Contact us at: sooddram@gmail.com

 

கனவாகிப்போன தூத்துக்குடி கப்பல் சேவை!

(எம்.எஸ்.ஷாஜஹான )

வருவார் ஆனால் வரமாட்டார். வந்தார் மீண்டும் திரும்பமாட்டார். இந்த அமைப்பில்தான் உள்ளது கொழும்பு தூத்துகுடி நேரடி கப்பல் சேவை. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய முயற்சி இது. தூத்துகுடியில் புதிய கட்டிட அமைப்பு மற்றும் பயணிகள் வருகைக்கான இடவசதி எல்லாம் ஒழுங்கு செய்யப்பட்டன. ஆனால் அன்றைய முதலமைச்சர் செல்வியார் அனுமதி தரமறுத்துவிட்டார். புலிகளைக் காரணம் காட்டினார். அவர்கள் வந்து குவிவார்கள். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகும் என்று சப்பு கொட்டினார் தனக்கும் ஆபத்து என்றார். அப்போதைய இலங்கையின் கப்பல் துறை அமைச்சர் என்னிடம் இது பற்றி பேசியபோதுவெட்டவேண்டியதை வெட்டுங்கள் அவர் கையெழுத்து போடுவார்என்றேன். இது அரசின் முயற்சி அது சாத்தியமில்லை என்றார் அவர்.அதே நிலைப்பாட்டைத்தான் இப்போதும் ஜெயலலிதா எடுத்துள்ளார்.

இலங்கையின் அரசியல் சூழ்நிலையைக் காரணம் காட்டி இந்த சேவையை பகிஸ் கரிக்கக் கேட்டார். மாநில அரசு அதிகாரி கள் மட்டுமல்ல மத்திய அரசின் அதிகாரி களும் இந்த பகிஸ்கரிப்பில் சேர்ந்தார்கள்.

துவக்க விழாவிற்கு பெயர்குறிப்பிடப்பட்ட எந்த தமிழக மாண்புமிகுகளும் எட்டிப் பார்க்கவில்லை. கலெக்டர் என்னும் மாவட்ட அரசு அதிகாரிகூட ஒதுங்கிக்கொண்டார். ஆனால் அவர் மத்திய அரசின் ஊழியர். கொடி அசைக்க வந்த டெல்லி அமைச்சர்கள் மனதில் நிம் மதி இல்லை. கப்பல் ஓடுமா இல்லை. தரைதட்டுமா என்று அப்போதே அவர்கள் எண்ணத்து வங்கிவிட்டனர். எப்படியோ சென்ற ஜூன் 2011ல் கப்பல் கொழும்பை நோக்கி கிளம்பியது. கிளப்பப்பட்டது எனலாம்.

அதன்பின்பு தான் பல பிரச்சினைகள் வசதியீனங்கள் வெளிப்படத்துவங்கின முதலாவதாக கப்பலின் கட்டணம் கப்பல் கட்டணமாக இல்லை விமான கட்டண மாக இருந்தது. இது சாதாரண பயணி களை ஏமாற்றியது. -சலிப்படையச் செய் தது. உயர் வகுப்பு கட்டணமும் அதிகம் என்றே மேல் தட்டுப்பயணிகள் நினைத்த னர். ஆனால் 60 வயதுக்கு கூடிய மூத்த பிரஜைகளுக்கு 40% விகிதம் கழிவு என்று அறிவித்தது சிலரைத் தூண்டினாலும் அதில் பொதிந்துள்ள கட்டுப்பாடு அவர்களைத் தடுத்தது. அதாவது மூத்த பிரஜைகள் தனியே பயணம் செய்தால் மட்டுமே அக்கழிவு கிடைக்கும். துணைக்கு இளவல்களை அழைத்து சென்றால் ஒரே அறையில் தங்கினால் அக்கழிவு கிடைக்காது. இது ஒரு வியப்பான செய்திதான்.

