Contact us at: sooddram@gmail.com

 

இந்தியாவை அன்று ஜே.ஆர் பகைத்துக் கொண்டதால் பருப்பு மூடைகள் ஆகாயத்தில் இருந்து விழுந்தன

யுத்தம் பிரச்சினைகளை விளை விக்கும் ஒரு செயற்பாடாகும். ஆனால் சமாதானம் அமைதி யான தோற்றத்தைக் கொண்டிருக்கும். நீரோட்டமின்றி தேங்கி நிற்கும் ஒரு நீர்த் தேக்கத்தை உன்னிப்பாக பார்த் தால் அதன் தரை மட்டத்தை நாம் அவதானிக்கலாம். இதற்கு ஒரு உதார ணமாக ஒரு நீச்சல் குளத்தை எடுத் துக் கொள்ளலாம். யுத்தம் முடிவடை ந்து சமாதானம் ஏற்பட்டுள்ள ஒரு நாட்டில் இப்படியான சூழ்நிலையே நிலைத்திருக்கும். உள்நாட்டு யுத்தமொன்று நடைபெறும் போது இத்தகைய அமைதி யான சூழ்நிலையை எதிர்பார்க்க முடி யாது.

ஒரு நாட்டில் யுத்தம் நடைபெறும் போது அங்கு வந்து குட்டையை குழப்பி மீன் பிடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது சகஜமான செயல். யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆரம்ப வருடங்களில் இவ்விதம் பலர் வந்து குட்டையில் மீன் பிடிக்க ஆரம்பித்தார்கள். கடந்த கால அரசாங்கங்கள் இந்த விடயத்தில் தீவிரமாக செயற்பட தவறிவிட்டன.

கடந்த காலத்தில் இலங்கையை எல்.ரி.ரி.ஈ பயங்கரவாத பிடியிலிருந்து மீட்டெடுப்பதே பலரதும் எண்ணத்தில் இருந்த தொனிப்பொருளாக இருந்தது. இந்த இழப்புடன் யுத்தத்தை நடத்திய வர்கள் எங்கள் நாட்டில் மாவீரர்களாக கெளரவிக்கப்பட்டார்கள். இன்றும் கூட இந்த யுத்த வீரர்களை பெருமதிப்புடன் கெளரவிக்கும் பண்பு இலங்கையில் நிலைத்திருக்கிறது.

இதைப் பற்றி நாம் குற்றம் குறை காணமுடியாது. யுத்தம் நடைபெற்றிருந்த காலகட்டத்தில் ஒரு நாட்டில் சிவில் சட்டங்கள் ஓரளவுக்கு ஓரங்கட்டப் படுவதுண்டு. இதனால் ஜனநாயகமும் தனது வலுவை இழந்து மனித உரிமைகளும் செயற்படாமல் தேங்கி நிற்பதும் உண்டு. இத்தகைய சூழ்நிலையை எவராலும் தடுக்க முடி யாது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம், மற்றும் அவசரகால சட்டவிதிகள் நாட்டின் சிவில் சட்டங்களை விட மேலோங்கி அன்று இருந்தன. ஒரு பெரிய மரத்தை வெட்டி சாய்க்கும் போது அதற்கருகில் உள்ள சிறிய மரங்கள் அழிந்துவிடுவதுண்டு. இத்த கைய நிகழ்வுகளின் போது ஏற்படும் அழிவுகளைக் குறைப்பதே எங்கள் எல்லோரதும் கடமையாக இருந்தது.

இத்தகைய சூழ்நிலையில் தான் மூத்த பத்திரிகையாளர் லசந்த விக்கிர மதுங்க கொல்லப்பட்டார். ரிவிர பத்தி ரிகை ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மற்றும் நேசன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் கீத் நொயல் ஆகியோர் தாக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்ப வங்களில் சம்பந்தப்பட்டவர்கள் இன்று சுதந்திரமாக இருக்கிறார்கள்.

அன்று மக்களும் அரசாங்கமும் வேறொரு திசையில் சென்றுக்கொண்டிருந்தன காலம். அன்று மக்கள் பயங்கரவாதத் தில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்தனர். இத்தகைய சூழ்நிலையில் குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பவர் கள் பயனடைந்தார்கள். ரிவிர பத்திரி கையின் ஆசிரியர் உபாலி தென்னக் கோன் தாக்கப்பட்டதை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந் தப்பட்ட அதிகாரிகளுக்கு இவ்விதம் உத்தரவு பிறப்பித்தார்.

