Contact us at: sooddram@gmail.com

 

வீதியிலிறங்கும் இளைஞர்களுக்கு பொலிஸ் துப்பாக்கிகள், குண்டாந்தடிகள்
மூலம் பதில் கொடுப்பதற்கு மாறாக அரசியல் ரீதியில் தீர்வு காணப்பட வேண்டும்
- தகவல் திணைக்கள பணிப்பாளர்

தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர்கூட எங்களுக்கு ஓய்வூதியத் திட்டம் ஒன்றைப் பெற்றுக்கொடுங்கள் என்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கவில்லை. தனியார்துறை ஊழியர்கள் மத்தியில் இத்தகைய நோக்கம் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவுமே இல்லை. என்றாலும், அரசாங்கம் தன்னிச்சையாக தனியார்த்துறையினருக்கு ஓய்வூதியத்தை வழங்கும் திட்டத்தை முன்வைத்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் என்றும் இந்நாட்டில் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்துடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த காரணத்தினால் அவரது மனதில் இத்தகைய எண்ணம் தோன்றியிருக்கலாம்.

2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அரச ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தியே ஒழிய அதற்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை.

அதற்குப் பதில் அரச சேவையை மேலும் விஸ்தரிக்கும் நடவடிக்கைகளிலேயே மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் கவனம் செலுத்தியது. ஆயினும், இதற்கு முன்னர் அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்கள் அவ்விதம் செயற்படவில்லை.

1970 ஆம் ஆண்டின் திருமதி பண்டாரநாயக்கவின் தலைமையிலான கூட்டரசாங்கமே முதல் தடவையாக இந்த நாட்டில் அரச ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை இல்லாமல் செய்யும் நடவடிக்கையை எடுத்தது. இதற்கு தலைமைதாங்கியவர் அன்று நிதி அமைச்சராக விளங்கிய தொழிற்சங்கத் தலைவரான கலாநிதி என். எம். பெரேரா ஆவார். அவர் அன்று அரச வங்கி ஊழியர்களின் ஓய்வூதியத்தை பயித்துவிடும் செயற்பாட்டில் ஈடுபட்டார்.

1977 ஆம் ஆண்டின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் ஓய்வூதியத் திட்டத்தை குறைப்பதற்கு முயற்சிகள் எடுத்த போதிலும் அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த அரசாங்கமும் அத்தகைய யோசனையை கைவிட்டது.

உலக வங்கியின் தலைவர் ரொபர்ட் மெக்னமாரா ஊழியர் சேமலாப நிதியை ஓய்வூதியத் திட்டமாக மாற்றிவிட வேண்டும் என்று யோசனை தெரிவித்திருந்தார். இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த யோசனையும் கைவிடப்பட்டது.

வெளிநாடுகளில் அனுபவங்களை அடிப்படையாக வைத்தே அன்றும் இன்றும் அரசாங்கங்கள் அரச ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை எடுத்து வந்தன. உலகளாவிய பொருளாதாரத்தை மையமாகக் கொண்டிருக்கும் எங்கள் நாட்டில் இந்த சர்வதேச நடைமுறைகளை முற்றிலும் கைவிடுவது இலகுவான செயலல்ல.

ஓய்வூதியத் திட்டம் போன்ற தொழிலாளர் வர்க்கத்தின் மேம்பாட்டிற்கான நல்ல பல திட்டங்களில் அரசாங்கங்கள் அந்தளவுக்கு இன்று அக்கறை காட்டுவதில்லை. அது தனியார் நிறுவனங்களின் நிதியின் மூலம் நிர்வகிக்கும் செயற்பாடுகளாகும். மற்றைய நாடுகளில் இத்தகைய நிதிப் பொறுப்புக்களை ஒரு குறிப்பிட்ட குழுவிடமே முற்றாக ஒப்படைத்து விடுவதுண்டு. இன்று அமெரிக்காவின் ஓய்வூதிய நிதியின் முழுப் பெறுமதி 11.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இது, 2008 ஆம் ஆண்டில் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இந்த நிதி அமெரிக்காவில் அதிகரிப்பதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் தலையீடு எதுவும் இருக்கவில்லை. அந்நாட்டில் நேர்மையான நிர்வாகிகள் இந்த நிதியத்திற்கு பொறுப்பாக இருந்தனால்தான் அது இவ்விதம் வளர்ச்சியடைந்திருக்கிறது.

