Contact us at: sooddram@gmail.com

 

நதிகளைத் தூய்மையாக வைத்து நாம் சுகதேகிகளாக இருக்க வேண்டும்

நைல் நதிக்கரையில் மனித நாகரிகம் உருவாகியதென்று பண்டைய வரலாற்று நூல்கள் சான்ற பகர்கின்றன. இதன் படி நைல் நதிக்கரையில், ஒரு மனிதன் தான் செல்வமாக வளர்க்கும் நாயுடன் இருந்ததாக வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. இதனடிப்படையில் மனித நாகரிகத்தின் ஜீவாதாரமாக நதிகள் தொன்று தொட்டு விளங்கி வருகின்றன. ஒரு தாயைப் போன்று இப்புவியில் வாழும் மனித இனத்திற்கு அரவணைப்பைத் தந்து மனிதன் தனது உணவுக்கான விவசாயத்தை செய்வதற்குத் தேவையான நீர்ப்பாசன வசதியையும் கொடுக்கும் நதிகளுக்கு மனித இனம் நன்றி தெரி விப்பதற்கு பதில், நாளாந்த வாழ்க்கையில் அதற்கு தீங்கிழைத்து வருவது உண்மையிலேயே வேதனையை அளிப்பதாக இருக்கிறது.

மனிதன் நதிகளை அசுத்தப்படுத்துவதினால் அவன் நதிகளுக்கு தீங்கி ழைக்கவில்லை. தனக்குத் தானே தீங்கிழைத்து தனது தலையிலேயே மண்ணை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறான் என்று நாம் கூறினால் சுயமாக சிந்திக்கும் வலுவுள்ள எவரும் எதிர்ப்புத் தெரி விக்க முடியாது.

இந்திய மக்களின் இயற்கை தந்த பேரன்னையாக கங்கை நதி இருக் கிறது. இமாலய மலை உச்சியில் இருந்து ஊற்றெடுக்கும் தூய்மை யான நீரைக் கொண்ட கங்கை நதியின் நீளம் 2,500 கிலோமீற்றர் களாகும். இது இரு நாடுகளுக்கிடையில் செல்லும் ஒரு நதியாகும். இந்தியா வின் இமாலய மலையில் ஆரம்பிக்கும் கங்கை நதி இறுதியில் பங்களாதேஷிற்கு சென்று அதனூடாக சமுத்திரத்தில் சங்கமிக்கின்றது.

உலகிலுள்ள மிகப் பெரிய 10 நதிகளில் கங்கையும் ஒன்றாகும். கங்கை நதி பின்னர் யமுனை நதியுடன் இணைந்து செல்கின்றது. உலகில் உள்ள அசுத்த நீரை தன்னகத்தே கொண்டுள்ள 5 நதிகளில் கங்கை நதியும் ஒன்றாகும். கங்கை நதியில் ஆண்டாண்டு காலமாக இந்து க்கள் தங்கள் உறவினர்களின் சடலங்களை சங்கமிக்கச் செய்கின்ற போதிலும், இந்த சடலங்களினால் அந்த நதி அசுத்தமடைவதில்லை.

கங்கையில் நீராடினால் மோட்சத்திற்கு போகலாம் என்ற ஐதீகம் இந்து மக்களின் மனதில் வலுவூன்றி இருக்கின்றது. அதனால் தான் அவர்கள் தங்கள் உறவுகளின் சடலங்களை கங்கையில் போட்டு விடுகின்றனர்.

இன்னும் கங்கை நதியின் புனிதத்துவத்தை பேணிப் பாதுகாப்பதற்காக சிவபெருமான் கங்கை நதியின் நீரை தனது தலையில் தாங்கி அதனை வடிந்து செல்ல இடமளித்ததன் மூலம் அதன் புனிதத் தன்மையும், தெய்வீகத் தன்மையும் பேணப்படுவ தாக இதிகாசங்கள் மூலம் எடுத்துக்காட்டப்படுகின்றது.

