Contact us at: sooddram@gmail.com

 

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முழுப் பலத்தையும் வெளிக்காட்டுவோம் - மு. கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத்

கேள்வி: கிழக்கு மாகாண சபையைக் கலைத்து தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியென்ற வகையில் இந்த முடிவை வரவேற்கின்aர்களா?

பதில்: கிழக்கு மாகாண சபையின் முழுமையான பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் அதனைக் கலைப்பதென்பதில் முஸ்லிம் காங்கிரஸ¤க்கு உடன்பாடில்லாத போதும் ஜனாதிபதியின் தீர்மானத்தை நாம் அனுசரித்துப்போக வேண்டும். நாட்டு நலன், தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் சர்வதேச அரசியல் நிலைமைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி இவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ளும் போது அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதே காலத்தின் தேவையாக அமைகின்றது.

கேள்வி: கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக உங்கள் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமை நியமிக்க வேண்டுமென மு. கா. விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தேர்தல் முடியும் வரை முதலமைச்சர் வேட்பாளர் எவரென அறிவிக்கப்பட மாட்டாதென அரசாங்கம் அறிவித்துள்ளதே? இது தொடர்பாக உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

பதில்: தமிழ் நாளிதழ் ஒன்றில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அறிவிப்பை நானும் வாசித்தேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் முக்கியமான கட்சி. சிறுபான்மை மக்களின் அரசியல், பொருளாதார பிரச்சினைகளுக்காக முன்னின்று போராடும் கட்சி. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சி. 8 பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் கொண்டுள்ளோம். பாராளுமன்றத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நால்வர் அங்கம் வகிக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சமனான பிரதிநிதித்துவத்தை நாம் கொண்டிருக்கின்றோம். கிழக்கு மாகாணத்தின் பிரதான கட்சியொன்ற வகையில் முதன்மை வேட்பாளராக நாம் போட்டியிடுவதிலோ அல்லது எம்மை அங்கீகரிப்பதிலோ எந்தத் தவறும் இருக்காது என நம்புகின்றேன்.

கேள்வி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்த பின்னர் உங்கள் சமூகம் பெற்ற அனுகூலங்கள் என்ன?

பதில்: நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து ஆக ஒரு வருடங்கள் மட்டுமே. எமது மக்களுக்கு நாம் பாரிய பணியாற்றியுள்ளபோதும் அவைகளை இப்போது என்னால் நிரற்படுத்திக் கூறமுடியாது. முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு கண்டு வருகின்றோம். இன்னும் பல்வேறு விடயங்கள் உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டியதாய் இருக்கின்றது. அரசுடன் நாம் மிகவும் நல்லுறவுடனும் இணக்கத்துடனும் பணியாற்றி வருகின்றோம். மக்களின் சமூக, பொருளாதார விடயங்களை இனங்கண்டு அவர்களின் நல்வாழ்வுக்குத் தேவையான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். ஐ. தே. க. ஆட்சியில் அந்தக் கட்சியுடன் நாம் கூட்டுக்கட்சியாகவிருந்து எமது மக்களுக்கு பணியாற்றியதைவிட இந்தக் குறுகிய காலத்தில் இந்த அரசுடன் இணைந்து பணியாற்றியமை அதிகமானது என்பதே என் கருத்து.

கேள்வி: உங்கள் கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அண்மையில் விடுத்த ஊடக அறிக்கையொன்றில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட அனுமதிக்கப்படக் கூடாதெனத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து தொடர்பாக கட்சியின் தவிசாளர் என்ற வகையில் நீங்கள் கூறவிழைவது என்ன?

பதில்: இந்த அறிக்கையை கட்சியின் உயர் பீடம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை சில தனிப்பட்ட தேவைகளை அடைவதற்காக வெளிப்படுத்தப்பட்ட ஒரு விடயமாக நாம் இதனைக் கருத வேண்டியுள்ளது. ரவூப் ஹக்கீம் எமது கட்சியின் தலைவர். அவர் நாடு முழுவதற்கும் பொருத்தமானவர் என்றே நாம் கருதுகின்றோம். எனவே கட்சியின் எந்த உறுப்பினரும் தனிப்பட்ட ரீதியில் இப்படித்தான் செய்யவேண்டும் அப்படித்தான் செய்யவேண்டுமென வழிநடத்துவது ஓர் ஆரோக்கியமான செயற்பாடல்ல. அதுபொருத்தமானதும் அல்ல.

கேள்வி: கடந்த மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் உங்கள் வாக்கு வங்கியின் வீதம் அதிகரித்துள்ளதெனக் கருதுகின்aர்களா?

பதில்: கடந்த கால அனுபவத்திலிருந்து இரண்டு பிரதான கட்சிகளுடன் மாறி மாறி இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருக்கின்றோம். அதன் மூலம் அந்தக் கட்சிகளும் நன்மை பெற்றுள்ளன. அதேபோல நாமும் நன்மை யடைந்துள்ளோம். தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதில் நாம் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளோம். அத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினை களை வெளிக்கொணர்வதில் நாம் பங்காற்றி இருக்கின்றோம். அம்பாறையில் பெரும்பான்மை சமூகம் எமக்கு வாக்களித்துள்ளது. மட்டக்களப் பில் தமிழ் மக்களில் குறிப்பிடத்தக்களவினர் எமக்கு வாக்களித்திருக்கின்றனர். எங்களது வாக்கு வங்கி கணிசமானளவு அதிகரித்துள்ளது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அது நிரூபிக்கப்படுமென நம்புகின்றேன்.

