Contact us at: sooddram@gmail.com

 

அண்ணன் என்னடா தம்பி என்னடா அரசியல் மயமான உலகத்திலே!

மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார் என்பதே கடந்த வாரம் தமிழ் மக்களால் அதிகம் பேசப்பட்ட விடயமாகும். ரணிலை ஒரு நம்பிக்கைத் துரோகி என்றும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவருடன் கூட்டணி என்பது கிடையவே கிடையாது என்றும் அனல் பறக்கும் அறிக்கைகளை அள்ளி வீசி ஆறு மாதங்களே கடந்த நிலையில் அவரைச்சந்தித்துக் கலந்துரையாடியமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அண்ணன் மனோவின் இந்தச் சந்திப்பு விவகாரம் குறித்துத் தம்பி பிரபாவிடம் கேட்டபோது பொரிந்து தள்ளினார். ரணில் எமக்கு முதுகில் மட்டுமல்ல நெஞ்சிலும் குத்தியவர்.

தேசியப்பட்டியலில் ஒரு இடம் தருவதாக மிக நம்பிக்கையான உறுதிமொழியை வழங்கி தேர்தலில் தமிழ் மக்களது வாக்குகளை எம்மூலமாக அபகரித்து பின்னர் எம்மை ஏமாற்றியவர்.

அவருடன் மீண்டும் தேர்தல் கூட்டு வைப்பதானது கேலிக் கூத்தான விடயம். அத்துடன் மீண்டுமொருமுறை மனோ கணேசன் ஏமாற்றப்படப் போவது நிச்சயம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

மனோ கணேசனுக்கு மீண்டுமொரு தடவை ரணில் விக்கிரமசிங்க ஆசை வார்த்தைகளை அவிழ்த்து விட்டு வருகிறார். கொழும்பில் தமிழ் மக்களது வாக்குகளை அபகரிப்பதற்காக மனோவை மாநகர் முதன்மை வேட்பாளராக நிறுத்துவதாக ரணில் தனது சகாக்கள் மூலமாக தூது விட்டுள்ளார்.

ஆனால் இது ஒருபோதும் நடக்க முடியாத செயல். மனோ கணேசனை சுயமாகச் சிந்திக்க விடாது தடுப்பதே ரணிலின் கபட நோக்கமாகும். மனோ தனியாக ஒரு அணியை நிறுத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி ஓரிரு ஆசனங்களைப் பெறுவதே கடினம்.

அத்துடன் இம்முறை அரசாங்கக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பலமான அணியைக் கொழும்பில் களமிறக்கவுள்ளது.

பெரும்பாலான தமிழ் மக்கள் இம்முறை நிச்சயம் அரசாங்கக் கட்சிக்கே ஆதரவு வழங்குவார்கள். ஐக்கிய தேசியக் கட்சி தமது கோட்டையாகக் கருதிவரும் கொழும்பு மற்றும் தெஹிவளை - கல்கிஸை மாநகர சபைகள் இம்முறை நிச்சயம் வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது.

கொழும்பு மாநகரைப் பொறுத்த வரையில் அங்கு சிறுபான்மையின மக்களாகிய தமிழரும், முஸ்லிம்களுமே பெரும்பான்மையாக உள்ளனர்.

இந்நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்துக் கொள்வதற்காகவே ரணில் கபட நாடகமாடி வருகிறார். இந்த கொழும்பு மாநகரையும் விட்டுவிட்டால் அவருக்கு நாட்டின் எப்பகுதியிலும் ஒரு உள்ளூராட்சி சபை ஆட்சியும் இல்லாது போய்விடும்.

இதற்காகவே மனோவை வைத்து ரணில் சூட்சுமமாக காய் நகர்த்தி வருகிறார். ஆனால் ரணிலோ அல்லது ரணிலின் தந்திரமான செயற்பாட்டுக்கு ஆதரவு நல்க முனையும் மனோவோ இம்முறை கொழும்பைக் கைப்பற்றலாம் என்பதைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.

ஏனெனில் தமிழ் மக்கள் சார்பில் கொழும்பில் இம்முறை திறமையான, பிரபல்யமான சிலரை நாம் அரசாங்கக் கட்சியுடன் இணைந்து களமிறக்கவுள்ளோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே சண்டையை முட்டிவிடும் செயலிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர். அண்ணன் மனோவின் அரசியல் பணிகளுக்கு ஆரம்பகாலம் முதலே உறுதுணையாக இருந்தவர் தம்பி பிரபா.