மூத்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் விமானத்தில் தனியே பயணித்தாலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கப்பலில் தனித்து பயணம் செய்யும் துணிவு அவர்களுக்கு கிடையாது. மேலும் கப்பலின் ஆட்டத்தினால் பலர் உடல் நலக் குறைவால் வாந்தி எடுத்ததும் இவர்களை மட்டுமல்ல பலரையும் யோசிக்க செய்தது உண்மை. சில பயணங்களின் பின்தான் கப்பல் மருத்துவர்கள் வாந்தி தடுப்பு மாத்திரைகளைக் கொடுக்கத் துவங்கினர். முன்பே செய்திருக்க வேண்டிய வேலை இது. மருத்தவர்கள் அறிந்த உண்மைதான். ஏன் இதில் அசட்டை?

சாப்பாடு குறை சொல்லும்படியாக இல்லை. பொருத்தமான இந்திய உணவே பரிமாறப்பட்டது. ஆனால் கழிப்பறையில் மகா இல்லை மெகா பிரச்சினை இருந்தது. மேல்நாட்டு கப்பல்களில் கழிப்பறையில் தண்ணீர் வசதி கிடையாது. காகிதம் மட்டுமே இருக்கும். தனி அறையில் பயணம் செய்யும் நம்மவர்கள் குளிப்பதற்கு முன்பு கழிப்பறை வழக்கமாக்குவார்கள். இல்லையெனில் கழித்தபின் உடல் கழுவி சுத்தம் செய்வார்கள்.

பொது அறையில் பயணம் செய்பவர் களுக்கு அந்த வசதி கிடையாது. பொது கழிப்பறையையே பயன்படுத்த வேண் டும். குளிக்கும் அறை வேறாக இருக் கும். பயணிகளில் பாதி அளவு நபர்க ளுக்கு காகிதம் பாவித்தே பழக்கம் இராது என்று சொன்னால் அது மிகையா காது. ஆகவே அவர்கள் அளவுக்கு அதிகமான காகிதத்தை பாவிப்பர். அதன் விளைவு காகிதம் விரைவில் தீர்ந்து போய்விடும். அடுத்து செல்பவரின் நிலை அதோ கதிதான். விபரிக்க வேண்டியது இல்லை. ஏறத்தாழ 14 மணி நேரம் பயணம் செய்யுமிடத்தில் வசதியான கழிப்பறை இல்லை என்றால் பயணிகள் ஒதுங்கிவிடுவர். ஓரம்போவது எங்கே?

இந்த கழிப்பறை குறையை கண்டுகொள்ளாத கப்பல் நிறுவனத்தார். கசினோ சூதாட்டவசதி, தீர்வையற்ற கடை இருக்கின்றது. என்று பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி நின்றதைப் பார்க்க அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இக்கப்பலின் பயணிகளில் எத்தனைபேர் கசினோ செல்பவர்கள், எத்தனைபேர் தீர்வையற்ற பொருட்களை அள்ளிச் செல்வர் அப்படி என்னதான் தீர்வையற்ற பொருட்கள் இருந்தன. ஒரு சில மதுபானத்தை தவிர?

