Contact us at: sooddram@gmail.com

 

அன்று துரோகிகள், இன்று தியாகிகள்

மாவையின் மனமாற்றம் தமிழருக்கு இனியாவது விடிவைத் தருமா?

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, சுபிட்சமான எதிர்காலத்திற்காக போராடி 19.06.1990 இல் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் பத்மநாபாவையும் தமிழ் மக்களின் விடிவுக்காக தம் உயிரை அர்ப்பணித்த தோழர்கள், இதர அமைப்புக்களை சேர்ந்தவர்கள், பொதுமக்களையும் நினைவு கூர்ந்து வருடம் தோறும் ஜூன் 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் தியாகிகள் தின வைபவம் வழமைபோன்று இவ்வருடமும் அதே ஜூன் 19 ஆம் திகதி பத்மநாபா ஈபிஆர் எல்எப் கட்சியின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது. உயிர் நீத்த தோழர்களின் நினைவாக இரத்த தானமும் வழங்கப்பட்டது. இவ்வருடம் இந்த தியாகிகள் தினத்திற்கு விசேடமாக வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தியாகிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தியமையே விசேட நிகழ்வாகக் காணப்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு உயிர் இருந்து அவர்கள் தமிழர் உரிமைகளுக்காகவெனக் கூறிப் போராட்டம் நடத்திய காலத்தில் அப்புலிகளின் பின்னால் அவர்களது நிழல்கள் போன்று ஒட்டி உறவாடிய வர்கள்தான் மாவை சேனாதிராஜா உட்பட இன்று தமிழ்க் கூட்ட மைப்பிலுள்ள பல தலைவர்களும் என்று கூறினால் அவர்களில் எவராலும் அதனை மறுக்க முடியாது. யுத்தம் நடைபெற்ற காலத்தில் புலிகளால் கொல் லப்படுபவர்கள் எவராக இருந் தாலும் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் துரோகிகளாகவே புலிகளால் கருதப்பட்டு வந்தமையை சிறு பிள்ளையும் அறியும். புலிக ளின் அக்கருத்தை முழு மையாக ஆதரித்து வந்த தமிழ்க் கூட்டமைப்பின் நிலைப் பாட்டில் தற்போது பாரிய மாற் றம் தென்பட ஆரம்பித்துள்ளது.

இதன் வெளிப்பாடே அன்று பத்மநாபா, றொபர்ட், சுந்தரம் ஐயா போன்ற பலர் புலிகளால் துரோகிகளாகக் கருதப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டபோது அதனை ஆதரித்தவர்கள் இன்று அது தவறு, இவர்களும் தமிழரது உரிமைகளுக்காகப் போராடி உயிர் நீத்த தியாகி களே எனக் கூறி மலர் அஞ்சலி செலுத்த ஆரம்பித்துள்ளமையை உணர்த்துகின்றது. மாவை சேனாதிராஜா, புலிகளினால் கொல்லப்பட்ட பத்மநாபா குழுவினருக்கு மலரஞ்சலி செலுத்தியமையானது புலிக ளின் கடந்த கால கொடூரமான செயற்பாடுகளை தமிழ்க் கூட்ட மைப்பும் மெல்ல மெல்ல வெளிப்ப டையாகவே வெளிக் கொணரவுள்ளமையைத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது.

அத்துடன் மிக மிக முக்கி யமான விடயம் யாதெனில் தமிழ்க் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமே இவ்வாறு துணிவுடன் வெளிப்படையாகச் செயற்பட்ட மையானது விடுத லைப் புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டுள் ளமையை முழு உலகிற்கும் தெட்டத் தெளிவாக்கியுள்ளது. ஒரு புலியாவது ஆயுதம் தாங்கிய நிலையில் உள்நாட்டில் இல்லை என்பது ஐயமின்றித் தெரிந்த விடயம். அவ்வாறே வெளிநாட்டில் ஒருவர் கூட உயிருடன் இருந் திருந்தால் கூட கூட்டமைப்பினர் உயிர்ப்ப யம் காரணமாக ஒருபோதும் இவ்வாறு செயற்பட்டிருக்க மாட்டார்கள். மாவை சேனாதிராஜாவின் செயலானது புலிகளின் ஓரிருவராவது உயிருடனிருப்பார் என நம்பிக்கை கொண்டிருக்கும் சிலரது விடியற்பொழுது கனவையும் தகர்த்துள்ளது. இனி அவர்களும் தமது அடுத்த அலுவலை பயமின்றிப் பார்க்கலாம்.