‘இவ்விதம் வன்முறைகள் நாட்டில் நடந்தால் நான் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்திருப்பது பொருத்தமற்றது’ என்று சற்று கோபத் துடன் அறிவித்து இந்த தாக்குதல்கள் குறித்து உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இன்று வரை ஏன் இவர்கள் தாக்கப்பட்டார்கள் என்பதற்கான காரண த்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த சம்பவம் சிவில் சட்டங்கள் பலவீனமடையும் போது அதிக பலம் வாய்ந்த நிறை வேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியினால் கூட நிலை மையை கட்டுப்படுத்துவதை முடியாத காரியம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு நல்ல முன்மாதிரியாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் வேறுபாடு இதுதான். யாழ்ப்பாண நூலகத்தை தீயிட்டு கொளுத்திய போதும் மாவட்ட அபி விருத்தி சபை தேர்தல்கள் குழப்பி அடிக்கப்பட்டு வாக்குப் பெட்டிகள் கச்சேரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது நாட்டில் யுத்தம் நடைபெற வில்லை என்பதை நான் ஞாபகப்படு த்த விரும்புகிறேன்.

இதனால் அன்று ஒரு கொடுங்கோல் சட்டம் அமுலில் இருந்தது என்று கூட சொல்லலாம். அப்போது சிறிதளவு எண்ணிக்கையி னரே பயங்கரவாதத்தில் இறங்கியிருந் தனர். இந்தத் தீயை அணைக்கச் சென்றவர்கள் அதனை மேலும் தீவிர மாக எரியச் செய்வதற்கு உறுதுணை புரிந்ததைத் தவிர வேறு எதனையும் செய்யவல்லை.

இதனைத் தொடர்ந்து 1982ம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரங்கள் தோன்றின. அதையடுத்த ஒரு சில தினங்களுக்கு அன்றைய ஜனாதிபதி தனது மாளிகையில் முடங் கிக் கிடந்தார். அந்த நாட்களில் இலங் கையில் ஒரு ஜனாதிபதி இருக்கவில்லை. இதனால் காலப் போக்கில் ஏற்பட்ட சிவில் யுத்தத்தை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன முடிவுக்கு கொண்டுவர இந்தியா விரும்பவில்லை. அதற்கு பதில் இந்தியா அழுத்தங்களை கொண்டுவந்தது.

இந்தியா நேரடியாகவே யுத்தத்தின் மூலம் பிரச்சினையை தீர்க்கக் கூடாது சமாதானமாகவே பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கூறி, “நீங்கள் விட்ட பிழைகளினால் தான் இவ்வாறான யுத்தம் தோன்றியது” என்று இலங்கை க்கு அறிவுறுத்தியது. ஆனால் இந்தியா அவ்விதம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களுக்கு கூறவில்லை. ஜனாதிபதி பிரேமதாஸவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட பதவி நீக்குவதற்கான தீர்மானம் இயற்கை காரணங்களினால் உருவாகவில்லை. அவர் செய்த பிழை க்கு தண்டனையாகவே அது உருவெடு த்தது.

ஜனாதிபதி சந்திரிகாவின் பதவிக் காலத்தின் போதும் இத்தகைய நிலை கள் தோன்றின. ஐக்கிய தேசியக்கட்சி ஒழுங்கு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நோக்கி துப்பாக்கிப் பிர யோகம் மேற்கொள்ளப் பட்டது. இது சந்திரிகா அம்மையாரு க்கு தெரிந்தா? அல்லது தெரியாமலா? நடந்தது என்று தெரியாது.

இதனால் ஊடகவியலாளர்கள் அநாவ சியமாக தாக்கப்பட்டு அவர்களின் புகைப்பட கருவிகள் உடைத்து நாசமாக்கப்பட்டன. அது போன்றே நிறை வேற்று அதிகார முடைய ஜனாதிபதி ஒருவருக்கு எதி ரான எதிர்ப்புகள் இயற்கை காரணங் களினால் உருவாகி யது என்று கூற முடியாது. பயங்கரவாத தடுப்புச் சட்டம், அவசரகால சட்டப் பிரமாணங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு அரவணைப் புடன் யுத்தம் நடத்தப்பட்டது. அன்று திட்டமிட்ட முறையில் தொடர்ச்சியாக யுத்தம் நடத்தப்படவில்லை.

