Contact us at: sooddram@gmail.com

 

கட்சிகளின் புனரமைப்புப் பணிகளும் மாகாண சபைத் தேர்தல்களும்

வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளை கலைத்து அவற்றுக்கான தேர்தல்களை செப்டம்பரில் நடத்துவதென தீர்மானிக் கப் பட்டுள்ளது. குறித்த சபைகள் கலைப்பு மற்றும் முற்படுத்தப்படுகின்ற தேர்தல்களுக் கான காரணம் எதிர்வரும் செப்டம்பர் மாதத் தில் ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம் பெறு கையில் அரசாங்கத்தின் மக்கள் செல்வாக்கை எண்பிப்பதே என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட நோக்கத்துக்காக வாக் கெடுப்பு இடம்பெறவுள்ள மாவட்டங் களான அநுராதபுரம், பொலநறுவை, திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் சுதந்திரக்கட்சியின் புனரமைப்புப்பணி களை முடுக்கிவிட்டும், துரிதப்படுத்தியும் நகர்த்தல் நடவடிக்கைகள் நடந்து முடிந்துள்ளதாகவும் நடந்துகொண்டிருப்ப தாகவும். விளக்கமளித்த சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர் ஒருவர் சுதந்திரக்கட்சியை மீள்ஏற்பாடுசெய்தல், மற்றும் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்தல் போன்ற செயற்பாடுகள் திட்டமிட்டப் படி குறித்த அந்தந்த மாவட்டங்களில் கிரமமாக இடம்பெற்றுவருவதாக கூறினார்.

செல்வாக்கும், பரீட்சிப்பும்

அரசாங்கம் தனது மக்கள் செல்வாக்குத்தளம் சரிவு இன்றி காணப்படுகின்றது. அல்லது பதவியில் இருக்கும் 07 வருடங்களுக்கும் பிறகும் செல்வாக்கு பெருகியுள்ளது என்பதை ஓர் அளவு கோலாக தேர்தல் முடிவுகளை பயன்படுத்தி இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறு த்துமாறு சர்வதேச சமூகத்துக்கு ஒரு தக வலை வழங்க எதிர்பார்ப்பதாக அரசி யல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செ ப்டம்பரில் ஐ.நா மனித உரிமை ஆணை க்குழு ஜெனீவாவில் இலங்கையின் மனித உரிமைநிலமைகள் தொடர்பாக மீள்பரிசீலனைக்கு எடுக்கும் அமர்வுகா லப் பகுதியை ஒத்து இணங்கக் கூடிய தாகவே தேர்தல் திகதி நிர்ணயிக்கப்ப டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு நிகழ்ச்சி நிரலில் தற்போது இலங்கை ஒரு நிரந்தர அம்சமாகிப்போய்விட்டது. ராஜதந் திர ரீதியாக அணுகவேண்டியதை யார் பலசாலி என்பதை காண்பிக்க முனைவது போன்று உலக பளுக்களுடன் கூடிய அமைப்புக்களை உள்நாட்டு மாகாண நாடித் துடிப்புகளைக் கொண்டு மடக்கிப்போட இலங்கை முனைவதாக நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். ,அவ்வாறு வெற்றிய ளித்தால் கூட இலங்கைக்குப் பெருமையே.

ஜனாதிபதி தாய்லாந்து செல்ல முன்பு பொலநறுவையில் தொடராக நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்றார். ஐ.தே.க தலைவர் நியூஸிலாந்து பயணமாகுமுன்பு மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார். அங்கு மாவட்டத்தில் உள்ள கட்சியின் அமைப்பாளர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தினார். கடந்தகாலப்பகுதியில் மு.கா தலைவர் கிழக்கில் பல கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார். காத்தான்குடிக்குசென்று அவர்திறந்து வைக்கவிருந்த மு.கா அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்ட தாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. தமிழ் கூட்டமைப்பும் மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி மாநாட்டை நடத்தியிருந்தது.

