Contact us at: sooddram@gmail.com

 

துண்டிக்கப்பட்ட நீதி!

(பாரதி தம்பி)

து ஒரு திறந்தவெளி மைதானம். சுற்றிலும் நூற்றுக்கணக்கானவர்கள் சூழ்ந்து நிற்கின்றனர். அந்தப் பெண் மண்டியிட்டு அமரவைக்கப்பட்டு இருக்கிறாள். மத சம்பிரதாயங்கள் நடக்கின்றன. பளபளக்கும் வாள் ஓங்கி உயர்கிறது. ஒரே வெட்டு... அந்த இளம் பெண்ணின் தலை வெட்டப்பட்டு துடிதுடித்துத் தரையில் வீழ்கிறது. இது காட்டுமிராண்டிகளின் நரபலி அல்ல. நவீன உலகத்தில் சட்டப்படி வழங்கப்பட்டு இருக்கும் 'நீதி’.

 சவுதி அரேபியாவில் தலை துண்டித்துக் கொல்லப்பட்டு இருக்கும் ரிஸானா நபீக் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண்ணின் மரணம் மொத்த உலகத்தையும் பதறவைத்திருக்கிறது. இலங்கையின் மூதூரில் பிறந்த ரிஸானா, ஏழையிலும் ஏழையான முஸ்லிம் தமிழ்ப் பெண். 2005-ம் ஆண்டு வீட்டு வேலைக்காக சவுதி அரேபியாவுக்குப் போனபோது, அவளது வயது 17. ரிஸானாவின் வயதை அதிகமாகக் காட்டி பாஸ்போர்ட் பெற்று சவுதிக்கு அனுப்பிவைத்தார் ஏஜென்ட். அங்கு ஒரு பணக்காரரின் வீட்டில் ரிஸானா பணிப்பெண்ணாக வேலை பார்த்தது வெறும் 18 நாட்கள். ஆனால், சிறையில் இருந்ததோ ஏழு ஆண்டுகள். ''அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. வீட்டில் யாரும் இல்லை. நான் எஜமானியம்மாவின் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்துக்கொண்டு இருந்தேன். திடீரென்று குழந்தையின் மூக்கில் இருந்து பால் வடிந்தது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தொண்டையைத் தடவிக்கொடுத்தேன். மூக்கில் இருந்து பால் வடிவது நின்றுவிட்டது. குழந்தை அயர்ந்து தூங்குகிறது என்று நினைத்து படுக்கவைத்தேன். வெளியில் சென்றிருந்த எஜமானி அம்மாள் வீட்டுக்கு வந்ததும் குழந்தையைப் பார்த்தார். குழந்தை இறந்திருந்தது. உடனே, என்னைச் செருப்பால் அடித்தார். எனக்கு முகத்தில் ரத்தம் வழிந்தது. போலீஸில் பிடித்துக்கொடுத்தார். அவர்கள் ஒரு பட்டியில் அடைத்துவைத்து என்னை அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்ததாக கட்டாயப் படுத்தி எழுதிவாங்கினார்கள். அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன்... நான் அந்தக் குழந்தையைக் கொலை செய்யவில்லை'' - இது ரிஸானா எழுதிய கடிதம். ஆனால், சவுதி அரேபியாவின் ஷரியத் சட்டப்படி ரிஸானாவின் உயிர் பறிக்கப்பட்டு இருக்கிறது.

