Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் மக்களும் பாதுகாப்பு வலயங்களும்

கடந்த வாரம் முதற்றடவையாக தலைநகர் கொழும்புக்கு வெளியே அமைச்சரவை கூடியது. அரசாங்க நிருவாகத்தை மாத்திரமல்ல அமைச்சரவையின் செயற்பாடுகளையும் பன்முகப்படுத்தும் நோக்குடனேயே வெளிமாவட்டங்களில் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக அறிவித்த அரசாங்கம் அத்தகைய முதற் கூட்டத்தைக் கடந்த புதன்கிழமை கிளிநொச்சியில் உள்ள இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் தடபுடலாக நடத்தியது. இதற்குச் செலவான பணத்தைக் கணக்கிடுவதில் கூட அரசாங்கம் அக்கறைப்படவில்லையென்று அமைச்சரவைப் பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியதையும் காணக்கூடியதாக இருந்தது. கொழும்புக்கு வெளியேயான அமைச்சரவைக் கூட்டத்தை முதலில் வன்னியில் கிளிநொச்சியில் நடத்திய விவகாரத்தைப் பொறுத்தவரை அரசாங்கத்துக்கு ஒரு அடையாளபூர்வமான "பெறுமதி%27 இருக்கவே செய்கிறது. விடுதலைப் புலிகள் தங்களது செயற்பாடுகளுக்கு மையத்தளமாகப் பயன்படுத்திய நகரில் இடம்பெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தை அரசாங்கத்தின் போர் வெற்றிக்கொண்டாட்டங்களின் வரிசையிலான ஒரு நிகழ்வாகவே நோக்க வேண்டியிருக்கிறது.

போரின் முடிவுக்குப் பின்னரான அரசியற் செயன்முறைகளைப் பொறுத்தவரை முன்னுரிமை கொடுக்க வேண்டிய விடயங்களைத் தெரிவு செய்வதில் அரசாங்கம் கடுமையான தவறுகளை இழைத்துவருகிறது என்பதே எமது உறுதியான அபிப்பிராயமாகும். வட மாகாணத்தில் எரிபொருட்களின் விலைகளில் ஒரு அற்ப குறைப்புச் செய்யப்பட்டதைத் தவிர, கிளிநொச்சி அமைச்சரவைக் கூட்டத்தினால் அந்தப் பிரதேச மக்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய நன்மைகள் தான் என்ன? கிளிநொச்சியில் மீளக்குடியேற்றப்பட்ட தமிழ் மக்கள் உகந்த இருப்பிடமின்றி, அடிப்படைக் கல்வி வசதியின்றி போதிய மருத்துவ வசதிகளின்றி, ஜீவனோபாயத்துக்கான வாய்ப்புகளின்றி பெரும் அவலங்களுக்குள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் உதவிகளைப் பொறுத்தரை அரசாங்கத்தின் அறிவிப்புக்கும் அந்த மக்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றவைக்கும் இடையேயான வேறுபாட்டை விளக்குவதற்கு நாம் இங்கு உதாரணங்களைக் காட்ட வேண்டிய தேவையில்லை. அந்த மக்கள் எதிர்நோக்குகின்ற மேற்கூறப்பட்ட பிரச்சினைகளை ஓரளவுக்கேனும் தீர்த்து வைக்கக்கூடிய போதிய உருப்படியான நடவடிக்கைகள் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதாக இல்லை.

வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்காக வழமையாகக் கூட்டப்படும் செய்தியாளர் மகாநாடும் கிளிநொச்சியிலேயே நடத்தப்படுமென்று ஏற்கனவே அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் பின்னர் அதற்கான ஏற்பாடுகள் கைவிடப்பட்டு கடந்த வியாழக்கிழமை கொழும்பிலேயே செய்தியாளர் மகாநாடு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு கிளிநொச்சி அமைச்சரவைக் கூட்டத் தீர்மானங்களை அறிவித்த அமைச்சர் ரம்புக்வெல கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென்றும் தேவையானால் அந்த நோக்கத்துக்காகத் தனியார் நிலங்களையும் அரசாங்கம் சுவீகரிக்கும் என்றும் தெரிவித்திருந்தார். "அத்தகைய பாதுகாப்பு வலயங்களைத் தொடர்ந்தும் பேண வேண்டிய அவசியம் இருக்கிறது. இது நாட்டினது பாதுகாப்புக்கு முக்கியமானது. கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் அமெரிக்கா பாதுகாப்பு வலயங்களைப் பேணிவருகிறது. அவற்றுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பியக்கங்களை நடத்திவந்திருக்கின்ற போதிலும், அமெரிக்கா விட்டுக் கொடுக்கவில்லை என்று கூறி அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு நியாயத்தையும் அமைச்சர் ரம்புக்வெல கற்பித்தார்.

