Contact us at: sooddram@gmail.com

 

தந்திரிகளின் மறுமுகம் - 11

சிங்கள அரசின் கைப்பாவையாக விளங்கும் கே.பியுடன் இரகசிய தொடர்புகளைப் பேணியவாறு

உருத்திரகுமாரனின் பின்புலத்திலிருந்து அரூப கரமாக இயங்கி வரும் அறிவன்

என்றழைக்கப்படும் கே.பி.ரெஜி அவர்களின் சுயரூபத்தை வெளிக்கொணரும் ஓரிரு தகவல்களை

எமது கடந்த பத்தியில் வெளியிட்டிருந்தோம்.

குறிப்பாக 2008ஆம் ஆண்டு வன்னிப் போர் உக்கிர கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கிய

பொழுது புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தமிழீழ தேசியக் கட்டமைப்புக்களிடையே

குழப்பம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ரெஜி ஈடுபட்டமை தொடர்பாகவும்இ இதனையடுத்து

ரெஜிக்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள்

குறித்தும் சில ஆதாரபூர்வமான தகவல்களை நாம் வெளிக்கொணர்ந்திருந்தோம்.

இதனை அடுத்து 'ஈழமுரசு' பத்திரிகையை முடக்கும் நோக்கத்துடன்இ கடந்த வாரத்திலிருந்து

நாசகார நடவடிக்கைகள் சிலவற்றில் கே.பியின் அடியாட்கள் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

இதில் குறிப்பாக கே.பியின் இருகரங்களில் ஒருவராக விளங்கும் மனோகரனும்இ அவரது

நீண்டகால உதவியாராக விளங்கிஇ வன்னியில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு

பின்னர் ஜெனீவாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட முன்னாள் பிரெஞ்சுக் கிளைப் பொறுப்பாளரான

நபர் ஒருவரும் முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றனர். இவ்வாறான மிரட்டல்களுக்கு

அடிபணியாது உண்மையை மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியை இப்பத்தி தொடர்ந்தும்

முன்னெடுக்கும் என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

 

சுயாதீனமாக இயங்கும் தமிழீழ தேசிய ஊடகங்களை கட்டுப்படுத்துதல்இ பிரித்தானிய தமிழர்

பேரவை போன்ற பரப்புரை அமைப்புக்கள் மீது சேறுபூசி அவற்றின் செயற்பாடுகளுக்கு

இடையூறு விளைவித்தல் போன்ற நாசகார எண்ணவோட்டத்துடன் ரெஜி அவர்களால் 21.08.2008

அன்று வன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் ஒரு பகுதியையும் எமது கடந்த

பத்தியில் நாம் இணைத்திருந்தோம்.

ரெஜியின் கடிதத்தை ஆராய்ந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள்இ

இது தொடர்பாக அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் அவர்களுடன் ஆலோசித்த

பின்னர் ரெஜியை உடனடியாக வன்னிக்கு வருமாறு பணித்திருந்தார். எனினும் தனது விசாவை

பிரித்தானிய உள்துறை அமைச்சு இழுத்தடிப்பதாக ரெஜி பல்லவிபாடி வன்னி செல்வதை

தந்திரமாக தவிர்த்துக் கொண்ட பொழுதுஇ தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வெளிநாட்டுக்

கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக வன்னியில் ஆலோசிக்கப்பட்டது.

2002ம் ஆண்டு போர்நிறுத்தம் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர் கே.பியின் தலைமையில்

இயங்கிய அனைத்துலக செயலகத்தின் மேற்பார்வைக்கு உட்பட்டே தமிழர் புனர்வாழ்வுக்

கழகத்தின் வெளிநாட்டுக் கிளைகள் இயங்கி வந்தன. எனினும் 2003ஆம் ஆண்டு வன்னியில்

மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுக் கிளைகளுக்கான மறுசீரமைப்பின் விளைவாக கே.பியின்

தலைமையிலான அனைத்துலக செயலகம் கலைக்கப்பட்டுஇ அதன் முழுப் பொறுப்புக்களையும்

அனைத்துலக தொடர்பகம் ஏற்றிருந்தது. எனினும் சமாதான சூழலைக் கருத்திற் கொண்டும்இ

அனைத்துலக அரங்கில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சுயாதீனமாக செயற்பட வேண்டியதன்

அவசியத்தைக் கவனத்திலெடுத்தும்இ தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வெளிநாட்டுக்

கிளைகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பு தமிழீழ அரசியல்துறையின் ஆளுகைக்கு மாற்றம்

செய்யப்பட்டிருந்தது.

