Contact us at: sooddram@gmail.com

 

'ஒரு தெய்வம் தந்த பூவே!'

'பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டி கட்டி
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு
..’

இந்தத் தாலாட்டுப் பாடலைப் பலரும் அறிந்திருப்பார்கள். குழந்தை பிறந்தவுடன், வலிமையான இலுப்பை மரத்தால் செய்த தொட்டிலில் படுக்க வைப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நடைமுறை. பால் வடியும் மரமான இலுப்பை மரத்தொட்டிலில் குழந்தையை உறங்க வைத்தால், தாய்க்கு வற்றாமல் பால் சுரக்கும் என்பதும் நம்பிக்கை. இறுதிச் சடங்கின்போது, இறந்து போனவரின் தலையில் உறவினர்களெல்லாம் இலுப்பைப் பிண்ணாக்கு பொடித்து தயாரிக்கப்பட்ட அரப்பு வைத்து விடுவது இன்றளவும் தொடரும் ஒரு சடங்கு.

எண்ணெய், மருத்துவ உபயோகம், தின்பண்டம் என பல வழிகளில் பிறப்பிலிருந்து இறப்பு வரை தமிழக மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரே மரம்... இலுப்பைதான். நிழல், காற்று, பூ, பழம், விதை என இன்னும் பல அற்புதங்களை அள்ளித் தந்து, அவர்களை நோய் நொடி இல்லாமல் வளமாக வாழ வைத்துக் கொண்டிருந்த பெருமைமிக்க இலுப்பை மரங்கள், இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன என்பதுதான் வேதனையான விஷயம். ஊர் ஊருக்கு இலுப்பைத் தோப்புகள் இருந்த காலம் போய், பல கிராமங்களில் ஒரேயரு இலுப்பை மரத்தைக் கூட பார்ப்பது அரிதாக இருக்கிறது. 'இலுப்பை மரமா... அது எப்படி இருக்கும்?' என்று இன்றைய தலைமுறை கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படி அழிவின் விளிம்பில் உள்ள இலுப்பை மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாபட்டு கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் அப்பாங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை, விஜயன், அய்யாக்கண்ணு உள்ளிட்ட பெரியவர்கள் சிலர்.

இந்த ஊரிலுள்ள சிவன் கோயில், மாரியம்மன் கோயில், அய்யனார் கோயில்... ஆகியவற்றுக்குச் சொந்தமான இடத்தில் இலுப்பை மரங்களைப் பாதுகாத்து வருகிறார்கள். புதிதாக நடவு செய்தும் வருகிறார்கள். அதனால் இந்த கிராமம் 'இலுப்பைத் தோப்புஎன்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பெரும்பாலான இலுப்பை மரங்கள் ஏறத்தாழ 150 ஆண்டுகளைக் கடந்தவை என்பது ஆச்சரியமூட்டும் செய்தி. காலத்தை வென்று கம்பீரமாகக் காட்சி அளிக்கும் அந்த மரங்கள் ஒவ்வொன்றும் 40 அடி உயரத்தில் 12 அடி சுற்றளவு வரையுள்ளவையாக இருக்கின்றன.

இவ்வூரைச் சேர்ந்த 95 வயதைக் கடந்த முதியவர் ரெங்கசாமி சேனாதிபதி, இலுப்பையுடன் கலந்து தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

''சின்னப் புள்ளையா இருந்தப்ப இங்க நூத்துக்கணக்கான இலுப்பை மரங்கள் இருக்கும். பூவெடுக்குற சமயத்துல ஊரே இலுப்பைப் பூ வாசனையில் கமகமக்கும். சாயங்கால நேரத்துல ஏகாந்தமா இருக்கும். அந்தக் காத்தை சுவாசிச்சாலே நோய், நொடி அண்டாது.

வெளவால் தின்னு போடுற இலுப்பைக் கொட்டைகளை நாங்க பொறுக்கிட்டுப் போய் வெயில்ல காயவெச்சு உடைச்சு பருப்பெடுப்போம். அதை செக்குல கொடுத்து ஆட்டி எண்ணெய் எடுத்து கோயில், வீடுனு விளக்கேத்துறதுக்கு பயன்படுத்துவோம். இந்த எண்ணெயில வர்ற புகையை சுவாசிச்சா... உடம்புக்கு நல்லது.

