Contact us at: sooddram@gmail.com

 

மீண்டும் அரங்கேறும் குரங்கும் அப்பத்துண்டு கதை

மீண்டும் குரங்கும் அப்பத் துண்டு கதையாக மாறும்; மாறி விடும் நிலையிலேயே அதிகாரப் பரவலாக்கல் உள்ளது. அரசாங்கம் அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைந்து வந்தாலே பேச முடியும் என்று தெரிவித்திருந்தது. தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்த வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அரசாங்க தரப்பிற்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. இந்தப் பேச்சு வார்த்தை குறித்து இரண்டு தரப்பினருமே மௌனம் காத்தனர். இறுதியில் இவர்கள் இருவரும் கலந்துரையாடிய விடயங்கள் கசியத் தொடங்கின. கிராமசபை, பிரதேசசபை, நகர, மாநகர சபை மட்டத்தில் நிர்வாக ரீதியில் கூடுதலான அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் குறித்தே அரசாங்கத் தரப்பில் இருந்து கூறப்பட்டதாகவே அந்தச் செய்திகள் அமைந்தன. ஆனால், இந்தச் செய்தி பற்றிப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட இரு பகுதியினரும் கருத்துக் கூற முன்வரவில்லை.

எனினும், பேச்சு வார்த்தைகள் தொடர்கின்றன. அரசாங்கத் தரப்பு கூட்டமைப்பு தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியாகியது. இந்த அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்று அறிக்கை விட்டது குறித்து அரசாங்கத் தரப்பு அதிருப்தியில் ஆழ்ந்தது. இதன் எதிரொலி அரசாங்கத்தரப்பில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட முன்னாள் பிரதம மந்திரியும் சிரேஷ்ட அமைச்சருமான இர ரட்ணசிறி விக்ரமநாயக்க அரசாங்கத் தரப்புப் பேச்சுவார்த்தைக் குழுவில் இருந்து விலகினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசாங்கம் தற்போது தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி கூட்டமைப்பு அல்ல. நாம் கூட் டமைப்புடன் பேசும் அதே வேளையில் ஏனைய தமிழ்க் கட்சிகளு டனும் அரசியல் தீர்வு குறித்துப் பேசுவோம் என்று கூறுகின்றது. அரசாங்கம் கூறுகின்ற அனைத்துக் கட்சிகள் என் பது அரசாங்கத்துடன் இணைந்துள்ள கட்சிகளாகும்.

அரசாங்கம் ஆரம்பத்தில் கூறியது போன்று அனைத்து தமிழ்க் கட்சிகளையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்த போது பேச்சு வார்த்தை நடத்தாது தற்போது தனித்தனியாக அழைத்துப் பேசப் போவதாக அரசாங்கம் கூறுவதின் அர்த்தம் தமிழ் மக்களுக்குப் புரியாத தொன்றல்ல. தமிழ்த் தலைமைகளும் தமிழ்க் கட்சிகளும் புரிந்து கொண்டால் சரி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அப்பால் தமிழ்க்கட்சிகள் என்ற வகையில் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சரும், சுதந்திரக் கட்சியின் உபதலைவருமான முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோரே உள்ளனர். இவர்கள் அரசாங்கத்தின் உள்வீட்டுப் பிள்ளைகள். ஈ.பி.டி.பி.செயலாளர் நாயகம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சிச் கொள்கையை நீண்டகாலமாக வைத்துள்ளார்.

அத்துடன், இவர்கள் இருவருமே அரசாங்கத்தில் செல்வாக்குமிக்கவர்கள். இருவருமே போராளியாக இருந்து அமைச்சர்களானவர்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வில் குறிப்பாக, இன விவகாரத்துக்கான தீர்வில் அக்கறை காட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு அவர்களுக்கு உண்டு. இதற்கும் அப்பால் அரசாங்கம் தற்போது 13 பிளஸ் பற்றிப் பேசுகின்றது. அதாவது 13 ஆவது திருத்தச் சட்டத்துடன் செனட் சபை பற்றியதாகும். அரசõங்கம் கூறுகின்ற செனட் சபை அதிகாரமிக்கதாக அமையுமா? அல்லது அரசாங்கத்தின் கரங்களால் இயங்கும் ரோபோவாக அமையுமா? என்பதெல்லாம் வினாவுக்குரியன. பிந்திக் கிடைத்த தகவல்களின்படி அதிகாரப் பரவலாக்கலையே நாம் கேட்கின்றோம். செனட் சபையை அல்ல என்று கூட்டமைப்பு நிராகரித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

அரசாங்கம் விரும்பியிருந்தால் குறைந்த பட்சம் அது அமைத்து தற்போது கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு கையளித்த அறிக்கையாவது பேச்சுவார்த்தைக்கு கையில் எடுத்திருக்கலாம்.

ஒன்றரை வருடங்களாக 63 அமர்வுகளில் கூடி 2008 ஆம் ஆண்டு ஜன வரி எட்டாம் திகதி மேற்படி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஆனால், இன்று அரசாங்கம் அறிக்கையை ஒரு புறம் வைத்துவிட்டு மீண்டும் ஒரு பேச்சு வார்த்தையைக் கூட்டமைப்புடன் தொடங்கியுள்ளது. பேச்சு வார்த்தை தொடங்கி ஆறாவது சுற்று தொடங்கு வதற்கு முன் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி அல்ல என்ற பிரகடனம் அரசாங்கத் தரப்பில் இருந்து வெளி வந்துள்ளது. அத்துடன், அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த ஒரு பின்னணியில் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துவதில், நடக்கப்போவது என்ன என்ற வினா எழும்புகின்றது. அரசாங்கம் தான் அதிகாரப் பரவலாக்கலை வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு கண்ணாமூச்சி நாடகத்தை அரங்கேற்றுகின்ற தென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமா கண்ணாமூச்சி விளையாட வேண்டும் என்று தமிழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கூட்டமைப்பின் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சுரேஷ் எம்.பி., பேச்சுவார்த்தையின் நம்பகத்தன்மை பற்றி நிறையவே பேசியுள்ளார். எனவே, கூட்டமைப்பு தொடர்ந்தும் கண்ணாமூச்சி விளையாடாது, தான் தயாரித்து வைத்துள்ளதாகக் கூறுகின்ற தீர்வுப் பொதியை முன் வைத்துப் பேச்சு வார்த்தையை முன்னெடுப்பதே சிறந்தது.

இல்லையேல், கடந்த காலங்களில் போன்று அதிகாரப்பரவலாக்கள் விடயத்தில் குரங்கும் அப்பத் துண்டும் கதை ஒட்டு மொத்த தமிழ்த் தலைமைகளும் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டி வரும்.

வி.தேவராஜ்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com