Contact us at: sooddram@gmail.com

 

எகிப்து

போராட்டம் காத்திருக்கிறது

முஸ்லிம் பிரதர்ஹூட்டின் ஃப்ரீ டம் மற்றும் ஜஸ்டிஸ் கட்சி (ஆரளடiஅ க்ஷசடிவாநசாடிடின’ள குசநநனடிஅ & துரளவiஉந ஞயசவல) யின் வேட் பாளர் முகமது மோர்சி, தனக்கு எதிராக, பழைய முபாரக் ஆட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், ராணு வத்தைச் சேர்ந்தவருமான அகமது சஃ பீக்கைத் தோற்கடித்து அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மோர்சி மிகவும் குறுகிய வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறார். (இவருக்கு 51.7 விழுக் காடு வாக்குகளும், சஃபீக்கிற்கு 48.2 விழுக்காடு வாக்குகளும் கிடைத்திருக் கின்றன.)

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படு வதற்கு முன்னர், சஃபீக் வெற்றி பெற்ற தாக அறிவிக்கக்கூடிய வகையில் வாக்கு எண்ணிக்கையின்போது தில்லுமுல்லு கள் நடைபெறலாம் என்கிற ஐய உணர்வு இருந்தது. இறுதியில் மோர்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆயினும், அதிபரைத் தேர்ந்தெடுப்பதற் காக நடைபெற்ற முதல் ஜனநாயகத் தேர்தலின் முக்கியத்துவத்தைக் குறைத் துக் காண்பிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 2011 நவம்பருக்கும் 2012 மார்ச்சுக்கும் இடையே தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அர சமைப்பு நீதிமன்றத்தால் (ஊடிளேவவைரவiடியேட ஊடிரசவ) கலைக்கப்பட்டிருக்கிறது. நாடா ளுமன்றம் புதிய அரசமைப்புச் சட் டத்தை உருவாக்க வேண்டிய நிலையில் இருந்தது. நாடாளுமன்றம் கலைக்கப் பட்டதை அடுத்து, நாட்டின் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் ஆயுதப் படைகளின் சுப்ரீம் கவுன்சில் (ளுஊஹகு-ளுரயீசநஅந ஊடிரnஉடை டிக வாந ஹசஅநன குடிசஉநள), ஒரு துணை அரசமைப்புப் பிரகடனத்தை வெளியிட்டிருக்கிறது. இந்தப் பிரகடனம் அதிபரின் அதிகாரங்களை வெட்டிக் குறைத்திருப்பதுடன், தன்னிடமே அபரிமிதமான அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்டுள்ளமென் சதி’’(ளடிகவ உடிரயீ,”) நடவடிக்கைகள் மூலம் இப்போது தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள அதிபர் அந்நாட்டின் ஆயுதப் படைகளின் கமாண்டராக இருக்க மாட்டார். ராணுவம், நாட்டில் அமைதியை நிலை நாட்டுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்ளும். எவரையும் கைது செய்ய, எந்த இடத்தையும் சோதனை செய்யக்கூடிய வகையில் அளவிடற்கரிய அதிகாரங் களைத் தன்னகத்தே வைத்துக் கொண் டுள்ளது.

இஸ்லாமிய முஸ்லிம் பிரதர்ஹூட் வேட்பாளருக்கும், பழைய ஆட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கும் இடையேயான போட்டி என்பது, மதச் சார்பற்ற, ஜனநாயக மற்றும் முற்போக்குப் பிரிவு மக்கள் மத்தியில் ஆழமான அள வில் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் தேர்தலின் முதல் சுற்றில் 20.7 விழுக்காடு (4.8 மில்லியன்) வாக்குகளைப் பெற்ற ஹம்தீன் ஸபாஹி என்னும் மத்திய-இடது வேட் பாளர் உட்பட பலர் நீக்கப்பட்டுவிட்டனர். தகுதி இழப்புக்கு ஆளான அமைப்பு களில் சிலவும், வேட்பாளர்களில் சில ரும் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தனர். மற்றவர்கள் செய்வதறியாது திகைத்து ஒதுங்கிக் கொண்டனர். இது தேர்தலிலும் பிரதி பலித்து, மொத்த வாக்காளர்களில் 51 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித் துள்ளனர்.

ஆயினும், இவர்களில் பலர் மோர் சிக்கு வாக்களித்துள்ளனர். ஏனெனில், சஃபீக்கை முந்தைய முபாரக் ஆட்சி மற் றும் ராணுவத்தின் பிரதிநிதியாக அவர்கள் பார்த்தனர். மோர்சி, பிரதமர் பதவியை பிரதர்ஹூட் அல்லாத கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதாகவும், மதச்சார்பற்ற கட்சிகளின் பிரதிநிதி களை அமைச்சரவையில் இணைத்துக் கொள்வதாகவும் உறுதி அளித்திருக் கிறார்.