தூத்துகுடி துறைமுகத்தில் இறங்குதுறை வசதிகள் மிகவும் குறைவு விசாலமான கட்டிடம் இருப்பது உண்மை. கொழும்பில் இருந்து இரவு புறப்படும் கப்பல் காலை 8.00மணிக்கு தூத்துகுடி துறைமுகத்தில் நங்கூரமிடுகிறது. ஆனால் பயணிகள் வெளியேற வெகுநேரம் பிடித்தது. காரணம் குடிவரவு, சுங்க அதிகாரிகள் மதுரையில் இருந்து வந்து சேரகால தாமதம் ஆகிறது. ஒரு பயணி - கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்தவர் இப்படிகுறைபட்டார். காலை 8 மணிக்கு நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்து தான் சுமார் 20மைல் தொலைவில் உள்ள வீரபாண்டியன் பட்டணம் என்ற தனது ஊரை அடையும் போது மாலை நான்கு மணி என்றார். இந்த தாமதம் பயணிகளை ஈர்க்குமா? காரணம் மேற்குறிப்பிட்ட அதிகாரிகள் தூத்துக்குடியில் வசிக்கவிலை? மதுரையில் தான் உள்ளனர். அங்கிருந்தே கப்பல்வரும் நேரத்தில் அவர்களும் வந்து போயினர். தூத்துகுடி இறங்குதுறையிலிருந்து நகரின் பேருந்து நிலையத்திற்கோ புகையிரத நிலையத்திற்கோ செல்ல எந்த தொடர்புகளும் கிடையாது. இதனால் சென்னைமற்றும் பிறபகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பெரிய அளவில் அசெளகரியப்பட்டனர்.

2010ம் ஆண்டு டிசம்பரில் கொழும்பு தாஜ் ஹோட் டலில் இந்த கப்பல் சம்பந்தப்பட்ட மிலிஜியிலி நிறுவனம் இந்திய தூதரக அனுசரணையுடன் கூட்டிய கூட்டத்தில் இந்த போக்குவரத்து நகர்வு தொடர்பு பெரிதும் குறிப்பிடப்பட்டது. முன்பு தனுஸ்கோடி, ராமேஷ் வரத்திலிருந்து கிலிதிஹிணிதியிழி என்ற ஒரு புகையிரத சேவை கப்பலை பின்பற்றி சென்னை வரும்- செல்லும். இலங்கையின் எப் பகுதியிலிருந்தும் புகையிரத டிக்கட் எடுக்கும் வசதியும் இருந்தது.

அது போன்ற அமைப்பு அவசியம் என்று தலைமை வகித்த இந்திய தூதுவருக்கு கூட்டத்தினர் எடுத்துரைக்க அவரும் அதனை ஆதரித்து டெல்லிக்கு எழுதுவதாக சொன்னார். அது ஏட்டளவில் நின்றுவிட்டது.

மேலும் தூத்துக்குடி நகருக்கு அப்பால் தான் துறைமுகம் உள்ளது. நகரிலிருந்து பொதுபோக்குவரத்து வசதி எதுவும் கிடையாது என்று முன்பே குறிப்பிட்டேன். தனியார் வாகனத்தில் போனாலும் இந்த பயணிகள் கப்பல் எந்த பகுதியில் நிற்கிறது என்பதை அறிவது கடினம். பெரிய இடப்பரப்பைக் கொண்ட அந்தபகுதியில் பல இடங்களில் வழிகாட்டி பலகைகள் துறைமுகம் என்றே குறிசொல்கின்றன. எப்படியும் ஒரு முறை அலைந்து திரிந்தால் தான் ஓட்டுனரால் அடுத்த முறை இடம் கண்டு பிடிக்க முடியும். பயணிகள் கப்பலுக்கு ஒழுங்கான வழிகாட்டு முறையை அமையுங்கள் இல்லை. அப் பொறுப்பை தனியார் விளம்பர நிறுவனங்களிடம் விடுங்கள் என்று கூறியதும் செவிடன் காதில் ஊதிய கப்பல் சங்கு போலவே ஆயிற்று.

கொழும்பு தூத்துக்குடி பயணக்கப்பலில் மக்களைப் பெரிதும் கவர்ந்த விடயம் 100 முதல் 200 கிலோவரை பயணப்பொதிகளைக் கொண்டு செல்லலாம் என்பதே ஆகவே இந்தியாவில் இருந்து வியாபாரப் பொருட்களை இலங்கைகக்கு கொண்டு வருபவர்களுக்கு இது ஓர் இனிப்பான செய்தியாகவே இருந்தது. ஆனால் அதிலும் விரைவில் கசப்பு வந்நது விட்டது. இந்திய சுங்க அதிகாரிகள் இது போன்ற வர்த்தக நோக்குள்ள பொருட்களை எடுத்துச்செல்வதைத் தடுத்த தோடு பயணிகளையும் செல்வதற்கு அனுமதிக்கவில்லை.