சமாதான காலத்திற்கு பொருத்தமாக அமைந்திருந்த இம்மறுசீரமைப்புஇ போர்க்காலத்தில்

எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதை ரெஜியின் குழப்பகரமான நடவடிக்கைகள்

வெளிப்படுத்தியிருந்த நிலையில்இ அனைத்துலக தொடர்பகத்தின் மேற்பார்வையின் கீழ்

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை கொண்டு வருவதை மையப்படுத்தியே 2008ஆம் ஆண்டு

செப்ரம்பர் மாதம் வன்னியில் ஆலோசனைகள் நிகழ்த்தப்பட்டிருந்தன.

எனினும் போர்ச்சூழலில் இவ்வாறான ஆளுகை மாற்றத்தை உடனடியாகக் கொண்டு வருவது

சாத்தியமில்லை என்பதால்இ இதனைப் படிப்படியாகக் கொண்டு வருவதற்கான கொள்கையளவிலான

முடிவு வன்னியில் எடுக்கப்பட்டிருந்தது. இதன் முதற்கட்டமாக அனைத்துலக தொடர்பகத்தின்

ஆலோசனையுடனும்இ உதவியுடனும் மனிதநேயப் பணிகளை முன்னெடுக்குமாறு 2008 ஒக்ரோபர் மாதம்

ரெஜிக்கு வன்னியிலிருந்து பணிக்கப்பட்டது.

இதனை ரெஜி எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் ஜோய் மகேஸ்வரன்இ சர்வே ஆகியோரின்

உதவியுடன் கே.பியுடனும்இ நேரடியாக உருத்திரகுமாரனுடன் தனது உறவை ரெஜி மிகவும்

நெருக்கமாகக் கட்டமைத்துக் கொண்டார். இக்காலப் பகுதியில் போர்நிறுத்தத்தை கொண்டு

வருவதற்கான பணிகளை முன்னெடுக்குமாறு கே.பி அவர்களுக்கு வன்னியிலிருந்து

அதிகாரபற்றற்ற முறையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேகாலப் பகுதியிலேயே

தலைமைப்பீடத்தின் அனுமதியின்றிஇ தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவை

மையப்படுத்தி தன்னிச்சையாக வெளிநாட்டு இராசதந்திரிகளுடன் கே.பிஇ ஜோய் மகேஸ்வரன்இ

உருத்திரகுமாரன் ஆகியோர் உரையாடல்களை தொடங்கியிருந்தனர்.

 

இதேகாலப் பகுதியில் கொழும்பிலிருந்து இலண்டனை சென்றடைந்த இரண்டு நபர்கள் ரெஜியை

சந்தித்திருந்தனர். இதில் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரும்இ

மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜெயலத் ஜெயவர்த்தன. மற்றையவர் தமிழ்த்

தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர்.  இதில் ஜெயலத்

ஜெயவர்த்தனாவிற்கும்இ ரெஜிக்கும் இடையிலான தொடர்பு என்பது 2002ஆம் ஆண்டு போர்

நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகிய சில மாதங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

தற்பொழுதும்கூட ஜெயலத் ஜெயவர்த்தனவுடன் சினேகபூர்வமான தொடர்புகளை ரெஜி பேணி

வருவதோடுஇ கடந்த 2010 நவம்பர் இலண்டனுக்கு ஜெயலத் ஜெயவர்த்தன வருகை தந்திருந்த

பொழுது ரெஜியை இரகசியமாக சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.  இதேநேரத்தில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆளும் கூட்டணிக்கு கிசோர் கட்சிதாவக்கூடும்

என்று ஊடகங்களில் பரப்பரப்பாக தகவல்கள் கசிந்திருந்த பின்புலத்திலேயே ரெஜிக்கும்இ

கிசோருக்கும் இடையிலான சந்திப்பு இலண்டனில் இடம்பெற்றிருந்தது.