ஒரு மரத்துல வருஷத்துக்கு 50 கிலோவுக்கு மேல பருப்பு கிடைக்கும். ஒரு கிலோ பருப்பை செக்குல கொடுத்து ஆட்டுனா... 300 மில்லி எண்ணெய் கிடைக்கும். இலுப்பைப் புண்ணாக்கு, இலை ரெண்டுமே நிலத்துக்கு உரமாவும் பயன்படும். சுமார் 30 வருஷத்துக்கு முன்ன வரை, இதையெல்லாம் பயன்படுத்திதான் மண்ணை வளமாக்கி, செழிப்பா விவசாயம் செய்தோம்'' என்று நினைவலைகளில் நீந்தினார்.

இதே கிராமத்தைச் சேர்ந்த மூலிகை மருத்துவர் கதிரேசன், ''இலுப்பை ஒரு மூலிகை மரம். அதுல நிறைய நோய்களுக்கான மருந்து இருக்கு. முன்ன இலுப்பை எண்ணெயைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துவாங்க. அதுல செய்யுற பலகாரங்களும்., சாப்பாடும் அவ்வளவு ருசியா இருக்கும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், இடுப்புவலி, மூட்டுவலி, வாயுக் கோளாறு... மாதிரியான எல்லா பிரச்னைகளுக்கும் இலுப்பை எண்ணெய்தான் மருந்து. புண்ணைக்கூட இந்த எண்ணெய் ஆத்திடும். ஆடு, மாடுகளுக்குக்கூட புண் வந்தா, இதைத்தான் தடவுவாங்க.

வெளிர் மஞ்சள் நிறத்துல இருக்குற இலுப்பைப் பூ கூட அற்புதமான மருந்து. இதை மூணு நாள் காய வெச்சு, நரம்பை நீக்கி, மண் சட்டியில வறுத்து சாப்பிட்டா... தோல் சம்பந்தபட்ட வியாதி, விரைவாத நோய் எல்லாம் குணமாயிடும். இலுப்பைப் பூ, கருப்பட்டி, சீரகம், மிளகையெல்லாம் போட்டு இடிச்சு, உருண்டையாக்கி, குழந்தைகளுக்கு கொடுத்தா... கணை நோய் நீங்கிடும். இதய நோய், பாம்புக்கடி, அசதி, ஆண்மைக் குறைவு, வாந்தி, பித்தம், காய்ச்சல்னு பல நோய்களுக்கு இலுப்பைப் பூவுல மருந்து தயாரிக்கறாங்க.

இலுப்பை இலை, பட்டையை வெந்நீரில் போட்டு குளிச்சாலும், தோல் நோய்கள் ஓடிடும். இலுப்பைப் பிண்ணாக்கைத் தலையில தேய்ச்சுக் குளிச்சா பேன், பொடுகெல்லாம் காணாம போயிடும். முடி கொட்டுறது நின்னுடும். இதை, சர்வரோக நிவாரணினே சொல்லலாம்'' என்று இலுப்பை புகழ் பாடினார்.

மர மீட்புக்குழுவைச் சேர்ந்த அண்ணாமலை, ''முன்ன கோயில் நிலங்கள்லதான் இலுப்பை மரங்கள் அதிகமா இருக்கும். அதனால அதை வெட்டுனா... தெய்வக் குத்தமாயிடும்னு பயம் இருந்துச்சு. அதனால, மரங்கள் பாதுகாப்பா இருந்துச்சு. காலப்போக்குல கோயில் நிலத்தையெல்லாம் ஆளாளுக்கு ஆக்கிரமிச்சுட்டாங்க. அதோட, அரசாங்கமும் பலவிதமான பயன்பாட்டுக்கு கோயில் நிலத்தைப் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டதால, அதுல இருந்த மரங்களையெல்லாம் வெட்டுனதுல இலுப்பை அழிஞ்சு போச்சு. மிச்சமிருக்குற மரங்களையாவது பாதுகாக்கணும்றதுக்காக 'இலுப்பை மரங்களை வெட்டக் கூடாது’னு ஊர்ல முடிவெடுத்திருக்கோம்.