இலங்கைக்கு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தைக் கூட சரியான முறையில் நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஊழல் மோசடியினால்தான் இந்த நிலை எங்கள் நாட்டில் எழுந்திருக்கிறது.

ஆயினும், மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கம் இந்த சர்வதேச ஓய்வூதிய நடைமுறையை ஏற்றுக்கொள்ளாத நடைமுறையில் இருப்பது போன்ற உணர்வு எங்களுக்கு தோன்றியுள்ளது.

ஆயினும், அதற்கு பதிலாக தனியார்த்துறையினருக்கும் ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுப்பது என்ற முடிவுடன் அவரது அரசாங்கம் செயற்படுகின்றது என்ற உணர்வே எங்களுக்கு ஏற்படுகின்றது. இது, ஒரு சிறந்த முற்போக்கு நடைமுறையாகும். மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது இது ஒரு சிறந்த ஓய்வூதியத் திட்டமாகத் தென்படுகிறது.

இந்நாட்டின் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்குக் கிடைக்கும் வருமானத்திற்கு மேலதிகமாகவே இந்த ஓய்வூதியத் திட்டம் கொடுக்கப்படவுள்ளது. இந்த ஓய்வூதியத் திட்டத்தை வழங்குவதற்காக இப்போது தொழிலாளர்க்கு கொடுக்கும் நலன்களை வாபஸ் பெறுவதற்கும் அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை. இதனையே அமைச்சர் வாசுதேவ நாண யக்காரவும் சுட்டிக்காட்டி இது ஒரு நல்ல யோசனை என்றும் பாராட்டுகின்றார்.

வாசுதேவ ஒரு தொழிற்சங்கத் தலைவராவர். அவர் எங்கள் நாட்டின் ஜனாதிபதியின் ஒரு நல்ல நண்பரும் கூட, வாசுதேவ அவர்கள் அமைச்சர் பதவிக்காகவோ நட்புக்காகவே தன்னுடைய வகுப்பைச் சேர்ந்த மக்களை காட்டிக்கொடுக்க அவர் தயாராக என்றுமே இருந்ததில்லை. ஒரு செயற்பாடு தவறு என்று தெரிவித்தால் அதற்காக வக்காலத்து வாங்கவும் என்றுமே தயாராக இருக்கவில்லை.

ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் திலகரத்னவும் இதுவொரு நல்ல யோசனை என்று பாராட்டியிருக்கிறார். உண்மையான காதல்கூட பல சந்தர்ப்பங்களில் தோல்வியில் முடிவடைவதுண்டு. அதுபோன்று அரசாங்கத்தின் இந்த நல்ல நோக்கமும் சில சந்தர்ப்பங்களில் தோல்வியில் முடிவடைவதுண்டு.

இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இன்று அரசாங்கத்திற்கு தான் செய்யும் நல்ல பணிகளைகூட மக்களுக்கு சரியான முறையில் அறிவுறுத்துவதற்கு முடியாத நிலை உருவாகியிருக்கிறது. அந்த அளவுக்கு அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரம் பலவீனமடைந்திருக்கிறது.

இது ஒரு சாராரின் பலவீனமா அல்லது உதாசீன போக்கா அல்லது எல்லாப் பழியையும் ஜனாதிபதி அவர்கள் மீது சுமத்த வேண்டும் என்ற எண்ணமா என்று எங்களால் சரியாக இனங்காண முடியாத நிலையும் இன்று உருவாகியிருக்கிறது.

சிலர் தங்கள் நற்பெயரை காப்பாற்றிக்கொள்வதற்காக எல்லா பழியையும் ஜனாதிபதியின் மீதே சுமத்தும் தந்திரத்தையும் கையாள்வதற்கு இடமுண்டு. ஒரு சாதாரண மனிதனின் உணர்வுகள் இதனையே வெளிப்படுத்துகின்றன.

இந்த ஓய்வூதியத் திட்டத்தின் ஆரம்பதிலேயே இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரின் இரு பிரதான பிரச்சினைகள் தலைதூக்கின. இந்த ஓய்வூதியத் திட்டத்தின் ஆரம்பத்தில் ஓய்வூதியம் பெறும் கணவன் இறந்துவிட்டால் அவரது மனைவிக்கு அந்த ஓய்வூதியம் கிடைக்காது என்ற நிலைப்பாடு இருந்தமையே பிரதான காரணமாகும்.

