Contact us at: sooddram@gmail.com

 

சீரழியும் கிரேக்க பொருளாதாரம்

என்.சிவகுரு

அமெரிக்காவில் ஏற்பட்ட பொரு ளாதார நெருக்கடி பல்வேறு நாடுகளை யும் பாதித்துள்ளது என்பது நாமறிந்த விஷயம். இதே போன்ற பிரச்சனைகள் பல ஐரோப்பிய நாடுகளையும் உலுக் கியது. தரங்கெட்ட பொருளாதார கொள் கைகளால் மக்களின் வாழ்நிலையில் பெரும் பாதிப்புகள் உண்டானது. இப்படிப் பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் மட்டுமல்ல, நாடே திவாலாகிப் போனது என்றால் அது கிரீஸ் தான்.

பொருளாதார நிர்மூல நிலைக்கு சென்ற கிரீஸ் நாட்டில் சர்வதேச நிதி நிறுவனமும் ஐரோப்பிய யூனியனும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை கொண்டு வந்ததின் விளைவாக, அந்நாட் டின் வாழ்நிலை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. அந்நாட்டிலுள்ள 18 வயதி லிருந்து 24 வயதிற்குட்பட்டவர்கள் பெரும்பான்மையானவர்கள் வேலை யில்லாதவர்களாக மாறியுள்ளனர். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் பகுதி நேர ஊழியர்களாக, நிரந்தரமற்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். கூடுதல் வேலை நேரத்தில் பணியாற்றி சிறு தொகையை ஊக்கமாக பெறுகின்றனர். இப்படி கஷ்டப்பட்டு செய்யும் வேலை எத்தனை நாட்களுக்கு என்பது அவர்களுக்கே தெரியாது.

சம்பளம் வேகமாக குறைக்கப்படு கின்றது. ஏன் குறைக்கப்படுகின்றது என்று கேள்வி கேட்க தொழிற்சங்கங்கள் இல்லை; வேலை நிறுத்தம் செய்ய முடியாது எனும் நிலை.

மக்கள் கூடி நின்று பேச முடியாது. சம்பளம் சரியான நேரத்தில் கொடுக்கப் பட வேண்டும் என தொழிலாளர்கள் கேட்க முடியாது. விடுமுறை என்பது எல்லாம் மறந்துபோகும் நிலை. நோயுற் றால், மீண்டும் வேலையில் சேர்வது மிகச்சிரமம்.

தற்போது உள்ள தலைமுறையினர் ஆசைப்பட்டு எதையும் வாங்க முடியா மல், எதிர்காலமே இருண்டுவிட்டது என எண்ணத் துவங்கிவிட்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றம்

சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகளை மக்கள் மனதளவில் ஏற்க மறுக்கிறார்கள்.
தற்போது பெரும் பாலான கிரேக்க மக்கள் தொலைக் காட்சிகளில் செய்திகளை பார்ப்பதேயில் லை. தங்கள் நாட்டில் மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது என்பதை மட்டும் தீவிரமாக யோசிக்கின்றனர்.

தங்கள் குடும்பத்தினர் - உற்றார் உறவினர், நண்பர்களிடத்தில் இதைப் பற்றியே பேசுகின்றனர்.

எல்லோரிடத்திலும் இந்த சிக்கன நடவடிக்கைகள் தேவையற்றது என்ற பொதுக்கருத்தும், இந்த பொருளாதார நெருக்கடி எங்கள் மீது திணிக்கப்பட் டுள்ளது என்றும் கருதுகின்றனர்.

கிரேக்க தேசத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மக்கள் முந்தைய காலங்களில் தேவையற்ற-அளவுக்கு அதிகமான செலவுகளை செய்தார்கள் எனும் குற்றச்சாட்டு அரசால் முன்வைக் கப்படுகின்றது. ஆனால் நிலையை உன்னிப்பாக கவனித்தவர்கள் அரசின் குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கின்ற னர். ஏனென்றால், அப்படி செலவு செய் வதற்கு அம்மக்களிடத்தில் பெரும் அள வுக்கு பணப்புழக்கம் இல்லை.

கடந்த ஓராண்டாக, பொருளாதார நெருக்கடி கிரீஸ் நாட்டை வாட்டத் துவங் கியதிலிருந்து, கதைகளாக சொல்லப் பட்டவை எல்லாம் உண்மை நிலை களாக மாறி வருகின்றது.

வீடற்றவர்கள் - மூன்று வேளை உணவு கிடைக்காதவர்கள் குப்பைத் தொட்டிகளை தேடிச்செல்லும் அவல நிலை, பிரச்சனைகளுக்காக போராடும் மக்களை தாக்கும் காவல் மற்றும் ராணு வம், மூடியுள்ள பள்ளிக்கூடங்கள், இயங் காத மருத்துவமனைகள், கிட்டத்தட்ட அந்நாட்டில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் முற்றிலுமாக வேலை இழந்துள்ளார்கள்.

இது மட்டுமல்லாமல், ஊடகங்களின் பணி முடக்கப்பட்டு, பத்திரிகையாளர் கள் கடும் தணிக்கைக்குள்ளாக்கப்பட்டு, கிரேக்க நாட்டின் பிரச்சனைகள் எதுவும் வெளி உலகுக்கு தெரியக்கூடாது என் னும் எண்ணத்தில், எழுத்துக்களில்கைவைக்கப்படுகின்றது.

