Contact us at: sooddram@gmail.com

 

சொந்த மண்ணில் குடியேற விரும்பும் வடக்கு முஸ்லிம்கள்

1990 ஆம் ஆண்டு வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 21 வருடங்கள் கழிந்துவிட்டன. தாம் சுதந்திரமாக தமது தாயக மண்ணான வடக்கில், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தப்பட்டதன் பின்னரே வெளியேற்றப்பட்டனர். அவர்கள் வெளியேற்றப்பட்ட போது தமது கையில் எதனையும் எடுத்துவருவதற்கு புலிகள் சந்தர்ப்பம் கொடுத்திருக்கவில்லை.

காடுகள், முற்புதர்கள், கடல் நீரேரிகள் ஊடாக தமது உயிரை பாதுகாப்பதற்காக இந்த மக்கள் நடை பாதையாகவும், தோணிகளிலும் வயோதிபர்கள், பெண்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் என பல தரப்பினைச் சேர்ந்தவர்கள் புத்தளம் நோக்கியும், ஏனைய பகுதிகளை நோக்கியும் வந்த காட்சியானது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று பதிவில் பொறிக்கப்பட்ட ஓர் அழியாத பதிவாகும். தாம் இடம்பெயர்ந்தவர்களாக வந்த போது, அவர்கள் வாழ்வதற்கு இடம் கொடுத்து, தமது சொத்துக்களையும், வளங்களையும் பகிர்ந்தளித்து இம்மக்களுக்கு உதவி செய்த மக்கள் உள்ளனர்.

குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில், வண்ணாத்திவில்லு, புத்தளம், முந்தல், கல்பிட்டி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் சுமார் நூற்றுக்கணக்கான நலன்புரி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நீண்ட கால அகதி வாழ்க்கைக்கு விடை கொடுத்து தாம் வாழ்ந்த மண்ணில் மீள்குடியேற ஆர்வம் கொண்டவர்களாக வாழ்விடங்களை துறந்த வடக்கு முஸ்லிம்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். துரதிஷ்டம் அவர்களது அந்த ஆர்வமானது வெறும் கானல் நீராகவே காணப்பட்டதேயன்றி, அதனது உண்மையான பலன்களை அனுபவிக்க முடியாமல் போனது என்ற ஆதங்கம் அவர்களிடத்தில் இருந்து வருவது தற்போது வெளிப்பட ஆரம்பித்துள்ளது.

அன்று வெளியேற்றப்பட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இன்று ஒரு லட்சத்தினையும் தாண்டி நிற்கின்றனர். ஒரு குடும்பமாக வந்த இந்த மக்களது எண்ணிக்கை இன்று பல குடும்பங்களாக மாறியுள்ளது. இவ்வாறான நிலையில் 21 வருடங்கள் தாம் தற்காலிகமாக வாழ்ந்த பிரதேசங்களில் இனியும் வாழ்வது என்பது. வாழ இடம்கொடுத்த மக்களுக்கு தொடர்ந்து தாங்கள் சுமையினை ஏற்படுத்துவதாக அமையும் என்பதால் தமது மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளுமாறு இம்மக்கள் அரசாங்கத்திடம் அழுத்தத்தினை கொடுத்துவருகின்றனர். இருந்த போதும் தாங்கள் மீள்குடியேற வேண்டும் என்றால் தற்போது தற்காலிகமாக வாழும் பிரதேசங்களில் இருந்து தமது பதிவுகளையும், நிவாரணங்களையும் அகற்றிவிட்டு வரவேண்டும் என்ற அரசாங்கத்தின் சுற்றறிக்கையினால் இம்மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தமது தாயகமே தமக்கு இறுதி மூச்சு என்பதால் அதனையும் தியாகம் செய்து தாங்கள் வாழ்ந்த மண்ணுக்கு வருவதற்காக 20 ஆயிரம் பேர் இதுவரைக்கும் பதிவுகளை செய்துள்ளனர்.

மீள்குடியேற்றத்திற்கென தமது பகுதிக்கு வந்த மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் இருக்கின்றனர். தாம் வாழ்ந்த வீடுகள், கற்ற பாடசாலைகள், வணங்கிய பள்ளிவாசல்கள், பிணி தீர்க்க சென்ற வைத்தியசாலைகள் எல்லாம் பயங்கரவாதிகளினால் துவம்சம் செய்யப்பட்டுள்ளதுடன், தமது காணிகள் காடுகளாக காட்சியளிப்பதையும், அதில் மிருகங்கள் வாழ்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

தாங்கள் சுயமாக தங்களது சொந்த கிராமங்களுக்கு மீள்குடியேற வருகின்ற போது, அங்கும் இம்மக்களுக்கு பல வித இன்னல்களும் துன்பங்களும் ஏற்படுத்தப்படுவது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்த போதும், அதனை கூட கிடப்பில் போடும் துரதிஸ்டமான நிலையே ஏற்பட்டுள்ளது என்று பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் தமது வேதனையை வெளிப்படுத் துகின்றனர்.

கடந்த 21 வருடங்களின் பின்னர் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்கள் தமது வேதனையை வெளிப்படுத்த தவறவில்லை. முசலி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மணல்குளத்தை சேர்ந்த 53 வயதான பாத்தும்மா ராபியத்தும்மா தமது மனக்குமுறல்களை இப்படிக் கூறுகின்றார். இது எமது மண் இங்கு தான் நாம் மரணிக்க வேண்டும். எனது குடும்பத்தில் 6 பிள்ளைகள், மீள்குடியேறியுள்ளோம். ஆனால் எந்த வசதிகளும் இல்லை. குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை, சுகாதார வசதிகள் இல்லை. கிடுகினால் ஆன ஓலை கொட்டிலுக்குள் மிகவும் சிரமத்துடன் வாழ்கின்றோம். எமது வாழ்க்கையின் சுமையினை இந்த அரசாங்கம் ஏரெடுத்து பார்க்கத் தவறிவிட்டது. அதேபோன்று வேப்பங்குளத்தை சேர்ந்த முஹம்மத் காசிம் சதகதுல்லா, 21 வருடங்களின் பின்னர் மீள்குடியேற வந்தோம் எங்களுக்கு தேவையானதை அரச சார்பற்ற நிறுவனங்களும் பெற்று தருவதில்லை. அரசாங்கத்தின் அமைச்சர் றிசாத்திடம் கேட்டுத் தான் பெற வேண்டும், கேட்பது எல்லாம் அவரால் தந்துவிட முடியாதுள்ளது. இல்லாவிட்டால் நாங்கள் மீண்டும் அகதிகளாக இடம்பெயர வேண்டிய நிலையே ஏற்படும் என தமது கவலையை அவர் கூறினார்.

வடக்கின் தமது மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் சொந்த மண்ணில் வாழ்வதற்கு வழி செய்து தாருங்கள் என்று கேட்டாலும், அது ஏன் உயர்மட்ட காதுகளுக்குள் ஒலிப்பதில்லையென்ற கேள்வி இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இவ்வாறான துன்பியல் வாழ்க்கையை அனுபவிக்கும் இந்த நாட்டு பிரஜைகளான வடபுல முஸ்லிம்களின் திட்டமிடப்பட்ட மீள்குடியேற்றம் குறித்தும், அவர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக இந்த நாட்டு மனிதநேயம் கொண்ட அனைத்து இன மக்களும் தமது உதவிகளையும், பங்களிப்புக்களையும் செய்ய வேண்டும் என்பதே வடபுல முஸ்லிம்களின் கோரிக்கையாகும்.

(அபூஷா)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com