Contact us at: sooddram@gmail.com

 

அணுஆயுத காலம் முடிந்தது இன்று நடப்பதோ சைபர் யுத்தம்

நீங்கள் அணுகுண்டு தயாரி த்துக் கொண்டிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டு கிறதே என்று ஈரான் ஜனாதிபதி முகமது அகமதி நிஜாதிடம் சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்டார்கள். அதைக்கேட்டு அவர் கோபப்படவில்லை. இந்த உலகம் வேறு எங்கோ போய்க்கொண் டிருக்கிறது. இன்னமும் அணுகுண்டு தயாரிப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிaர்களே அதெல்லாம் பழைய கதைஎன்றார். ஒருவேளை குற்றச்சாட்டை திசைதிருப்புவதற்காகவோ அல்லது இராஜதந்திர யுத்தங்கள் இரசாயன ஆயுதங்கள், உயிரிப் போர் பற்றியோ அவர் குறிப்பிட்டிருக்கலாம் என்று அப்போது கருதப்பட்டது. ஆனால், இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால், அவர் குறிப்பால் உணர்த்தியது சைபர் யுத்தமாகக் கூட இருக்கலாம் போல் தெரிகிறது.

கணனி இல்லாவிட்டால் இன்றைய உலகம் இல்லை. மளிகைக் கடையில் இருந்து விமானம் இயக்குவது வரை எல்லாமே கணனியின் கட்டுப்பாட்டில்.

போக்குவரத்து சமிக்ஞை ரயில் சேவை, மெட்ரோ ரயில் போன்றவை பெரும்பாலும் ஏதோ ஒருவகையில் கணனியால் இயக்கப்படுபவையே நிர்வாகம் செய்வது எளிமையாகி விட்டது என்ற வகையில் இது மிகப்பெரிய நன்மை. ஆனால், கெட்டநோக்கம் கொண்டவர்களுக்கும் இந்த கணனிமயம் வசதியாகப் போயிருக்கிறது.

ரயிலைக் கவிழ்க்க வேண்டும், விமானப் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். பங்குச் சந்தையை முடக்க வேண்டுமென்றால் வருங்காலத்தில் தீவிரவாதிகள் கஷ்டப்பட வேண்டிய தில்லை. தங்கள் இடத்தில் இருந்தபடியே கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டு விளைவுகளைத் தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

நாடுகளுக்கு இடையேயான போர்களும் இப்படித்தான். மின் உற்பத்தி நிலையங்களை முடக்குவது, ஏவுகணைகளைப் பாதை மாறச் செய்வது உள்ளிட்டவற்றுக்கும் கணனித் தொழில்நுட்பம் பயன்படப் போகிறது. அல்லது இப்போதேகூட பயன்பட்டுக் கொண்டிருக்கலாம்.

இதுபோல கெட்ட நோக்கத்துக்காக உருவாக்கப்படும் மென்பொருளைத்தான்மல்வெயார்என்கிறார்கள். பல்கிப் பெருகும் திறன்கொண்ட வைரஸ், நல்லது போல காட்டிக்கொண்டு தீங்கு செய்யும்ட்ரோஜன் ஹோர்ஸ்வலையமைப்பைச் சிதைக்கும்வாம்வேவு பார்ப்பதற்கும் தகவல் திருட்டுக்கும் பயன்படும்ஸ்பைவர்தன்னிச்சையாக விளம்பரங்களைத் திணிப்பதுடன் கண்காணிக்கவும் பயன்படும்ஆட்வேர்போன்ற வையெல்லாம் மல்வெயாரின் சில வகைகள்.

இந்தக் கெட்ட மென்பொருள் கள்தான் வருங்காலத்தின் பயங்கர ஆயுதங்கள். இணையக் குறும்பர்கள், இணையக் குற்றவாளிகள், அரசுகள் போன்றோரால் இவை பயன்படுத்தப்படுகின்றன.

தல் இருதரப்பினரும் மல்வெயார்களைப் பயன்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அரசுகள் இவற்றைப் பயன் படுத்தினால் அதுதான் சைபர் யுத்தம். இப்போது அப்படிப்பட்ட ஒரு பெரிய தாக்குதல் கண்ட றியப்பட்டிருக்கிறது. அந்தத் தாக்குதலுக்குப் பயன்பட்ட மல்வயாரின் பெயர்ஃபிளேம்’.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டஸ்டக்ஸ்நெட்என்ற மல்வேயாரைப் போன்றது தான் இந்தஃபிளேம்’. ஆனால், அதைவிடவும் பல வகையிலும் திறன் கொண்டது.