தேவையேற்படும் பட்சத்தில் மேலும் கூடுதலான தனியார் நிலங்களை அரசாங்கம் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்காகச் சுவீகரிக்கும் என்ற அமைச்சரின் அறிவிப்பு ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பறிகொடுத்து அகதிகளாகி நிற்கும் வடபகுதி தமிழ் மக்களைப் பெரும் அச்சத்திற்குள்ளாக்கியிருக்கிறது. அரசாங்கத்தின் அனுசரணையுடனான புதிய குடியேற்றத் திட்டங்கள் தொடர்பில் வட பகுதி மக்களுக்கு ஏற்கனவே இருந்துவரும் சந்தேகங்களையும் அமைச்சரின் இந்த அறிவிப்பு வலுப்படுத்தியிருக்கிறது என்பதிலும் சந்தேகமில்லை. போரின் முடிவுக்குப் பிறகு இலங்கையின் சமூகங்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகத் தமிழ்மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடிய செயன்முறைகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக தமிழர்களை மேலும் அச்சுறுத்தக்கூடிய அறிவிப்புகளே அரசாங்கத்திடமிருந்து வெளிவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நாட்டில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டதாகப் பெருமை பேசுகின்ற அரசாங்கம் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் படிப்படியாக இராணுவ மயத்தைக் குறைப்பதற்குப் பதிலாக இராணுவ மயத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளிலேயே இறங்கியிருக்கிறது. உண்மையில் வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களின் வாழ்வு ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள மக்களின் வாழ்வை ஒத்ததாகவே காணப்படுகிறது.

போரின் இறுதிக்கட்டங்களில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதிநிதியாகப் பதவிவகித்த வரும் அரசியல் அவதானியுமான கலாநிதி தயான் ஜெயதிலக கடந்தவாரம் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றில் "தமிழர் அரசியலில் புதிய போக்குகள்%27 என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் வடக்கு,கிழக்கில் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான பிரசன்னம் குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகளை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால், தென்னிலங்கையை ஆக்கிரமித்து நிற்கும் கடும்போக்கு சிங்கள தேசியவாத அலைக்கு மத்தியில் சிங்கள அரசியல் சமுதாயத்தினதும் புத்திஜீவிகளினதும் சிந்தனைப்போக்கு எவ்வாறானதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவியாக இருக்கும் என்பது எமது அபிப்பிராயம்.

"எந்தவொரு இலங்கை அரசாங்கமும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளப்போவதில்லை. குறிப்பாக, பிரிவினைவாதப் போர் பல தசாப்தங்களாகத் தளராமல் தொடருவதற்கு வசதியாக இருந்ததுடன் தமிழ்த் தேசியவாத ஆயுதப்படையணியின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் தொகுதி வாழ்ந்ததுமான பகுதிகளில் இருந்து படைகள் வெளியேறப் போவதில்லை. அமெரிக்காவிலே பிரிவினைவாத வாதக்குரல்களை எழுப்பிய தென்மாநிலங்களில் மத்திய அரசின் இராணுவம் சிவில் யுத்தத்தின் முடிவுக்குப் பின்னரும் 12 வருடங்கள் நிலைகொண்டிருந்தது. செச்னியாவில் ரஷ்யப்படைகள் பத்து வருடங்கள் நிலைகொண்டிருந்தன. ஹிட்லரைத் தோற்கடிக்கப்போன அமெரிக்கப்படைகள் ஜேர்மனியிலும் ஜப்பானிலும் பல தசாப்தங்களாக நிலைகொண்டிருந்தன. இலங்கைப் படைகள் வடக்கு,கிழக்கில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கவே செய்யும்.பிரிவினைவாதக் கிளர்ச்சி மீண்டும் தலைகாட்டுவதை முன்கூட்டியே தடுப்பதற்கும் பிரிவினைவாத ஆதரவுக் குழுக்களைக் கொண்ட தமிழ் நாட்டுக்கு நெருக்கமாக இருக்கும் மாகாணத்தைப் பாதுகாப்பதற்கும் போதுமான அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் நிரந்தரமான படைகளின் பிரசன்னம் இருக்கும்; இருக்கவேண்டும்.

(தினக்குரல்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com