வன்னியிலிருந்து 2006ஆம் ஆண்டு இலண்டனுக்கு வருவதற்கு முன்னர் கிசோருடன் ஏற்கனவே

தொடர்பைப் பேணி வந்த ரெஜிஇ 2008ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் கிசோரை மீண்டும்

சந்தித்தது என்பது ஒரு தற்செயலான விடயமாக அப்பொழுது தென்பட்டிருந்தாலும்கூடஇ

தற்பொழுது திரைமறைவில் கட்டவிழும் நிகழ்வுகளுடன் ஒப்புநோக்கும் பொழுது அதனை சாதாரண

விடயமாக நாம் புறந்தள்ளிவிட முடியாது.  இதில் குறிப்பாக பசில் ராஜபக்சவிற்கும்இ

ரெஜிக்கும் இடையில் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் முதல் வாரத்தில் இடம்பெற்ற இரகசிய

தொலைபேசிக் கலந்துரையாடலை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.

அப்பொழுது இத்தொலைபேசிக் கலந்துரையாடலை கிசோர் அவர்களே ஏற்படுத்திக்

கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து ரெஜி ஊடாக ஜெயலத் ஜெயவர்த்தனவின் உதவியுடன் தமிழ்

அமைச்சர் ஒருவரை கே.பி நேரடியாக தொடர்பு கொண்டு உரையாடியிருந்தார். இவ்வாறு

ரெஜியின் ஏற்பாட்டில் கிசோர்இ ஜெயலத் ஜெயவர்த்தன ஆகியோர் ஊடாகவும்இ முன்னாள்

நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் வாயிலாகவும்இ கே.பி அவர்களுக்கு

பசில் ராஜபக்சவுடன் ஏற்பட்டிருந்த தொடர்பேஇ மே 17அன்று கே.பி அரங்கேற்றிய ஆயுத

மௌனிப்பு நாடகத்திற்கும்இ முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசிடம் பெரும் தொகையான

போராளிகள் நிராயுதபாணிகளாக சிக்குண்டு படுகொலை செய்யப்பட்டமைக்கு காரணியாக

அமைந்திருந்தது எனக்கூறின் மிகையில்லை.

இவை அப்பொழுது வெளிவராத உண்மைகள். அமெரிக்கக் கப்பல் வன்னிக்கு வந்து மக்களையும்இ

போராளிகளையும் மீட்டுச் செல்லும் என்று கதையளந்து எவ்வாறு முள்ளிவாய்க்கால் போரில்

உருத்திரகுமாரன் கழுத்தறுத்தாரோஇ அவ்வாறே பல போராளிகள் நயவஞ்சகமான முறையில்

சிங்களப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கு கே.பியும்இ

அவருக்கு பசில் ராஜபக்சவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்த நபர்களும் காரணியாக

அமைந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினராக தன்னைத் தானே சுயபிரகடனம் செய்துஇ

போர்க்குற்ற விசாரணைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருப்பதாகக்

கூறிக்கொள்ளும் ரெஜிஇ தான் சிங்கள அரசுடன் ஹரீம் பீரிஸ்இ கிசோர்இ ஜெயலத் ஜெயவர்த்த

போன்றோர் ஊடாகப் பேணி வந்த தொடர்புகளின் விளைவாகவும்இ கே.பி அரங்கேற்றிய ஆயுத

மௌனிப்பு நாடகத்தாலும் முள்ளிவாய்க்காலில் பெரும் தொகையான போராளிகள்

நிராயுதபாணிகளாக சிங்களப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கு

எவ்விதமான நியாயத்தைக் கற்பிக்கப் போகின்றார்? அல்லது இலண்டனில் உள்ள தமிழ்

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியுடன் பிரித்தானியாவிற்கான சிறீலங்கா

தூதுவருடனும்இ கே.பி அவர்களின் ஊடாக கோத்தபாய - பசில் ஆகியோருடனும் தான்

இரகசியமாகப் பேணி வரும் தொடர்பு பற்றி எவ்விதமான வியாக்கியானங்களை ரெஜி

அளிக்கப்போகின்றார்?

