Contact us at: sooddram@gmail.com

 

பூமியின் திருவே! புரட்சியின் உருவே! நீ வாழ்க!

(உசிலை த.சோமநாதன்)

கியூபா! நீலக் கடலாம் கரீபியன் கடலிலே மிதந்து கிடக்கும் செந்நிறப் பிழம்பு!

கியூபா! அமெரிக்க ஏகாதிபத்திய கர்ப்பப்பையின் அண்மையிலேயே வைக்கப்பட்டுள்ள ரத்தவாள்!

கியூபா! விடுதலைப் போர் நடத்தி, பொதுவுடமையைக் கட்டுவதற்கு ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளுக் கும் வழிகாட்டியாய் இறுமாந்து நிற் கும் புரட்சி வாசல்!

ஆமாம்! இன்று எந்த கியூபா சோஷ லிஸச் சுடரைக் கையிலே ஏந்தி கம்யூ னிஸப் பெருஞ்ஜோதியை நோக்கி நடைபோடுகிறதோ இதே கியூ பாவைத்தான் அமெரிக்க முதலாளிகள் தங்களது வேட்டைக்காடாக்கிக் கொண்டிருந்தனர். கியூபாவின் வர லாறு ஒரு கண்ணீர்க் காவியமாகும். பத் தொன்பதாம் நூற்றாண்டில்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது விஷ மூச்சை லத்தீன் அமெரிக்க நாடுகளிலே பரப்ப ஆரம்பித்தது. வேளங்கனியின் ஓடு இருக்கவே அக்கனியின் உள் சதை யை உறிஞ்சிவிடும் யானையைப் போல - லத்தீன் அமெரிக்காவின் கனிவளம், நிலவளம், நீர்வளம், தொழில்வளம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் தன்னு டைய எஜமான தத்துவத்தால் அம்மக் களைச் சுரண்டிக் கொழுத்தது அமெரிக்கா. வானத்திலே தொற்றி ஏறும் கோடைச் சூரியனுக்குச் சூடு அதிகமாவதைப் போலவே வருஷங்கள் வளர வளர அமெரிக்க முதலாளிகளின் கொள்ளை லாபமும் பெருக ஆரம்பித்தது. குறிப் பாக 1945ம் வருடத்திலேயிருந்து 1955 ஆம் வருடம் வரை (இடைப்பட்ட 10 ஆண்டுகளில்) 561 கோடி டாலர்களை, லத்தீன் அமெரிக்காவின் இரத்தச் சொட்டுகளை லாபக் கணக்கிலே ஏற்றினர். மறைமுகமான மூலதனத்தின் வாயிலாகவும், தனியாரின் நேரடி மூல தனத்தின் மூலமாகவும் அந்நாட்டு மக்க ளின் பொருளாதாரக் குரல்வளையை நெரித்தனர்.

சுதந்திர உலகின் பாதுகாவலர்களான இந்தச் சுந்தரபுருஷர்கள் சிலந்திவலைப் பின்னல் போன்ற மூலதன முற்றுகை யால் அம்மக்களைச் சின்னாபின்னப் படுத்தினர். இதோ 1957ல் அமெரிக்கா, லத்தீன் அமெரிக்காவிலே எழுதிய சுரண்டல் பிரகடனம்:

தனியார் மூலதனம் - நேரடியாக எப் படிப் பாய்ச்சப்பட்டிருக்கிறது என்ப தைக் கவனியுங்கள்.

வெனிசுலா 246 கோடி 50லட்சம் டாலர்

கியூபா 84 கோடி 90லட்சம் டாலர்

பிரேசில் 83 கோடி 50 லட்சம் டாலர்

சிலி 66 கோடி 60 லட்சம் டாலர்

மெக்ஸிகோ 73 கோடி 40 லட்சம் டாலர்

அர்ஜெண்டினா 33 கோடி 30 லட்சம் டாலர்

பெரு 38 கோடி 30 லட்சம் டாலர்

கொலம்பியா 39 கோடி 60 லட்சம் டாலர்

இந்தப் புள்ளி விபரங்கள் புரிய முடி யாத பிரம்ம சூத்திரமல்ல. ஜனநாயக நாடு என்று - இன்று பூர்ஷ்வாக்களால் அழைக்கப்படும் அந்த டாலர் நாடு எவ் வளவு அரக்கத்தனமான கணக்குகளின் மூலம் புதிய ஏற்பாட்டை எழுதி வந்தது என்பதை உணரவேண்டும்.

