Contact us at: sooddram@gmail.com

 

50 ஆண்டு கால இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தக்கூடிய தென்னிலங்கையில் பேராதரவைப் பெற்ற ஒரு சிறந்த தலைவர் இன்று இலங்கையில் தோன்றியுள்ளார்

எங்கள் சுய தீர்மானத்துடன் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு ஆயுதப் போராட்டத்தை விட வேறு வழியில்லை என்ற எல்.ரி.ரி.ஈ. யுத்தத்தின் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2008ல் தெரிவித்த கருத்தை இன்று தமிழ் நாட்டில் உள்ள மக்களும் புரிந்து கொண்டிருப்பார்கள். மற்றவர்களின் தலையீடின்று நாமே நமது சுதந்திரப் போராட்டத்தை வென்றெடுக்க வேண்டுமென பிரபாகரன் அன்று கூறினார்.

பெடரேசன் என்ற செயற்பாட்டின் கீழ் ஒரே நாட்டில் இரு பிரிவினர் இரண்டு நாடுகளாக செயற்பட முடியும். இதுவே எங்கள் நோக்கமென்றும் அன்று பிரபாகரன் கூறினார்.

சமீபத்தில் கொக்காவில் ஒளி, ஒலி கோபுரத்தை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், புலிகளின் இத்தகைய கோரிக்கைளை நிறைவேற்ற தாம் தயாராக இல்லையென்பதை திட்டவட்டமாக எடுத்துரைத்தார். எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இந்த விடயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறினார். ஒரு சாரார் புலிகளின் கோரிக்கைகளையே இப்போதும் முன் வைக்கிறார்கள். அந்தக் கோரிக்கைகளை நான் நிறைவேற்ற தயாராக இல்லையென்று கூறினார்.

அரசியல் தீர்வு என்பது உள்ளூரில் எடுக்க வேண்டிய ஒரு முடிவாகும். இது குறித்து வடக்கிலும், தெற்கிலும் அரசியல் வாதிகள் ஒன்றிணைந்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டுமன தெரிவித்த ஜனாதிபதி, இதனை நாம் வெறுமனே அழுத்தங்களுக்கு பயந்து செய்ய முடியாதென்று கூறினார்.

என்னுடைய அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு என்றும் தயாராக இருக்கிறதென்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அதிகாரத்தை பகிர்ந்தளித்தல், ஜனநாயகத்திற்கு உத்தரவாதமளித்தல், எங்களுடன் வாழும் தமிழ் சகோதரர்களின் மொழி உட்பட பிரிவுபடாத இலங்கையில் இந்த அரசியல் தீர்வை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் எண்ணமாகும் என்று சொன்னார். (2008 நவம்பர் 2ம் திகதியன்று இந்து பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

2006ம் ஆண்டு ஆசியான் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, ஐக்கிய இலங்கைக்குள் ஆகக்கூடுதலான முறையில் அதிகாரத்தை பரவலாக்குவதே தமது இலட்சியம் என்று கூறினார். நிலைமை இவ்விதம் இருக்கும் போது யாராவது ஒருவர் ஜனாதிபதி அரசியல் தீர்வை விரும்பவில்லை என்று கூறினால் அது உண்மைக்கு மாறான ஒரு கூற்றாகும்.

இப்போது அரசியல் சாசனத்திற்கான 13வது அரசியல் திருத்தத்தின் கீழ் அரசியல் தீர்வொன்று படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. மாகாண சபை அமைப்பின் மூலமே இது நிறைவேற்றப்படுகிறது. 1987ம் ஆண்டில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கம் இலங்கையில் மாகாண சபை ஆட்சி முறையை எங்கள் நாட்டில் அறிமுகம் செய்து வைத்தது.

இது ஒரு ஐக்கியமான நாட்டுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் ஒரு செயற்பாடாகும். இதனால் இப்போது 13வது சட்டத் திருத்தப் பிரேரணை அரசியல் சாசனத்தில் ஒர் அங்கமாக இணைந்துள்ளது. அரசியல் சாசனத்தை பேணிப் பாதுகாக்கும் பொறுப்பு ஒரு நாட்டின் ஜனாதிபதி அவர்களின் கையிலேயே இருக்கிறது.