இப்பொருட்கள் இந்தியாவிலோ இலங்கையிலோ தடை செய்யப்பட்ட பொருட்கள் அல்ல. ஆகவே இவைகளைத் தடுத்ததன் நோக்கம் புலியவில்லை. இச் செயல் கப்பல் பயணிகளின் எண்ணிக்ககையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

கொழும்பு துறைமுகத்தில் குடிவரவு, சுங்க ஏற்பாடுகள் திருப்தியாக இருக்கவில்லை. செல்லும் பயணிகள் தங்கள் பொதிகளை ஒப்படைத்து தரித்து நிற்பதற்கு போதியவசதியான இடம் இல்லை. வந்து இறங்கும் பயணிகள் தங்கள் பொதிகளை எடுப்பற்கும் குடிவரவுவேலைகளை முடிப்பதற்கும் ஒரு சிறிய மண்டபமே பாவிக்கப்பட்டது. ஜன நெருக்கடியோடு பொதிகளைத் தெரிந்து எடுப்பதும் சுங்க அதிகாரிகளுக்கு காட்டி பின்பு எடுத்துச் செல்வது மிகவும் சிரமமான காரியமாகவே இருந்தது.

நிச்சயமாக எந்த மூத்த குடிமகனாலும் தனியாக இக்கருமங்களை நிறைவேற்ற முடியாது. பெண்களைப் பொறுத்தவரை அதிலும் மூத்த பெண்கள் பாடுமிகவும் சிரமமே. உதவிக்கு ஆட்கள் உண்டு. ஆனால் ஒரே நேரத்தில் எத்தனை பேர்களை அவர்களால் கவனிக்க முடியும். கப்பலைப் பொறுத்தவரை குறை சொல்வதற்கு என்று இல்லை. மேல்நாடுகளில் 40 வருடங்க்கு மேல் ஓடிய கப்பல் அது என்ற அதுவும் மூத்த குடிமகனாக மாறிவிடவே மலிவுவிலைக்கு தள்ளிவிட்டார்கள் இந்திய நிறுவனத்திற்கு பயணிகளின் எண்ணிக்கை ஒரு போதும் முன் னூறை தாண்டவில்லை. ஆனால் இக் கப்பலில் ஆயிரம்பேர் பயணம் செய்யலாம். என்று பெரிதாக விளம்பரம் செய்தார்கள். இவ்வளவு பயணச்சிக்கல்களிலும் ஆயிரம் பேர் வந்தால் இந்த இரு துறைமுகங் களின் நிலையும் என்ன ஆகும்? தாங்குமா? நீங்களே சொல்லுங்கள்.

இந்த வழித்தடத்தில் கப்பலை விட முன் ஒரு கருத்தை கணிப்பு செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. இல்லாவிடில் லயன் வீட்டில் யானையை அடைப்பது போன்ற செயலை செய்திருப்பார்களா? இலங்கை இந்திய பயணம் நாளொரு மேணி வளர்கிறது. விமானத்தில் எப்பக்கம் செல்வதற்கும் இலகுவில் டிக்கட்கிடைப்பதில்லை. ஆகவே முறையாக கப்பல் சே¨வையை இவர்கள் நடத்தினால் இலாபம் ஈட்டுவதாகவும் பலருக்கு பயன்தரக்கூடிய தாகவும் இருக்கும். கப்பல்கவிழ்ந்துவிட்டது என்றே சமீபத்தில் பத்திரிகை குறிப்பு ஒன்று கூறியது. ஆனால் பயணிகளின் தேவைக்கேற்ப ஒரு கப்பல் சேவையை தந்நதால் அது நிச்சயம் வெற்றிபெறும். செய்வார்களா?

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com