கேள்வி: மாகாண சபைத் தேர்தலில் உங்கள் கட்சியின் சின்னத்தில் தனித்துப் போட்டியிட வேண்டுமென கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கூறுகின்றனரே?

பதில்: எமது கட்சியின் தனித்துமான அடையாளத்தைப் பேணும் அதேவேளை அரசியல் ஸ்திரத்தன்மையைக் கருத்திற்கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதே எமது விருப்பமாகும்.

எனினும் முஸ்லிம் காங்கிரஸ¤க்கு அதைப்போல் வேறு தெரிவுகளும் உள்ளன. தனித்துப்போட்டியிடுவது மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டில் இணைந்து போட்டியிடுவது மற்றைய தெரிவுகளாகும்.

கேள்வி : தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ள தெரிவுக் குழு உதவுமென நீங்கள் நம்புகின்aர்களா?

பதில : தமிழ் பேசும் மக்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதே மு. கா.வின் நிலைப்பாடு. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் தெரிவுக் குழுவில் இடம்பெறவுள்ளதால், தெரிவுக் குழுவே சிறந்த பொறிமுறை என்பதே என் கருத்து. இனப்பிரச்சினை தொடர்பாக கடந்தகால அரசுகள் மேற்கொண்ட முயற்சிகளையெல்லாம் எதிர்க் கட்சிகள் குழப்பியதே வரலாறு. அல்லது ஆளுங்கட்சியுடனான கூட்டணிக் கட்சிகளும் எதிர்த்த சரித்திரங்களையும் நாம் கண்டுள்ளோம். பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தங்களை இதற்கு நாம் சான்றாகக் குறிப்பிட முடியும்.

இந்திய தூதுக்குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த போது, மு. கா. அந்தக் குழுவைச் சந்தித்தது. இந்தக் குழுவுக்கு தலைமை தாங்கிய இந்திய எதிர்க் கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ், தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பங்கேற்கச் செய்ய முஸ்லிம் காங்கிரஸ் அனுசரணையாளராகச் செயற்பட வேண்டுமென எம்மிடம் கோரிக்கை விடுத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நாமும் அதிகாரப் பகிர்வை கோருவதால் எம்மிடம் அவ்வாறான வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தை இன்னும் வெற்றியளிக்கவில்லையே தவிர, அது தோல்வியில் முடிவடையவில்லை என்பதே என் கருத்து.

எனவே தெரிவுக் குழுவில் கூட்டமைப்பை பங்கேற்கச் செய்வதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். இரண்டு சமூகங்களின் தலைவர்களுக்கிடையிலான பாலமாக மு. கா. தொழிற்படுகின்றது.

கேள்வி : வடக்கு முஸ்லிம்களை மீளக் குடியேற்றுவதற்கு மு. கா. எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது?

பதில : புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பாக அரசாங்கத் தலைமையுடனும் அமைச்சர்களுடனும் தொடரான பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றோம். மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள அகதி முஸ்லிம்களை மீளக் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு நாம் குறிப்பாக மீள் குடியேற்ற அமைச்சிடம் வலியுறுத்தி வருகின்றோம். இவர்கள் மீள் குடியேற உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. எனவே அது சம்பந்தமாக அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளோம்.

கேள்வி : ஜனநாயக ஐக்கிய முன்னணி (ளிஸிதி) அண்மையில் மு. கா.வுடன் இணைந்துள்ளது. முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் மு. கா.வுடன் இணைந்து ஒருமித்த குரலில் செயற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டா?

பதில : எந்தக் கட்சியும் எம்முடன் இணைந்து செயற்படலாம். அதற்கான கதவுகள் திறந்திருக்கின்றன. எந்தக் கட்சியையும் நாம் வரவேற்கத் தயாராகவே இருக்கின்றோம்.

கேள்வி : கொழும்பில் இஸ்ரேலிய தூதரகம் அமைக்க எடுக்கும் முயற்சிகள் தொடர்பாக உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

பதில : இவ்வாறான முயற்சிகளை முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமே எதிர்க்கின்றது.

1985 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஜே. ஆர். ஜயவர்தன இவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுத்த போது, அப்போது அரசிலிருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதை எதிர்த்தனர். தான் மேற்கொண்ட முடிவை எதிர்ப்பவர்கள் வெளியேறுங்கள் என ஜே. ஆர். அப்போது சொன்னார். இது வரலாறு. இஸ்ரேல் சியோனிசவாதிகளின் பிரதிநிதி என முழு முஸ்லிம் சமூகமும் கருதுகின்றது. அத்துடன் இஸ்ரேல் முஸ்லிம்களின் பொது எதிரி எனவும் கருதப்படுகின்றது. எனவே எமது ஜனாதிபதி இந்த விடயங்களை கவனத்தில் எடுப்பாரென நாம் நம்புகின்றோம். அவர் பலஸ்தீன மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர். பலஸ்தீன - இலங்கை நட்புறவுச் சங்கத்தின் தலைவராக நமது ஜனாதிபதி இருந்தவர்.

எனவே, முஸ்லிம்களின் உணர்வுகளை அரசு புரிந்துகொள்ளுமென நாம் நம்பு கின்றோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com