Contact us at: sooddram@gmail.com

 

மீட்டெடுத்த நாட்டை பயங்கரவாதிகள் மீண்டும் பறித்தெடுக்க ஜனாதிபதி இடமளிக்கமாட்டார்

1970ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதியன்று நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 24 வயது இளைஞரான மஹிந்த ராஜபக்ஷ, பெலி யத்தை தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளராக போட் டியிட்டு 6 ஆயிரத்து 626 மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானார். இந்த நிகழ்வு இலங்கையின் வரலாற் றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வா கும்.

எங்கள் நாட்டை பயங்கரவாத பிடியிலிருந்து மீட்டெடுக்கும் மண்வாசனை யுடைய ஒரு இளைஞன் தென்னிலங்கையில் இருந்து தோன்றினான் என்று எதிர்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசியல் பிரவேசம் பற்றி நிச்சயம் குறிப்பிட மறக்கமாட் டார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட் டியிட்டதனால் தான் எங்கள் நாட்டில் அராஜகம் புரிந்து கொண்டிருந்த எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதத்தை அடக்கி, ஒடுக்குவதற்கு ஒரு அஞ்சா நெஞ்சம் படைத்த தேசத் தலைவரை நம்நாட்டு மக்களால் தெரிவு செய்யும் பாக்கியம் கிடைத்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு இனவாதியோ, மதவாதியோ அல்ல. அவர் தேசப்பற்றுடைய இந்நாட்டு மக்கள் அனைவரையும் சரிசமமாக நேசிக்கும் ஒரு பெருந்தலைவராவார்.

2005ம் ஆண்டில் ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்டவுடன் திரு. மஹி ந்த ராஜபக்ஷ அவர்களுக்கு உடனடியாக பயங்கரவாதிகளைப் பற்றி சிந்திப்பதற்கு அவகாசம் இருக்கவில்லை. அவர் சுனாமியினால் சீர் குலைந்து போன எங்கள் நாட்டின் நாலா பக்கங்களிலும் உள்ள கரை யோர பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுத்தல், இடைத்தங்கல் வீடுகளை அமைத்துக் கொடுத்தல், நிரந்தர வீடுகளை கட்டிக் கொடுத்தல், அவர்களின் சமூக, உளவியல் பிரச்சி னைகளுக்கு சரியான தீர்வினை ஏற்படுத்தல், கணவன், மனைவி, பிள் ளைகளையும், உற்றார், உறவினர்களையும் சுனாமிக்கு பலிகொடுத்து வேதனையில் மூழ்கியிருந்த மக்களுக்கு வாழ்வாதாரங்களை பெற்றுக் கொடுத்தல் போன்ற பணிகளை ஓரிரு வருடங்களுக்குள் சீராக செய்து முடித்த ஒரு சாதனை வீரர் என்று நாம் பாராட்ட வேண்டும்.

சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மீள்வாழ்வை பெற் றுக் கொடுத்த பின்னர் ஜனாதிபதி அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ.யுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஜனாதிபதி நீட்டிய நேசக்கரத்தை தட்டிக்கழித்துவிட்டு மாவில்லாறு வான்கதவுகளை எல்.ரீ.ரீ.ஈ. மூடிய சம் பவமே எல்.ரீ.ரீ.ஈ.யின் அழிவு ஆரம்பமாகியது.

அதையடுத்து, இந்நாட்டு மக்களின் நிம்மதியைக் குலைத்து நாடெங்கிலும் தற்கொலை குண்டுதாரிகளின் மூலம் அராஜகங்களை புரிந்து வந்த எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தை முற்றாக அழித்தொழிப்பதை விட வேறு வழியி ல்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள், எல். ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் சில உறுப்பினர்கள் தமிழர்களாக இருந்தாலும், தமிழ் மக்கள் ஆயுதம் தூக்கி அரசாங்கத்திற்கு எதிராக போராடவி ல்லை என்பதை நன்கு உணர்ந்து, இந்த யுத்தத்தை அப்பாவி பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய உயிராபத்தை கூடியவரையில் குறைக்கக்கூ டிய வகையில் யுத்தத்தை நடத்தி இறுதியில் எல்.ரீ.ரீ.ஈயை மண்டியிட வைத்து, இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்து, அவர்களை பயங்கரவாத பிடியில் இருந்து மீட்டெடுத்தார்.

இலங்கையில் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட போதிலும், வெளி நாடுகளில் எல்.ரீ.ரீ.ஈயின் சில ஆதரவாளர்களும் வெளிநாடுகளுக்கு சென் றிருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களில் ஒரு சிலரும் தனிப்பட்ட முறையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சில தேசத்து ரோக சக்திகளுடன் இணைந்து, இலங்கைக்கு எதிராக துர்ப்பிரசாரங் களை செய்து வருகிறார்கள்.

இவர்களின் செயற்பாட்டின் ஓர் அங்கமாகவே கடந்த மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தில் அமெரிக்காவின் உதவியுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் நாட்டில் இடம்பெற்று வரும் உண்மை நிகழ்வுகள் என்ன என்பதை நன்கு உணர்ந்து கொண்டுள்ள சர்வதேச சமூகம் இப்போது இலங்கை மீது மேற்கொண்டு வரும் அழுத்தங்கள் ஓரளவுக்கு தளர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரு அஞ்சா நெஞ்சம் படைத்த தேசத் தலைவராகும். அவர் சமீபத்தில் லண்டன் சென்றிருந்த போது ஜனாதிபதி தங்கியிருந்த ஹில்டன் ஹோட்டலுக்கு வெளியில் எல்.ரீ.ரீ. ஈயை ஆதரிக்கும் ஒரு சிலர் இலங்கைக்கு எதிராக சில ஆர்ப்பாட் டங்களை மேற்கொண்டு வந்த போது மறுமுனையில் இன்னுமொரு பக்கத்தில் இலங்கையை ஆதரிக்கும் நம்நாட்டவர்கள் ஆர்ப்பாட்டங் களை செய்து கொண்டிருந்தார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் வெளியில் செல்ல வேண்டாமென்று பிரிட் டிஷ் பொலிஸார் ஜனாதிபதி அவர்களுக்கு எச்சரிக்கை செய்த போதும் அவர் அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ஹோட்டலில் இரு ந்து வெளியில் வந்து, தன்னை எதிர்த்த மற்றும் இலங்கையை ஆத ரிக்கும் மக்கள் மத்தியில் சென்று, உரையாடியதுடன் அங்கு ஒரு உரை யையும் நிகழ்த்தினார்.

ட்டெடுத்த நாட்டை பயங்கரவாதிகள் மீண்டும் பறித்தெடுக்க நான் மீண் டும் இடமளிக்க மாட்டேன் என்று அங்கு கூடியிருந்த மக்களிடம் ஜனா திபதி அவர்கள் திட்டவட்டமாக அறிவித்தார். வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் இவ்விதம் அநாவசியமான ஆர்ப்பாட்டங் களை நடத்தாமல் இலங்கைக்கு வந்து வடக்கு, கிழக்கு பகுதியில் அபி விருத்தி பணிகளுக்கு உதவி செய்ய வேண்டுமென்றும் அதன்மூலமே நம் நாட்டு மக்களிடையே நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியு மென்று ஜனாதிபதி கூறினார்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com