Contact us at: sooddram@gmail.com

 

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை ஏற்படுத்தி பயங்கரவாத அமைப்புகள் உருவாவதை தடுக்க வேண்டும்

தமிழர் பிரச்சினைக்கு நியாய பூர்வமான அரசியல் தீர்வை கூடிய விரைவில் ஏற்படுத்த வேண்டும். அவ்விதம் நாம் செய்யத் தவறினால் மீண்டும் ஒரு தடவை வடக்கு, கிழக்கில் எல்.ரி.ரி.ஈ. போன்ற ஒரு பிரிவினைவாத ஆயுத அமைப்பு உருவாகுவதை எங்களால் தடுத்துவிட முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தினகரனுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பலகால மாக நீடித்துக்கொண்டிருந்த பெரும் பிரச்சினையாக இருந்த கட்சியை சீரமைக்கும் செயற்பாடு பல்வேறு இழுபறிகளுக்குப் பின்னர் இப்போது நிறைவு பெற்றிருக்கிறது என்று அறிவிக்கப்படுகின்ற போதிலும், இலங்கையின் முதன் முதலில் ஆரம்பித்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ரணில் பிரிவு, சஜித் பிரிவு என்று இன்று இரண்டா கப் பிளவுபட்டு சின்னாபின்னமாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இதுபற்றி தினகரனின் செய்தியாளர் நிரூஷி விமலவீர கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை சந்தித்து உரையாடினார்.

நிரூஷி : ஐக்கிய தேசியக் கட்சியின் சீரமைப்பு செயற்பாடுகள் முடிவடைந்து விட்டாலும், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இளம் அரசியல் வாதி சஜித் பிரேமதாசவுக்கும் இடை யிலான மோதல்களும் குத்து வெட்டுக்களும் முடிந்து விட்டதாகத் தெரியவில்லையே.... இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

திஸ்ஸ அத்தநாயக் : கட்சிக்குள் முரண்பாடுகள் இருக்கின்றன. அதனை நான் மறுக்கவில்லை. பேச்சுவார்த்தை கள் மூலம் இந்த முரண்பாடுகள் அனைத்தையும் தீர்த்து வைக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். கட்சித் தலைவரை தெரிவுசெய்யும் போது பல பிரச்சினைகள் தோன்றின. அவற்றையும் நாம் பேச்சவார்த்தைகள் மூலம் சுமுகமாகத் தீர்த்துக் கொண்டோம். ஒரு கட்சி வெற்றிபெற வேண்டுமாயின் கட்சியில் ஒற்றுமையும் ஐக்கியமும் வலுப்பெற்றிருக்க வேண்டும்.

கட்சி அங்கத்தவர்கள் நாம் ஒன்றுபட்டு கட்சியை வலுவாக்குவதையே விரும்புகிறார்கள். கட்சி பிளவுபடுவதில் அவர்களுக்கு விருப்பமில்லை. கட்சி பிளவுபட்டு சீர்குலைந்து போவதனால் கட்சிக்கு தீமையைத் தவிர நன்மை ஏற்படாது. ஆயினும், இதனால் அரசாங்கக் கட்சி அரசியல் இலாபம் பெற்று தனது நிலையை வலுப்படுத்திக்கொள்ள முடியும்.

நிரூஷி : இன்று ஊடகங்கள் ஒரு மாற்று செயற்குழு கட்சியில் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகளை வெளியிடுகின்றன. இந்த மாற்று செயற்குழுவில் நீங்களும் அங்கத்துவம் வகிக்கின்aர்களா?

திஸ்ஸ அத்தநாயக் : எங்கள் கட்சியில் ஒரு செயற்குழு மாத்திரமே இருக்கிறது. கட்சிக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட செயற்குழுக்கள் இல்லை. ஊடகங்கள் இவ்விதம் செய்திகளை வெளியிட்டால் அந்த செய்திகள் தவறாகும். எங்கள் கட்சியிலுள்ள ஒரேயொரு செயற்குழுவில் நானும் அங்கத்துவம் வகிக்கின்றேன். செயற்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நாம் அனைவரும் ஏகமனதுடன் ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துகிறோம்.

நிரூஷி : கட்சியின் தேசிய அமைப்பாளர் ஒருவரை நியமித்தால், கட்சிக்குள் உள்ள பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று அன்று நீங்கள் கூறினீர்கள். இன்று ஒரு புதியவர் கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து, உட்கட்சிப் பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் நீதிமன்றத்திற்கு பிரச்சினையை எடுத்துச் சென்று கட்சியின் அழிவுக்கு மேலும் பாதகம் ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிaர்கள்?

