Contact us at: sooddram@gmail.com

 

அரசுடன் பேச்சுவார்த்தை தொடருமாம்! அரசுக்கு எதிரான பிரசாரங்களும் தொடருமா?

அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய முதற்கட்டப் பேச்சுவார்த்தை திருப்தி அளித்துள்ளதாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இது தொடரும் எனவும் தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியான விடயம். எப்படியாவது பேச்சுவார்த்தையை நடத்தி தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு ஒன்றினை இவர்கள் பெற்றுத்தருவார்கள் என்பதே தமிழ் மக்களது நம்பிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஆனால் கூட்டமைப்பு வழமை போன்று, பேசிவிட்டு வந்ததற்காக இப்படி ஒரு சாதகமான அறிக்கையை விட்டுவிட்டு பின்னர் பழைய குருடி கதவைத்திறவடி என்பது போல அரசாங்கத்தை வசைபாடுவார்களோ எனும் சந்தேகம் தமிழ் மக்களிடையே உள்ளது. அப்படி அவர்கள் செயற்பட்டால் இவ்வாறான பேச்சுவார்த்தைகள் எதற்கு? எனும் கேள்வியும் மக்கள் மனங்களில் எழுகிறது.

இதற்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாதான் பதில் கூறவேண்டும். இனியும் உங்களது அங்கத்தவர்களையும், அவர்கள் விடும் அறிக்கைகளையும் கொஞ்சமாவது அவதானித்து அனுபவமில்லாத அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். இல்லையேல் அவர்களுடன் சேர்ந்து நீங்களும் விளையாட்டுப் பிள்ளையாகி விடுவீர்கள். பாதிக்கப்படுவது மக்கள்தான். புலிகளை நம்பி அந்த அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டது போதும், இனியும் தாங்க அம்மக்களுக்குச் சக்தி இல்லை.

முன்னர் பாராளுமன்றத்தில் நல்லெண்ணத்தைக் காட்டுவதாகத் தெரிவித்த கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தின் போது எதிர்த்து வாக்களிக்காமல் இருந்தது. ஆனால் அடுத்த தினமே அரசாங்கத்திற்கு எதிராக அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைகளை விட்டும் கருத்துக்களைத் தெரிவித்தும் இருந்தனர். அதேபோன்று வடக்கில் நிவாரணப் பொருட்கள் விநியோகத்தில் ஒத்துழைப்பு நல்கிக்கொண்டே எதிராகக் கதைத்தும் வந்தனர்.

அரசாங்கத்துடன் கூட்டமைப்பு நடத்திய இந்த முக்கியமான ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைக்கு அவர்களது சூடான செய்திகளை உடனுக்குடன் சுடச்சுட வெளியிடும் எந்தவொரு முகவரியற்ற இணையத்தளங்களும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதன் மர்மம்தான் என்ன? ஆனால் வழமை போன்று உள்நாட்டுப் பத்திரிகைகளிலோ தொடராக தலைப்புச் செய்திகள்தான். சந்திக்க முன்னரும் தலைப்புச் செய்தி, சந்தித்த பின்னரும் தலைப்புச்செய்தி.

அரசாங்கத்திற்கு எதிராக கூட்டமைப்பு விடும் அறிக்கைகளையும், பேட்டிகளையும், கருத்துக்களையும் வெளியிடும் இந்த இணையற்ற இணையத்தளங்களில் இத்தகைய ஒரு முக்கிய செய்திக்கு இருட்டடிப்பு செய்யப்பட்டது எவ்வாறு? தமிழ் மக்களுக்குத் தீர்வு ஒன்று தொடர்பாக அல்லது தீர்வுக்கான முன்னேற்பாடு தொடர்பாகவே கூட்டமைப்பினர் அரசுடன் பேச ஆரம்பித்துள்ளனர். அவ்வாறாயின் இந்த புலம்பெயர் இணையத்தளங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை விரும்பவில்லையா? அல்லது கூட்டமைப்பினர்தான் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமென அவற்றைக் கேட்டார்களா? அனும் சந்தேகமும் எழுகின்றது

அரசுக்கு எதிராகப் பாய்ந்து விழுந்து செய்திகளைக் கொடுக்கும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் இந்த நல்ல விடயம் தொடர்பாக மெளனம் சாதித்தது ஏன்? அப்போ புலம்பெயர் சமூகத்திற்கு ஒரு முகத்தையும், உள்நாட்டில் இன்னொரு முகத்தையும் கூட்டமைப்பு காட்டி வருகிறது என்ற குற்றச்சாட்டு உண்மையாகின்றதா? அல்லது இவர்களது அரசுக்கெதிரான செய்திகளையும், அறிக்கைகளையும் வெளியிடும் இணையத்தளங்கள் வெளிநாடுகளிலுள்ள புலிகளின் பின்னணியில் இயங்குகின்றனவா எனும் கேள்வியும் எழுகின்றது.