இவை ஒருபுறமிருக்கஇ வணங்கா மண் கப்பலை வன்னிக்கு அனுப்பி வைப்பதற்கு

மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குகளில் ரெஜி நிகழ்த்திய முறைகேடுகளை நாம் இங்கு

குறிப்பிட்டாக வேண்டும்.  வணங்கா மண் கப்பல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதை அதைத்

தமது எண்ணக்கரு என்றுகூறி அதற்கு அப்பொழுது புலம்பெயர் தேசங்களில் பலர் உரிமை

கோரியிருந்தாலும்கூடஇ இது உண்மையில் தமிழகத்திலிருந்து தோற்றம் பெற்ற ஒரு எண்ணக்

கரு.

2007ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் தமிழகத்திலிருந்து வன்னிக்கு படகுப் பயணமான உணவு -

மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பழ.நெடுமாறன் அவர்கள் எடுத்த முயற்சி

அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் திட்டமிட்டு முடக்கப்பட்ட சம்பவமேஇ வணங்கா மண்

மனிதநேயக் கப்பல் திட்டத்திற்கான எண்ணக்கருவாக அமைந்திருந்தது. 2009ஆம் ஆண்டு சனவரி

மாதம் பலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேலியப் படைகள் தீவிரப்

படுத்தியிருந்த பொழுதுஇ காசா நோக்கிப் பயணித்த மனிதநேயக் கப்பலை முன்மாதிரியாகக்

கொண்டே வணங்கா மண் கப்பல் திட்டம் வன்னியிலிருந்து முன்மொழியப்பட்டது. புலம்பெயர்

தேசங்களில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை அமைப்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகமும்இ

அதன் கிளையமைப்புக்களும் அப்பொழுது இயங்கி வந்த நிலையில்இ வணங்கா மண் கப்பலை

ஏற்பாடு செய்து வன்னிக்கு அனுப்புவதற்கான பொறுப்பு 2009 பெப்ரவரி மாத

நடுப்பகுதியில் ரெஜிக்கு வழங்கப்பட்டிருந்தது.

வன்னி மீதான தனது இனவழிப்பு யுத்தத்தை முழுவீச்சுடன் சிங்கள அரசு முன்னெடுத்திருந்த

பின்புலத்தில் மிகவும் வேகமாகவும்இ காலம்தாழ்த்தாதும் வணங்கா மண் கப்பலை வன்னிக்கு

அனுப்பி வைக்குமாறு அப்பொழுது ரெஜிக்கு தெரிவிக்கப்பட்டது. புதுமாத்தளம் தொடக்கம்

முள்ளிவாய்க்கால் வரையான குறுகிய கடலோரப் பகுதி மட்டும் அப்பொழுது தமிழீழ விடுதலைப்

புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த நிலையில்இ ஆகக்கூடியது ஒரு மாத

காலப்பகுதிக்குள் வணங்கா மண் கப்பல் வன்னியை வந்தடைய வேண்டும் என அப்பொழுது

ரெஜிக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

எனினும் இதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாகக்கூறி ஏறத்தாள மூன்று வாரகாலப்பகுதியை

இழுத்தடித்த ரெஜிஇ 2008 மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலேயே வணங்கா மண் கப்பல்

தொடர்பான ஊடக அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து வணங்கா மண் கப்பலில்

எடுத்துச் செல்வதற்கென்று புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களால் தமிழர் புனர்வாழ்வுக்

கழகத்திற்கு பெரும் தொகையான நிதி நன்கொடையாக அளிக்கப்பட்டதோடுஇ உலருணவுப்

பொருட்களும்இ உடைகளும் வாரி வழங்கப்பட்டன. எமக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படிஇ

வணங்கா மண் திட்டத்தின் கீழ் ரெஜியின் கைகளை மட்டு ஒன்றரை மில்லியன் பவுண்களுக்கு

அதிகமான நிதி சென்றடைந்திருந்தது. இதனை விடஇ பல இலட்சம் பவுண்கள் பெறுமதியான உணவுப்

பொருட்களும்இ உடைகளும்இ ரெஜியின் மேற்பார்வையின் கீழ் வணங்கா மண் கப்பலுக்கு

திரட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் 20.03.2008 அன்று வன்னிக்கு ரெஜியால் கடிதம்

ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

 

'அன்புடன் பா.ந.அண்ணருக்குஇ

நான் உங்களுடன் கதைத்தது போல் வணங்கா மண் கப்பலுக்கான எல்லா ஒழுங்குகளும்

பெரும்பாலும் நிறைவடைந்து விட்டது. இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இம்மாதக் கடைசியில் அல்லது அடுத்த மாதம் ஆரம்பித்து ஒரு கிழமைக்குள் கப்பல்

இங்கிருந்து புறப்படும். இதுபற்றி ஐ.சி.ஆர்.சியுடன் கதைத்துக் கொண்டிருக்கிறோம்.

யூ.என்.ஓவுக்கும் தகவல் தெரிவித்து விட்டோம். கப்பலுக்கான இன்சூரன்ஸ் ஒழுங்குதான்

கொஞ்சம் இழுபடுகிறது.

நன்றி.

இப்படிக்குஇ அறிவன்.'

ரெஜியால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை அடுத்து அவருடன் தொடர்பு கொண்ட தமிழீழ

அரசியல்துறைப் பொறுப்பாளர்இ வணங்கா மண் கப்பல் புறப்படும் பொழுது அதில்

ஏறிவன்னிக்கு வருமாறு பணித்திருந்தார். இதை ரெஜி சற்றும் எதிர்பார்க்கவில்லை.

வன்னிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்ட ஒரு வாரத்திற்குள் மீண்டும் தமிழீழ

அரசியல்துறைப் பொறுப்பாளருடன் தொடர்பு கொண்ட ரெஜிஇ கப்பல் வன்னிக்கு வருவதை ஏற்க

முடியாது என்று சிறீலங்கா அரசு அறிவித்திருப்பதால் மனிதநேயப் பயணத்தை

மேற்கொள்வதற்கு கப்பல் நிறுவனம் பின்னடிப்பதாகவும்இ இதனால் கப்பல் பயணம்

பிற்போடப்படக்கூடும் என்றும் கூறியிருந்தார்.

இதேநேரத்தில் வணங்கா மண் கப்பல் தொடர்பாக புலிகளின் குரல் வானொலியூடாக அறிந்து

கொண்ட வன்னி மக்கள்இ இதன் வருகையை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கத்

தொடங்கியிருந்தார்கள். இந்நிலையில் கப்பல் பயணம் பிற்போடப்படக்கூடும் என்று ரெஜி

கூறியது தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு கடும் சீற்றத்தை

ஏற்படுத்தியிருந்தது. இதுபற்றி மனம்நொந்த நிலையில் அனைத்துலக தொடர்பகப்

பொறுப்பாளருடன் உரையாடிய தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்இ திட்டமிட்டு இவ்வாறு

ரெஜி நடந்து கொள்கின்றாரா? என்று ஐயம் வெளியிட்டிருந்தார். இவ்வாறு ஏப்ரல்

மாதத்தின் நடுப்பகுதி வரை காலத்தை இழுத்தடித்த ரெஜிஇ இலண்டனில் இருந்து கப்பலை

வாடகைக்கு எடுப்பது சாத்தியமில்லை என்று கைவிரித்ததோடுஇ வணங்கா மண் திட்டத்தை

இப்போதைக்கு கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று வன்னிக்கு தெரிவித்தார்.

இந்நிலையில் பிறிதொரு ஐரோப்பிய நாடொன்றில் பணிபுரியும் தமிழீழ தேசிய

செயற்பாட்டாளர்களால் வணங்கா மண் திட்டம் பொறுப்பேற்கப்பட்டது. இவர்களால்

மேற்கொள்ளப்பட்ட பகீரத பிரயத்தனங்களின் விளைவாக மத்திய கிழக்கு-வட ஆபிரிக்க

நாடொன்றில் இயங்கும் கப்பல் நிறுவனம் ஒன்றிடமிருந்து கப்பல் வாடகைக்கு

எடுக்கப்பட்டது.