அதேபோன்று தம்பி பிரபாவை பாராளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்க்க விரும்பியே கொழும்பில் அவரை நிறுத்தி வெற்றியும் காண வைத்தவர் அண்ணன் மனோ.

அதன் பின்னர் ரணில் செய்த கபடத்தினால் அண்ணனும், அரசின் நற்செயற்பாடுகளில் கவர்ந்து அதனுடன் இணைந்து ஈடுபட முனைந்த தம்பியின் முடிவும் இருவரையும் தற்காலிக அரசியல் எதிரிகளாக்கிவிட்டது.

இன்று இருவரும் தமது பிரச்சினைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு தமக்கு வாக்களித்த தமிழ் மற்றும் மக்களுக்கும் ஏதாவது செய்ய முனைய வேண்டும். உங்களது பிரச்சினை அண்ணன் தம்பி பிரச்சினை. அரசியலினால் ஏற்பட்ட பிரச்சினை. உங்களை அரசியல்வாதிகளாக்கியது மக்கள்.

எனவே மக்கள் தமது விருப்பத்தைத் தெரிவிக்க அவர்களுக்குச் சந்தர்ப்பத்தை வழங்குங்கள். அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு பிரபா கணேசன் எடுத்திருக்கும் முடிவைப் பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர்.

அதேபோன்று அன்று மனோவிற்கு ரணில் துரோகமிழைத்தபோது, அவர் ரணிலை இனி ஒருபோதும் சந்திக்க மாட்டேன். அவருடன் கூட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்த முடிவையும் மக்கள் வரவேற்றனர்.

ஆகவே இன்று உங்களுக்குள் பிரச்சினையை வளர்க்காமல் மக்கள் விரும்புவது போல ரணிலைத் துரோகம் செய்தவராகக் கருதி அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கி உங்களுக்கு வாக்களித்த மக்களுக்குச் சேவையாற்ற முன்வாருங்கள்.

ஆரம்பத்தில் தம்பிக்கு அண்ணன் வழிகாட்டி நடத்தினார். இப்போது தம்பி அண்ணாவை நல்வழிகாட்டி இணைந்து செயற்பட அழைப்பு விடுத்துள்ளார். இதில் உயர்வு தாழ்வு பாராது சேவையை மட்டுமே பார்க்க வேண்டும்.

எதிர்க்கட்சியிலிருந்து கூக்குரலிடுவதிலும் பார்க்க ஆளுங்கட்சிக்கு அனுசரணையாக இருந்து காரியத்தை வெல்வதே உசிதம். இன்று பிரபா கணேசன் கொழும்பு மத்திய பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் மூலம் அவர் தனது தொகுதி மக்களுக்குப் பல சேவைகளை ஆற்ற முடியும்.

கொழும்பில் எத்தனையோ சேரித் தோட்டங்கள் முறையான தண்ணீர் வசதியின்றியும், மலசலகூட வசதியின்றியும் காணப்படுகின்றன. அத்தோட்டங்கள் பலவற்றில் எமது தமிழ்பேசும் மக்களே உள்ளனர். இவர்களே உங்களுக்கு வாக்குகளை அளித்தவர்கள். எனவே அவர்களுக்கு நன்றிக்கடனாக நீங்கள் சேவையாற்ற வேண்டும்.

எதிர்க்கட்சியிலிருந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதால் இப்பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. இப்போது ஆளுங்கட்சியுடன் இணைந்துள்ளதால் பிரபாவிடம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மனோ கணேசனுக்கு இரு தடவைகள் வாக்களித்த கொழும்பு தமிழ் மக்களுக்கு அரச அதிகாரம் கொண்டு அவர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. காரணம் அவர் கூடுதல் காலம் எதிரணியிலேயே அரசியல் நடத்தினார்.

ஆனால் பிரபா இதனைச் சரியாகப் புரிந்துகொண்டு அரசுடன் இணைந்து மக்களுக்குச் சேவையாற்றப் புறப்பட்டுவிட்டார். தம்பியாரைப் பார்த்து அண்ணனும் பயணிப்பதே சிறந்தது. ஏனெனில் இனியும் ரணிலிடம் சென்று மூக்குடைபட வேண்டுமா? மக்களுக்குச் சேவை செய்தற்காகவேனும் இருவரும் இணைய வேண்டும். அதுவே மக்களது விருப்பம்.

(மு. கந்தசாமி)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com