Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்நாடு அரசாங்கத்தினால் கச்சதீவை இலங்கையிடமிருந்து பறித்துவிட முடியாது

பாக்கு நீரிணையில் இருக்கும் கச்சதீவு இலங்கைக்கு சொந்த மான ஒரு தீவு. இத்தீவின் நிர்வாகம் இலங்கையின் இறை மைக்கு உட்பட்டதாக அமைந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கச்சதீவை மீண்டும் இந்தியா இலங்கையிடம் இருந்து பறித்து தமிழ்நாட்டின் ஒரு பிரதேசமாக இணைத்துக் கொள்ள வேண்டுமென்று மேற்கொள்ளும் போராட் டம் என்றுமே வெற்றியடையப் போவதில்லை என்று கடற்றொழில், நீர்வள அபிவிருத்தித் துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தியா சர்வதேச சட்டங்களை மதித்து நடக்கும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகும். எனவே, இந்திய அரசாங்கம் எக் காரணம் கொண்டும் செல்வி ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு செவிமடுத்து செயற்படப் போவதில்லை. இலங்கைக்கும் இந்தியா விற்கும் இடையிலான பல்லாண்டு காலம் நிலைத்திருக்கும் நல்லுற வும், பரஸ்பர ஒத்துழைப்பும் கச்சதீவு பிரச்சினையினால் என்றுமே சீர்குலைந்துவிடாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1974ம் ஆண்டில் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி அம்மையாருக்கும், இலங்கைப் பிரதம மந்திரி சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாருக்கும் இடையிலிருந்த நட்புறவும், ஒத்துழைப்பு காரணமாகவே இந்திய அரசாங்கம் கச்சதீவு இலங் கைக்கு தான் சொந்தமானது என்ற தீர்க்கமான சரியான முடிவை எடுத்து, அதனை அவ்வாண்டில் நிறைவேற்றப்பட்ட இந்திராசிறிமாவோ ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தது.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் வரையில் இலங்கை, இந்திய கடற் றொழிலாளர்கள் கடலில் நீண்டநேரம் மீன்பிடித்த பின்னர் கச்சதீவு கரையில் இறங்கி, அங்கு சில மணித்தியாலங்கள் ஓய்வெடுத்து தாங்கள் கொண்டுவந்த ஆகாரத்தை சமைத்து வயிறாற புசித்த பின்னர் மீண்டும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிப்பார்கள்.

இத்தகைய சந்தர்ப்பங்களில் இலங்கை மீனவர்களுக்கோ, இந்திய மீன வர்களுக்கோ இடையில் எக்காரணம் கொண்டும் கசப்புணர்வு களோ, வன்முறைகளோ ஏற்பட்டதில்லை. அதற்கு காரணம் கச்ச தீவில் இருக்கும் ஒரே ஒரு கட்டடத்தில் அமைந்திருக்கும் புனித அந்தோனியாரின் சிறிய தேவாலயமாகும். அங்கு மீனவர்கள் இந்துக் களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ இருந்தாலும் கடலில் தங்களை வழிகாட்டி காப்பாற்றும் தெய்வமாக மதிக்கும் புனித அந்தோனியாரின் திருப்பாதங்களில் மண்டியிட்டு அவரது ஆசிர்வாதத்துடனேயே தங்கள் கடற்றொழிலை ஆரம்பிப்பதுண்டு.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நடைபெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இலங்கையிலிருந்தும், இந்தி யாவில் இருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் சென்று கலந்து கொள் வார்கள். இந்த சந்தர்ப்பத்தில் இந்தியர்கள் தங்கள் கைவசமுள்ள சேலை போன்ற பலதரப்பட்ட பொருட்களை அங்கு கொண்டு வந்து இலங்கைப் பயணிகளுக்கு விற்பனை செய்வார்கள். அது போன்று இலங்கையரும் இந்தியாவில் அன்று தட்டுப்பாடக இருந்த தேங்காய் எண்ணெய், சவர்க்காரம் போன்ற பொருட்களை இந்தியர்களுக்கு விற்பனை செய்வார்கள்.

இரு நாட்டு மக்களுக்கிடையில் இருந்த இந்த நல்லுறவு இலங்கையில் பயங்கரவாதம் தோன்றிய பின்னரே பாதிப்பிற்குள்ளானது. அதற்கு பின்னரே பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை கடற்படையி னரின் கெடுபிடிகளும் ஆரம்பமாகின.

70ம் ஆண்டு தசாப்தத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையா ரின் அரசாங்கம் இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து உப உணவுப் பொருட்களின் இறக்குமதியை முற்றாக தடை செய்த போது, இலங்கையில் ஒரு இறாத்தல் செத்தல் மிளகாய் 45ரூபாவுக்கு விற் பனையாகியது. இது ஒரு பெரும் விலை அதிகரிப்பு என்பதனால் அன்று மக்கள் செத்தல் மிளகாய்க்கு பதில் மிளகையே காரத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்தினார்கள்.

இந்த கச்சதீவு திருவிழா காலத்தில் இந்தியர்கள் ஒரு இறாத்தல் மிள காயை 4 ரூபாவிற்கு கச்சதீவில் விற்கும் போது அவற்றை எமது மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வார்கள். கச்சத்தீவு இவ்விரு நாடுகளின் நட்புறவின் மையமாக அன்று விளங்கி வந்தது.

தமிழ் நாட்டின் அரசியல்வாதிகள் கச்சதீவையும், கடற்றொழிலாளர்களின் பிரச்சினையையும் அரசியலாக்கி தமிழ்நாட்டு மக்களின் அவதான த்தை திசைதிருப்பி மாநில அரசாங்கத்தின் பலவீனங்களை மறை த்துவிட எத்தனிக்கின்ற போதிலும் கச்சத்தீவுப் பிரச்சினை இலங்கை இந்திய நல்லுறவுக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று டாக்டர் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரி வித்துள்ளார்.

இன்றும் கூட கச்சதீவு இலங்கையின் இறைமையின் கீழ் வரும் ஒரு பிரதேசமாக இருக்கின்ற போதிலும் அங்கு இந்திய மீனவர்கள் அனுமதியின்றி வந்து தங்கியிருந்து செல்வதற்கு இந்த கச்சதீவு உடன்படிக்கை இடமளிக்கிறது. இவ்விதம் இந்திய மீனவர்களுக்கு கச்சதீவிற்கு வந்து செல்வதற்கு பூரண உரிமையை இருக்கின்ற போதிலும் தமிழ்நாட்டின் மாநில அரசாங்கம் கச்சத்தீவின் மீது உரிமை கொள்வதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து நாம் உண்மையிலேயே வேதனை அடைகின்றோம்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் மீண்டும் நிரந்தர அமைதியும், சமாதானமும் நிலைகொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் நாட்டிலுள்ள சில அரசியல் தலைவர்கள் கச்சத்தீவு விடயத் தில் அரசியல் இலாபம் தேட எத்தனிக்கும் முயற்சிகளை இனி மேலாவது கைவிட வேண்டும். இது இரு நாடுகளுக்கிடை யிலான நல்லுறவு மேலும் சிறப்புற்று விளங்குவதற்கு உதவியாக அமையும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com