இந்த யதார்த்தத்தை எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முழு மனதுடன் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இந்த நடைமுறையில் உள்ள குறைபாடுகளை பேச்சுவார்த்தைகளின் மூலம் நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

13வது சட்டத் திருத்தத்தில் பல குறைபாடுகள் இருப்பதை தற்போது அனைவரும் புரிந்து கொண்டுள்ளார்கள். யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலிருந்தே பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கம் 2000ம் ஆண்டில் அரசியல் சாசனத்திற்கு திருத்தமொன்று கொண்டு வந்ததும் இந்த குறைபாட்டை நீக்குவதற்கேயாகும். இதற்கு உடன்பட்டவர்களில் பெரும்பானன்மையானோர் இன்றைய அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கிறார்கள். அதனால் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வது அவ்வளவு சிரமமானதல்ல.

ஐக்கிய தேசிய கட்சி அன்று இந்த சட்டப் திருத்தப் பிரேரணையை எதிர்த்து, அதனை தீயிட்டும் பிரச்சினைகளை ஏற்படுத்தியது. இதை தான் நாம் சந்தர்ப்பவாத அரசியல் என்று கூறுகிறோம். இத்தகைய எதிர்ப்புகள் இருந்த போதும் இந்த குறைபாடுகளை அவர்களால் நிவர்த்தி செய்ய முடியவில்லை.

எல்.ரி.ரி.ஈ.யினர் 13வது சட்டத்திருத்தப் பிரேரணைக்கு என்றுமே இணக்கப்பாட்டை தெரிவிக்கவில்லை. 1987ல் நிறைவேற்றப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான சட்டத்திருத்தத்தின் மூலம் இந்திய படைகள் இலங்கையில் ஊடுருவி வந்தன. இதனால் தான் எல்.ரி.ரி.ஈ தன்னுடைய எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றது. இறுதியில் பிரபாகரனும் அவரது அணியை சேர்ந்த மற்றவர்களும் மாண்டு போனார்கள். எல்.ரி.ரி.ஈயைத் தவிர மற்ற ஆயுதம் தாங்கிய போராளிக் குழுக்கள் 1987ம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை முழுமையாக ஆதரித்தார்கள்.

ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலே, கிரோஸ் ஆகியன இவற்றில் சிலவாகும். எல்.ரி.ரி.ஈயினர் இதற்கு இணக்கம் தெரிவிக்க தவறியதனால் யுத்தம் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் தான் ஜனாதிபதி அவர்கள் எல்.ரி.ரி.ஈயினர் முன்வைக்கும் கோரிக்கைகளை தர முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

எல்.ரி.ரி.ஈயினர் இப்போது முன்வைக்கும் இந்த கோரிக்கைகளை நாம் நிறைவேற்றினால் யுத்தம் செய்து வென்றெடுத்த சுதந்திரம் அர்த்தமற்றதாகிவிடும் என்று ஜனாதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

ஜே. ஆர் ஜெயவர்தன அரசாங்கம் அறிமுகம் செய்த மாகாண சபைகள் அமைப்பில் ஏதாவது தவறுகள் இருந்தால் அரசாங்கத்திற்கு அவற்றை இரத்து செய்யும் அளவுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கின்றது. அதிகாரத்தை பரலாக்குவதற்கு அரசாங்கம் விரும்புவதால் தான் மாகாண சபைகளை களைத்துவிட அரசாங்கம் விரும்பவில்லை என்று கூறுகிறது.

இதனை விட மாற்று செயற்பாடுகளிலும் இறங்க அரசாங்கம் தயக்கம் காட்டுவதற்கு ஒரு காரணம் உண்டு. எல்லோருடனும் கலந்துரையாடிய பின்னர் சரியான தீர்மானமொன்றை எடுப்பதில் அரசாங்கத்திற்கு ஆர்வம் இருப்பதனால் தான் இவ்வாறு செயற்படுகிறது.

