Contact us at: sooddram@gmail.com

 

என்று தணியும் இலங்கைத் தமிழர் சோகம்?

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேர ளத்தையொட்டிய அரபிக் கடல் பகுதியில் கேரள போலீஸ் ரோந்து சென்றபோது ஒரு படகை வளைத்து சோதனை செய்துள்ளனர். அதில் 140-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் அதில் 25 பேர் தான் பயணம் செய்ய வேண்டும். அவர் கள் அனுமதியில்லாமல் செல்கிறார்கள் என் பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீஸ் மேற் கொண்டு விசாரித்தபோது தமிழ்நாட்டின் பல்வேறு அகதிகள் முகாமில் இருந்து தாங் கள் ஆஸ்திரேலியா சென்று கொண்டிருப் பதாக கூறியுள்ளார்கள். அவர்களில் 42 பேர் இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமி லிருந்து சென்றவர்களும் இருந்துள்ளனர். அவர்கள் கூறிய தகவலில், முகாம்களிலேயி ருந்து எங்களது வாழ்க்கையை இழக்க விரும்பவில்லை. இலங்கையில் யுத்தத்திற்கு பின்பு நிலைமை சரியாகவில்லை. தமிழகத் திலேயோ நாங்கள் எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் அகதிகளாகத்தான் இருக்க வேண்டிய நிலைமை. இலங்கையும், இந்தி யாவும் இல்லாத ஏனைய நாடுகளுக்குச் சென்றால் எங்களுக்கு வேலை கிடைக்கிறது, கைநிறைய சம்பளம் கிடைக்கிறது, பிள்ளை களுக்கு நல்ல கல்வியும் கிடைக்கிறது. குறிப் பிட்ட காலத்திற்கு பின்பு குடியுரிமையும் கிடைக்கிறது. எனவேதான் நாங்கள் எப்படி யாவது ஆஸ்திரேலியா செல்வது என முடிவு செய்து மரணத்தைப் பற்றியும் கவலைப்படா மல் செல்கிறோம் என வேதனையோடு அவர் கள் சொன்ன விஷயம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

இதனை பத்திரிகையில் படித்த நாங்கள் அந்த முகாமிற்கு சென்று பார்வையிடுவது என முடிவு செய்தோம். என்னோடு (பெரிய குளம் சட்டமன்ற உறுப்பினர்) மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரையும், இராம நாதபுரம் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட தலைவர்கள் உடன் வந்தனர். இதுகுறித்து 28-ஆம் தேதிக்கு முன்னதாகவே மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முகாமை பார்வையிட நாம் அனுமதி கேட்டபோது, சட்டமன்ற உறுப் பினர்கள் வந்து பார்ப்பதில் ஆட்சேபணை இல்லை, நான் சம்பந்தப்பட்ட முகாமிற்கு தகவல் சொல்லி விடுகிறேன் என்று கூறினார். அந்த அடிப்படையில்தான் ஜூன் 28-ம் தேதி காலை எங்கள் குழு அங்கே சென் றது. அப்பொழுது இதுபற்றிய தகவலை ஆட்சி யரிடம் கூறியபோது, அகதிகள் மறுவாழ்வு ஆணையம்தான் இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று எனக்கு தகவல் வந்துள் ளது. எனவே, நீங்கள் அனுமதியை வாங்கிக் கொண்டு, அதன்பின்பு முகாமிற்கு செல்ல லாம் என்றார். நாங்கள் முன்னமே சொல்லி யிருந்தும் கடைசி நேரத்தில் இதுபோன்ற ஒரு தடையை அரசுத்தரப்பில் ஏற்படுத்த முயற் சித்தார்கள். யுத்தம் முடிந்து கெடுபிடி இல் லாத சூழ்நிலையில் சட்டமன்ற உறுப் பினர்களைக் கூட அகதிகளை சந்திக்க அனு மதிக்காமல், காவலர்களை வைத்து தடுத்து நிறுத்திய தமிழக அரசின் அணுகுமுறை சரி யானது அல்ல. இருப்பினும் நாங்கள் முகாமிற் குள் செல்லாமல் வெளியில் இருக்கின்ற அகதிகளை சந்தித்துப் பேசி பல விஷயங் களை சேகரிக்க முடிந்தது.

