Contact us at: sooddram@gmail.com

 

சனல் 4 துர்ப்பிரசாரங்களை முறியடிக்கும் சக்தி அரசாங்கத்திற்கு இருக்கிறது

30 ஆண்டுக்கும் அதிகமான பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகர மான முறையில் முடிவுக்கு கொண்டுவந்து நாட்டு மக்களை பயங்கரவாத பிடியிலிருந்து மீட்டெடுத்து, அவர்களின் அடி ப்படை மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்து, மீண்டும் நாட் டில் சமாதானத்தையும், அமைதியையும், சுபீட்சத்தையும் மக்களிடையே இன ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும், இணக்கப்பாட்டையும் ஏற் படுத்தி வெற்றிநடை போடும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத் தைப் பார்த்து, பொறாமைப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு தேசத்து ரோக சக்திகள் இன்று அரசாங்கத் தலைவர்கள் மீது போலியான யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஜோடித்து அவர்களை குற்றவாளிகளா க்கி மின்சார கதிரையில் அமர்த்தி தண்டிப்பதற்கு எடுக்கப்படும் முய ற்சிகளை மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அரசாங்கமும் முறியடித்துவிடும் என்பதில் எவ்வித சந்தேகமே இல்லை.

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருசிலரும், எல்.ரி.ரி.ஈ யின் வெளிநாட்டில் எஞ்சியிருக்கும் அங்கத்தவர்களும், தென்னிலங்கையிலுள்ள அரசாங்கத்தை எதிர்க்கும் அரசியல் சக்திக ளும், இந்த அரச எதிர்ப்பு போலி நாடகத்தை இன்று சர்வதேச அர ங்கில் மேடையேற்றி இலங்கையின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியவாறு இருப்பது குறித்து அரசாங்கத்திற்கு இப்போது ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன.

அரசாங்கம் இந்த போலி குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஆதாரபூர்வ மான தகவல்களை உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டி, உண்மை நிலையை விளக்குவதற்காக தொலைக்காட்சி படப்பிடிப்புகளையும் முன்வைத்து, இரண்டு அறிக்கைகளை இப்போது தயாரித்துள்ளது.

இது பற்றி கடந்த செவ்வாயன்று பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள், இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்பதிகாரிகளை சந்தித்த ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்த தீயசக்திகள் தருஸ்மன் அறிக்கை சனல் 4 வீடியோ செய்திகள் மூலம் அரசாங்கத்தை வெளி நாடுகளில் மனித உரிமைகளைப் பறிக்கும் ஒரு கொடுங்கோல் அர சாங்கம் என்று பறைசாற்றுவதற்கு எடுத்த சதி முயற்சி சம்பந்தப்ப ட்ட எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியளிக்கவில்லை என்று கூறினார்.

எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் அபிவிருத்தி பணிகளை சீராக மேற்கொண்டு வரும், பொறுப்புக்களை ஏற்றிருக் கும் மூவருக்கும் யுத்த முனையில் நாடு அடைந்த வெற்றியின் போது மனித உரிமைகள் பறிக்கப்படவில்லை என்பதை இன்று உலக அரங்கில் ஒரு ராஜதந்திரியாக எடுத்துரைத்து வரும் இளைப் பாறிய மேஜர் ஜெனரல் சவிந்திர சில்வாவையும் குறிபார்த்து இந்த சர்வதேச சதிகார கும்பல்கள் துர்பிரசாரத்தை மேற்கொண்டு வருவ தாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் தலைவன் என்ற முறையில் தன்னையும், பாதுகாப்பு செயலாளர் என்ற முறையில் கோத்தபாய ராஜபக்ஷவையும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவையும் இந்த சதிகாரர்கள் தங்கள் பொய்ப்பிரசாரங்களின் மூலம் தாக்கி வருகிறார் கள் என்று கூறினார்.

சனல் 4 தொலைக்காட்சி சேவையை ஒரு செய்தி சேவையாக நாம் பார் க்கவோ அங்கீகரிக்கவோ முடியாது. அது வெறுமனே நடிகர்களை வைத்து, தொலைக்காட்சி படங்களை உருவாக்கி அதனை வெளியி ட்டு வரும் ஊடகத்துறையின் நற்பண்புகளை மீறி செயற்படுகிறது என்று ஜனாதிபதி அவர்கள் கண்டனம் தெரிவித்தார்.

சனல் 4 தொலைக்காட்சி கடைசியாக இலங்கை பற்றி வெளியிட்ட காட் சிகளை உன்னிப்பாக ஆராய்ந்த திரைப்பட தயாரிப்பில் நிபுணத்து வம் பெற்ற பலர் இக்காட்சிகள் ஜோடிக்கப்பட்டு சில நடிகர்களினால் நடிக்கப்பட்டவை என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளார்கள்.

இதுபற்றி மேலும் விளக்கமளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ ர்கள், ஒரு மனிதன் மீது எவராவது துப்பாக்கி பிரயோகம் செய்யும் போது அந்த மனிதன் நிலைதடுமாறி தரையில் விழுந்து துடிதுடித்து இறப்பதே உண்மையில் நடக்கக்கூடிய யதார்த்தபூர்வமான சம்பவங்க ளாகும்.

ஆனால், சனல் 4 தொலைக்காட்சி ஒரு மனிதன் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யும்போது, அவன் தனது உடலில் காயம் ஏற்படாத வகையில், பாதுகாப்பான முறையில் தரையில் விழுவதை இந்த காட்சிகளை உன்னிப்பாக பார்ப்பவர்கள் உணர்ந்துகொள்ள முடியும். எனவே, இது நடிகர்களை வைத்து தயாரிக்கப்பட்ட போலி தொலைக்காட்சி செய்தியறிக்கை என்பது ஊர்ஜிதமாகிறது என்று கூறினார்.

யுத்தத்தின் இறுதி நாட்களின்போது அரசாங்க தரப்புக்கு தப்பியோடி வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது எல்.ரி.ரி.ஈ யினர் துப்பாக்கி பிரயோகம் செய்து, படுகொலை செய்யும் காட்சிகளை விமானியி ன்றி யுத்தகளத்தின் மீது பறந்து சென்ற தன்னியக்க விமானத்திலிரு ந்து எடுக்கப்பட்ட காட்சிகளை தாம் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை அழைத்து, காண்பித்தபோது அவர்கள் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளின் உண்மையான கொடுமைகளை புரிந்துகொண்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார்கள் என்று ஜனாதிபதி அவ ர்கள் மேலும் தெரிவித்தார்.

உலகின் மிகப் பெரிய கொடுமை வாய்ந்த பயங்கரவாத இயக்கமான எல்.ரி.ரி.ஈ யின் கொட்டத்தை அடக்கிய அரசாங்கத்திற்கு இன்றைய சர்வதேச துர்ப்பிரசாரங்களையும், அழுத்தங்களையும் மிக இலகு வில் மதிநுட்பத்துடன் சாதுரியமாக செயற்பட்டு அடக்கிவிடலாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com