Contact us at: sooddram@gmail.com

 

ஊடகங்கள் தேசத்திற்கு துரோகம் இழைக்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்

உலகின் மிகக் கொடிய பயங்கரவாத இயக்கமான எல். ரி. ரி. ஈயின் முதுகெலும்பை முறித்து அவ்வியக்கத்தை செயல் இழ க்கச் செய்த, உலக சாதனையை புரிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு முட்டுக்க ட்டை போடும் எண்ணத்துடன், இன்று சர்வதேச அரங்கில் சதித்திட் டமொன்று தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. யுத்தக் குற்றச்சாட்டுக்கள், வெள்ளைக்கொடி விவகாரம் ஓரளவு அடங்கி யிருக்கும் இன்றைய காலகட்டத்தில், எல். ரி. ரி. ஈ.யின் ஆதரவாளர் களின் பணப்பலம் காரணமாக மீண்டும் சனல் - 4, பீ. பீ. சி., அல் ஜெiரா மற்றும் சி. என். என். போன்ற ஏகாதிபத்தியவாதிகளின் கைம்பொம்மைகளாக இருக்கும் சர்வதேச ஊடகங்கள் இப்போது இலங்கைக்கு எதிரான துர்பிரசாரங்களை மீண்டுமொரு தடவை முடு க்கிவிட்டுள்ளது.

இந்த சர்வதேச ஊடகங்கள் ஊடக தர்மத்தை துச்சமாக மதித்து ஆதார மற்ற குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கத் தலைவர்கள் மீதும், அரசாங்கத்தின் மீதும் சுமத்தி எங்கள் நாட்டின் நற்பெயருக்கு இப் போது மீண்டும் தீங்கிழைக்கும் படலத்தை ஆரம்பித்துள்ளன.

யுத்தத்தில் எமது படைகள் வெற்றிபெற்ற காலகட்டத்தில் எவரும் வெள் ளைக் கொடிகளைப் பற்றியோ, யுத்தக் குற்றச் செயல்கள் பற்றியோ பேசவில்லை. ஏன் சரத் பொன்சேகா கூட இவை பற்றி பேச வில்லை. அவர் மெளனமாகவே இருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்கள் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னரே சரத் பொன்சேகா வெள்ளைக் கொடி கதையை ஆரம்பித்தார்.

இதிலிருந்து சரத் பொன்சேகா முன்பிருந்தே தான் தோல்வியடைவேன் என்பதை நன்கு தெரிந்திருந்து, தோல்விக்கு பின்னர் வெள்ளைக் கொடி, யுத்தக் குற்றச்சாட்டுக்கள் ஆகியவற்றை அரசாங்கத்தின் மீது சுமத்தும் சர்வதேச சதித்திட்டத்திற்கு பின்னணியில் இருந்து செயற் பட்டுள்ளார் என்பது புலனாகிறதென்று அரசியல் அவதானிகள் கரு துகிறார்கள்.

வெள்ளைக்கொடி குற்றச்சாட்டை அரசாங்கத்தின் மீது சுமத்தும் தீய எண்ணத்துடன் தான் சரத் பொன்சேகா, இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்தும் கூட யுத்தம் நிறைவு பெற்றுக் கொண்டிருந்த கடைசி சில தினங்களின் போது இலங்கையில் இருக்காமல் வெளி நாடு சென்றிருந்தார் என்றும் அதன் மூலம் யுத்தக் குற்றச்சாட்டில் இருந்தும் தன்னை நிரபராதி என காட்டமுடியுமென்று நினைத்திருப் பார் என அரசியல் அவதானிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.

சனல் - 4 வீடியோ ஒளிநாடா சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட போலி யான சதித்திட்டத்தின் ஓர் அங்கமாக அமைந்துள்ளது. இலங்கை யின் இன உறவை சீரழிக்கும் நோக்குடன் அரசாங்கத் தலைவர்கள் மீது சேற்றை அள்ளிவீசும் எண்ணத்துடனேயே இது எல். ரி. ரி. ஈயினரின் பணப்பலத்தினால் தயாரிக்கப்பட்ட ஒரு போலி ஆவண மாகும்.

ஊடகங்கள் நேர்மை தவறி ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளக்கூ டாது என்ற ஊடக ஒழுக்க நெறிக்கு மாறாக சனல் - 4 ஊடகம் செயற்பட்டிருப்பதை சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாக்கும் எந்த வொரு ஊடகமும் கண்டிக்காமல் இருக்க முடியாது.

யுத்தக் குற்றச்சாட்டுகளை பற்றி நாம் பேசுவோமானால் முதலில் இன் றைய நவீன உலகில் யுத்தக் குற்றச்சாட்டுகளை புரிந்தவர்கள் ஜனாதி பதி ஒபாமாவும், முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷ¥மாகும். இவர்களுக்கு அடுத்தபடியாக குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திர மோடி தங்கள் சொந்த நாட்டிலேயே பல்லாயிரக்கணக்கான அப் பாவி முஸ்லிம்களை அநாதைகளாக்கிய யுத்தக் குற்றத்தை புரிந்தி ருக்கிறார்கள். இப்படி யுத்தக் குற்றங்கள் புரிந்தவர்கள் பலர் இருக் கும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது சர்வதேச அரங்கில் யுத்தக் குற்றச்சாட்டு அழுத்தங்களை கொண்டுவருவது விந்தையாக இருக்கிறதென்று தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தின் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் அங்கத்தவர் ஹசன் அலி குத்தூஸ் தெரிவித் திருக்கிறார்.

தற்போது இலங்கைக்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டிருக்கும் அவர் நூற்றுக்கணக்கான மக்களை படுகொலை செய்து இந்தியா வையே பீதியில் ஆழ்த்திய சந்தனக்கட்டை கடத்தல்காரன் வீரப் பனை செல்வி ஜெயலலிதா முன்பொரு தடவை முதலமைச்சராக இரு ந்த போது துடிதுடிக்க சுட்டுக்கொன்ற அரசாங்க தலைவராக இருந் தார். என்னவென்றாலும் அன்று ஜெயலலிதா செய்ததில் தவறில்லை. இப்படியான கொலைகாரர்களை கொலை செய்யாமல் என்னதான் செய்ய முடியும். ஜெயலலிதா மீதும் இதற்காக யுத்தக் குற்றச்சாட்டை சுமத்தினால் அது நியாயமாக இருக்க முடியுமா? என்றும் ஹசன் அலி குத்தூஸ் மேலும் தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஊடகங்களும் தங்கள் பொதுக்கடமை களை நிறைவேற்றும் போது நாட்டுப்பற்றுடன் செயற்படுவது மிகவும் அவசியமாகும். ஒருசிலரின் தூண்டுதலுக்காக பிறந்த நாட்டுக்கு எந்த வொரு ஊடகவியலாளரும் தீங்கிழைக்க வேண்டுமென்று மனதில் கூட நினைக்கக் கூடாது.

உலக நாடுகளுக்கு ஊடக சுதந்திரத்தைப் பற்றி பறைசாற்றிக் கொண்டி ருக்கும் நாம் மேலே குறிப்பிட்ட ஊடகங்கள் எப்போதும் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்தே தங்கள் ஊடக சுதந்திரத்தை துஷ் பிரயோகம் செய்கின்றன. உலக நாடுகளில் இன்று அதிகரித்து வரும் வன்முறைகளுக்கும், உள்நாட்டு பிரச்சினைகளுக்கும் இந்த ஊட கங்களின் நேர்மையற்ற தன்மையே இதற்கான பிரதான காரணமா கும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com