அதையடுத்து அரசாங்கம் இறந்தவரின் மனைவிக்கு ஓய்வூதியத்தை வழங்குவதற்கு உடன்பட்டது. இதில் இரண்டாவது குற்றச்சாட்டாக இருந்தது ஒருவர் ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துகொண்டு பத்து ஆண்டுகள் நிறைவுபெறுவதற்கு முன்னர் ஓய்வு பெற்றுவிட்டால் அவருக்கு ஓய்வூதியம் கிடைக்காது என்ற நிலைப்பாடு இருந்ததை நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அதையடுத்து சம்பந்தப்பட்டவருக்கு ஓய்வூதியத்தில் 60 சதவீதத்தை வழங்குமாயின் அவர் தான் பூர்த்தி செய்ய வேண்டிய பத்து ஆண்டு கால சேவையில் செலுத்த வேண்டிய முழுத் தொகையையும் ஒய்வூதியம் பெறும் தினத்தில் செலுத்தி விட வேண்டும் என்பதற்கும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது.

என்றாலும் சில தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு தொடர்ந்தும் நீடித்துக்கொண்டிருந்தது. சமீபத்தில் கட்டுநாயக்கவில் நடைபெற்ற ஓய்வூதியத் திட்டம் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் உரைநிகழ்த்திய ஒரு பெண் ஊழியர் எங்களுக்கு ஒய்வூதியம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் என்று வலியுறுத்திக் கூறினார். தொழில் அமைச்சரின் வயோதிபத் தோற்றத்தைக் கூட அந்தப் பெண்மணி தனது குரலை அடக்கிப் பேசாமல் தன்னுடைய நிலையை வலியுறுத்தினார். அந்தளவுக்கு அந்தப் பெண் ஆத்திரத்துடன் பேசினார்.

பொதுவாக இளம் வயதினர் சீர்திருத்தவாதிகளக இருப்பதுண்டு. வயோதிப நிலையை அடையும் போதுதான் ஒருவருக்கு ஓய்வூதியத் திட்டத்தை உணரக்கூடியதாக இருக்கும். அவர்கள் ஓய்வூதியம் வேண்டாம் என்று கூறும்போது, அவர்களுக்கு ஓய்வூதியத்தைக் கொடுப்பதற்கு அரசாங்கத்திற்கு என்ன கொழுப்பா அல்லது பைத்தியமா என்று எவரும் கேட்காத போதிலும் அதுவே இந்நாட்டு மக்கள் மனதில் தோன்றியிருக்கும் ஒரு கேள்விக் குறியாக அமைந்துள்ளது.

இதனால், அரசாங்கம் தனது ஓய்வூதியத் திட்டத்தை சுருட்டி மூட்டை கட்டிவிட்டது. அதுவும் ஒரு நல்ல நடைமுறைதான். அரசாங்கம் இந்த விடயத்தில் ஒரு தவறிழைத்துவிட்டது. இதனை அறிமுகம் செய்வதற்கு முன்னரே மக்களுக்கு ஓய்வூதியத் திட்டம் பற்றி நல்ல அறிவுறுத்தலை செய்திருக்க வேண்டும்.

அரசாங்கத்தின் இந்த பலவீனத்தை எதிர்க்கட்சியினர் பயன்படுத்தி அரசியல் இலாபம் திரட்ட முயற்சிக்கிறார்கள். எங்கள் நாட்டின் எதிர்க்கட்சிகள் இவ்விதம்தான் சுயநல நோக்கத்துடன் செயற்படுகின்றன. இன்று அரசாங்கத்தில் உள்ளவர்கள் எதிர்க்கட்சிகளில் இருந்தாலும் இதேபோக்கையே கடைப்பிடிப்பார்கள்.

அரசாங்கம் ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டாலும் இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை இதுவரை எவரும் கைவிடவில்லை. இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி அவர்களின் பதாகைகளைக் கூட உடைத்தெறிந்தபோது பொலிஸார் மெளனம் சாதித்துக்கொண்டு அமைதியாக இருந்தனர்.

(மிகுதி நாளை தொடரும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com