அப்படி அவை புலிகளின் பின்னணியில் இயங்குவதாயின் அவற்றுக்கு எப்படி, இவர்கள் நேரடியாக பேட்டிகளைக் கொடுத்து வருகிறார்கள்? இவர்களைத் தொடர்பு கொள்வது யார்? அவர்களது இருப்பிடங்கள், தொலைபேசி இலக்கங்கள் இவர்களுக்குத் தெரியுமா? அந்தக் குழுவினருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? எப்படித் தொடர்பு? இவை ஆராயப்பட வேண்டிய விடயங்களே!

எது எவ்வாறு இருப்பினும் கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் நேரடியாகப் பேச முனைந்தமை நல்ல விடயமே. வெறுமனே அரசுக்கு எதிராக அறிக்கைகளை விடுவதால் பலனில்லை.

இனிவரும் காலங்களில் அவற்றைத் தவிர்ந்து கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அரசாங்கத்தின் நேரடிக் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் உறவுகளுக்கு நஷ்ட ஈட்டினைத் துரிதகதியில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காணாமல் போயுள்ளவர்கள்.யாராவது உயிருடன் இருக்கிறார்களா? எனக்கண்டறிய வேண்டும். மீளக் குடியேறியுள்ள மக்களுக்குச் சகல வசதிகளும் கிடைக்கின்றதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

சிறையில் வாடும் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள புலிகள் தொடர்பாகவும், அவர்களது புனர்வாழ்வு தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும். வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். சுயதொழில் முயற்சிகளுக்கு கடன்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். முல்லைத்தீவிலும், கிளிநொச்சியிலும் அழிவுற்றுக் கிடக்கும் பகுதிகளைப் புனரமைக்க வேண்டும். மக்களுடன் மக்களாக நின்று பணியாற்ற அம்மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும். இவ்வாறு பல பணிகள் கூட்டமைப்பு முன்னால் இப்போது வந்துள்ளன. அரசாங்கத்துடன் இவர்கள் பேசுவதானால் இவற்றைச் செய்தே ஆகவேண்டும். மக்களுக்காக தமது நேரத்தையும் துறந்து அரசாங்கத்திடம் கேட்டுப் பெற்று அம்மக்களுக்குத் தேவையானவற்றைக் கேட்டறிந்து கொடுக்க வேண்டும். இது கூட்டமைப்பு உறுப்பினர்களால் நடைபெறச் கூடிய காரியமா? எனினும் பொறுத்திருந்து பார்ப்போம்.

இவைதான் இனிவரும் காலங்களில் கூட்டமைப்பின் நல்லெண்ணங்களாக இருக்க வேண்டுமே தவிர வெறுமனே அரசாங்கத்தின் அன்றாடப் பணிகளுக்கு ஒத்துழைப்பதாக அமைந்துவிடக் கூடாது. அவை அரசாங்கம் வழமையாகச் செய்வது போன்று மக்களுக்குச் செய்து கொண்டே இருக்கும். அது கூட்டமைப்பு அரசுடன் பேச்சுக்கு வராதுவிட்டாலும் நடைபெறும் செயற்பாடு.

எனவே கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக அறிக்கை தயாரித்து இணையத்தளங்களுக்கு வழங்கி புலம் பெயர் சமூகத்தின் ஆதரவைத் தேடாமல் உள்நாட்டிலுள்ள உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏதாவது செய்ய எத்தணிக்க வேண்டும்.

புலம்பெயர்ந்தவர்களால் உங்களுக்கு என்ன இலாபம்? தேர்தல் காலங்களில் செலவுக்குப் பணம் கொடுத்தால் அவர்களுக்கு பயப்பட வேண்டுமா என்ன? உள்ளூரில் வாக்களித்த மக்கள் உங்களை இப்போது மிகவும் உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கியுள்ளனர். இனியும் அவர்கள் வாக்குகளை அளித்துவிட்டு ஏமாறத் தயாரில்லை.

இதுவரை காலமும் அரசாங்கத்துடன் எதிர்ப்பாக நின்றதனால் எதனையும் செய்ய முடியவில்லை என கூட்டமைப்பிலுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதங்கப்பட்டதுண்டு. ஆனால் இன்று அவ்வாறு தட்டிக்கழிக்க முடியாது. நீங்கள் இதய சுத்தியுடன் ஒரே முகத்துடன் நடந்து கொண்டால் அரசாங்கம் உங்களை நம்பி சகலவற்றையும் செய்யும் என உங்களை விட உங்களுக்கு வாக்களித்த மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். எனவே இணையத் தளங்களைத் துறந்து இணையற்ற உங்கள் மண்ணுக்கும், மக்களுக்கும் சேவையாற்ற இனியாவது முன்வாருங்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com