Contact us at: sooddram@gmail.com

 

பெத்த மகனைப் பார்க்கப் போக முடியலை!

 

செங்கல்பட்டு முகாமில் தீராத சோகம்..

செங்கல்பட்டு சிறப்பு முகாம் மீண்டும் அனலில் தகிக்கிறது. இந்த முகாமில் 30 இலங்கைத் தமிழர்களும் மூன்று நைஜீரிய கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். முகாமில் இருக்கும் இலங்கை அகதிகள், தங்களை விடுவிக்கக்கோரி உண்ணாவிரதம் மேற்கொள்வதும், 'விரைவில் விடுவிக்க ஏற்பாடு செய்கிறோம்என்று அதிகாரிகள் வாக்குறுதி கொடுப்பதும் அடிக்கடி நடப்பதுதான்கடந்த உண்ணாவிரதத்தின்போது, '45 நாட்களில் தீர்வு கிடைத்துவிடும்என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் கூறி இருந்தார்கள். அந்த அவகாசம் முடிந்துவிட்டதால், கடந்த 15-ம் தேதியில் இருந்து மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கிவிட்டார்கள். போராட்டம் நடத்துபவர்களில் பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், முகாமுக்கு மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். கடந்த 21 மற்றும் 22-ம் தேதிகளில் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்கள்.

போராடும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த 22-ம் தேதி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே பல்வேறு இயக்கத்தினரும் சேர்ந்து போராட்டத்தைத் தொடங்கினார்கள்.

முதலாவதாக மைக் பிடித்த வன்னியரசு, ''ஜெயலலிதா அரசாக இருந்தாலும் சரி, கருணாநிதி அரசாக இருந்தாலும் சரி... எல்லாருமே இரட்டை வேடம் போடுகிறவர்கள்தான். நாம் யாருக்கும் அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம்'' என்று கோபத்துடன் ஆரம்பித்துவைத்தார்.

அடுத்துப் பேசிய மல்லை சத்யா, ''இலங்கைப் போரின் சித்ரவதையைத் தாங்க முடியாமல் தாய்த் தமிழகத்துக்கு வந்தார்கள். அவர்கள் மீது பொய்யான வழக்குகள் புனைந்து, சிறப்பு முகாம் என்ற பெயரில் செயல்படும் சித்ரவதை முகாம்களில் அடைத்துவைத்துள்ளனர். அவர்களை விடுவிப்பதாக பலமுறை மாநில அரசாங்கம் வாக்குறுதி கொடுத்தும், அதனை செயல்படுத்தவில்லை. அதனால்தான் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளவும் அஞ்சாமல், அற வழியில் போராடி வருகின்றனர். உடனடியாக அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று மாநில அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்'' என்று கோரிக்கை வைத்தார்.

அடுத்துப் பேசிய தியாகு, ''ஈழத் தமிழர்கள், பல்வேறு நாடுகளிலும் அகதிகளாக வசிக்கின்றனர். தமிழ்நாட்டைவிட அதிகமாக ஈழத் தமிழர்கள் கனடாவில் வசிக்கிறார்கள். அங்கே ஈழத் தமிழர்களுக்கான அகதி முகாம் என்று ஒன்றுகூட இல்லை. தமிழ்நாட்டிலேதான் அகதிகள் முகாம் இருக்கின்றன. அரைகுறை சுதந்திரத்தோடு, மனித உரிமைகள் மறுக்கப்பட்டு வாழும் நிலை இங்கேதான் இருக்கிறது'' என்று கொதித்தார்.

கண்டனக் கூட்டத்தை முடித்துவிட்டு வந்தவர்கள் அனைவரும், சிகிச்சை பெற்று வரும் அகதிகளைப் பார்க்க செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். தங்களுக்கான ஆதரவைக் கண்டு நெகிழ்ந்து போன ஈழத் தமிழர் செல்வராஜ், ''கியூ பிராஞ்ச்ல இருக்கறவங்க என்னை பொய் கேஸ் போட்டு இங்கே அடைச்சுவெச்சு இருக்காங்க. இங்கே தண்ணீர்கூட பற்றாக்குறையாத்தான் இருக்குது. அரசு கொடுக்குற 70 ரூபாய், எங்க சாப்பாட்டுக்கே பத்தலைங்க. எனக்கு பெத்த மகனைப் பார்க்கணும்; குடும்பத்தைப் பார்க்கணும்; குடும்பத்தோட ஒண்ணு சேரணும்'' என்று போராட்டக் குழுவினரின் கைகளைப் பற்றிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதார்.

முகாமில் உண்ணாவிரதம் இருப்பவர்களைப் பார்க்க வந்த தா.பாண்டியனுக்கு அனுமதி மறுக்கப்படவே, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையில் இருந்தவர்களை மட்டும் பார்த்துவிட்டு சென்றார். அன்று இரவு 11 மணிக்கு வைகோவும் வந்து பாதிக்கப்பட்டவர்களைக் கண்டு ஆறுதல் கூறினார். 28-ம் தேதி சீமானும், வேல்முருகனும் வந்து ஆறுதல் கூறினர். ''எங்களை விடுதலை பண்றதுக்கு ஏற்பாடு செய்யுங்க'' என்று கதறியபடி கேட்டார்கள் ஈழத் தமிழர்கள்.

ஈழத் தமிழர்களை தமிழகமே மிதிக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?

- பா.ஜெயவேல்  

இவர்கள்தான் அந்த 30 பேர்!

இலங்கை நாதன், சௌந்தர்ராஜன், நாகராசா, நர்மதன், சுதாகர், சதாசிவம், சிவக்குமார், அன்பு, அலெக்ஸ், யோகநாதன், சதீஷ்குமார், சந்திரகுமார், விக்கிரம சிங்கம், சதாசிவம், நந்தகுமார், செல்வராஜ், தனுஷன், சமநாகரன், சுதர்சன், வேந்தன், பிஸ்மி முகமத், ரமேஷ், பராபரன், செந்தூரன், சதீஷ்குமார(2), சேகர், ஜெகன், ஜெயபாலன், சிவா, ரைஸ் உருதின்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com