அமோகமும் வியூகமும்

அரசாங்கம் வகுத்துள்ள வியூகத்தில் வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் தேசியவாத சிந்தனைமிக்க மக்களைக்கொண்டது என்ற வகையில் அமோக வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையில் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. சப்ரகமுவ மாகாணத்தை எடுத்துக்கொண்டால் கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் எதிர்க்கட்சிகள் தங்களது பிடியை இழந்துகாணப்படுவதால் ஆளும் கூட்டமைப்பு மாகாணத்தில் அதிகம் ஆதிக்கம்பெற்றிருப்பதன் நிமித்தம் அமோக வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையில் முதல் கட்டத்தேர்தல்களுக்கு அந்தமாகாணம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதே நிலைமையே அநுராதபுரம், பொலநறுவை மாவட்டங்களிலும் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

வடமத்திய மாகாண சபைக்கு கடந்த முறை நடத்தப்பட்ட தேர்தல் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 10ம் திகதி இடம்பெற்றது. மொத்தமான 33 ஆசனங்களில் 20 ஆசனங்கள் ஆளும்கூட்டமைப்புக்கும் ஐ.தே.கவுக்கு 12 ஆசனங்களும், ஜே.வி.பிக்கு ஒரு இடமும் கிடைத்தது. 37 ஆசனங்களைக் கொண்ட கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றிய ஐ.ம.சு.கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை 20 ஆகும். ஐ.தே.க 15 இடங்களையும், தமிழ்ஐனநாயக தேசியமுன்னணி 01 இடத்தையும், ஜே,.வி.பி 01 இடத்தையும் பெற்றன. சப்ரகமுவ மாகாணசபையில் மொத்தமாகவுள்ள 44 ஆசனங்களில் ஜே.வி.பி. 02 ஆசனங்களையும், ஐ.தே.க 17 ஆசனங்களையும்பெற 25 ஆசனங்களை தமதாக்கிய ஆளும் கூட்டமைப்பு சபையைகைப்பற்றியது.

ஜனாதிபதியின் கருத்து

நாடு ழுமுவதும் அரசாங்கம், மக்களின் முழு நம்பிக்கையையும் தக்கவைத்துக் கொண்டுள்ளதால் தேர்தல்களுக்கு முகங்கொடுக்கத்தயார் என்று ஜனாதிபதி சமீபத்தில் தெரிவித்திருந்தார். எந்த மட்டத்திலும் தேர்தல்களை எதிர்கொள்வதில் கவலை கொள்வது எதிர்க்கட்சியே என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி பொதுமக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியாததன் காரணமாக சட்ட வழிமுறைகளைக்கையாண்டு தேர்தல்களை ஒத்திவைக்கவேண்டுமென அல்லது உரிய காலத்துக்கு முன்பு நடத்தக்கூடாதென கட்டளைகளை பெற்றுக் கொள்ள எதிர்க்கட்சிகளின் பல்வேறு பிரிவினரும் முயற்சிப்பதாக தெரிவித்தார். கட்சிப்புனரமைப்புப் பணிகள் வாக்குகளை வென்றெடுக்கும் நோக்கங்கொண்டதல்ல.

(தொடரும்...)

பெரும்பான்மையானமக்கள் இந்த அரசாங்கத்துடனேயே இருக்கிறார்கள். ஆனால் இத்தகைய முன்னெடுப்புகள் கிராமத்தவர்கள் தங்களது பல்வேறு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவும் தத்தமது பிரதேச அபிவிருத்திகளை துரிதப்படுத்திக்கொள்ளவும் ஓர் அரிய வாய்ப்பை வழங்கும் பயங்கரவாதத்தை தோற்கடித்து அமைதியை நிலைநாட்டிய பின்பு ஒரு பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருப் பதையிட்டு அரசின் சாதனையையும், வெற்றியையும் எண்ணி பலரும் பெருமை கொள்ளும் தருணத்தில் சில பிரிவினர் சாதனைகளையிட்டு வேதனையும், பொறாமையும் கொண்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரசாங்கமானது வெற்றியையும் அபிவிருத்தியையும் ஏககாலத்தில் சுவைக்கிறது. நாடு ஏற்கனவே அரசியல் தன்னிறைவு கண்டுள்ளது. எதிர்காலத்தில் பால் உற்பத்தியிலும் தன்னிறைவுகாணும் உள்ளூர் பால் பண்ணையாளர்களை பாதுகாக்கும் நோக்குடனேயே இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா மீது வரிவிதிக்கும் கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டது என்பதை ஜனாதிபதி விபரித்தார். இது வெளிநாட்டு நாணயமாற்றை பெரியளவில் சம்பாதிக்க உதவும். மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப அறிவை வழங்கும் முக்கியத் துவத்தையும், அதன் நோக்கத்தையும் கைவி டவில்லை. ஏனைய பாடங்களுக்கு மேல திகமாக கணனி விஞ்ஞானம் மற்றும் ஆங் கில பாடங்களை கற்கும் வாய்ப்பை கிராம ப்புற பிள்ளைகளுக்கும் அரசு வழங்கி யுள்ளது.