இத்தகைய பின்னணியில் அரசியல் சாசனத்திற்காக 13வது சட்டத் திருத்தப்பிரேரணை தொடர்பாக இப்போது புதிய அரசியல் உரையாடல்கள் தோன்றியுள்ளன. 13வது சட்டத் திருத்தப்பிரேரணை இந்தியாவில் உள்ள பிராந்திய ஆட்சி முறைக்கு ஏற்பவே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிராந்தியங்களுக்கு இல்லாத அதிகாரம் இலங்கையில் மாகாண சபைகளுக்கு பெற்றுக் கொடுப்பது பற்றி இந்தியாவில் தற்போது ஒரு பெரும் சர்ச்சை தேன்றியுள்ளது. இந்தியா கூட எங்களிடம் இத்தகைய கோரிக்கையை முன்வைக்கிறது என்று எங்களால் நினைத்துகூட பார்க்க முடியாது. இலங்கை இந்திய கூட்டு அறிக்கைகளில் இவை பற்றி எதுவும் பிரஸ்தாபிக்கப்படவில்லை.

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு சுமார் 50 ஆண்டு கால வரலாறு இருக்கிறது. இதற்கு தீர்வை ஏற்படுத்த முயற்சி செய்த எஸ். டபிள்யு. ஆர் டி பண்டாரநாயக்க உட்பட பல முக்கிய தலைவர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். பண்டா - செல்வா ஒப்பந்தத்தை பகிரங்கமாக கிளித்தெறியும் அளவுக்கு பிரதமர் எஸ்.டபிள்யு. ஆர் டி பண்டாரநாயக்கவுக்கு அழுத்தங்கள் வந்தன.

1966ம் ஆண்டில் மாவட்ட சபைகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த இடதுசாரிகள் டட்லியின் வயிற்றில் மசால வடை என்று இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு முட்டுக்கட்டைகளை போட்டார்கள். தயிர் சாப்பிட்டாலும் அதனை ஒழுங்காக சாப்பிட வேண்டுமென்ற பழமொழி தென்னிலங்கையில் இருக்கிறது. அதற்கமைய ஜனாதிபதி அவர்கள் நிதானமாக நடந்து கொள்கிறார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் விடுத்த அறிக்கையில் யதார்த்தபூர்வமான அதிகார பரவலாக்களை தாம் விரும்பவதாக அறிவித்துள்ளார். இதற்கமையவே ஜனாதிபதி அவர்கள் தமிழ் சேதிய கூட்டமைப்புடன் இப்போது அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தகைளை நடத்திக்கொண்டிருக்கிறார். இதனை சிலர் காலத்தைப் போக்கும் ஒரு தந்திரச் செயல் என்றும் நினைக்கலாம்.

வடக்குக்கும், கிழக்குகிற்கும் இடையில் மீண்டும் பிரச்சினைகள் தோன்றாத வகையில் சிறந்த முறையில் நல்லாட்சியை மேற்கொள்வது இந்த அரசாங்கத்தின் கடமையாகும். 50 ஆண்டு கால இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான ஒரு சிறந்த தலைவர் இலங்கையில் தோன்றியிருக்கிறார். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தென்னிலங்கையில் மக்களாதரவு அற்ற ஒரு தலைவருக்கு வட இலங்கையின் பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதே இதற்கான உண்மையாகும்.

எந்த விடயத்திலும் நல்லதற்கும் கெட்டதற்கும் எங்களுடன் இருப்பது இந்தியா மாத்திரம் தான். என்றும் இந்தப் பிரச்சினையில் ஏதாவது ஒரு சம்பந்தம் இந்தியாவிற்கு இருந்தது. இப்போது இந்தியாவிற்கும் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டை சரியான முறையில் நிர்வகிப்பதே அந்தப் பிரச்சினையாகும். தமிழ் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு இலங்கையை பாதுகாக்க இந்தியா விரும்பவில்லை.

நொபேல் பரிசை வென்ற ஒருவர் இருசாரார் இரண்டாகப் பிரிந்து விவாதிப்பதை விட ஒன்றிணைந்து பேசுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். புத்தமகான் கூறியது போன்று மனம் திறந்து பேசுவதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நற்போதனையை கடைப்பிடித்து வெற்றியடைய வேண்டும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com