Contact us at: sooddram@gmail.com

 

இனப்பிரச்சினைக்கு நிரந்தர சமாதான தீர்வைக் காண அரசாங்கம் பின் நிற்காது

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக் கூடிய வகையில் தருஸ்மன் அறிக்கை, சனல் 4 போலி வீடியோ ஆவணப் படம் போன்றவற்றை தயாரிப்பதற்கு பின் னணியில் இருந்து செயல்பட்டவர்கள் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்களில் ஒருசிலர் மட்டுமன்றி, அரசாங்கத்தை ஜனநாயக ரீதியில் தேர்தல் மூலம் கவிழ்த்து விடுவதற்கு எடுத்த முயற்சிகள் படு தோல்வியடைந்ததனால் திரைமறைவிலிருந்து எமது நாட்டின் தென்னிலங்கை அரசியல்வாதிகளும் சதி செய்து வருவது இப்போது அரசாங்கத்திற்கு ஆதாரபூர்வமாக தெரிய வந் திருக்கிறது.

இவ்விதம் நம் நாட்டவர்களே அரசாங்க கட்சியின் மீது கொண்டுள்ள வெறுப்பு காரணமாக நாட்டுப்பற்றற்ற முறையில் நடந்து கொள்வது வேதனைக்குரிய ஒரு குற்றமாகும்.

சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்துவிடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த போதிலும், ஆயுதம் தாங் கும் இராணுவ தளபதி ஒருவருக்கு ஜனாதிபதி பதவியைக் கொடு த்தால், அந்த மனிதன் சர்வாதிகாரியாகி சில ஆசிய நாடுகளின் ஆட்சியாளர்களைப் போன்று மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்து அவர்களை அடிமைகளாக நடத்த முடியும் என்ற சந்தே கம் தோன்றிய காரணத்தினால், அந்த மனிதனை புறக்கணித்த நம் நாட்டு மக்கள், ஜனநாயகவாதியான மஹிந்த ராஜபக்ஷ அவர் களை ஜனாதிபதியாக தெரிவு செய்து, நாட்டை வளம்படுத்தக் கூடிய ஒரு சிறந்த தலைவரை அதிகாரபீடத்தில் அமர்த்தினார்கள்.

இலங்கை மீது சர்வதேச ரீதியில் அழுத்தங்களை கொண்டுவருவதற் கும் எங்கள் ஜனாதிபதி மீது குற்றச் சாட்டுக்களை சுமத்தி, அவரை மின்சார கதிரையில் அமர்த்தி தண்டிப்பதற்கும் சில ஏகாதிபத்திய சக்திகளும் உள்ளூரிலிருக்கும் தேசத்துரோக எண்ணம் கொண்ட வர்களும் இன்று பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ என்ற நல்ல மனிதரை ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் வெற்றிவாகை சூடவைத்தமையே பிரதான காரணமாகும்.

மக்களின் பேராதரவு இருக்கும் வரை எந்தவொரு சர்வதேச ரீதியி லான அழுத்தங்களும் எமது நாட்டின் அரசாங்கத்தை அசைக்க முடியாது என்ற உண்மையை இத்தகைய தீங்கிழைக்கும் எண்ணம் கொண்டவர்கள் புரிந்துகொள்வது நல்லது.

சனல் 4 வீடியோ காட்சிகள் உண்மைக்கு புறம்பான தவறான முறை யில் ஒரு தொலைக்காட்சி நாடகத்தைப் போன்று தயாரிக்கப்பட்ட வையாகும் என்பதை எமது நாட்டின் இராஜததந்திரிகள் ஐக்கிய நாடு கள் ஸ்தாபனம் உட்பட சர்வதேச அரங்குகளில் இப்போது ஆதார பூர்வமாக நிரூபித்துவிட்டார்கள்.

இலங்கை அரசாங்கம் எல்.ரி.ரி.ஈ க்கு எதிரான யுத்தத்தை பொது மக் களை பாதிக்காத வகையில் மனிதாபிமான முறையில் நடத்தி, பய ங்கரவாதத்தை அடிபணிய வைத்தமை குறித்து, உண்மை நிலையை அறிந்திருந்தும் இலங்கைக்கு எதிரான தீய சக்திகள் கோடான கோடி ரூபாக்களை செலவு செய்து, சனல் 4 போலி வீடியோ ஆவ ணப் படம் போன்றவற்றை தயாரித்து வருவது இன்று ஆதாரபூர்வ மாக நிரூபிக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் இலங்கையின் நேச நாடுகள் பல குறிப்பாக ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகி யன பகிரங்கமாகவே இலங்கையை ஆதரிக்கும் கொள்கையை இன்று கடைப்பிடித்து வருகின்றன.

இவ்விதம் உலக நாடுகளில் பெரும்பான்மையானவற்றின் ஆதரவு இல ங்கையின் பக்கம் திரும்பி இருப்பதனால், நாம் இத்தகைய சர்வ தேச அழுத்தங்களை பற்றி அதிகம் கவலை கொள்ளாமல் எங்கள் நற்பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே வாழ்க்கை யின் யதார்த்தமாகும்.

இலங்கையில் பயங்கரவாத யுத்தத்திற்கு, 50 ஆண்டுகளுக்கும் கூடுத லாக புரையோடி போய் இருக்கும் இனப் பிரச்சினையே பிரதான காரணமாகும். எனவே, நாட்டில் சமாதானத்தையும் உண்மையான ஐக்கியத்தையும், மக்களிடையே பரஸ்பர நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துவதில் வெற்றிகண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், இனப் பிரச்சினைக்கு கெளரவபூர்வமான நிரந்தர அரசியல் தீர் வொன்றை ஏற்படுத்துவதற்கு இன்று நடவடிக்கைகளை காலதாமத மின்றி மேற்கொண்டு வருகிறது.

இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுடனும், ஏனைய தமிழ் அரசியல் கட்சியின் தலைவர்களுடனும், சிங்கள கட்சிக ளின் தலைவர்களுடனும் இனப் பிரச்சினைக்கு கெளரபூர்வமான நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண் டுவரும் முயற்சிகள் விரைவில் வெற்றிகாணும் போது, இலங்கை க்கு எதிரான போலிப் பிரசாரங்களை சர்வதேச ரீதியில் மேற் கொள்பவர்கள் வாயடைத்து மெளனமாகிவிடுவது நிச்சயம்.

இலங்கை வாழ் தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களும் கடந்த காலத்தில் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதத்தினால் அடைந்த தனிப்பட்ட இழப்புக்கள், பொருள் இழப்பு மற்றும் வேதனைகளை இன்றும் மறந்துவிடவில்லை. அவர்கள் மீண்டும் இத்தகைய பயங்கரவாத கொடுமைகள் நாட்டில் தலைத்தூக்குவதற்கு இடமளிக்க மாட்டார் கள். எனவே, அவர்கள் அரசாங்கம் மேற்கொள்ளும் இனப் பிரச் சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் முயற்சிகளுக்கு தங்களது மனப்பூர்வமான ஆதரவை அளிப்பது திண்ணம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com