திஸ்ஸ அத்தநாயக் : கட்சியின் சட்டத்திட்டங்களுக்கு அமைய, ஐந்து பிரதான பதவிகளுக்கான உத்தியோகத்தர்கள் தேர்தல் மூலம் அல்லது ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட வேண்டும். இப்பதவிகளுக்கு தேர்தல் மூலம் உத்தியோகத்தர்களை தெரிவு செய்தால் கட்சியில் ஒற்றுமை சீர்குலைந்து விடும் என்பதற்காக நாம் கூடியவரை பேச்சுவார்த்தை நடத்தி இந்த உத்தியோகத்தர்களை ஏகமனதாக தெரிவுசெய்தோம்.

மார்ச் 28 ஆம் திகதி நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இதற்கு மீண்டும் கட்சி அங்கத்தவர்கள் தங்கள் ஏகோபித்த அங்கீகாரத்தை அளித்தனர். எனவே, எல்லோருடைய இணக்கப்பாட்டுடன் ரவி கருணாநாயக்க தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து பலர் பலதரப்பட்ட கருத்துக்களை வெளியிட்டனர்.

இந்த நியமனம் குறித்து ஒரு குழுவினர் நீதிமன்றத்திற்கு சென்று ஆட்சேப மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்கள். இது சம்பந்தமாக நீதிமன்ற விசாரணை நடைபெறுவதனால் அதுகுறித்து கருத்துத் தெரிவிப்பது நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன்.

நிரூஷி : ரணிலும், சஜித்தும் பரஸ்பரம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் எடுத்த முடிவை அடுத்தே ரணில் கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். கட்சித் தலைமைப் பதவியை பெற்றுக்கொண்ட பின்னர் ரணில் அந்த உடன்பாட்டில் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளை மீறி எதேச்சாதிகார போக்கில் நடக்கிறார் என்று சஜித் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிaர்கள்?

திஸ்ஸ அத்தநாயக் : கட்சியின் புதிய விதிமுறைகள் மார்ச் மாதம் 21 ஆம் திகதியன்று நடைமுறைப்படுத்தப் பட ஆரம்பித்தது. இதன் அடிப்படை யில் ஐந்து முக்கிய பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வெவ்வேறு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எல்லோரும் நிறைவான மனிதர்களல்ல.

எல்லோருக்கும் சில பலவீனங்கள் இருக்கத்தான் செய்யும். கட்சிக்குள் இருக்கும் கருத்து வேற்றுமைகளை பெரிதுபடுத்தி எந்நேரமும் முரண்பாடுகளை ஏற்படுத்துவது நல்லதல்ல. கட்சித் தலைவரைப் போன்று சஜித் பிரேமதாசவுக்கும் கட்சியை கட்டியெழுப்பி அதனை வெற்றிப் பாதையில் வழிநடத்தி செல்வதற்கான பெரும் பொறுப்பு இருக்கிறது.

இந்த வெற்றிப் பயணத்தை சரியாக நிறைவேற்றுவதற்கு மற்றவர்களுக்கு சஜித் உதவி செய்ய வேண்டும். சிறு பிள்ளைகள் மாதிரி சண்டை போட்டுக் கொண்டிருப்பதைவிட கட்சியின் ஒற்றுமையை வளர்ப்பதற்கு இவர்கள் முன்வர வேண்டும். ஒருவர் மற்றவர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை நிறுத்தி கட்சி அங்கத்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தக்கூடிய வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

நிரூஷி : தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கட்சியின் நிலைப்பாடு என்ன?

திஸ்ஸ அத்தநாயக் : ஜெயலலிதா தமிழ் நாட்டின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டதனால் சில தீவிரவாத குழுக்களின் செயற்பாடுகளுக்கு சவால்கள் ஏற்படலாம். ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தில் எல்.ரி.ரி.ஈ.க்கும் இலங்கை தமிழ் கட்சிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார். இந்த தேர்தலில் ஜெயலலிதா மாபெரும் வெற்றியடைந்தார்.

ஜெயலலிதா தனக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆணையை காப்பாற்றிக்கொள்ளக் கூடிய வகையில் நடந்துகொள்வார் என்று நினைக்கிறோம். எங்கள் நாட்டு அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்திற்கோ ஜெயலலிதாவுக்கோ சவால்விடாமல் இவ்விரு அமைப்புக்களுடன் நாம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் இவ்விரு அமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி செயற்பட வேண்டும்.

