Contact us at: sooddram@gmail.com

 

நாடு கடந்த தமிழீழ அரசைவிட்டுப் பிரிந்து செல்லும் எம் பிரியமானவர்களே!- பிரதிப் பிரதமர் விடுக்கும் வேண்டுகோள்

ஆண்ட பரம்பரை மீண்டும் தன்மானத்துடன் வாழ, நாதியற்று வாழும் எம்மக்களுக்கு நீதி கிடைக்க ஓவ்வொரு தமிழனும் தனது பங்கைத் தவறாமல் செலுத்தி இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை மீளமைப்போம் என சூளுரைத்துத் தொடங்கிய நாடுகடந்த தமிழீழ அரசை, ஈழத்தமிழர்களின் கனவை,..........உலகத் தமிழரின் விருப்பை ஊதாசீனம் செய்து பிரிந்து செய்வது சரியா, பிழையா, முறையா, நேர்மையானதா என ஒரு கணம் சிந்தியுங்கள். தமிழரின் ஒற்றுமையை, அதன் தேவையை எடுத்துக்காட்டும் விதத்தில் நடக்கவேண்டிய நாமே பிரிவினைக்குக் காரணமாகலாமா? பிரிவினை என்ற சொல்லை தமிழ் அகராதியில் இருந்து அகற்றவேண்டிய நாமே பிரிவிணைக்கு வழிவகுக்கலாமா? தேசியம் பேசிய நாம் இன்று பிரிந்து நின்று எம்மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையைச் சிதைக்கலாமா?

பிரிந்து சென்றதோடு நிறுத்தாமல், நாடுகடந்த தமிழீழ அரசு - ஜனநாயக அணி என்ற பெயருடன் ஏட்டிக்குப் போட்டியாக நீங்கள் தொடங்கியிருப்பது ஒற்றுமையை வேண்டி நிற்போருக்கு ஒரு சவுக்கடியாகவும், எம் இனத்தின் எதிர்காலத்துக்கு ஒர் தடைக்கல்லாகவும அமைந்துவிட்டதே. எமக்குள் யார் பிரிந்தாலும் இழப்புத் தமிழருக்கே என்ற உண்மையை உணர்ந்தல்லவா நீங்கள் செயற்பட்டிருக்க வேண்டும். பேசித் தீர்க்க்க வேண்டிய விடயத்தை பிரிந்து சென்று எதிரி விரிக்கும் வலைக்குள் நீங்களாகவே விழுந்து விட்டீர்களே. பிரிந்து செல்லும் உங்கள் செயலுக்கும், ராஜபக்சவின் விருப்பத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லையே. இருவரும் வேண்டிநிற்பதும் தவமிருப்பதும் நாடுகடந்த தமிழீழ அரசை அழிப்பது அல்லது பலவீனப்படுத்துவது ஒன்றுமட்டுமே.

ஜனநாயகம் பற்றிப் பேசுகிறீர்களே, எது ஜயா ஜனநாயகம்? பிரிந்து நிற்கும் முப்பது பேர் கூறுவதை மற்றைய அறுபத்தட்டுப்பேரும் ஏற்றால்தான் ஜனநாயகமா? அல்லது, அவர்கள் ஏற்கமறுததால் நீங்கள் பிர்ந்து செல்வதுதான் ஜனநாயகமா? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்உடையாமல் காப்போம்! சரியாயின் தட்டிக்கொடுப்போம். தவறாயின் சுட்டிக்காட்டுவோம் என்கிறீர்களே. நல்ல விடயம். ஆனால் முதலில் பெரும்பான்மைக்கு மதிப்புக் கொடுத்து நடவுங்கள்.

உங்கள் விருப்பு நிறைவேறாததால் உண்மையைக் கூறமுடியாமல், வலுவில்லாத காரணங்களை உலகுக்குக் கூறி, நாடுகடந்த தமிழீழ அரசை பலவீனப்படுத்தும் நோக்குடன் நீங்கள் செயற்படுவது எந்த விதத்தில் எம் இனத்துக்கு நன்மை தரும் என்பது எமக்கு விளங்கவில்லை.

சிறிய விடயங்களை பெரிதாக்கி, நாடுகடந்த தமிழீழ அரசை அழிக்க முயலும் உங்கள் பரிதாப நிலை கண்டு வெட்கப்படுகிறேன், வேதனையடைகிறேன். நீங்கள் நினைப்பது நடக்கவில்லை என்பதற்காக எம் இனம் பலியிடப் படவேண்டுமா என்பதை எண்ணிப் பாருங்கள்.

உங்களைத் தேர்வு செய்த எம் மக்களைப் பற்றியோ, ஈழத்தில் வாடும் எம் உறவுகளைப் பற்றியோ சிந்திக்காது நீங்கள் இப்படி நடப்பது தவறல்லவா? எம் மக்கள் முட்டாள்களல்ல அரசியலை நன்கறிந்தவர்கள். எம் ஒவ்வொருவரையும் மயிரிடை கூடத் தவறாமல் எடைபோட வல்லவர்கள். நானும் உங்களில் ஒருவன் என்பதை மற்ந்துவிடாதீர்கள். எமது மக்கள் உங்களை வெறுப்பதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன்.

