Contact us at: sooddram@gmail.com

 

மக்களை ஏமாற்றும் நாடு கடந்த அரசு!

புலம்பெயர்ந்த மக்களையும் தமிழக உறவுகளையும் ஏமாற்றி தமது நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்லும் முயற்சியில் உருத்திரகுமாரனின் நாடு கடந்த அரசு செயற்படுவதை அண்மைக்காலங்களில் மிகவும் வெளிப்படையாக அவதானிக்க முடிகின்றது. அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு சென்றிருந்த இதன் பிரதிநிதிகள் சிலர், அங்குள்ள முக்கிய பிரமுகர்களுக்கு பக்கத்தில் சென்று அமர்ந்துகொண்டு அவர்களுடன் பேச்சுக்கொடுப்பதுபோல் பாவனை செய்ய, அதனை வேறொருவர் தனது கமெராவில் பதிவு செய்துகொள்ள பின்னர் அதனையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பில் நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் பங்கேற்பு என உருத்திரகுமாரனின் நாடு கடந்த அரசு ஊடகங்களுக்கு செய்தி அனுப்பியிருந்தது.

இவ்வாறான நிகழ்வுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அரங்கேறிக்கொண்டிருந்ததை அங்கிருந்த ஊடக இல்லத்தின் செய்தியாளர் நேரில் கண்டு எமக்குத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது பிரித்தானிய நாடாளுமன்ற கட்டடத்தில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது என்ற செய்தியைப் பரப்பியுள்ளனர்.

நாடாளுமன்றங்களில் உள்ள சந்திப்புக் கூடங்களில் அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட கட்சி ஒன்றின் ஏற்பாட்டில் சந்திப்புக்களை மேற்கொள்ள முடியும். ஒரு கட்சியின் ஆதரவைப் பெற்றுக்கொண்டால் நாடாளுமன்றங்களில் நடத்தமுடிகின்ற கூட்டங்களை பிரமாண்டப்படுத்தி ஏன் செய்தியாக்குகின்றது என்ற கேள்வியே எழுகின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆரோக்கியமான எந்த செயற்பாடுகளுமின்றி அறிக்கையும், அடையாள அட்டையும் வெளியிடும் நாடு கடந்த அரசு போகும் பாதை எங்கே என்பது இதன்மூலம் மக்களுக்கு தெளிவாகி வருகின்றது.

இதேவேளை, தமிழகத்தில் இன உணர்வு சார்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள், பிரமுகர்களைச் சந்தித்து பொய்யான பரப்புரைகளை இவர்கள் செய்து வருவதும் தெரியவருகின்றது. அண்மையில் தமிழகம் சென்றிருந்த நாடுகடந்த அரசின் அமைச்சரெண்டு சொல்லிக் கொள்ளும் ஒருவர், நாம் தமிழர் இணைப்பாளர் சீமானைச் சந்தித்து படங்களையும் வெளியிட்டு, நாடு கடந்த அரசிற்கு சீமான் ஆதரவு என்று செய்திகளையும் வெளியிட்டிருந்தனர்.

சீமானுடன் உரையாடிய சந்தர்ப்பமொன்றில் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, ‘வர்றாங்கள், பக்கத்தில் நின்று படம் எடுக்கவேண்டும் என்கிறாங்கள். பிறகு எதாவது இனப்படுகொலையை வெளிக்கொண்டுவாற நடவடிக்கைகளை எடுக்கப்போறம் எண்டுறாங்கள். அதற்கு ஆதரவெண்டு சொன்னால் வெளியிலைபோய் சீமான் இதற்கு ஆதரவு எண்டு செய்தியளைப் போடுறாங்கள். அதுக்கு நான் என்ன செய்யமுடியும்?’ என்றார்.

அண்மையில் பிரான்ஸ் வந்திருந்த தமிழக அமைப்பொன்றின் பிரதிநிதி ஒருவர், தமிழகத்தில் இவர்கள் செய்துவரும் பிரச்சாரம் குறித்து தான் பலத்த சந்தேகங்களைக் கொண்டிருந்ததாகவும், சேரமான் எழுதிவரும்ஈழமுரசுலீக்ஸ்படித்ததன் பின்னர் தனது பல கேள்விகளுக்கு விடை கிடைத்ததாகவும் கூறியதுடன், தமிழகத்தில் இவர்களது பொய்யான பரப்புரையை முறியடிக்க வேண்டும் அதற்கு ஈழமுரசு அங்கு செல்லவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஈழத் தமிழ் மக்களுக்கு செய்யவேண்டிய எத்தனையோ பணிகள் இருக்கையில், இவர்களின் பொய்ப்பரப்புரைகளில் ஏமாந்தே நாடு கடந்த அரசுக்கு ஆதரவாக கையெழுத்து சேகரிப்பதில் இறங்கியிருக்கின்றார் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நன்றி: ஈழமுரசு (21/06/2011)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com