அதில் முகாமுக்குள் அந்த அகதிகளுக்கு மாநில அரசு தருகிற இலவச அரிசி 20 கிலோ வும், அதற்கு மேல் 57 பைசா விலையில் 16 கிலோவும் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படு கிறது. ஏற்கனவே கொடுத்து வருகிற அகதி களுக்கான மானியம் குடும்பத்தலைவனுக்கு ரூ,1000, வயது வந்தவர்களுக்கு ரூ.750, 12 வய துக்கு கீழப்பட்டவர்களுக்கு ரூ.400 என்ற தொகையை வைத்துத்தான் எங்களுடைய வாழ்க்கையையே தீர்மானிக்க வேண்டியுள் ளது. இதன் மூலம் இன்றைய கடுமையான விலைவாசி உயர்வில் எங்களுடைய அடிப் படை தேவைகளை மிகச்சிரமத்தோடுதான் நிறைவு செய்ய முடிகிறது. எங்களுக்கு மருத்துவ வசதிகள் போதிய அளவு இல்லை. இருந்த மருத்துவர்களும் வாபஸ் வாங்கப் பட்டு, ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கிறார். அவரும் தினம் 2 மணி நேரம் மட்டுமே சிகிச்சை அளிக்கிறார். பரிசோதனைக்குரிய கருவிகள் முழுவதும் வெளிஇடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டன. அவசரத் தேவைக்கு கூட இங்கே ஒரு ஆம்புலன்ஸ் இல்லை. ஏற்கனவே, 2011க்கு முன்பு கேஸ் சிலிண்டர்களை சமையலுக்கு நாங்கள் பயன்படுத்தினோம். இன்றைக்கு அவை களை பறிமுதல் செய்து கொண்டார்கள். மிகச்சிரமப்படுகிறோம். வெளியிடங்களுக்கு சொந்த காரியமாக சென்றுவிட்டு இரவு 8, 9 மணிக்கு மேல் முகாமிற்கு திரும்பினால், மிகக்கடுமையாக காவல்துறையினர் நடந்து கொள்கிறார்கள். இதுபோன்ற சிரமங்கள் இருப்பதாக அந்த அகதிகள் தெரிவித்தனர்.