இந்த லத்தீன் அமெரிக்க பொந்துகளி னுள்ளே அழுத்தப்பட்டு வந்த கியூபா விலோ 1958ம் வருடத்திற்குள் தனிப் பட்ட அமெரிக்க முதலாளிகளின் நேரடி மூலதனம் 87 கோடியே 90 லட்சமாகத் தாவியது. அதுவரை ஆங்கில-அமெரிக்க - ஐரோப்பிய கனதனவான்களுக்கு தங் களது வறண்டவிரல்களின் மூலம் சுருட் டைச் சுற்றிக்கொடுத்துஹவானா சுருட்டுசரியான பதம், சரீர சுகத் திற்கோ தெளிவான இதம் என்று சபாஷ் பட்டம் பெற்று வந்த கியூபா மக்கள், நெற்றியைச் சுளிக்க ஆரம்பித்தனர். காலமெல்லாம் பாடுபட்டுக் கண்ட பலன் என்ன? என்று அவர்களது ஆன் மக்குரல் கேள்வி எழுப்பிற்று. செழுமை பூமியாம் கியூபாவிலே செங்கரும்புச் சோலையை, வியர்வையால் உண் டாக்கி, கரும்பாலைகளிலே கன்னிய ரும், காளையரும் முதியவரும் இளைய வரும் உழைத்து - இனிப்பான சர்க்கரை யை எடுத்து - அவைகளை மூட்டை கட்டி அமெரிக்கரின் கையிலே கொடுத்து விட்டு நாம் நமது வாழ்வை ஏன் கசப் பாக்கிக் கொள்ள வேண்டும்; கரும்பும் கரும்பின் சாறும், கன்னல் சர்க்கரையும் அமெரிக்க முதலாளிக்கு! நோயும் பிணி யும், மூப்பும், நொந்த வாழ்வும் நமக்கா? என்ற இலட்சிய வினாக்கள் ஒவ்வொரு கியூபா மகனின் இதயத்திலும் ஒலிக்கத் தொடங்கியது. மக்களின் பார்வை கூராகியது.

ஜனங்களைப் பொட்டுப் பூச்சி களாக்கி, தான்மட்டும் அமெரிக்க முத லாளிகளின் கேளிக்கை விடுதிகளிலே பொழுதைக் கழிப்பதற்கும், அவர் களது உல்லாச இரவுச் சேட்டைகளிலே இடம் கிடைத்தால் போதும் என்றும் சுருண்டு கிடந்த பாடிஸ்டாவை, அந்த அமெரிக்க கைப்பாவையை, கியூபா வின் லட்சக்கணக்கான வறுமைக் கண் கள் மிகக் கூர்மையாகவே பார்த்தன.

சுருட்டுத் தொழிலாளர் செய்த புரட்சி!

