Contact us at: sooddram@gmail.com

 

கடல் கடந்து சென்றாலும் காக்காவையே சுடும் வேடன் போன்று புலம்பெயர் தமிழர்

இலங்கையில் தமிழர்கள் இத்தனை துன்பங்களையும் அனுபவித்த பின்னரும் திருந்தாவிட்டால் இனி அவர்களை இறைவனே காப்பாற்ற வேண்டும். ஆனால் அதற்கு உள்நாட்டில் வாழ்ந்து வரும் தமிழினம் இடம் வைக்கவில்லை. இப்போது அவர்களது வாழ்வு முறையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. இன்று விரும்பியோ விரும்பாமலோ இனி எமது வாழ்வு இப்படித்தான் அமைய வேண்டும் என்பதாகக் கருதி எப்படி வாழ்ந்த மக்கள் எப்படியும் வாழத் துணிந்து விட்டார்கள். இது காலத்தின் கட்டாயம்.

ஆனால் இங்கிருந்து இடம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் சமூகமாக வெள்ளைக்காரரின் தயவில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் மட்டும் இன்னமும் தம்மை மாற்றிக் கொள்வதாக இல்லை. அவர்களுக்கு உள்நாட்டில் நடக்கும் விடயங்கள் முழுமை யாகத் தெரிய நியாயமில்லை. இருபத்துநான்கு மணிநேரத்தில் இருபது மணி நேரம் வேலை செய்துவிட்டு மிகுதி நான்கு மணி நேரத்தில் கிடைக்கும் கணப்பொழுதில் இணையத்தளச் செய்திகளை அரை குறையாக வாசித்துவிட்டும், உள்நாட்டிலிருந்துவரும் தொலைபேசியில் குடும்பக் கதைபோக மிகுதி நேரத்தில் நாட்டுநடப்பை அரைகுறையாகக் கதைத்துவிட்டும் இன்னும் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுவதாக அங்கிருந்து ஒப்பாரி வைத்து வருகின்றனர்.

தாம் சென்று குடியேறியிருக்கும் நாட்டுக்கு ஏற்ற மாதிரியோ அல்லது உள்நாட்டு விடயங்களைச் சரிவர அறிந்துகொண்டு அதற்கேற்ப தம்மை மாற்றிக் கொள்ளவோ இவர்கள் இன்னமும் முயற்சிக்காமை கவலை தரும் விடயமே. அதற்குக் காரணம் இன்னமும் இவர்கள் தாம் குடி பெயர்ந்த பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னரான நிலை யிலேயே தமிழர் பிரதேசங்களின் நிலை இருப்பதாக எண்ணி வருகின்றனர். இன்னும் சிலர் இன்னமும் இறுதி யுத்தம் நடைபெறுவது போலவும் மக்கள் யுத்த வலயத்திற்குள் சிக்கித் தவிப்பது போலவும் எண்ணியே செயற்பட்டு வருகின்றனர்.

எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும் இவ்விரு விடயங்களிலிருந்தும் இவர்களைப் பிரித்தெடுப்பது சிரமமான காரியமாகவே உள்ளது. இவர்களது மனநிலையை வெளிநாடுகளிலிருக்கும் விடுதலைப் புலிக ளின் ஆதரவாளர்களும் அதே சம நிலையில் பேணி வருகின்றார்கள் என்பதுவும் மற்றுமொரு கசப்பான உண்மையாகும். இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் அமைதி நிலவுகின்றது. அங்கு தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள் என்ற உண்மையை புலம்பெயர் நாடு களில் கசியவிட்டால் அந்நாடுகள் அங்கு பொய்யாகத் தஞ்சம் கோரி வாழும் பலரை திருப்பி அனுப்பிவிடுவர் என்பது இவர்களது மற்று மொரு காரணமாகும்.

ஐரோப்பிய நாடுகளில் இந்நிலை இனியும் தொடருமாயின் உள் நாட்டில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் மீண்டும் தமது அமைதியை இழக்க நேரிடும். வெளிநாடுகளிலிருந்து தமிழருக்காகக் குரல் கொடுப் போருடன் இங்குள்ள மக்களுக்கும் தொடர்பு இருப்பதாக பாதுகாப்புத் தரப்பு சந்தேகம் கொள்ள நேரிடும். ஏற்கனவே சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்து வாழும் முன்னாள் புலிகள் மீதும் வீணான சந்தேகங்கள் எழுவதற்கும் இடமுண்டு.