நீங்கள் சொந்த மண்ணிற்கு இலங்கைக்கு ஏன் செல்லவில்லை என்று கேட்டபோது, யுத்தம் முடிந்து 2 ஆண்டுகள் முடிந்து விட் டாலும் இன்றைக்கும் தமிழர்கள் வாழுகிற பெரும்பகுதியான இடங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அங்கு சுதந்திரமாக எதையும் செய்ய முடியவில்லை. போனவுடன் எழுகிற குடியிருப்புப் பிரச் சனை உள்ளது. இந்திய அரசு வீடுகள் கட்டு வதற்காக கொடுக்கப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய் பணத்தில் இன்னும் 1000 வீடுகள் கூட கட்டப்படவில்லை என எங்கள் சொந் தக்காரர்கள் சொல்கிறார்கள். கட்டப்பட்ட சில வீடுகள் கூட சிங்கள ராணுவத்தினர் கட்டுப் பாட்டில்தான் உள்ளது என்று தகவல் வரு கிறது. அங்கே சென்றவுடன் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு இதுபோன்ற பிரச்ச னைகள் அங்கே இருப்பவர்களுக்கே தீர்க்கப் படாத பொழுது, எங்கள் நிலை என்ன? என்ற கேள்வியும் எங்களுக்குள் எழுகிறது. இந்திய அரசு அங்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக கொடுக்கப் பட்ட பொருட்களும், நிதியும் சிங்கள அரசின் மூலமே கொடுக்கப்படுவதினால், அந்த அரசு அதை நியாயமாக தமிழர்களுக்கு வழங்காத நிலை அங்கு நீடிப்பதாக எங்களது உறவினர் கள் சொல்கிறார்கள். எனவே, எங்களுக்கு இன்னும் அங்கே செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், நிலைமை எங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால் எங்களுடைய பூர்வீகங்கள் இருந்த தமிழ் நாட்டில், இந்தியாவில் நாங்கள் எவ்வளவு காலம் இருந்தாலும் அகதிகள் என்ற நிலையி லிருந்து விடுபடுவதற்கான எந்தச்சூழ்நிலை யும் இல்லை. இங்கே எங்களுக்கு குடியுரி மையோ, பிள்ளைகள் படித்தால் வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதமோ எதுவும் இல்லாத ஒரு சூழ்நிலையில்தான் நாங்கள் உயிரை பணயம் வைத்து வெளிநாடுகளுக் காவது செல்லலாமே என்று கருதுகிறோம் என்று குறிப்பிட்டார்கள். எனவே, மத்திய அர சும், இங்கு இருக்கக்கூடிய அரசியல் இயக் கங்களும் எங்களுடைய எதிர்கால வாழ்க் கைக்கான உத்தரவாதத்தை நாங்கள் பிறந்த இலங்கையில் உருவாக்க முயற்சிக்க வேண் டும் என்பதே எங்களுடைய அபிப்ராயம் என்றனர். இலங்கையில் உங்களுக்கு எது மாதிரியான எதிர்காலத்தை உருவாக்க வேண் டும் என்று கருதுகிறீர்கள், இங்கே சில அர சியல் அமைப்புகள் உங்களுக்கு இப்பவும் தனி ஈழம் என்பதுதான் தீர்வாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார்களே, அதுபற்றி உங்கள் அபிப்ராயம் என்ன? என்று கேட்டபோது, விடுதலைப்புலிகளின் 30 ஆண்டுகால ஆயு தந்தாங்கிய போராட்ட நடவடிக்கையினால் பெரும்பகுதியான தமிழ் மக்களுடைய வாழ்வு சீரழிந்ததோடு, அங்கே இருக்க முடியாமல் வெளிநாடுகளில் நாங்கள் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கிறோம். வாழ்விழந்து அகதிகளாக இருக்கிற எங்களுக்கு இலங்கை யில் ஒரு அமைதியான வாழ்வுக்கான சூழ் நிலையையே நாங்கள் விரும்புகிறோம். எனவே, தனி நாடு என்கிற பிரச்சனை என் பது எங்களை மிகச்சிரமத்திற்குள்தான் மீண் டும் தள்ளும். நாங்கள் விரும்புவது, இந்தியா வில் இருக்கக் கூடிய தமிழர்கள் தமிழ்நாட் டில் எப்படிப்பட்ட ஒரு சுயாட்சி முறையில் ஜனநாயகப்பூர்வமாக தங்களுடைய வாழ் வைத் தீர்மானித்துக் கொள்கிறார்களோ, அது போன்ற ஒரு வாழ்க்கை முறையைத்தான் நாங்கள் விரும்புகிறோம். ஒன்றுபட்ட இலங் கைக்குள் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி களில் சுயாட்சி அமைப்புகளை உருவாக்கி எங்களது நியாயமான உரிமைகளை அதன் மூலம் பெற்று வாழ்வதுதான் எங்களுடைய விருப்பம். இதை இலங்கை அரசும் ஏற்றுக் கொள்ளும் என்று கருதுகிறோம். இந்திய அரசும், இந்திய மக்களும் இந்த வகையில் எங்களுக்கு உதவ வேண்டும் என்று நாங்கள் சந்தித்த தமிழ் அகதிகள் குறிப்பிட்டனர். இங்கே உள்ள சில அரசியல் இயக்கங்கள், அமைப்புகள் யுத்தத்திற்கு பின்பு மீண்டும் தனி நாடுதான் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு என்பது அவர்களுடைய அரசியல் தேவைகளுக்காக அவர்கள் பேசி வரக்கூடிய தாகத்தான் நாங்கள் கருதுகிறோம். எங் களுக்கு அதனால் மீண்டும் வேதனையான வாழ்க்கை தான் ஏற்படும். ஒரு மோதல் போக்கை இலங்கையில் தொடர்ந்து நீடிப்பது என்பது எங்களுக்கு அமைதியான வாழ்க் கையை உருவாக்கித்தராது என குறிப்பிட் டனர். இது தமிழகத்தில் உள்ள அகதிகளின் கருத்து மட்டுமல்ல, இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழ் மக்களுடைய மொத்த அபிப்ராயமும் இதுதான். எங்களுடைய உற வினர்களோடு அன்றாடம் நாங்கள் தொடர்பு களை வைத்திருக்கிறோம். எங்களுடைய 30 ஆண்டு கால அனுபவத்திலிருந்துதான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம் என்று அவர்கள் குறிப்பிட்டனர். இந்திய நாட்டில் உள்ள மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடும் இதுதான். 1982-ல் யுத்தங்கள் துவங்கிய காலம் முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக் கான சுயாட்சி பகுதிகளை உருவாக்கி தமிழர் களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் என்பதைத்தான் அன்றிருந்து இன்று வரை கூறி வருகிறது. இதை அந்த மக் கள் அனுபவரீதியாக உணர்ந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிய வரு கிறது. எனவே, இதற்கான விதத்தில் தமிழகத் தில் உள்ள அரசியல் இயக்கங்கள் அவர் களுக்கு உதவ வேண்டுமென்று எதிர்பார்க் கிறார்கள். மத்திய அரசு இன்னும் எங்கள் பிரச் சனைகளை மாற்றாந்தாய் மனப்பான்மை யுடன் பார்க்கக்கூடாது என்றும் கூறினர்.

தமிழக அரசு இந்த மக்கள் வாழ்கிற அகதிகள் முகாமில் அவர்களின் குறைகளை அறிவதற்கான மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட குழுக்களை அனுப்பி விசாரித்து உதவிட வேண்டும். அதல்லாமல், அனைத்தையும் அதிகாரிகளின் மூலமாகவே செய்வது என்கிற நிலைபாடு, அந்த மக்களை மிகப்பெரிய வேதனையோடு முகாம்களில் முடக்கி வைத்துள்ளது என்பதனை புரிந்து செயல்பட வேண்டும்.

ஏ. லாசர் மாநில செயற்குழு உறுப்பினர் - சிபிஐ (எம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com