ஒரு பன்மைத்தன்மை கொண்ட சமூகத்தில் சகல சமூகத்தவரும் அமைதியான முறையில் ஒன்றிணைந்து வாழக்கூடிய அபிவிருத்தி பொறிமுறையை கட்டி எழுப்பக்கூடிய அர்ப்பணிப்பை அரசாங்கம் கொண்டிருப்பதாக ஜனாதிபதி வலியுறுத்திக் கூறினார்.

புனரமைப்பு - புளகாங்கிதம்

கட்சிகள் பலவும் தத்தம் கட்சிப்புனரமை ப்பு பணிகளை மேற்கொள்கின்ற தொடர்நி கழ்வுகளிடையே, ஆளும் கூட்டமைப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பை பலப்படுத்துவதற்காக புனரமைப்புப்ப ணிகளை முன்னெடுக்காமல் சுதந்திரக்கட் சியை பலப்படுத்துவதற்காக புனரமைப்புப் பணிகளில் ஈடுபடுவதை அரசியல் நோக் கர்கள் குறிக்கோள் கண்கொண்டு நோக்கு கின்றனர்.

தீர்க்கம் - தீர்மானம்

அந்த வகையில் உத்தேச மாகாண சபைத்தேர்தல்கள்- அரசாங்கத்தின் செல்வாக்கை தீர்மானிப்பதேயன்றி அரசாங்கத்தை தீர்மானிப்பதல்ல என்ற வகையில் தனது கட்சியை மெருகூட்டுவதற்கும் தீர்க்கமான தருணமென்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தனது கட்சியின் சின்னமான யானைச்சின்னம் தொடர்பில் என்றும் அதிவிசுவாசம் கொண்ட ஐ.தே.க எதிர்வரக்கூடிய தேசியத் தேர்தல்களில் பொதுச்சின்னத்தை அறிமுகம் செய்வது தொடர்பில் தீவிரமாக கருத்தில் கொண்டுள்ளது.

இது இவ்வாறிருக்க சுதந்திரக்கட்சி பொதுச்செயலாளர் கருத்துக்கூறுகையில் கட்சி மறுசீரமைப்பு பணிகள் 2009 இல் முன்னெடுக்கப்பட்டன. அத்தகைய மற்றுமொரு நடவடிக்கைக்கு இக்காலம் தக்க தருணம் என எண்ணுகிறோம். இவ்வாறான மறுசீரமைப்பின் மூலம் எவ்வேளையிலும் எத்தகைய தேர்தலுக்கும் தயாராக உள்ளோம். இத்தகைய மறுசீரமைப்பு வேலைகள் திட்டமாக காலத்துக்கு முந்திய மாகாண சபைத்தேர்தல்களை குறிக்கோளாகக் கொண்டதல்ல என்றும் தெரிவித்தார்.

வேட்கையும் வேட்பாளர்களும்

உண்மையிலேயே தேர்தல்களை எடுத்துக் கொண்டால் சிற்சில வெறுக்கத்தக்க மனிதர்களையும் பிரதிநிதிகளாக்கி விடுகின் றது. பிரதிநிதித்துவ ஜனநாயகம் நிஜமாகவே நேரடியாக தீர்மானம் எடுப்பதை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான பிரதிநிதிக ளிடம் பொறுப்பாக்கிவிடுகிறது. அத்தகைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல்கள் துணைநிற்பதாகவே பொருள்படுத்தப்படுகிறது.

அந்தவகையில் மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான பிரஜைகளை வேட்பாளர்களாக்கும் பொறுப்பு அரசியல் கட்சிகளையே சாரும். மக்களைப்பற்றிய கூடுதல் அக்கறை, நேர்மை, சட்டம் ஒழுங்கை மதிக்கும் மரியாதை கொண்ட, எடுத்துக்காட்டான பண்புகளையுடையோரையே வேட்பாளர்களாக நியமிக்கவேண்டும் என்பதே பலரதும் வேட்கையாகும்.

சட்டத்தரணி
இஸ்மாயில்
பி.
மஆரிஃப
(தலைவர் சுயாதீன தேசிய முன்னணி (ஐநா)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com