இன்றைய நிலை அதற்கு முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கிறது. இன்று நாட்டில் அமைதி நிலவுகின்றது. யுத்தம் முடிவடைந்துவிட்டது. அரசாங்கத் தலைவரான ஜனாதிபதிக்கு இந்த யுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்கான கெளரவமும், புகழும் உரித்தாக வேண்டும். சமாதானத்தை ஏற்படுத்திய பின்னர் சில சர்வதேச சக்திகள் வடக்குக் கிழக்கில் தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி க்கு நெருக்கடிகளை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

இந்த நிலை ஓரிரு மாதங்களுக்கே ஒரு சில மாத காலத் திற்கோ மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய எதிர்ப்புகளை சமாளிக்கும் செயற்திறன் ஜனாதிபதிக்கு இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதிகள் செய்த தவறுகள் என்ன என்பதையும் எங்கள் ஜனாதிபதி புரிந்து கொண்டுள்ளார். இந்தக் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு பகுதிகளின் பிரச்சினையை தீர்த்து வைப்பது தொடர்பாக ஆர்வம் காட்டி வருகின்றது. சர்வதேச சக்திகள் ஜனாதி பதியை ஒரு சுவருக்குள் தள்ளி அதன் மூலம் அரசியல் இலாபம் பெற எத்தனிக்கின்றன.

இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒரு சிறந்த தலைவராக இனம் கண்டு இவரே இனப்பிரச்சினைக்கு எதிர் காலத்தில் தீர்வை ஏற்படுத்தக்கூடிய சிறந்த தலைவர் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கு ஒரு காரண மும் இருக்கின்றது. பல்லாண்டு கால இடைவெளிக்கு பின்னர் தெற்கிலுள்ள பெரும்பான்மை மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு தலைவர் நாட்டின் ஜனாதி பதியாக வந்துள்ள மையே இதற்கான காரணமாகும். எனவே, இவரால் மாத் திரமே இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை ஏற்படுத்த முடியுமென்ற அனை வரும் நம்புகிறார்கள்.

இது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இந்தியாவிற் கும் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பா கும். எனவே, ஜனாதிபதி மீது சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் இப்போது அதி கரித்த வண்ணம் இருக்கின்றன. இந்தியாவும், சர்வதேச சக்திகளும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்களுக்கு சாதகமான தீர்வுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனவோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்தியா எங்களுக்கு வலுவையும், பாதுகாப்பையும் தரும் ஒரு நாடு என்பதில் சந்தேகமில்லை. இந்தியா இப்பிராந்தியத்தின் ஒரு பொலிஸ்கார னைப் போன்று இருந்து வருகின்றது. இந்தியா எங்களின் பாதுகாவலன். எங்கள் நாட்டை பாதுகாக்கும் இந்தியா தொடர்ந்தும் எங்கள் பாதுகாவலானாக இருக்க வேண்டுமா அல்லது இந்தி யாவை நாம் பகைத்துக் கொள்ள வேண்டுமா என்பது பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மற்றவர்களின் ஆலோசனை தேவை யில்லை.

இவ்விதம் ஒரு காலத்தில் எங்களுக்குப் பாதுகாப்பு அளித்த இந்தியாவை பகைத்துக் கொண்டதனால் எங்கள் நாட்டில் பருப்பு பொதிகள் விமானம் மூலம் போடப்பட்ட சம்ப வத்தை நாம் மறந்து விடலாகாது. ஜனாதிபதிக்கு இந்தச் சம்பவங்கள் நினைவில் இருக்கின்றன. ஆனால் இன்று, அன்று கடைப்பிடித்த கொள்கை யில் இந்தியா இருக்கவில்லை. இந்தியா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களுடன் சமாதானமாக கலந்து ரையாடி செயற்படுகின்றது.

இவ்விதம் இந்தியா நாளைய தினமும் யுத்த காலத்திலும் எங்களுக்கு விலைமதிப்பற்ற முறையில் நட்புறவை பாராட்டி யமை மனநெகிழ்வை அளிக்கும் நிகழ்வாகும். கடந்த கால நண்பர் களை விட சமீப கால நண்பன் எங்களுக்கு மிகவும் முக்கிய மாகும். இந்தியாவின் நட்புறவை விரும்பி அரவணைக்கும் நாம் தமிழ் சமூத்தின் நட்பையும் பெறவேண்டும்.

