Contact us at: sooddram@gmail.com

 

அம்பலமாகிய பொன்சேகாவின் சுயரூபம்

(அம்பலத்தார் )

முன்னாள் இராணுவத்தளபதியும் கடந்த முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிக் கட்சிகள் சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவருமான சரத்பொன்சேகா தமிழ் மக்கள் தொடர்பில் அண்மைய காலங்களில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிருப்தியை ஊட்டியுள்ளது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொரு விடயமாகும். 'தமிழ் மக்கள் கேட்பதையெல்லாம் கொடுத்துவிட முடியாது' என்று வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணையை எதிர்கொண்டு அது தொடர்பிலான நீதிமன்ற விசாரணைக்கு சென்று நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவர் தெரிவித்த மேற்படி கருத்தானது அவரின் தெட்டத்தெளிவான இனவாத நிலைப்பாட்டையே சுட்டிக்காட்டி நிற்கிறது. இலங்கையின் இராணுவ வரலாற்றில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான கடும்போக்குடைய ஒரு இராணுவத் தளபதியாகவே சரத் பொன்சேகா கருதப்பட்டவர் மாத்திமல்ல பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வன்னி இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்ற வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவருமான சரத் பொன்சேகா நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வைத்து ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்த கூற்றானது தமிழ் மக்களை அவமதிக்கும் கடும் போக்குடைய அவருடைய கருத்து தொனியாகவே கருதப்படுகின்றது.

இது தொடர்பில் எடுத்ததற்கெல்லாம் அறிக்கை விட்டு தமது பெயரை விளம்பரப்படுத்திக்கொள்ளும் பல தமிழ் அரசியல்வாதிகள் வாய்மூடி மெளனிகளாக உள்ளது வியப்பளிக்கும் விடயமாகும்.

இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கான ஆதரவை திரட்டும் அரசியல் செயற்பாட்டு நடவடிக்கைகளில் சிறுபான்மை கட்சிகளான மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன ஈடுபட்டதை எவரும் மறுக்க முடியாது.

ஆனால் சரத் பொன்சேகாவின் தமிழ் மக்களுக்கு எதிரான கடும்போக்கான இந்தக் கருத்து தொடர்பில் எதற்கெடுத்தாலும் அறிக்கை விடும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் வாய்மூடி மெளனியாக இருப்பது கவலை தரும் விடயமாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமாகிய ரவூப் ஹக்கீமைப் பொறுத்தவரை எதற்கெடுத்தாலும் அறிக்கை விடாத ஜனநாயக அரசியல் பக்குவமுள்ளவர் என்பதையும் நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.

ஊடகத்துறையினருடன் எளிமையாகவும் பக்குவமாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ளக்கூடிய இலங்கை அரசியல்வாதிகள் மிகவும் குறைவு. அதிலிருந்து வேறுபட்டவர்கள் தான் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் ஈழப்புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்) போராளியும் 'தற்போதைய பிரதியமைச்சருமான பiர் சேகுதாவூத், தமிழக மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா - ஈ.பி.ஆர்.எல்.எப்) சிரிதரன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகமும் அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

அதேநேரம் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக மாற்ற வேண்டுமென்ற நோக்கில் தலைநகர் கொழும்பு, மலையகத்தில் மட்டுமல்ல வடக்கு, கிழக்கிலும் அவருடன் சென்று தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன்.

ஆனால் சரத் பொன்சேகாவின் விதாண்டாவாதத்திற்குரிய அல்லது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை கொச்சைப்படுத்தி இனவாத அரசியலை இழுத்து நிறுத்தும் கூற்றுத் தொடர்பாக மெளனம் காக்கும் தமிழ் அரசியல்வாதிகள் தமது மனச்சாட்சியை தொட்டுப்பார்க்க வேண்டும்.

சரத்பொன்சேகாவின் கருத்து தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிbழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அரசியல் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் மட்டுமே தனது மன உளைச்சலை வெளிக்காட்டியிருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகா வெற்றி பெற்றிருந்தால் அவருக்காக பிரசாரம் செய்த குறிப்பிட்ட சில தமிழ் அரசியல்வாதிகளுக்கு பண வருமானமீட்டும் முக்கிய அமைச்சுப் பொறுப்புகள் கிடைத்திருக்கும். ஆனால் தமிழ் மக்களின் நிலைமை யுத்த காலத்தை விட மிகக் கொடூரமானதாக அமைந்திருக்கும் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஏனெனில் சரத் பொன்சேகாவின் தற்போதைய கருத்து அதனையே வெளிப்படுத்தி நிற்கிறது.

சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவியேற்பதற்கு முன்னர், யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதியாக பதவியிலிருந்தபோது அங்கு இடம்பெற்ற கடத்தல் கைது, காணாமல் போதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவருக்காக வக்காலத்து வாங்கும் தமிழ் அரசியல்வாதிகள் என்ன கூறப்போகின்றார்கள்.

இது தொடர்பில் முன்னாள் இந்து கலாசார அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய அமரர் தியாகராஜா மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதியாக அப்போது பதவிவகித்த சரத்பொன்சேகாவின் தலைமையின் கீழ் நடாத்தப்பட்ட எந்தவொரு அநீதியான சம்பவங்களும் சட்டத்தின் முன் வெளிக்கொண்டு வரப்படவில்லை.

யாழ். குடாநாட்டில் சரத்பொன்சேகாவின் இராணுவ ஆட்சிக்காலத்தின் போதே மிகவும் மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியிருப்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

யாழ். குடாநாட்டின் அப்போதைய இராணுவத் தளபதியாக இருந்து செயற்பட்ட சரத் பொன்சேகாவின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் வெளிக்கொண்டு வந்த பல்வேறு விடயங்கள் அவரின் மறைவையிட்டு வெளிக்கொணடு வரப்பட்ட ஆவணச் சுவடான நூலில் தெளிவாக வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொரு விடயமாகும்.

தியாகராஜா மகேஸ்வரனின் நினைவாக வெளிக்கொண்டுவரப்பட்ட அந்த நூலில் அவர் பாராளுமன்றத்தில் மட்டுமல்ல ஊடகங்களுக்கும் தெரிவித்த சரத்பொன்சேகா தொடர்பான பல்வேறு விடயங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கதோர் விடயமாகும்.

சிங்கள, பெளத்த கடும் போக்குக் கொண்ட அதுவும் யாழ். குடாநாட்டின் இராணுவத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவின் அடாவடித்தனங்களை வெளிக்கொண்டு வந்த தமிழ் அரசியல்வாதி தியாகராஜா மகேஸ்வரன் என்பதை நாம் இன்றும் நினைவில் நிறுத்தி பெருமை கொள்ள வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதுவும் யாழ். குடாநாட்டில் தமிழ்த் தேசியப்போக்கு வலுவடைந்து தீவிரம் பெற்ற காலகட்டத்தில் மக்கள் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர் தியாகராஜா மகேஸ்வரன்.

அதேநேரம் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற இராணுவ வல்லாதிக்கப் போக்குகள் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் துணிச்சலுடன் வெளிக்காட்டியவர். இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையுடன் கூட பல தடவைகள் முரண்பட்டவர் தியாகராஜா மகேஸ்வரன்.

அதேநேரம் அவர் செய்த தவறுகளில் ஒன்று புலிகளின் அடாவடித்தனங்களை வெளிக்கொண்டுவர முடியாத ஒன்றாகும். இது அன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றுதான்.

இன்று வாழ்விழந்து, வளமிழந்து துயர்மிகு கொடூரத்தை மட்டுமே தாங்கிக்கொண்டு நிற்கிறோம். காலம் பதில் செல்லும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com