சுமார் 20 மெகாபைட் அளவுள்ள இந்த மல்வெயாரின் நடமாட்டத்தை ரஷ்யாவின்கஸ்பர்ஸ்கைநிறுவனம் அண்மையில் கண்டுபிடித்து அறிவித்தது. நமது வீட்டுக் கணனி களுக்காக அன்டி - வைரஸ் மென்பொருளை உருவாக்கித் தருகிறதே அதே நிறுவனம்தான். இதற்கு முன் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக யாராலும் கண்டு பிடிக்கப்படாமல்ஃபிளேம்உலகமெங்கும் உலவி வந்திருப்பதாகவும் கஸ்பர்ஸ்கை கண்டறிந் திருக்கிறது.

உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தைக் கொள்ளையடிப்பது, படுக்கையறையைக் கண்காணிப் பது போன்றஉப்புச் சப்பி ல்லாதவேலை களுக்காகஃபிளேம்உரு வாக்கப்பட வில்லை. வேறு எந்தவகையான நிதி ஆதாய நோக்கமும் அதற்குக்கிடையாது. நாடுகளின் அணு ஆயுத இரகசியங்கள், எண்ணெய்க் கிணறுகள் பற்றிய தகவல் களைத் திருடுவதற் காகவே இது பரவ விடப்பட் டிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஃபிளேமின்முக்கிய இலக்கு ஈரான், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள்தான். எகிப்து, லெபனான், சூடான், லிபியா ஆகிய நாடுகளிலும் இந்த மல்வெயாரின் பாதிப்பு இருப்பதாக கஸ்பர்ஸ்கை தெரிவித்திருக்கிறது.

தாக்குதலுக்கு உள்ளான கணனியின் வெப்கெம், மைக்ரோபோன், ப்ளூடூத் போன்றவற்றை தேவைப்படும்போது இயங்க வைப்பது, அதில் புதிய குறியீடுகளைச் சேர்த்து கண்காணிப்பை அதிகப்படுத்துவது, 20 வகை சேவர்களைக் கையாளும் திறன் போன்ற வசதிகள் பிளேமில் அடங்கியிருக்கிறதாம். இவை தவிர, வழக்கமாக ஸ்பைவெயார்களில் பயன்படுத்தப்படும் விசைப் பலகையைக் கண்காணிக்கும் கீ லொக்கர்கள், திரையைப் படம்பிடித்து அனுப்பும் வசதிகளும் உண்டு.

ஃபிளேமின் அளவு, அதை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் சிக்கலான குறியீட்டு மொழி, அதன் இயங்கு திறன் போன்றவற்றை யெல்லாம் வைத்து அது தனி நபராலோ குழுவாலோ உருவாக்கப்படவில்லை என்கிற முடிவுக்கு உலகம் வந்து விட்டது. அது நிச்சயமாக ஒரு நாட்டால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உருவாக்கப்பட்டதுதான்.

உலகில் அரசு சார்ந்த பல கணனி வலையமைப்புகள் இந்த கெட்ட மென்பொருள் களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வசதியே இல் லாதவை என்று கருதப் படுகிறது. நமது கணனியிலோ கையடக்க தொலைபேசி களிலோ தகவல் திருட்டு நடந்துவிடக் கூடாது என்பதற்காக இருநூறு முந்நூறு ரூபாய் பெறுமதியில் வைரஸ், ஸ்பைவெயார் தடுப்பு மென் பொருள்களை நிறுவிக் கொள்கிறோம். ஆனால், உலகின் பல அரசு வலை யமைப்புக்கள் இந்த அளவுக்குக் கூட பாதுகாப்பு அம்சங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லையாம். இதை எங்கேபோய்க் கூறுவது?

இப்போதைக்குஃப்ளேம்பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. அதை அழிக்கும் எதிர் நிரல் கண்டுபிடித்தாகிவிட்டது. ஆனால், அது சொல்லியிருக்கும் செய்திதான் முக்கியம். புதிய வகை யுத்தம் தொடங்கிவிட்டது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com