தொழிற்சங்கங்களின் நடவடிக் கைகள் அரசின் கழுகுப்பார்வையில் உள்ளது. போராட்டங்களில் ஈடுபடுபவர் களிடம் அரசு மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றது. தொழிற்சங்க தலை வர்கள் பெரும்பாலோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

அராஜக ஆட்சி நடக்கும் இடங்களில் இன மற்றும் நிற வெறி தன் வேலையைக் காட்டும் என்னும் உலக அனுபவத்திற்கு கிரீஸ் நாடும் தப்பவில்லை. நாடு முழு வதும் இனவெறி தாண்டவமாடுகின்றது. ஜனநாயகம், சமத்துவம், பெரும்பான்மை, போன்ற வார்த்தைகள் கிரீஸ் நாட்டில் இப்போது பயன்பாட்டில் இல்லை என்றே சொல்லலாம்.

உலகத்தின் எங்கோ - வளராத நாடு களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய இடங்களில் நடைபெற்றதாக படித்துக் கொண்டிருந்த கிரேக்க மக்கள் சமூக வளர்ச்சியில் முன்நின்றதாக இருந்ததாக கருதப்பட்ட ஐரோப்பாவில் அதுவும் தங் கள் நாட்டில் இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கும் என கிரீஸ் மக்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதையும்விட கொடுமை என்னவென்றால், ஏற்பட் டுள்ள பொருளாதார நெருக்கடி அனைத் திற்கும் மக்கள்தான் காரணம் என அரசு சொல்வதுதான் அவர்களை மேலும் வேதனைக்குள் தள்ளுகின்றது. பாவம் ஒரு பக்கம் - பழி ஒரு பக்கம்!

தங்கள் தவறு இல்லை - அரசுகளின் தவறுதான் என்று தெரிந்திருந்தும்கூட, சொல்லமுடியாத நிலை.

அன்றாட வாழ்வில் தாங்கள் பெரும் மாறுதலை சந்தித்துக்கொண்டிருக் கிறோம் என்பதை உணரும் மக்கள், நீதி - சுதந்திரம் இனி தங்கள் வாழ்நாளில் மீண்டும் வருமா என்று எண்ணத் துவங் கிவிட்டனர். பெரும் போராட்டங்கள் செய் தால் அரசின் தாக்குதலுக்கு தள்ளப்படு வோம் என தங்களால் முடிந்த சிறு எதிர்ப் புக்களை அவ்வப்போது, ஆங்காங்கே வெளிப்படுத்தி வருகின்றனர்.

போக்குவரத்து கட்டணம் - மருத்துவ மனை செலவுகளை கட்ட மறுக்கின்ற னர். சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த மறுக்கின்றனர். சிலர் முன்னர் வங்கிகளில் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்தமாட்டோம் என மறுத்துவரு கின்றனர்.

மேலும் சிலர் தங்கள் பகுதிகளில் ஒத்தக் கருத்துடைய மக்களை ஒன்று திரட் டுகின்றனர். சிறு குழுக்களை உருவாக்கி வருகின்றனர். அங்கு உள்ள குழந்தை களுக்கு கல்வி கற்றுத்தருகின்றனர்.

மாற்று பொருளாதாரத்தை கொண்டு வர வழி என்ன என்பதைப்பற்றி கூட்டங் கள் நடத்துகின்றனர். கணினியை பயன் படுத்த வாய்ப்புள்ளவர்கள் இணைய தளங்களில் வரும் தகவல்களை பரி மாறிக்கொள்கின்றனர். ஒவ்வொரு நாளும் தாங்கள் செய்த எதிர்ப்புக்களை பற்றி பேசிக்கொள்கின்றனர்.

ஒன்றுமட்டும் நிச்சயம். பயம் மற்றும் பழியை சுமந்துகொண்டு - ஏற்பட்டிருக் கும் பொருளாதார நெருக்கடிக்கு தாங்கள் மட்டுமே காரணம் எனும் பொய்ப் பிரச்சாரம் சமீப காலத்தில் சரி செய்ய முடியாத பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் இத்தருணத்தில் மக்கள் எப்போதும் அடங்கி போக மாட்டார்கள். எங்கோ ஒரு மூலையில் விரைவில் எதிர்ப்பலைகள் கிளம்பும் என்பது மட்டும் திண்ணம்.

சர்வதேச நிதி நிறுவனமும் கிரேக்க ஆட்சியாளர்களும் நீண்ட நாட்களுக்கு மக்களுக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட முடியாது. ஒடுக்கப்பட்ட மக்கள் வாய்ப் பூட்டு போட்டாலும், தங்களுக்குள் மவுன மாக விஷயங்களை பரிமாறிக்கொண்டு; இன்னல்களுக்கு எதிராக களம் இறங்கு வார்கள் என்பதையும் அவர்கள் இன்னும் சில காலத்தில் அறியப் போகிறார்கள்.

எத்தனை தடைகள் போட்டாலும் மக்கள் அதை தகர்த்தெறிவார்கள். அதை யும் மீறி ஆட்சியாளர்கள் அதை ஒடுக்க நினைத்தால், 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற எதிர்ப்பலைபோல மீண்டும் எழும். அப்படி மீண்டும் நடை பெற்றால், கிரேக்க நாட்டில் உருப்படியான மாற்றங்கள் நடைபெறுவதற்கு அது கால்கோள் விழாவாக அமையும்.

ஆதாரம : தி ஹிந்து நாளிதழ்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com