வெளவால் மாதிரியான ஜீவன்கள் சாப்பிட்டு போடற கொட்டைகள் மூலமாவும் மரங்கள் முளைக்கத் தொடங்கியிருக்கு. ஊராட்சி மன்றத் தலைவர் அப்பாங்கத்தோட முயற்சியால கோயில், பள்ளிக்கூடம், கல்யாண மண்டபம்னு பல இடங்கள்ல இலுப்பைக் கன்னுங்கள நடவு பண்ணி, வளர்த்துக்கிட்டு இருக்கோம். ஆர்வத்தோடு வர்றவங்களுக்கு விதைகளை இலவசமா கொடுக்க தயாரா இருக்கோம்'' என்றார் ஆவல் பொங்க.

சிவனும் இலுப்பையும !

'சித்திரையில் மழை பெய்தால்... சிவனுக்கு ஆகாது!’ என்றொரு பழமொழி உண்டு. அதாவது, 'இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால்தான் சிவபெருமானுக்கு மனம் குளிரும்என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில்தான் இலுப்பை மரத்தில் பூக்கள் பூக்கும். அந்த சமயத்தில் மழை பெய்தால், பூக்கள் உதிர்ந்து விதைகள் உருவாகாமல் போய் விடும். சிவபெருமானுக்கு தீபம் ஏற்றுவதற்கான இலுப்பை எண்ணெய்க்குத் தட்டுப்பாடு வந்துவிடும் என்பதால்தான் இப்படியரு பழமொழி.

இன்றும் ஆம்பலாபட்டு கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் இலுப்பை எண்ணெயில்தான் தீபம் ஏற்றப்படுகிறது. அதைப் பற்றி பேசிய கோயில் பூசாரி முருகையன், 'இந்த எண்ணெயில தீபம் ஏத்தினா, ரொம்ப நேரத்துக்கு நின்னு விளக்கு எரியும். இப்போ ஒரு லிட்டர் இலுப்பை எண்ணெய் 180 ரூபாய் வரை விலை போகுது'' என்றார்.

கோயிலுக்கும் இலுப்பைக்கும் உள்ள தொடர்பு எண்ணெயோடு நின்று விடவில்லை.... கோயிலின் கதவுகள், தூண்கள், உத்தரம், தேர் என்று பல்வேறு உபயோகங்களுக்கும் இலுப்பைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதைப் பற்றி தேர்கள் செய்வதில் ஈடுபட்டிருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்தபதி சிவநேசன் கூறும்பொழுது, ''தேக்கு போலவே இதுவும் வலிமையான மரம். பால்சத்து நிறைந்த இந்த மரத்தை கரையான் அரிக்காது. அப்படியே அரித்தாலும், கடைசியில் மண்ணாக மிஞ்சும் துகள்கள் மீது தண்ணீர் தெளித்தால், அதில்கூட பால் சத்து தங்கியிருக்கும். இதுதான் இலுப்பையின் அதிசய குணம்.

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இலுப்பை மரத்தால் செய்யப்பட்ட தேர்கள்கூட, இன்றளவும் தமிழகக் கோயில்களில் திடமாக உலா வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக சோழமண்டலத்தில் இருக்கும் கோயில்களுக்கு இந்த மரத்தை அதிகம் பயன்படுத்தியுள்ளனர். இந்தப் பகுதியில இலுப்பை மரங்கள் நிறைய இருந்ததுதான் காரணம்.

தேரில் உள்ள சிம்மாசனம், தேவாசனம், நடவாசனம், உருதலம், பூதப்பார் உள்ளிட்ட பெரும்பாலான பாகங்களை இன்றைக்கும் இலுப்பையில்தான் செய்கிறோம். சுமார் 60 வருடங்களை கடந்த மரங்களைத்தான் இதற்குப் பயன்படுத்துகிறோம். அதுபோன்ற மரங்களில்தான் முழுமையாக வைரம் பாய்ந்திருக்கும். ஒரு கன அடி இலுப்பை மரம் 900 முதல் 1,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. படகு செய்யவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். உப்புத் தண்ணீரிலும் இது தாக்குப் பிடிக்கும் என்பதுதான் காரணம்'' என்று இலுப்பை பற்றி புகழ்ந்தார்.

தஞ்சை பெரியக் கோயிலில் அமைந்திருக்கும் அம்மன் சந்நிதியின் வாயிற் கதவுகள், இலுப்பை மரத்தால் செய்யப்பட்டவை... இன்றைக்கும்  ொலிவோடு திகழ்கின்றன. இவை உருவாக்கப்பட்டு சுமார் 400  வருடங்கள் இருக்கலாம் என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com