ஆயினும் இதற்கு ஆயுதப் படை களின் சுப்ரீம் கவுன்சில் மற்றும் ராணுவம் எந்த அளவிற்கு இடம் கொடுக்கும் என்று தெரியவில்லை. தற்போது எகிப்திய ராணுவம் அமெரிக்காவிடமிருந்து ஆண் டொன்றுக்கு 1.3 பில்லியன் டாலர்களை மானியமாகப் பெற்று வருகிறது. இந்தத் தொகையானது எகிப்தின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்துறையில் மிகவும் ஆழ மாக வேரூன்றியிருக்கிறது. நமக்குக் கிடைத்திருக்கிற தகவல்களின்படி, நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் (ழுசூஞ) 40 விழுக்காடு தொகை இதுவாகும். மக்கள் எழுச்சியால் மலர்ந்த ஜனநாயக ஆதாயங்களை மறுதலித்திட வேண்டும் என்றே ஆயுதப் படையினரும் முந்தைய ஆட்சியும் கோரி வருகின்றன. இதன் காரணமாகவே நாடாளுமன்றம் கலைக் கப்பட்டது. அதிபர் தேர்தலில் போட்டி யிட்ட பல வேட்பாளர்களைத் தகுதி இல்லாதவர்கள் என்று அறிவித்தது. அகமது சஃபீக்கை எப்படியாவது வெற்றி பெற வைத்திட வேண்டும் என்று கங் கணம் கட்டிக்கொண்டு அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் இறங்கி செயல்பட்டது.

இந்தப் பின்னணியில் பார்க்கும் போது, மோர்சியின் வெற்றி முந்தைய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஒரு சிறிய அளவில் முன்னேற்றம் என்று கொள்ளலாம். முஸ்லிம் பிரதர்ஹூட் கட்சியின் நம்பகத்தன்மை குறித்தும் எண்ணற்ற தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. இக்கட்சி ஆயுதப் படைகளுடன் சேர்ந்துகொண்டு பத் தாண்டிற்கு முன் துருக்கியில் இருந்தது போன்ற ஒரு ஜனநாயக அமைப்பை உருவாக்கிடலாம் என்று கூறுகிறார்கள். அத்தகையதொரு நட்பு பிரதர்ஹூட் கட்சிக்கும், ராணுவத்திற்கும் இடையே ஏற்பட வேண்டும் என்றுதான் அமெரிக் காவும் விரும்புகிறது. அதே சமயத்தில், ஜனநாயகத்திற்காக நடைபெற்ற மக்கள் எழுச்சி இஸ்லாமிய அமைப்பிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள ஜனநாயக இயக் கத்தின் ஆதாயங்களைப் பாதுகாத்திட வேண்டும் என்று அது விரும்பினால், ஆயுதப் படையினருக்கு எதிரான போராட்டத்தில் உறுதியுடன் நின்று, இழந்த அதிகாரங்களை மீண்டும் வென் றெடுத்திட அது முன்வர வேண்டும்.

சமீபத்திய நிகழ்வுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் எழுச்சியை முன் னின்று நடத்திய பல்வேறு குழுக்கள் மற்றும் பிரிவினர் சிலரிடையே விரக்தியை ஏற்படுத்தி இருக்கின்றன. இவர்களில் சிலர் புரட்சி அத்தியாயம் முடிந்துவிட் டது என்று பிரகடனம் செய்திருக்கின் றனர். ஆனால் அவர்களின் இக்கூற்று எதிலும் குறைகாணும் மனோபாவமே (யீநளளiஅளைவiஉ யனே னநகநயவளைவ)ாகும். தொழி லாளி வர்க்கம் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் எண்ணற்ற வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றுள் ளன. தஹ்ரீர் சதுக்க எழுச்சி போன்று மீண்டும் ஒருமுறை ஏற்பட முடியாது போகலாம். ஆயினும் ஜனநாயகப்படுத்த லுக்கான போராட்டம் பல்வேறு வடிவங் களிலும், பல்வேறு மட்டங்களிலும் தொடரும்.

அதிபர் மோர்சி அமைத்திடவிருக்கும் அரசாங்கத்தின் தன்மை நாட்டில் உள்ள நிலைமைகள் எப்படி உருக் கொள்கின் றன என்பதற்கான அடையாளமாகும். மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்தி களை உள்ளடக்கியதொரு அரசாங் கத்தை அமைத்திடுவோம் என்று அதிபர் மோர்சியும் ஆளும் கட்சியும் மக்களுக்கு அளித்துள்ள உறுதிமொழிகளை நிறை வேற்ற வேண்டியது முக்கியம். தேர்ந் தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தையும் ஜனநாயக அரசமைப்புச் சட்டத்தையும் ஏற்படுத்துவதற்கான போராட்டமும் நடத்தப்பட வேண்டும். எகிப்தின் எதிர் காலம் விழிப்புணர்வு பெற்றுள்ள மக்கள், அரசியல் உணர்வினை வெளிப் படுத்துவதிலும் உரிமைகளுக்கான போராட்டத்தில் காட்டும் ஆர்வத்தை யுமே சார்ந்திருக்கிறது.

தமிழில்: ச. வீரமணி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com