தருஸ்மன் அறிக்கை, சனல்-4 வீடியோ படங்கள் தமிழர் மட்டுமல்ல சிங்கள மக்களின் மனோ நிலையில் பிரச்சினை களை ஏற்படுத்தியது ஏதோ உண்மை தான். நாட்டில் இடம்பெற்ற சில நிகழ் வுகள் காரணமாக எங்கள் நாட்டில் உள்ள பிரதான இரு சமூகங்கள் மத்தி யில் இருந்து வந்த நட்பும் சிதைந்து போனது உண்மைதான்.

ஆனால், இன்று நாட்டில் வலுவான சமாதானம் ஏற்பட்டுள்ளதனால் சிறிய சம்பவங்கள் கூட மிகவும் உணர்வு பூர்வமானவை யாக மாறுகின்றன. தமிழ் மக்கள் ஒரு படுதோல்வி அடைந்த இனம் என்ற எண்ணத்தை தங்கள் மனதில் வளர்த் துக் கொள்வதற்கு இடமளிக்காத வகை யில் சிங்களவர்கள் அவர்களை அன்பு டன் அரவணைத்து நீங்கள் இரண்டாம் தர பிரஜைகள் அல்ல என்ற உணர்வை உருவாக்குவது அவசியம். இது சிங்கள வர்களின் பொறுப்பு மட்டுமல்ல, அர சாங்கத்தினதும் கடமையாகும்.

யாழ்ப் பாணத்தில் ஈ நூலகத் திட்டத்தை ஆரம்பித்து கிடைப்பதற்கு அரிய ஆவணங்கள், நூல்கள் போன்றவை பதிவு செய்யப்படுகின்றன. இது நூலகத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின் றது. யாழ்ப்பாணத்திலும் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் இதற்கு நிதி உதவி செய்து வருகிறார்கள்.

இந்தத் திட்டத்தின் போசகராக பிரபல இலத் திரனியல் பொறியியலாளர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹ¥ல் இருந்து வருகி றார். இந்தப் பேராசிரியர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு முன்மொழியப்பட்ட மூவரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கல்விமானை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்தினரும் மதித்து கெளரவிக்கிறார்கள். நூலகத் திட்டத்தை தாம் முன்னின்று மேற் கொண்ட போது சில அரசாங்க அதி காரிகள் தான் எல்.ரி.ரி.ஈயின் அனுதாபி என்று தவறாக நினைத்தது குறித்து தாம் மனவேதனை அடைந்ததாக அவர் தெரிவித்தார்.

‘துரதிர்ஷ்ட வசமாக இத்தகைய சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. யாழ்ப்பா ணத்தில் உள்ள தமிழர்கள் எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். சிலர் எங்களை எல்.ரி.ரி.ஈ நிலைத்திருப் பதற்கான சின்னங்களாக பார்ப்பது குறித்து வேதனையாக இருக்கிறது’ இவ்வாறு ஊடகங்களுக்கு விடுத்த செய்தியில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கொழும்பில் உள்ள சிலர் இத்தகைய சம்பவங்கள் சிறிய நிகழ்வுகள் என்றும், அவை பற்றி அறிவிப்பது அவசியமில்லை என்றும் நினைக்கலாம். ஆனால், ஒரு விடயத்தை நாம் நினைவில் வைக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் தேசிய ஒற்றுமைக்கு தீங்கிழைக்கின்றன என்பதை நாம் மறந்துவிடலாகாது. இத்தகைய வினாக்களுக்கு சரியான விடையை அளிக்க வேண்டும். எனவே, இத்தகைய தவறுகள் தொடர்ந்தும் இழைக்கப்படலாகாது.

இந்நாட்டு மக்கள் இத்தகைய சம்பவங்களை யாதார்த்தபூர்வமாக புரிந்து கொள்ளும் திறமை மிக்கவர்களாக இருப்பது ஜனாதிபதிக்கு ஒரு பேராதரவாக இருக்கின்றது. ஆயினும் இத்தகைய தீய சம்பவங்கள் குறித்து நாம் ஆராய்ந்து அதற்கு பொறுப்பானவர்களை தண்டிக்க தவறக்கூடாது.

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com