Contact us at: sooddram@gmail.com

 

ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம் இவை இரண்டும் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படும்

ழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய வற்றுக்குரிய ஊழியர்களின் கொடுப்பனவுடன், கம்பனியும் தனது பங்குத் தொகையை செலுத்த வேண்டும் என்ற கட்டு ப்பாட்டான விதிமுறை அரசாங்கத்தினால் சட்டப்பூர்வமாக அமுலாக் கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த விதிமுறையை எங்கள் நாட்டில் உள்ள சுமார் 60 வீதமான சிறிய கம்பனிகள் நடைமுறைப்படுத்துவதில்லை என்று சமீப த்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களில் பணிபுரியும் ஊழி யர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. எனினும், அதற்கு ஈடு செய்வதற்காக அரசாங்கம் 1958ம் ஆண்டில் ஊழியர் சேமலாப நிதி யம் என்ற இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினருக்கு வயோதிப கால த்தில் உதவக்கூடிய ஒரு நலன்புரி திட்டத்தை அன்றைய அரசாங்கம் அமுலாக்கியது.

இந்த ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் ஒவ்வொரு ஊழியரின் சம்பளத் தில் 8 சதவீதம் ஊழியரின் கொடுப்பனவாக கழிக்கப்படும். அத்துடன் கம் பனி நிர்வாகம் அவரது சம்பளத்தில் 12 சதவீதத்தை இத்துடன் இணை த்து தொழில் திணைக்களத்தின் ஊடாக இலங்கை மத்திய வங்கியில் மாதா மாதம் செலுத்த வேண்டும். சில வருடங்களுக்கு பின்னர் ஊழி யர் நம்பிக்கை நிதியம் என்ற இன்னுமொரு நலன்புரி திட்டத்தை அர சாங்கம் அமுலாக்கியது. இதற்கு ஊழியர் எவ்வித பணத்தையும் செலு த்த வேண்டியதில்லை. ஆயினும் அவர் பணிபுரியும் கம்பனி நிர்வா கம் அவரது சம்பளத்தில் 3 சதவீதத்தை தொழில் திணைக்களத்தில் வைப்புச் செய்யும்.

1958ம் ஆண்டின் 15ம் இலக்க சட்டத்தின் கீழ் ஊழியர் சேமலாப நிதியம் ஏற்படுத்தப்பட்டது. இதுவே இலங்கையில் உள்ள உழைக்கும் வர்க்கத் தின் மிகப்பெரிய சமூக, பாதுகாப்பு திட்டமாகும். இதன் மூலதனம் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 899.6 பில்லியன் ரூபாவாக இருக் கின்றது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதமாகும்.

1980ம் ஆண்டின் 46ம் இலக்க சட்டத்தின் கீழ் ஊழியர் நம்பிக்கை நிதி யம் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிதியம் 1981ம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி முதல் செயற்பட ஆரம்பித்தது. இந்த நிதியத்தை நிர்வகிக்கும் பொறு ப்பு நிதியமைச்சின் கீழ் செயற்படும் ஒரு சபையிடம் கொடுக்கப்பட் டுள்ளது. சகல விதமான தனியார் துறை மற்றும் கூட்டுத்தாபன ஊழி யர்கள் அனைவருக்கும் ஊழியர் நம்பிக்கை நிதிக்கான கொடுப்பனவை அந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் செலுத்த வேண்டுமென்று சட்டப் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது தனியார் துறை கூட்டுத்தாபனங்களில் பணிபுரியும் 60 ஆயிரம் ஊழியர்கள் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் அங்கத்தவர்களாக சேர் ந்து நன்மையடைகிறார்கள். 2011ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதியன்று இந்நிதியத்தின் கையிருப்பில் ரூபா. 135 பில்லியன் இருக்கின்றது.

ஊழியர் சேமலாப நிதியத்திற்கும், ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கும் கம் பனி நிர்வாகம் மாதாந்தம் ஒவ்வொரு அங்கத்தவரின் பெயரிலும் இல ங்கை மத்திய வங்கியில் வைப்பு செய்ய வேண்டுமென்ற கடப்பாடு இருக்கின்ற போதிலும், சுமார் 60 சதவீதமான நிறுவனங்கள் அதன்படி நடப்பதில்லை என்று அரசாங்கத்திற்கு இப்போது புகார் கிடைத்துள் ளது.

மாதாந்தம் இந்த கொடுப்பனவுகளை செலுத்தத் தவறும் நிறுவனங்கள் மீது ஒரு சிறு தொகையை தொழில் திணைக்களம் அபராதமாக விதிக் கின்ற போதிலும் சம்பந்தப்பட்ட கம்பனிகள் அதனைப் பொருட்படுத் தாமல், தொடர்ந்தும் ஊழியர்களுக்குரிய தொகையை மாதா மாதம் செலு த்தத் தவறுகின்றன. எத்தனையோ கம்பனிகள் இந்த பிழையை செய் தாலும் தாங்கள் கடமையை சரியாக செய்கின்றோம் என்பதை எடுத் துக்காட்டுவதற்காக தொழில் திணைக்களத்தின் சில அதிகாரிகள் ஓரிரு நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துவிட்டு, மற்ற நிறு வனங்கள் குறித்து பொருட்படுத்தாமல் அசமந்தப் போக்கை கடைப்பி டிக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

சில மோசடிக்கார நிறுவனங்களுடன் சில அரசாங்க ஊழியர்களும் ஒன்று சேர்ந்து உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் சேமிப்புகளை இவ்வி தம் மோசடி செய்து வருவதாக மேலும் பலதரப்பட்ட புகார்கள் அர சாங்கத்திற்கு கிடைத்த வண்ணம் இருக்கின்றது. சில நிறுவனங்கள் ஊழி யர்களின் சேமலாப நிதிய மற்றும் நம்பிக்கை நிதிய கொடுப்பனவு களை செலுத்தாமல் இருந்துவிட்டு, அந்த ஊழியர் பதவியை விட்டு வில கிச் செல்லும் போது அல்லது இளைப்பாறி செல்லும் போது தாங்கள் பிர ச்சினையை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று பயந்து, உடனடி யாக அந்த ஊழியர்களின் இவ்விரு நிதியங்களுக்கான கொடுப்பனவை செலுத்தி விடுவார்கள். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பல்லாண்டுகாலம் பணிபுரிந்த அந்த ஊழியருக்குரிய கொடுப்பனவை மாதாமாதம் செலு த்தியிருந்தால் அவருக்கு தற்போது கிடைக்கும் தொகையுடன் பெரும் தொகை வட்டியாக கிடைக்கக்கூடியதாக இருந்திருக்கும்.

ஆனாலும் இவ்விதம் ஒரே தடவையில் அவரது நிதியங்களின் கொடுப்ப னவை செலுத்திவிடுவதன் மூலமும் சம்பந்தப்பட்ட ஊழியர் இந்த மோச டிக்கார கம்பனி நிர்வாகத்தினரால் வஞ்சிக்கப்படுகிறார். இத்தகைய அநீ திகளை இல்லாமல் செய்வதற்கு தொழில் திணைக்களம் விழித்தெழு ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஊழியர்களின் சார்பில் பல வழக்குகளில் ஆஜரான ஒரு சிரேஷ்ட சட்டத்தரணி கவலை தெரிவித்தார். இதே வேளையில் ஊழியர் சேமலாப நிதி பாது காக்கப்பட்டு சீராக நிர்வகிக்கப்பட்டு வருகிறதென்ற ஒரு நற்செய் தியை பிரதி நிதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன பாராளுமன்றத் தில் அறிவித்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியூட்டக்கூடிய செய் தியாகும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com