எனினும் இதற்கான வாடகைக் கட்டணத்திற்கான நிதியை அனுப்புமாறு ரெஜியிடம் கோரப்பட்ட

பொழுதுஇ அதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாகக்கூறி மீண்டும் தனது இழுத்தடிப்பு

நாடகத்தை ரெஜி அரங்கேற்றத் தொடங்கினார். இதனால் பிரித்தானியாவில் உள்ள தமிழீழ தேசிய

உணர்வாளர்களின் உதவி நாடப்பட்டுஇ அவர்களின் நிதியுதவியுடன் கப்பலுக்கான வாடகைப்

பணம் செலுத்தப்பட்டது.

இதேநேரத்தில் கப்பலில் எடுத்துச் செல்வதற்கு என்று மக்களால் வழங்கப்பட்ட உணவுப்

பொருட்களில் ஒரு தொகுதி கப்பலில் ஏற்றப்படாது இலண்டனில் உள்ள ரெஜியின் இரண்டு

கடைகளுக்கு மாற்றப்பட்டது. இதுபற்றி வன்னிக்கு அப்பொழுதே முறைப்பாடுகள்

அனுப்பப்பட்டிருந்தன.

இவ்வாறு ரெஜியின் திட்டமிட்ட நடவடிக்கைகளால் இழுபட்டுச் சென்ற வணங்கா மண் கப்பல்

திட்டம்இ ஏனைய தேசிய செயற்பாட்டாளர்களின் கடும் முயற்சியால் மே மாதத்தின் முதல்

வாரத்திற்குப் பின்னரே செயல்வடிவம் பெறத் தொடங்கியிருந்தது. இக்காலப் பகுதியில்

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட கடலோரப் பகுதி என்பது

முள்ளிவாய்க்காலுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மே 15ஆம் நாள் இரவு எகிப்தின் சுயஸ் கால்வாயை வணங்கா மண் கப்பல்

சென்றடைந்த பொழுதுஇ வன்னிப் போர் தனது இறுதிநாட்களை எட்டியிருந்தது. மே 16ஆம் நாள்

காலை எகிப்தின் செங்கடற்பரப்பில் வணங்கா மண் கப்பல் தரித்து நின்ற பொழுதுஇ

முள்ளிவாய்க்கால் கடலோரம் முழுவதும் சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

வாழ்வா? சாவா? என்ற நிலைக்குள் வன்னி மக்கள் தள்ளப்பட்டிருந்த அன்று இரவு தனது ஆயுத

மௌனிப்பு நாடகத்தை கே.பி மெல்ல மெல்ல திரைநீக்கம் செய்யத் தொடங்கினார்.

மறுநாள் 17ஆம் நாள் முழுவதும் முள்ளிவாய்க்காலில் சிங்களம் கோரத்தாண்டவமாடி தமிழ்

உயிர்களை நரபலிவேட்டையாடிக் கொண்டிருக்க அன்று பகல் கே.பியின் ஆயுத மௌனிப்பு

அறிவிப்பு வெளியாகியது. அதன் பின்னரான மறுநாள் 18ஆம் நாள் அதிகாலை சிங்களப்

படைகளால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்இ சமாதான செயலகப் பணிப்பாளர்

சீ.புலித்தேவன் ஆகியோர் உட்பட பெரும் எண்ணிக்கையான நிராயுதபாணிகளான போராளிகள்

சிங்களப் படைகளால் படுகொலை செய்யப்பட்டார்கள். அன்று முள்ளிவாய்க்காலை சிங்களம்

ஆக்கிரமித்துக் கொள்ளஇ தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கு கே.பி

அவர்கள் வாரிசுரிமை கோரினார். அவருக்கு பக்கபலமாக உருத்திரகுமாரன் நிற்கஇ தமிழீழ

அரசியல்துறையின் அடுத்த பொறுப்பாளராக ரெஜி வாரிசுரிமை கோரினார்.

 

(தொடரும்)

நன்றி: ஈழமுரசு (21.06.2011)

தொடர்புபட்ட செய்திகள்

பிரான்ஸ் தமிழர் விளையாட்டு விழாவை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு புறக்கணித்தது!

தமிழ்த் தேசியச் சிதைவு தளங்களுடன் அணி சேர்கிறதா பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்

கழகம்?

வெளிச்சத்திற்கு வரும் அரூப கரம் - சேரமான்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com