முன்னொரு காலத்தில் புலிகள் இருந்தபோது அவர்கள் தமிழ் மக்களது உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள் எனக் கூறிப் பலரும் ஆதரவளித்து வந்தனர். அவ்வேளையில் புலிகளும் இராணுவ, அரசியல் பலம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். உள்நாட்டிலேயே பலர் விரும்பியும், சிலர் பயத்தினாலும் அவர்களுக்கு நிதியுதவிக ளையும், மற்றும் பலர் சரீர உதவிகளையும் வழங்கி வந்தனர். புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்த தொண்ணூற்றைந்து சதவீதமானோரும் இவ் வாறு டொலர்களிலும், பவுண்ஸ்களிலும், யூரோக்களிலும் பணவுதவி செய்தே வந்தனர். புலிகளும் அவற்றை வாங்கி மக்களுக்காக என்ன செய்தார்களோ தெரியாது தமது தலைவர்கள் சொகுசாக வாழ தேவை யான அளவு செலவு செய்தே உள்ளனர். அவர்களது பிரதேசங்கள் படையினரால் மீட்கப்பட்டபோது அது வெட்டவெளிச்சமானது.

ஆனால் இன்று புலிகளே இல்லை என்றாகி விட்டது. ஆயுதப் போரா ட்டத்திற்கு இனி இடமே இல்லை எனும் நிலையில் படையினர் தமது நிலைகளைப் பலப்படுத்தி விட்டனர். இந்நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கடந்த மூன்று வருடங்களில் அரசாங் கம் தேவையான சகல உதவிகளையும் செய்து வருகின்றது. இது உள்நாட்டில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். ஒருசில குறைபாடுகள் காணப்படினும் அரசாங்கம் தனது கடமையைச் சரியாகவே செய்து வருகின்றது.

பாலம் கட்டித் தருவதும், காப்பற் வீதிகள் போடுவதும், மாடிக் கட்ட டங்களை அமைப்பதும் யாருக்குத் தேவை? தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியானதொரு தீர்வே அவசியத் தேவையெனச் சிலர் முணு முணுப்பது அரசாங்கத்தின் செவிகளில் விழாமலில்லை. ஆனால் அதற்கு அரசாங்கத்தை மட்டுமே குறைகூறவதனால் பலனில்லை. அதில் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தாமே எனக் கூறித் திரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சேர்த்தே குறை கூற வேண்டும். உண்மையில் இதற்குப் பிரதான காரணம் தமிழ்க் கூட்டமைப்பினரே. பேச்சுவார்த்தை மூலமாக ஆறு மாத காலத்தினுள் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய பிரச்சினையை இன்று யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களுக்கு மேலாகவும் இழுத்தடித்து வருவது தமிழ்க் கூட்ட மைப்பே. தமிழ்க் கூட்டமைப்பை ஒதுக்கி வைத்துவிட்டு அரசாங் கத்தினால் தனித்து தமிழ் மக்களுக்கானதொரு தீர்வை நிச்சயம் முன்வைக்க முடியும். ஆனால் அப்போதும் அவர்கள் அதிலும் குறை கூறவே தலைப்படுவர். சர்வதேசத்திடம் ஓடிச் செல்வர். அதனால்தான் அரசாங்கம் மிகவும் பொறுமையுடன் அவர்கள் தாமாகக் கனிந்து வரும்வரையில் காத்திருக்கின்றது. அதுவரையில் அரசாங்கம் எனும் ரீதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை வெளிநாட்டு உதவிக ளைப் பெற்று அபிவிருத்தி செய்தும் வருகின்றது.

இந்த உண்மை புரியாத புலம்பெயர் தமிழ் மக்கள் கடல் கடந்து சென்றாலும் காக்காவையே குறிதேடிச் சுடும் வேடன் போன்று தாமும் திருந்தாது திருந்தி வாழ நினைக்கும் உள்நாட்டுத் தமிழ் மக்களையும் வாழ விடாது தடுத்து வருகின்றனர். புலிகள் இருந்தபோது இருந்த நிலை இப்போது இல்லை என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண் டும். புலிகளால் துரோகிகள் எனச் சுட்டுக் கொல்லப்பட்டோருக்கு கொண்டாடப்படும் தியாகிகள் நினைவு தின நிகழ்வுகளில் இன்று தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களே கலந்து தியாகச் சுடர்களை ஏற்றி வைக்கிறார்கள். வெறுமனே புலிகளுக்காக கொடி பிடித்த நீங்கள் மட்டும் இன்னமும் ஏன் உங்களைத் திருத்திக் கொள்ளாமலிருக்கிaர்களோ தெரியவில்லை?

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com