கனிவான உள்ளமும், பணிவான குணமும் கொண்ட உருத்திரகுமாரன் தேசியத் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். நாடுகடந்த தமிழீழ அரசை வழிநடத்தவல்ல அந்த உத்தமரை, திறமைசாலியை நீங்கள் கே. பி யுடன் இணைத்து அவரை கேவவலப்படுத்துவது நீதியும், நியாயமுமற்ற செயலல்லவா? தலைமையை அகற்றி, நாடுகடந்த தமிழீழ அரசைச் செயலிழக்க வைத்தால் அதனால் யார் நன்மை அடைவார்கள் என்பது கூட உங்களுக்கு விளங்கவில்லையா?

தமிழினத்தை அழிக்கக் கங்கணம் கட்டி நிற்கும் சிங்களத் தலைவர்களின் ஒற்றுமையைப் பாருங்கள். அதேவேளை வாழ்வாதாரங்களை எல்லாம் இழந்து அல்லல் படும் எம் உறவுகளின் வாழ்வை ஒர் முறை சிந்தித்துப் பாருங்கள், ஆண்டுக்கணக்காக சிங்களச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எம் உறவுகளை ஒரு தரம் நினைத்துப் பாருங்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து சென்று தனித்துப் போட்டியிட்ட கஜேந்திரகுமாரின் தோல்வி எமக்குத் தந்த பாடத்தை மறவாதீர்கள்.

வரலாறு படைத்தவர்கள் சண்டாளர்களின் கையில் சிக்கி சிறைகளில் அல்லல் படும்போது, நாட்டை ஆளும் வல்லமை படைத்தவர்கள் நரக வாழ்க்கை வாழும்போது நீங்கள் அணிகளை உருவாக்கி தமிழினத்தைக் கூறு போடுகிறீர்களே. இது சரியென உங்களுக்குப் படுகிறதா?

எம் வீரத்தைக்கண்டு வியந்த உலகம் எமது ஒற்றுமை கண்டும் வியக்கவேண்டும். ஒன்றில் எம் இனத்தின் மானத்தைக் காக்க, அவர்களின் எதிர்காலத்தை வளமாக்க, தேசியத் தலைவரின் இலட்சியத்தை தலைமேல் வரித்துச் செயற்படும் நாடுகடந்த தமிழீழ அரசுடன் இணைந்து செயற்படுங்கள். அல்லது குழப்பம் விளைவிக்காது அவர்களையாவது நிம்மதியாகச் செயற்பட விடுங்கள்.

எமது உற்வுகள் கோரமான சுனாமியால் பாதிக்கப்பட்டு, கொடிய போரை எதிர்கொண்டு, தாங்கொணா வெள்ளத்தால் தாக்கப்பட்டு மூன்று ஜென்மங்களை இந்தத் தலைமுறையில் கடந்தவர்கள். எம் மக்களுக்குப் பிரிவும், வெளிநடப்பும் புதிதுமல்ல, பெரிதுமல்ல. அவர்கள், ஒரு பலமான அரசியல் தளத்தை நாடுகடந்த தமிழீழ அரசுக்கு நிச்சயம் தருவார்கள்.

எம் மக்களின உதவியுடனும் ஒத்தாசையுடனும் இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாடு விரைவில் மலரும். அந்த வேளை, நீங்கள் பார்வையாளர்களாக அல்லாது அங்கு பங்காளிகளாக இருக்கவேண்டும். இதுவே என் ஆசை.

ஊடகங்கள் உங்களுக்கு சாதகமாக இருந்தால் மட்டும் போதாது. அவர்கள் ஆதரவு தந்தால் பொய் உண்மையாகிவிடுமா? எமது மக்களை எவரலும் ஏமாற்ற முடியாது என்ற உண்மையை டக்ளசும் கருணாவும் உணர்ந்தது போல் நீங்களும் உணரவேண்டுமா? எம் இனத்தின் நன்மை கருதி நாடு கடந்த தமிழீழ அரசைத் தூற்றுவதை நிறுத்துங்கள். அது எதிரிக்குத்தான் நன்மையாக முடியும்.

காலத்தைக் கடத்தாமல், நாடுகடந்த தமிழீழ அரசு பெருந்தன்மையுடன் நீடித்த மூன்று கிழமைக்குள் யாப்பினை ஏற்று, பராளுமன்ற சட்டதிட்டங்களுக்கு அமைய நடப்போம் என்று கையொப்பமிட்டு ஒன்றிணைந்து செயற்படுங்கள்.

யாப்பில், தமிழருக்கு நன்மைதரும் வேறு விடங்களும் சேர்க்கப்பட வேண்டுமாயின் அடுத்த அமர்வில் அதையும் சேர்த்துச் செயற்படுவோம். அதற்கான ஒத்துழைப்பை நான் உங்களுக்குத் தவறாது தருவேன். பாராளுமன்றம் தொடங்கி 50 ஆண்டுகள் சென்றாலும் தேவை வரும்போது யாப்பைத் திருத்துவதும் மாற்றுவதும் வழமையான விடயம்தானே.

எம் இனத்தின் பெயரால் உங்களிடம் அன்பாகக் கேட்கிறேன், தயவாக வேண்டுகிறேன், மன்றாடி நிற்கிறேன் நீங்கள் தவறான பாதையில், தப்பாகச் செயற்படுவது முறையல்ல.

இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை அமைக்கவல்ல நிலையில் எம்மிடம் உள்ளது நாடுகடந்த தமிழீழ அரசு ஒன்றே. அதையும் அழித்துவிட்டால் அல்லது பலவீனப் படுத்தினால் எம் உறவுகளின் நிலை என்ன என்பதை மீண்டும் ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்.

கலாநிதி ராம் சிவலிங்கம்

பிரதிப் பிரதமர்நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com