Contact us at: sooddram@gmail.com

 

பருவ நிலை மாற்றத்தால் தீவுகள் விரைவில் மூழ்கும்

உலக அளவில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தால் கரீபியன் தீவுகள், மாலத்தீவு, ஆசிய பசிபிக் தீவுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடலில் மூழ்கிவிடும் என தேசிய வளிமண்டல ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.  பருவநிலை மாறுபாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவின் தேசிய வளிமண்டல ஆய்வு மையம் ஒரு ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவு குறித்து சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கூறியதாவது: நாளுக்கு நாள் பருவநிலை மாற்றம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட துவங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக புவிவெப்பம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பனிப்படலம், பனிமலைகள் வேகமாகஉருகிவருகின்றன.பசுங்குடில் வாயுக்கள் அதிகமாக வெளியாவதால் ஓசோன் படலத்தில்ஓட்டைஉள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக மனித இனங்கள் மட்டுமின்றி கடல் வாழ் உயிரினங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

1980ம் ஆண்டில் இருந்ததை விட புவி வெப்பம் 2010ம் ஆண்டில் 0.17 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக பனிப்பாறைகள், பனிப்படலங்கள் உருகி கடலில் கலக்கிறது. பின்னர் கடலின் நீர் மட்டம் படிப்படியாக உயர்கிறது. அப்படி உயரும் போது கடல் மட்டத்தில் இருந்து மிகக்குறைவான உயரத்தில் இருக்கும் இடங்கள் அப்படியே கடலுக்குள் மூழ்க துவங்கியிருக்கிறது. அதன் படி 2005ம் ஆண்டில் இருந்து கடல் மட்டம் சராசரியாக 2.3மில்லி மீட்டர் உயர்ந்து கொண்டே வருகிறது. இப்படியே சென்றால் 2100ம் ஆண்டு கடல் மட்டம் தற்போது இருப்பதை விட 5 அடி அளவிற்கு உயரும் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

அப்படி உயரும் போது முதலில் கரீபியன் தீவுகள், மாலத்தீவு, ஆசிய பசிபிக் தீவுகள் உள்ளிட்ட பல்வேறு தீவுபகுதிகள் கடலில் மூழ்கிவிடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகள் அனைத்தும் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க 100 சதவீத நடவடிக்கை எடுத்து 2100ம் ஆண்டில் புவி வெப்பத்தை 0.83 டிகிரியாக குறைத்தாலும்கூட, கடல் மட்டம் 14.2 செ.மீ. (ஏறக்குறைய அரை அடி) அளவுக்கும், 2300,மஆண்டில் 24.2 செ.மீ. அளவுக்கும் உயரும்.

பருவ நிலை மாற்றத்தின் காரணமாக ஏற்கனவே ஆழ்கடலில் இருந்து வரும் சீதோசன நிலை மாறியிருக்கிறது. இதனால் ஆழ்கடல் வாழ் உயிரினங்களும் இடம்பெயரத் துவங்கயிருக்கின்றன.பல்வேறு பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றனஎனவிஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதற்கெல்லாம் அடிப்படை காரணமாக இருப்பது வளரும் நாடுகள் தான் என பல்வேறு நாட்டில் உள்ளசுற்றுச்சூழல்விஞ்ஞானிகளும் குற்றம் சுமத்தி வருகின்றனர். முதலில் வெப்பமயமாதல் பிரச்சனையை சரி செய்ய வளர்ந்த நாடுகள் சுயகாட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். உலக முதலாளித்துவத்தின் மிருகத்தனமான பேராசை மற்றும் அநீதி இழைக்கும் தன்மையின் விளைவே பருவநிலை மாற்றத்திற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. உலக மக்கள் தொகையில் 20 சதவிகிதத்தை கொண்டிருக்கும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் மொத்த கரியமிலவாயுவில் 74 சதவிகிதத்தை வெளியிடுகின்றன. ஆனால் அதே நேரத்தில் 80 சதவிகித மக்கள் தொகையை கொண்டிருக்கும் வளரும் நாடுகள் 24 சதவிகித கரியமில வாயுவையே வெளியேற்றுகின்றன.

கரியமில வாயுவை குறைக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட கிரியோட்டா செயல்திட்ட உறுதிமொழியை வளர்ந்த நாடுகள் இன்று வரை பின்பற்றுவதில்லை. மாறாக அமெரிக்கா கிரியோ செயல்திட்டத்திற்கு பின்னர் 17 சதவிகித கரியமில வாயுவை கூடுதலாக வெளியேற்றி வருகிறது. ஒட்டுமொத்தத்தில் புவி வெப்பம் மற்றும் பருவநிலை சார்ந்த பிரச்சனைகளில் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் மீது சுமையை அதிகரித்து வருகின்றன. இதற்கெதிராக தற்போது உலக நாடுகள் குரல் கொடுக்க துவங்கியிருக்கின்றன. புவிவெப்பமயமாதல் பிரச்சனையில் உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து அர்த்தபூர்வமான, சமநிலைத்தன்மை கொண்ட பருவநிலை உடன்பாட்டை காண்பதன் மூலமே எதிர்கால ஆபத்தை ஓரளவு தடுக்க முடியும் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com