உண்மையில் இதுவொரு நல்ல சகுனம். இனியும் புளித்துப்போன புலிகள் கதையைப் பேசிக் கொண்டு வீணே காலத்தைக் கழிக்காது அரசாங் கத்துடன் இணைந்து தமிழ் மக்களது விமோச னத்திற்காக ஒத்துழைத்து அமைதியாகவும், சமாதான மாகவும், சுதந்திரமாகவும் வாழ அனைத்து தரப்பினரும் முயற்சிக்க வேண்டும்.

புலிகள் இருந்தபோது அவர்களது ஆயுத பலத்தால் அவர்களால் தமிழருக்கு விமோசனம் கிடைக்கும் எனப் பலரும் எதிர்பார்த்தது என்னமோ உண்மைதான். ஆனால் அந்த நிஜமே டம்மி பீஸ் என்பதைக் கண்ட பின்னரும் நிழல்களான டம்மிகளை நம்பிக் கொண்டி ருப்பதில் அர்த்தமில்லை.

மாவை சேனாதிராஜாவின் துணிச்சலான செயற்பாட்டின் மூலமாக தமிழ ருக்காகவெனப் பேராடிய புலிகளைக் குறை கூறாவிடினும், அவர்களால் தமது இனத்திற் குள்ளும் ஒரே கொள்கைக்காகப் போராடிய சகோதர இயக்கங்கள் மீதும் நடத் தப்பட்ட கொலை வெறியாட்டங்களை மன்னிக் கவோ மறக்கவோ முடியாது என்பதைத் தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அவ்வாறே தமிழ் மொழி பேசும் மற்றொரு இனமான முஸ்லிம் மக்களை வடக்கி லிருந்து வெறுங்கைகளுடன் விரட்டியடித் தமையையும், எல்லைக் கிரா மங்களில் சிங்கள மக்களைக் கொன்று குவித்தமையையும் இலகு வில் அவர்களாலும் மறந்துவிட முடியாது.

விடுதலைப் புலிகளின் அன்றைய அத்தகைய செயற்பாடுகளின் போது அன்று புலிகளின் பின்னால் நின்ற மாவை சேனாதிராஜா போன்ற தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள தலைவர்கள் இன்றாவது பயமின்றி கருத்துக் கூற வேண்டும். யுத்த காலத் தில் அத்தகைய செயற்பாடுகள் எல்லாம் சகஜ ம்தானே எனக் கூறித் தட்டிக் கழிக்க முனைந் தால் முள்ளி வாய்க்கால் சம்பவங்களும் யுத்தம் இடம் பெறும்போது தவிர்க்க முடியாதவை எனச் சிலர் கூற முற்படுவதை நாமும் ஏற்க வேண் டும். அதனால் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தேவையற்ற படுகொலைகள் பற்றி தமிழ்க் கூட்டமைப்பினர் தெரிவித்து அதற்காக அவர்களுடன் கூட இருந்து செயற்பட்ட பாவத்திற்காக அவை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வில் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் சுந்தரம் ஐயாவின் துணைவியார் குத்து விளக் கேற்றியதுடன் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது. பத்மநாபா ஈபிஆர் எல்எப் கட் சியின் பொதுச் செயலாளர் தோழர் சுகு சிறிதரன் போராட்டத்தில் உயிர் நீத்த தோழர்கள் மற்றும் இதர கட்சிகளின் தலைவர்களது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தார். போராட்டத்தில் பங் கேற்று தனது இரண்டு புதல்வர்களை இழந்த விமலாதேவி அவர்கள் அமரர் தோழர் பத்மநாபா, அமரர் தோழர் றொபேட் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்தார். அனைவரும் எழுந்து நின்று தமிழ் மக்களின் சுபிட்சமான எதிர் காலத்திற்காக உண்மையாக உழைத்து தம் உயிரை அர்ப்பணித்த அனைவருக்காகவும் அஞ்சலி செலுத்தினர்.

(க.சிவராசா)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com