயல்படுகிறது. இந்த புற ஊதா கதிர்வீச்சின் காரணமாக கண்பார்வை குறைவும் தோலில் புற்றுநோயும் உண்டாகின்றது.

வளிமண்டலத்தில் ஓசோனின் அடர்த்தி குறைவால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் முழுமையாக உறிஞ்சப்படாமல் பூமியை வந்தடையும் போது பூமியின் உயிரினங்கள் வாழுவதற்கான சூழலின் சமன் நிலையிலும் பாதிப்பு ஏற்படுகின்றது.

பூமியின் சராசரி வெப்பநிலை உயரும், அதே சமயத்தில் வளிமண்டலத்தில் கரியமிலவாயுவின் பங்கும் உயர்கிறது. கரியமில வாயு பூமி வெளிப்படுத்தும் அகச்சிவப்பு கதிர்வீச்சினை உறிஞ்சி பூமியின் சராசரி வெப்பநிலையை மேலும் அதிகரிக்கின்றது.

இந்த விளைவாலும் பூமியின் சராசரி வெப்பநிலை உயரும் போது பனிப்பிரதேசங்களில் மிகவும் அதிகமான பனி உருகி கடல் மட்டம் உயர்கிறது.

கடல் மட்ட உயர்வின் விளைவால் கடலருகே உள்ள பூமியின் பெரும் பான்மையான நிலப்பகுதி நீரால் சுழப்பெற்று உயிரினங்கள் வாழும் நிலப்பகுதி வெகுவாக குறைந்து விடும் அபாயம் பூதாகரமானதாக தெரிகின்றது. கடல்வாழ் உயிரினங்கள் புற ஊதாக் கதிர்வீச்சுக்கு ஆளாகி அழிந்துவிடக்கூடிய அபாயம் உள்ளது.

இவ்விதமான உயரினங்களை வாழ்விக்க வளிமண்டலத்திலிருந்து செயல்படும் ஓசோனின் அடர்த்தி குறையாது காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு மனித வர்க் கத்தினர் அனைவருக்கும் உரியதே. ஓசோனை சிதைக்கும் எந்தவொரு செயல் பாட்டையும் பூமியில் மேற்கொள்ள மாட்டோம் என்று சூளுரைப்போம். 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com