எண்பது பேர்களின் சுடர்விழிகள் தான் புரட்சிக்கு ஆயத்தமாயின. அந்த எண்பது பேரிலேதான் அண்ணன் -தம்பி களான பிடல் காஸ்ட்ரோவும் ரால் காஸ்ட்ரோவும் இடம்பெற்றனர். ஆமாம் எண்பது பேர்கள்தான்! மிகச் சிறிய எண்ணிக்கைதான்! உலகம் வியக் கும் இந்தப் புரட்சிக்குத் தயாரானோர் சாதாரண சுருட்டுத் தொழிலாளர்கள் தான்! ஆயிரமாயிரம் படைவீரர்கள், லட்சோபலட்சம் பணம், கருவி, சாத னம் எல்லாம் இருந்தும் புரட்சிக்கு சிலர் புது வியாக்கியானம் கூறுவர். அவர்கள் காலத்தைக் கைப்பற்றத் தெரியாத முட வர்கள்! இன்னும் சிலர் புரட்சிவாதி யாய் நடித்துப் பூர்ஷ்வா வாழ்க்கையில் புதைவர். இவர்கள் வஞ்சகர்கள்! மற் றும் சிலர் புரட்சியே வராதென்பர்! இவர்களோ நெஞ்சுரமற்ற கோழைகள்! இவர்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளி கியூபாவின் மூடிய இமைகளைத் திறப் போம்! மூளுக புரட்சி!” என்றே முழங் கினான் பிடல் காஸ்ட்ரோ.

1959 ஜூலை 26ல்

புரட்சிப் பிரகடன நாள்

பாடிஸ்டா வீழ்ந்தான்.
படாடோப மான அமெரிக்க முதலாளிகள் பறந்த னர் விமானத்தில்! பொங்குமாங் கட லெனப் புறப்பட்ட ஜனவெள்ளம் சைத் தான்களின் ஆட்சியைப் புரட்டித்தள்ளி யது...

ஒன்று மட்டும் புரிகிறது.
நியூயார்க் கிலே நிறுத்தப்பட் டிருக்கும் அமெரிக்க மோஹினியின் சிலை தனது வலது கரத்திலே ஏந்தியிருக்கும் எரிகொள் ளியை எந்த வினாடியும் கியூபாவின் மீது வீசத் தயாராயிருக்கிறாள். அண் மைக்காலத்தில் கியூபாவிலே ஏற்பட்ட நெருக்கடி தீர்ந்து போகவில்லை. தணிந்திருக்கிறது. ஆமாம், யுத்தம் தவிர்க்கப்பட்டதேயன்றி சமாதானம் அங்கு நிலவவில்லை. கலகப்படைகள் மும்முனைகளிலே இறக்கப்படுவ தாகப் பத்திரிகை ஹேஷ்யங்கள் பகர் கின்றன.

எச்சரிக்கை!

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. கியூ பாவின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் மறைமுகமாகவோ, நேரடியாகவோ கைவைத்தால் போதும்! உலகின் அனைத்து மலைகளும் எழுந்து நிற்கும். கடல்கள் கைகோர்த்து கர்ஜிக்கும். நதி கள் வறண்டுபோய்ப் பாலைவனங்கள் நெருப்பைக் கக்கும். கீழ்வானத்திலே அப்போது கிளர்ந்து எழும் காலாக்கினி மேல் உலகைச் சுட்டெரிக்கும்! இந்த உற்பாதங்களுக்குத் தன்னைப் பாத்திர மாக்க அமெரிக்கா எண்ணுமா என்ன? இதை அவர்களே தீர்மானிக்கட்டும்.

ஆகவே, கியூபா என்ற அந்தப் புரட்சி ரோஜா -வசந்த காலக் காற்றி னிலே தலைசாய்த்து - சாந்தியிலே தனது சரீரத்தைத் தோயவிட்டு, சமா தான சங்கீதத்தை இனிமையாக இசைத் தவாறே நடைபயிலட்டும். அந்த மென் மையான நடையில்தான் உலகத்தாயின் இன்பம் இருக்கிறது. இந்த மென்மை நடையிலே புரட்சியின் வீச்சும் இருக் கிறது. புத்துலக அமைப்பும் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மார்க்சிச - லெனினியத்தின் உள்சாரம் இருக்கிறது. எனவே, இந்த ஜூலை 26ல் வாழ்த்து கிறோம். பூமியின் திருவே! புரட்சியின் உருவே! நீ வாழ்கவென்று! லெனினிய விருதுபெற்ற பிடல் காஸ்ட்ரோவே, நீவீரோ வானம் போன்று வாழ்க!

- 27.7.63

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com