குடும்பத்தின் வறுமை போக்க கடல் கடந்து உழைக்கச் சென்றதைத் தவிர, ரிஸானா செய்த தவறு என்ன? நியாயப்படுத்தவே முடியாத இந்தத் தலைவெட்டும் தண்டனை முறைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் பலியெடுக்கப்படுகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டில் மட்டும் சவுதி அரேபியாவில் சுமார் 79 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருப்பதாக மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் சொல்கின்றன. அதில் 27 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அத்தனை பேரும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இலங்கையில் இருந்து சுமார் 18 லட்சம் பேர் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். இதில் சவுதி உள்ளிட்ட மத்தியக் கிழக்கு நாடுகளில் பணிபுரிபவர்கள்தான் அதிகம். இவர்கள் அனுப்பும் பணம், இலங்கையின் முக்கிய வருவாய்களில் ஒன்று. ''வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை மக்களால், ஆண்டு ஒன்றுக்கு ஆறு பில்லியன் டாலர்கள் கிடைக்கின்றன. இதை 10 பில்லியன் டாலர்களாக உயர்த்த வேண்டும்'' என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார். 10 பில்லியன் டாலர் முக்கியமா? ரிஸானாவின் உயிர் முக்கியமா? என்றால், மகிந்தவுக்கு டாலர்தான் முக்கியம். ''வழக்கில் மேல் முறையீடு செய்வதற்கு உரிய நிதியைக்கூட இலங்கை அரசு வழங்கவில்லை!'' என்கிறது ஆசிய மனித உரிமைகள் ஆணையம்.

சவுதி சிறைச்சாலைகளில் இன்னும் நான்கு இலங்கையர்கள் மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறார்கள். 'புத்தர் சிலையை வைத்துத் தொழுதார்’, 'பைபிள் வைத்திருந்தார்’, 'முஹம்மது நபிகள் குறித்த கேலிச் சித்திரத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார்’, 'மந்திரம் ஓதி மணிக்கட்டில் கட்டும் கயிறு வாங்கினார்’... என்பது அந்த நான்கு பேர் மீதும் சொல்லப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகள். இவர்களைக் காப்பாற்றவும் இலங்கை அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இன்னொரு பக்கம், ரிஸானா கொல்லப்பட்டதைக் கண்டிக்கும் பலரும், ''அந்தக் குழந்தை மரணம் அடையும்போது, ரிஸானாவுக்கு 17 வயதுதான். மொழி புரியாத நாட்டில் அவருக்குச் சரியான மொழிபெயர்ப்பாளர் அமர்த்தப்படவில்லை'' என்று வாதிடுகின்றனர். மாறாக, ரிஸானாவுக்கு வயது அதிகமாகவே இருந்திருந்தாலும் இந்த தண்டனை தவறானதுதான். அறிவுக்குப் பொருத்தமற்ற இந்த மிருகத்தனமான தண்டனை முறையைத்தான் இந்தியா வுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இங்கு அவ்வப்போது குரல்கள் எழுகின்றன.

உலகின் முக்கியமான மனித உரிமை அமைப்பு கள், ரிஸானாவின் மரணத்தைக் கண்டித்து இருந்தாலும் இஸ்லாமிய மத அமைப்புகள் மௌனம் காக்கின்றன. அமெரிக்கா போன்ற மேற்கு உலக நாடுகளோ, 'இஸ்லாம் பயங்கர வாதம்என்று பூச்சாண்டி காட்ட இதை இன்னும் ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. ரிஸானாவின் சொந்த ஊரான இலங்கை மூதூரில் நடந்த முஸ்லிம் முக்கியஸ்தர் களின் கூட்டத்தில், 'அது ஷரியத் சட்டப்படி நிறைவேற்றப்பட்ட தண்டனை என்பதால், அதைக் கண்டிப்பது இல்லைஎன்று முடிவாம்.

சட்டங்கள் எதுவானாலும் அது மக்களை நெறிப்படுத்தவும், நீதி வழங்கவும்தான். எனில், மூதூர் வீதிகளில் பித்துப் பிடித்ததுபோல் அலையும் ரிஸானாவின் தாய் பரீனாவுக்கு யார் நீதி வழங்குவது? இதய நோயாளியான ரிஸானா வின் தந்தை நபீக்குக்கு என்ன ஆறுதலைச் சொல்ல முடியும்? அன்பான அக்காவை இழந்து தவிக்கும் ரிஸானாவின் சகோதரிக்கு எதைத் திருப்பித் தருவது?

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com