Contact us at: sooddram@gmail.com

 

தோட்டத் தொழிலாளர்களுக்காக இன்று எவருமே இல்லை

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் கலாவதியான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள நிர்ணயக் கூட்டு ஒப்பந்தம் பல்வேறு இழுத்தடிப்புகள், இடையூறுகள், வில்லங்கங்களை எதிர்கொண்டு கடந்த திங்களன்று (6 ஆம் திகதி) முடிவுக்கு வந்துள்ளது. வாழ்க்கைச் செலவு வானளவு உயர்ந்துள்ள இன்றைய நிலையில் மிகவும் எதிர்பார்ப்போடு இந்த ஒப்பந்தத்தின் மூலமான சம்பள உயர்வை எதிர்பார்த்திருந்த தொழிலாளர்களுக்கு வழமை போல் இம்முறையும் ஏமாற்றமே கிடைத்துள்ளது என மலையக தொழிற்சங்கத் தலைமைகள் வரிந்து கட்டுகின்றன.

1998 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தமானது, வளர்முக நாடுகளில் தொழிலாளர்களுக்கு வாய்ப்பான அம்சங்கள் பலவற்றை வழங்கி வருகின்ற போதும் நம் நாட்டில் இதன் பெறுபேறு தொழிலாளர்களை நசுக்குவதாகவே அமைந்திருக்கின்றது எனப் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.1998 ஆம் ஆண்டுக்கு முன்னர் சம்பள நிர்ணய சபையால்தான் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. இதில் சம்பள நிர்ணய சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் வாக்களிப்பு மூலமே சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அரசு சார்பாக நியமிக்கப்படுவோர் நிர்வாகத் தரப்புக்கு சார்பாக வாக்களிக்கும் தன்மை இருந்து வந்தமை காரணமாகத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பும், கோரிக்கைகளும் தோல்வியைத் தழுவி வந்தன. இந் நிலையில், இப் புதிய ஒப்பந்த முறை கவனத்தில் எடுக்கப்பட்டது.

பேரம் பேசும் தன்மை இதில் காணப்பட்டமை காரணமாகத் தொழிலாளர் சம்பளத்தில் அதிகளவு அதிகரிப்பை பெறமுடியும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாகவே தோட்டத் தொழிற்சங்கங்கள் இதனை ஏற்றுக் கொண்டன. ஆனால் ஒப்பந்த நடைமுறையைப் பார்க்கும்போது அன்று சம்பள நிர்ணய சபையின் அரச பிரதிநிதிகள் என்ன செய்தனரோ அதனையே ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இன்று மேற்கொள்கின்றன.

உண்மையில் தொழிலாளர்களின் சார்பில் இன்று எவரும் இல்லையென்ற நிலை மீண்டும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இற்றைவரை இந்தப் பேரம் பேசும் சக்தியூடாகத் தோட்டத் தொழிலாளர்கள் நியாயமான சம்பள உயர்வைப் பெறவில்லை என்பதே பலரதும் ஆதங்கமாகும். அவ்வாறாயின் இந்தப் பேரம் பேசல் யாருக்காக பயன்படுகின்றது என்பது கேள்விக்குரியதாக இருப்பது தவிர்க்க முடியாதது அல்லவா?

திட்டமாக ஒரு தொகையை சம்பளமாக நிர்ணயிக்காமல், சம்பளமாக ஒரு தொகையையும் கொடுப்பனவுகளாக ஒரு சில தொகைகளையும் நிர்ணயிப்பதால் கொடுப்பனவுகள் குறித்த விடயத்தில் தோட்டத் தொழிலாளர்கள் நிர்வாகங்களால் ஏமாற்றப்படக் கூடிய நிலைமை தொடர்கின்றது என்பதும் ஒரு வாதமாக இருந்து வருகின்றது.

2009 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை உதாரணமாகக் கொள்வோமேயானால், இதில் ஊக்குவிப்புக் கொடுப்பனவு என அறிவிக்கப்பட்ட 90 ரூபாவை பெரும்பாலான தோட்ட நிர்வாகங்கள் வழங்கவில்லை எனத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இவ்விடயத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொழிற்சங்கங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த தோடு தோட்ட நிர்வாகமே இதற்கு முழுக் காரணமாக அமைந்திருந்தது எனவும் கூறியுள்ளனர்.

இவை மட்டுமின்றி, விசேட பொறுப்புகளுக்கான கொடுப்பனவு, லீவு போனஸ், இறுதிச்சடங்குக் கொடுப்பனவு, பண்டிகை முற்பணம், தேயிலை வழங்கல், தற்காலிக வேலையாளர் போன்ற விடயங்களிலும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

2009 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் போது இப்படியான விடயங்கள் பின்னர் பேசித் தீர்க்கப்படும் எனக் கூறப்பட்டபோதும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலை கடந்த 6 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் முன்னர் 285 ரூபாவாக இருந்த ஒருநாள் அடிப்படைச் சம்பளம் 380 ரூபாவாகவும், 405 ரூபாவாக இருந்த மொத்த சம்பளம் 515 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் உள்ளடக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகளான 75 சதவீத வருகைக்கான கொடுப்பனவு 90 ரூபாவிலிருந்து 105 ரூபாவாக உயர்த்தப்பட்டபோதும் இதனைத் தீர்மானிக்கும் பொறுப்பு நிர்வாகங்களிடம் முழுமையாக விடப்பட்டுள்ளமை பெரும் பாதகமான விடயம் என்பதை தொழிலாளர்கள் சுட்டிக்காட்டி அறிவுறுத்துகின்றனர்.

புதிய மொந்தையில் பழைய கள் என்பது போல முந்தைய ஒப்பந்தம்போல் இந்த ஒப்பந்தமும் தோட்ட நிர்வாகங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, பிறவிடயங்கள் பின்னர் பேசித் தீர்க்கப்படும் என முன்பு போன்றே இப்போதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறவிடயங்கள் எனக் கூறப்படுபவை இன்றைய வாழ்வியல் சுட்டிப் புள்ளிகளுக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட வேண்டியவை இவற்றில் 15 விடயங்கள் முன்னைய ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும் இவற்றில் பாதிக்குமேல் முற்றாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் தொழிலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

உதாரணமாக, ஒரு விடயத்தை பார்ப்போமாயின் ஒரு தொழிலாளி மரணிக்கும் பட்சத்தில் அவருக்கு தோட்ட நிர்வாகம் 2000/= ரூபாவை வழங்க வேண்டும் என முன்னைய (2009) ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய வாழ்க்கைச் செலவின் அடிப்படையில் இது எவ்வகையிலும் பொருந்தி வராத ஒரு தொகையாகும். எனவே, இவ்வாறான விடயத்தில் முழுமையான கவனம் செலுத்தப்பட வேண்டும் அல்லவா?

எடுத்தோம், கவிழ்த்தோம் எங்கள் வேலை முடிந்து விட்டது என ஒப்பந்தத்தில் கைசாத்திட்ட தொழிற்சங்கங்கள் இருந்து விடாமல் ஒப்பந்தம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? இவற்றை நிர்வாகங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்துகின்றனவா என்பதையும் பிறவிடயங்கள் குறித்த பேச்சும் அது தொடர்பான முடிவுகளும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை தொழிலாளர் சார்பில் நினைவூட்ட விரும்புகின்றோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com