Contact us at: sooddram@gmail.com

 

உள்ளக அரசியலில் சீரழியும் தமிழினம்

தமிழ் மக்களிடையே தற்போது உள்ள உள்ளக சுயநல அரசியல் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் துவம்சம் செய்து கொண்டிருக்கின்றது. வடக்கு, கிழக்காகட்டும் மலையகமாகட்டும் ஒட்டு மொத்தத் தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் புறப்பட்ட அரசியல் தலைமைகளின் உள்ளக சுயநல அரசியலால் இந்த நிலைமை இன்று உருவாக்கியுள்ளது. "தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரன்'' என்ற வகையில் அரசியல் நடத்தப் புறப்பட்டவர்களே இன்றைய இந்த நிலைக்குக் காரண கர்த்தாக்களாக உள்ளனர். மக்களோ மனதுக்குள் அழுது கொண்டு மௌனித்துப் போய் உள்ளனர். முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ள இவர்களின் அரசியல் குறித்து, கேள்வி எழுப்ப முடியாத நிலையிலும் தமிழ் மக்கள் உள்ளனர்.

தமிழ் மக்களின் மௌனமும், இயலாத்தன்மையும் சூழ்நிலைக் கைதியாக்கப்பட்டுள்ள நிலைமையையும் மக்களைப் பேசா மடந்தையாக்கியுள்ளது. மனிதாபிமான படை நடவடிக்கையின் மூலம் மக்களை மீட்டதாகக் கூறுகின்ற அரசாங்கமும் மக்களுக்கு துணையாக இல்லை. மனிதாபிமான படை நடவடிக்கைக்குத் துணை போனவர்களும், மக்களுக்கு விடிவையோ, விமோசனத்தையோ பெற்றுத்தரும் நிலையில் இல்லை.

எதற்கு ஆதரவளிப்பது என்ற விவஸ்த்தையே இல்லாது அரசாங்கம் கூறுகின்ற அனைவற்றிற்கும் ஆமாம் போடுவதிலும், அரசாங்கம் செய்வது அனைத்தும் நன்மைக்கே என அறிக்கையிடுவதிலும் இவர்கள் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றார்கள். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளுக்காக நீதி கோரி நிற்கும் தருஸ்மன் அறிக்கையைக் கூட இவர்கள் தமது அரசியல் இலாபங்களுக்காக விட்டு வைக்கவில்லை.

இவ்வாறானவர்களின் கைகளிலேயே வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தலைவிதி தீர்மானிக்கப்படுவதாகக் கூறப்படுவது வேடிக்கையாகவும் விந்தையாகவும் இருக்கின்றது. அண்மையில் வடக்குக்குச் சென்றிருந்த புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர் ஒருவரின் ஆதங்கத்தில் இதுவும் ஒன்று. உள்ளக சுயநல அரசியலால் சீரழிந்து கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கின் நிலைமை ஜீரணிக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டதுடன், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் வடக்கில் முதலிடுவதற்குக் கூட தயங்குவதிலும் நியாயம் இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

உள்ளக அரசியல், அதிகார உயர் பீடத்தினரின் போக்குக் காரணமாக புலம் பெயர் தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்ய முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விடயத்தை ஏற்கெனவே இந்தப் பத்தியில் நாம் குறிப்பிட்டதை இங்கு நினைவு கூருகின்றோம். புலம் பெயர் வாழ் தமிழர்களில் பலரைச் சந்தித்த போது, இலங்கையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவிக்கும் அவர்கள் முதலிடுவதாயின், அதன் பெரும் பகுதியை அரசியல் மேல் மட்ட முதலைகளுக்குத் தீனியாக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்தனர்.

உண்மையில், புலம்பெயர் தமிழர்களை சுதந்திரமாக முதலீடு செய்வதற்கு அரசாங்கம் அனுமதியை வழங்குமாக இருந்தால் வடக்கு, கிழக்கு நோக்கிப் புலம் பெயர் தமிழர்களின் முதலீடுகள் எவ்விதத் தடைகளுமின்றி வந்து சேரும். அதுமாத்திரமல்ல, உயிரிழந்து கிடக்கின்ற தத்தமது ஊர்களையும் புலம் பெயர் வாழ் தமிழர்கள் தத்தெடுத்து முன்னேற்ற முன்வருவர்.

வடக்கு, கிழக்கின் நிலைமை இதுவென்றால் மலையகமும் சுயநல அரசியலுக்குள் புதைந்து போய் முடக்கப்பட்டு முடங்கிக் கிடக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வையே முறையாகப் பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் உள்ள மலையக அரசியல் தலைமைகள், மக்களின் அரசியல் உரிமைகளை எவ்வாறு வென்றெடுக்கும் என்பது கேள்விக்குறியே.

அது மாத்திரமல்ல, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் கேசரி வார இதழில் ஆசிரியர் தலையங்கம் வெளியாகியிருந்தது.

இந்த ஆசிரியர் தலையங்கத்தைப் பார்த்து ஒரு பிரபல தொழிற்சங்கக் காரியாலயத்தில் இருந்து ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆசிரியர் தலையங்கம் எழுதியது நீங்கள் தானே! நிறைய விடயங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். இன்று நடைபெறும் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு, சம்பள உயர் வைப் பெற்றுக் கொடுக்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். தொழிற்சங்கவாதிகளின் வேலையை பத்திரிகை ஆசிரியரைச் செய்யுமாறு கூறுவது தர்மமா என்று தெரியவில்லை. இதனைத் தொழிலாளர்களின் கவனத்திற்கே விட்டு விடுகின்றோம். இது இவ்வாறிருக்க அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்திருந்த ஓய்வு ஊதியத்திட்டத்திற்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து எதிர்ப்பலைகள் எழும்பின. இறுதியில் சுதந்திர வர்த்தக வலயத்தில் எழுந்த எழுச்சி, அதன் விளைவால் எழுந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரொஷேன் சானக்கவின் உயிர்த்தியாகம் ஓய்வூதியத் திட்டத்தை வாபஸ் வாங்க வைக்கும் அளவுக்கு அரசாங்கம் சென்றுள்ளது. உண்மையில் இந்த ஓய்வூதியத்திட்டத்தால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளவர்களில் மலையக தோட்டத் தொழிலாளர்களும் அடங்குவர்.

ஆனால், மலையகத் தொழிற்சங்க அரசியல் தலைமைகள் இது பற்றி பெரிதாக வாய் திறக்கவில்லை. ஏனெனில், பெரும்பாலானவர்கள் அரசாங்கத் தரப்புடன் அணிவகுத்திருப்பதைத் தவிர வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. வடக்கின் நிலைமைதான் இங்கும். மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் உயிருடன் இருக்கும் வரை, மலையக அரசியலில் ஒரு நம்பிக்கை தெரிந்தது. ஆனால், இன்று அந்த நம்பிக்கை கண்ணுக்கு ஒட்டிய தூரம் வரைத் தெரியவில்லை.

சுயநல அரசியல் கோலோச்சும் மலையகத்தில் மக்களைப் பற்றி கவனிப்பதற்கு எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. மொத்தத்தில் வடக்கு, கிழக்காக இருக்கட்டும் அல்லது மலையகமாக இருக்கட்டும், ஒட்டு மொத்தத் தமிழினமும் மாலுமி இல்லாத கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கின்ற.

வி.தேவராஜ்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com