நிரூஷி : இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் இது பற்றிய நிலைப்பாடு என்ன?

திஸ்ஸ அத்தநாயக் : தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சவார்த்தைகள் நடத்துவது ஒரு வரவேற்கத்தக்க செயலாகும். வடபகுதிக்கு கூடிய விரைவில் அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுப்பது அவசியமாகும். இன்று சர்வதேச மட்டத்தில் இருந்தும் வட இலங்கை மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அழுத்தங்கள் அரசாங்கத்திற்கு கிடைத்து வருகின்றன.

அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் செய்வதுடன் நின்றுவிடாமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் தயாராக இருக்க வேண்டும். இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்துவது பிரச்சினையை காலதாமதப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இருத்தலாகாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை இன்னுமொரு தடவை நாம் ஏமாற்ற முயற்சி செய்தால் அது பாரதூரமான விளைவுகளை நாட்டிற்கு ஏற்படுத்தும்.

நிரூஷி : இலங்கையில் மீண்டும் பதற்ற நிலையையும் பிரச்சினைகளையும் உருவாக்குவதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. உலகெங்கிலுமுள்ள தமிழ் புலம்பெயர்ந்த மக்கள் எல்.ரி.ரி.ஈ.யின் கொள்கைகளை நிறைவேற்றுவதில் இன்று தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதுபற்றி என்ன நினைக்கிaர்கள்.

திஸ்ஸ அத்தநாயக் : உலகெங்கிலுமுள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமிழர்களின் அபிலாஷைகளுக்காக போராடி வருகிறார்கள். வடக்கு, கிழக்கு குறித்து புலம்பெயர்ந்த தமிழர்கள் அவதானமாக இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. இந்தப் புலம்பெயர்ந்த தமிழர்கள் சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளையும் செய்து வருகிறார்கள்.

இந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் நோக்கங்களை தோல்வியடையச் செய்ய வேண்டுமாயின் நாம் காலதாமதமின்றி தமிழ் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். கருணா அம்மான், பிள்ளையான், கே.பி ஆகியோருக்கு இன்றைய அரசாங்கம் பல்வகையான சலுகைகளையும் உரிமைகளையும் வழங்கியுள்ளது. இவர்கள் தமிழர் பிரச்சினைக்கு நல்ல தீர்வை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மனதில் உருவாகினால் அது வெற்றிப்பாதையின் ஆரம்பமாக இருக்கும்.

நிரூஷி : இலங்கைக்கு எதிராக யுத்த நீதிமன்றத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தருஸ்மன் அறிக்கை ஓர் உந்துசக்தியாக இப்போது இருக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

திஸ்ஸ அத்தநாயக் : ஐக்கிய தேசியக் கட்சி தருஸ்மன் அறிக்கை பற்றி மிகவும் தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இதுபற்றிய ஒரு விசேட அறிக்கையையும் வெளியிட்டிருக்கின்றார். இதுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும். தருஸ்மன் அறிக்கையில் உள்ள சில அம்சங்களை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்து வைக்க முடியும் என்று நாம் நம்புகிறோம்.

இவ்வறிக்கையில் யுத்த நீதிமன்றம் பற்றி எதுவும் பிரஸ்தாபிக்கப்படவில்லை. ஒரு பிரஜையை, ஒரு போர் வீரரரை, ஒரு அரசியல்வாதியை யுத்த நீதிமன்றத்திற்குக் கொண்டுவரும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்கு இல்லை. ரணில் விக்கிரமசிங்க பிரதம மந்திரியாக இருந்த போது இதற்கு இடமளிக்கும் ரோம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத காரணத்தினால்தான் இந்த பாதுகாப்பு எமது நாட்டவருக்குக் கிடைத்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மட்டுமல்ல எல்.ரி.ரி.ஈ. க்கும் எதிராக அந்த அறிக்கையில் பல தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இலங்கையில் தீர்த்துக்கொள்ளக்கூடிய பல விடயங்கள் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவற்றை போராட்டங்கள், எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தி தீர்வுகாண முடியாது. வடக்கு, கிழக்கில் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தி மீண்டும் ஒரு தடவை எல்.ரி.ரி.ஈ. போன்ற பிரிவினைவாத சக்திகளுக்கு தலைத்தூக்குவதற்கு இடமளிக்க கூடாது என்பதே எனது கட்சியின் நோக்கமாக அமைந்திருக்கிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com