Contact us at: sooddram@gmail.com

 

நச்சு வாயுவை வெளியேற்றும்
வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்

வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுவாயு கலந்த புகை சுற்றாடலை அசுத்தப்படுத்தி தீங்கிழைப்பதனால், உலகில் வருடாவருடம் சராசரியாக 40 இலட்சம் மக்கள் மரணிக்கிறார்கள். இது இலங்கையிலும் பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. நச்சு வாயு கலந்த கரும்புகையை வெளியேற்றும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எமது நாட்டின் வாகன போக்குவரத்து சட்டங்கள் போதியளவு அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்குகின் றன. என்றாலும், இது விடயத்தில் பொலிஸாரோ, வாகனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் அரசாங்க திணைக்களமோ இச்சட்டங் களை கடுமையாக கடைப்பிடிப்பதில் அந்தளவுக்கு ஆர்வமோ, அக்கறையோ காட்டி வருகிறார்கள் என்று கூறுவதற்கு இல்லை.

போக்குவரத்து பொலிஸார் வீதிகளில் வாகனங்களை ஓட்டிச் செல் லும் சாரதிகள் மதுபோதையில் இருந்தால், அவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து நீதிமன்றங்களின் மூலம் கடுமையான தண்டனைகளையும் விதிப்பதற்கு தயக்கம் காட்டுவது இல்லை.

ஆனால், மதுபோதையில் வாகனத்தை ஓட்டும் ஒரு சாரதி விபத்தில் ஒரு சிலரை பலிகொள்ளும் பாரதூரமான குற்றத்தை செய்கிறான் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆயினும், தனது வாகனத்தின் இயந்திரம் பழுதடைந்து அதன் மூலம் நச்சுவாயு கலந்த கரும்புகை வெளியேற்றப்படுவதனால், ஒரு நாளை க்கு ஒரு வாகனத்தின் மூலம் நூற்றுக்கணக்கானோர் குறிப்பாக, வள ர்ந்து வந்தவர்கள் மட்டுமின்றி, பாடசாலை மாணவ, மாணவிகளும் சுவாசம் தொடர்பான பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகிறார்கள். இதனால், அவர்களுக்கு ஏற்படக்கூடிய இருமல், காய்ச்சல் மற்றும் சுவாசப்பையில் ஏற்படக்கூடிய சளிச்சுரம் போன்ற நோய்களினால் நாளாந்தம் ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகி பல சந்தர்ப் பங்களில் மரணத்தையும் தழுவிக் கொள்கிறார்கள்.

இதனால்தான், நல்ல சுகதேகிகளாக பாடசாலைக்கு சென்று விளையா டிக் கொண்டிருக்கும் சில சிறுவர், சிறுமியர்கள் திடீரென்று சுவாசம் தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டு, எவரும் எதிர்பாராத நேர த்தில் மரணமடையும் சம்பவங்களையும் எத்தனையோ சந்தர்ப்பங்க ளில் நாம் அவதானித்தும், வேதனை பட்டிருக்கிறோம்.

இதற்காக, தற்போது, வைத்தியர்களுக்கு விழிப்பூட்டுவதற்கான பயிற் சிப் பாசறை ஒன்று கடந்த 15ம் திகதி கொழும்பில் நடத்தப்பட்டது. ரோமாபுரியின் வைத்திய கல்லூரியின் சுவாசம் தொடர்பான நோய் களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவின் தலைவர் மரியோ கசோலா இந்த பயிற்சி பாசறையை வெற்றிகரமான முறையில் நடத்தினார். இவ்விதம் சுகாதார அமைச்சு இந்நோயினால் பாதிக்கப்படுபவர்க ளுக்கு சிகிச்சை அளித்து, அவர்களை சுகதேகிகளாக மாற்றும் பணியை மிகவும் சிரமப்பட்டு நிறைவேற்றி வருகிறது.

நச்சுவாயு கலந்த கரும்புகையை வாகனங்கள் வெளியேற்றும் போது, அதனால் நோய்வாய்ப்படும் ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சைய ளிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும், இவ்விதம் நச்சுவாயுவை வெளியேற்றி எமது நாட்டு மக்களுக்கு தீங்கிழைக்கும் வாகன சொந்தக்காரர்களுக்கு எதிராக பொலிஸாரோ, வாகன போக்குவரத்து திணைக்களமோ தீவிர நடவ டிக்கைகளை எடுப்பதில் அசமந்தப் போக்கை கடைப்பிடித்து வரு கிறார்கள்.

இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டும் நல்ல நோக்கத்துடன், கிளின் கோ லங்கா சுற்றாடலுக்கு பாதுகாப்பு அளிக்கும் திட்டத்தின் கீழ் வாக னங்கள் புகையை வெளியேற்றுகின்றனவா என்பதை கண்காணிப்ப தற்காக, இப்போது நாட்டின் பல பகுதிகளில் வாகன சோதனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையங்களில் சம்பந் தப்பட்ட வாகனங்கள் வீதி போக்குவரத்துக்கு உகந்தவை என்ற சான்றிதழை அளித்தால் மாத்திரமே, அவற்றை வீதிகளில் ஓட்டிச் செல்வதற்கு இனிமேல் அனுமதியளிக்கும் புதிய நடைமுறையும் இப்போது ஆமை வேகத்தில் அமுலாக்கப்பட்டு வருவது குறித்து, நாம் ஓரளவு மகிழ்ச்சியடையத் தான் வேண்டும்.

கடந்த ஆண்டின் ஜூன் மாதம் அளவில் இப்பணியை செய்யும் இர ண்டு நிறுவனங்கள் தங்கள் நிலையங்கள் மூலம் 37 இலட்சம் வாக னங்களை பரிசோதித்து, அவற்றிற்கு சான்றிதழ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான சட்டதிட்டங்களை அரசாங்கங் கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, அவற்றை அமுல்படுத்தும் பொறுப்பை சில அரச நிறுவனங்களுக்கு குறிப்பாக, பொலிஸாருக் கும், வாகனபோக்குவரத்து திணைக்களத்திற்கும் கொடுத்துள்ள போதி லும், இவ்விரு ஸ்தாபனங்களில் உள்ள விரல் விட்டு எண்ணக் கூடிய சில உத்தியோகஸ்தர்களின் நேர்மையற்ற, நடத்தையினால், இந்த சட்டதிட்டங்கள் நூற்றுக்கு நூறு வீதம் நடைமுறைப்படுத் தப்படுவதில்லை. இதற்கு ஒருவகையில் கைலஞ்சமும், முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது.

எனவே, இனிமேலாவது அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தங்கள் கட மைகளை நாட்டுப்பற்றுடன் நிறைவேற்றி அப்பாவி மக்களுக்கு சில பொறுப்பற்ற சுயநலவாதிகளின் தவறான போக்கினால் ஏற்படக் கூடிய இத்தகைய உபாதைகளிலிருந்து பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளை நாம் வேதனையுடன் விடுக்க விரும்புகிறோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com