கங்கை நதியில் நுண்ணுயிர்கள் இருப்பதனாலும் அதில் உயிர்வலிகாற் றும் சங்கமித்திருக்கிறது. இந்த இரசாயன மாற்றம் மூலம் கங்கை நதி நீர் புனிதத்தன்மை பெறுகிறதென்று இந்தியர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

இந்த தெய்வீக கங்கை நதிக்கு இன்று இந்தியர்கள் பல வகையிலும் தீங்கிழைத்து அதன் தூய்மைக்கு கேடு விளைவிக்கின்றனர். கங்கை நதியில் இந்தியாவிலுள்ள 125 பாரிய தொழிற்சாலைகளின் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அன்றிலிருந்த கங்கை நதியின் மகத்துவம் இன்று மாற்றம் கண்டுள்ளது.

கங்கை நதிக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து இன்று இலங்கையின் மிக வும் நீளமான நதியான மகாவலி கங்கைக்கும் களனி ஆற்றுக்கும் களுகங்கைக்கும் மற்ற பிரதான ஆறுகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. மனிதனின் சுயநலமே எமது நாட்டின் ஆறுகள் அசுத்தமடைவதற்கு பிரதான காரணமாக இருக்கிறது.

ஆறுகளில் குப்பைக் கூளங்களை போடுவதன் மூலம் தங்கள் சுற்றா டலை சுத்தமாக வைத்திருக்கலாம் என்ற மனிதனின் சுயநலம் உண்மையில் அவனுக்கே தீங்கிழைக்கின்றது என்பதை அவன் உணர்ந்து கொள்வதே இல்லை.

ஆற்று நீரில் இருந்தே இலங்கை மக்களின் குடிநீர் தேவையும் வீட் டுப் பாவனைக்கான நீர்த் தேவையும் பூர்த்தி செய்யப்படுகின்றன. இவ்விதம் எமது ஆறுகள் அசுத்தமடைந்தால் நிச்சயம் எங்கள் நாட்டு மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய ஆபத்தும் ஏற்படுவதை எந்தவொரு சக்தியாலும் தடுத்துவிட முடியாது.

இன்னுமொரு வகையிலும் மனிதனின் பணம் சம்பாதிக்கும் சுயநலம் காரணமாக ஆற்று வளங்கள் சூறையாடப்படுகின்றன. கட்டட நிர்மாணப் பணிகளுக்கு ஆற்று மணல் மிகவும் சிறந்ததென்று பொறியியலாளர்கள் கூறுவதில் உண்மை இருக்கின்ற போதிலும், இந்த ஒரே கூற்றை ஆதாரமாக வைத்து அளவுக்கதிகமாக ஆற்று மணலை மனிதன் எடுக்க ஆரம்பித்தால், ஆறுகளின் ஆழம் அதிகரித்து, அதனால் ஆற்றின் நீர்மட்டம் கடலில் நீர்மட்டத்தை விட குறைவாகிவிடும்.

இதன் காரணமாக கடல் நீர் ஆறுகள் கடலில் சங்கமிக்கும் நுழைவாயில்களின் ஊடாக ஆற்றில் புகுந்து, ஆற்று நீரை உவர் நீராக மாற்றிவிடுமென்று விஞ்ஞானிகள் அபாய அறிவித்தலை விடுத்துள்ளார்கள்.

எனவே, இனிமேலாவது நம் நாட்டவர்கள் ஆற்றின் மகத்துவத்தை பேணிப் பாதுகாத்து அவற்றிற்கு தீங்கிழைக்காத வகையில் நடந்து கொள்வது அவசியமாகும். இல்லையானால் பல்வகையான அத்தி யாவசிய உணவுப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்கு மதி செய்வதைப் போன்று எங்கள் நாட்டுக்கு குடிநீரையும், பிளாஸ்டிக் போத்தல்களில் அடைந்து இறக்குமதி செய்ய வேண் டிய அவல நிலையும் தோன்றும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com