Contact us at: sooddram@gmail.com

 

யுத்தத்தில் படுதோல்வியடைந்தாலும் சர்வதேச ரீதியில  எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்கள் இலங்கைக்கு தீங்கிழைக்கிறார்கள்

எல்.ரி.ரி.ஈ இயக்கம் யுத்த முனையில் படுதோல்வியடைந்துள்ள போதிலும் அதன் தீவிர கொள்கைகளை கடைப்பிடிக்கும் பலர் புலம்பெயர்ந்த மக்களில் சங்கமித்து, இலங்கைக்கு எதி ராக சர்வதேச ரீதியில் அழுத்தங்களையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் இன்னுமொரு பயங்கரவாத செயற்பாட்டில் இறங்கி யிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவர் கள் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்த புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணிதிரண்டு எங்கள் நாட்டின் தேசப்பற்றுள்ள மக்கள் அனைவரும் செயற்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடு பெற்றுள்ள வெற்றியை காட்டிக் கொடுத்து மீண்டும் பயங்கர வாதம் தலைதூக்குவதற்கு உறுதுணை புரிவோருக்கு எதிராகவும், நாட்டைப் பாதுகாப்பதற்கும் மக்கள் மீண்டும் அணிதிரள வேண்டு மென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

எல்.ரி.ரி.ஈ அப்பாவி மக்களை பயமுறுத்தி மாதாந்தம் பலவந்தமாக வாங்கிய கோடான கோடி ரூபாவையும், போதைவஸ்து கடத்தல், ஆயுதக்கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மூலமும் சம்பாதித்த பணம் முழுவதும் இன்று வெளிநாடுகளிலேயே தேங்கிக் கிடக்கின்றன.

அந்தப் பணத்தை பயன்படுத்தியே இலங்கைக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளில் சர்வதேச ரீதியில் இன்று எல்.ரி.ரி.ஈயின் ஆதர வாளர்கள் அரங்கேற்றி வருகின்றார்கள்.

தாருஸ்மன் அறிக்கையும், எல்.ரி.ரி.ஈயின் தூண்டுதலின் பேரில் தயா ரிக்கப்பட்ட அறிக்கை என்று குற்றம் சாட்டும் அளவுக்கு இவ்வறிக் கையில் உண்மைக்கு முரணான பல விடயங்கள் சேர்க்கப்பட்டி ருக்கிறது.

எல்.ரி.ரி.ஈயின் ஆதரவாளர்களும், மேற்குலகிலுள்ள இலங்கைக்கு எதி ரான ஏகாதிபத்தியவாதிகளும் எங்கள் நாட்டுக்கு எவ்வளவுதான் தீங்கிழைக்க எத்தணித்தாலும் அம்முயற்சிகள் என்றுமே வெற்றி யடையப் போவதில்லை. அதற்கு காரணம் உலகில் நீதி, நியாயத் தின் மீது நம்பிக்கை வைத்துள்ள பல தேசங்கள், இலங்கையின் மீது காட்டிவரும் அன்பும், மதிப்பும், மரியாதையுமேயாகும்.

இன்று இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரத்தைப் பெற்றிருக்கும் இரு வல்லரசுகளான சீனாவும், ரஷ்யாவும் இருந்து வருகின்றன. எக்காரணம் கொண்டும் நாம் இலங்கை மீது சில தீய சக்திகள் பிரச்சினைகள் ஏற்படுத்த இட மளிக்க மாட்டோம் என்று இவ்விரு நாடுகளும் அறிவித்துள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு சிறந்த தேசத் தலைவர் மட்டு மல்ல. ஒரு சிறந்த இராஜதந்திரியுமாவார். தமது அரசாங்கத்திற்கு எதிராக எல்.ரி.ரி.ஈயின் கைம்பொம்மைகளாக ஆட்டிப் படைக்கப்படும் சில ஏகாதிபத்தியவாத சக்திகள் இலங்கை மீது அநாவசியமான அழுத்தங்களையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்த எத்தணிக்கும் போது, அவர் எங்கள் நாட்டின் உண்மையான நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவின் நேசக்கரத்தை வலுவாக பற்றிக்கொள் ளும் ஒரு சிறந்த கொள்கையை இன்று வெற்றிகரமான முறையில் கடைப்பிடித்து வருகின்றார்.

சமீபத்தில் சென்.பீற்றர்ஸ் பேர்க் சர்வதேச பொருளாதார பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா சென்றிருந்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு ரஷ்ய ஜனாதிபதி டிமிட்றி மெட்வடேவை சந்தித்து இரு தேச நல்லுறவு, பரஸ்பர பொரு ளாதார ஒத்துழைப்பு போன்ற பலதரப்பட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார். பயங்கரவாதத்தினால் இலங்கை யும், ரஷ்யாவும் பெருமளவில் பாதிப்பிற்குள்ளானதுடன், பெருமளவு உயிரிழப்பையும், பொருள் இழப்பையும் அடைந்துள்ளதாக இந்த சந்திப்பின் போது இலங்கை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன ஜனாதிபதி ஹ¥ ஜிந்தா வோவைச் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பின் போது சீனத் தலைவர் இலங்கையின் சுதந்திரத்தையும், இறைமையையும் பேணிப் பாதுகாப்பதற்கும், சீனா என்றும் தயாராக இருக்கிறதென்று உறுதி யளித்தார். இலங்கையின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடு இருப்பதை சீனா வன்மையாக கண்டிக்கிறதென்றும் அவர் கூறினார்.

இவ்விதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் நட்பு நாடுகளின் ஆதரவை இன்று பெற்றுக் கொள் வதில் வெற்றி கண்டுள்ளார். நாடு பயங்கரவாதிகளை பூண்டோடு ஒழித்துக் கட்டியதன் மூலம் அடைந்த மாபெரும் வெற்றியை நாம் காப்பாற்ற வேண்டுமேயானால், உள்ளூரில் மட்டுமல்ல வெளிநாடு களில் இருந்தும் எல்.ரி.ரி.ஈயின் ஆதரவாளர்கள் மேற்கொண்டு வரும் போலிப் பிரசாரங்களுக்கு தக்க பதிலடி கொடுத்து, உண்மை நிலையை உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டுவது அவசியமாகும்.

சில காலம் மெளனமாக இருந்த சனல்-4 தொலைக்காட்சி மீண்டும் தனது திருகுதாளங்களை எல்.ரி.ரி.ஈயின் பணத்திற்கு அடிமையாகி ஆரம்பித்து போலியான ஒளிநாடாக்களை இன்று வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சனல்-4 தொலைக்காட்சி சேவையின் பணியாளர்கள் ஒருவர் கூட இங்கு வந்து இந்த ஒளிநாடாக்களை பதிவு செய்யவில்லை.

இலங்கையில் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சில தேசத் துரோகிகளே எல்.ரி.ரி.ஈயின் பணத்திற்கு அடிமையாகி, இப்படியான போலி ஒளிநாடாக்களை சனல்-4 தொலைக்காட்சி சேவைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

எல்.ரி.ரி.ஈயை கண்டித்து வரும் நாம், எங்கள் மத்தியில் உள்ள இத் தகைய தேசத் துரோகிகளை இனங்கண்டு தண்டிப்பது மிகவும் அவசியம். இதன் மூலமே எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதம் மீண்டும் எங் கள் நாட்டில் நிலை கொள்வதை நிரந்தரமாக தடுத்துவிட முடியும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com