Contact us at: sooddram@gmail.com

 

முகநூலின(Facebook) முகங்கள்...

ஃபேஸ் புக் இன்றைய தலைமுறையின் சந்திப்புத்தளம் என்று கூறினால் யாரும் மறப்பதற்கில்லை. இத்தனை பிரபலமான இந்த இணையத்தளத்தின் முக்கியமானவர்களாகக் கூறப்படுவது ஜோ க்ரீன் மற்றும் ஷெரில் சேண்ட்பெர்க், முதலாமவர் முகநூல் தொடங்கும் நேரத்தில் அதன் உரிமையாளர் மார்க்குடன் இருந்தவர், இரண்டாமவர் அதனை முன்னேற்றப்பாடுபட்டவர். முகநூலின் உரிமையாளரான மார்க் சுகெர்பெர்க்கின் நண்பர் தான் ஜோக்ரீன். இருவரும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். பல்கலைக்கழக விடுதியில் இருவரும் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டனர். 2004 ஆம் ஆண்டில் மார்க் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு "ஃபேஸ்புக்" என்ற முகநூல் இணையத்தளத்தைத் தொடங்கத் திட்டமிட்டார். இதற்கு ஜோ க்ரீனின் உதவியையும் நாடினார். ஆனால் நண்பரின் அழைப்பை ஜோ ஏற்றுக்கொள்ளவில்லை. படிப்பையும் பாதியிலேயே நிறுத்துவதில் அவருக்கு உடன்பாடில்லை.

இது குறித்து அவர் கூறுகையில், தன்னை ஈர்த்த அரசியல் பக்கம் சென்றார். அங்கு அதிபர் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார். அதன் பின்பு முகநூலைச் சார்ந்து "காஸஸ்" என்ற இணையத்தளத்தைத் தொடங்கியுள்ளார். அதன் மூலமாக சமுதாயத்தில் தேவைகளோடு இருக்கும் ஏழைகளுக்கு நன்கொடைகள், உதவிகள் போன்றவற்றை செய்து வருகிறார்.

இந்த இணையத்தளத்தை முகநூலுடன், இணைத்து இதுவரை ரூ. 247 கோடி மதிப்புக்கு 50 ஆயிரம் பேருக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளன. தேவைகளோடு இருப்பவர்களுக்கு சமுதாய அக்கறை கொண்டவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் உலகத்தையே மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறது ஜோவின் இணையத்தளம்.

முகநூலுடன் இணைக்கப்பட்டுள்ளதால் "காஸஸ்" இணையத்தளத்தை ஒரு மாதத் திற்கு சுமார் 6.5 கோடி பேர் பார்வை யிடுகின்றனர் என்கிறார் ஜோ. மேலும் மார்க் முகநூல் இணையத்தளத்தை தொடங்கும்போது அவருடன் செல்லாததை இப்போதும் நினைத்து வருந்துகிறேன் என்கிறார் ஜோ க்ரீன்.

முகநூலின் தலைமை செயல் அதிகாரி ஷெரில் சேன்ட்பெர்க். இவர்தான் முகநூல் இணையத்தளத்தில் அதிக சம்பளம் வாங்கும் ஊழியர். கடந்த ஆண்டு மட் டும் இவரின் சம்பளம் ரூ. 152.2 கோடி சுய முயற்சியால் உயரிய இடத்துக்குச் சென்ற பெண்களில் உலக அளவில் இவரும் ஒருவர். ஹாவேர்டு பல்கலைக் கழகத்தில் இவர் படித்துக்கொண்டிருந்த சமயம் பேராசிரியர் ஒருவரின் உதவியால் உலக வங்கியில் ஆய்வு உதியாளராக பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.

அதன் பின்பு எம்.பி.ஏ. பட்டம் பெற் றார். பில் கிளிண்டன் அதிபராக இருந்த போது அமெரிக்க நாட்டின் கருவூலத்தில் தலைமை ஊழியராகப் பணியாற்றிய இவர் அதன் பின்பு "கூகுள்" நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற கிறிஸ்து மஸ் விருந்தில் ஷெரிலை சந்தித்தார். முகநூலின் உரிமையாளர் மார்க் அவருடன் பேசிப் பழகிய சில மணித்துளிகளிலேயே ஷெரில்தான் முகநூல் இணையத்தளத்தின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு பொருத்தமானவர் என்று தீர்மானித்தார் மார்க். இறுதியில் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முகநூல் இணையத்தளத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஷெரில் சேண்ட்பெர்கை அறிவித்தது நிறுவனம்.

முகநூலில் இவர் பொறுப்பேற்ற உடன் பல்வேறு சாதனைகளைப் புரிந்தார். முகநூலை இலாபம் தரும் தொழிலாக மாற்றும் முயற்சியில் இறங்கினார் ஷெரில். அதற்கு முன்பு வரை வெறும் நண்பர்கள் கூடும் தளமாக இருந்த முகநூல் அதற்குப் பின்பு இலாபத்தைக் கொழிக்க ஆரம்பித்தது. முகநூலை விளம்பரப்படுத்த நிர்வாகத்திடம் அனுமதி பெற்றார் ஷெரில்.

இறுதியில் 2010 ஆம் ஆண்டு முகநூல் இலாபத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. இவரின் செயல்பாடுகளால் முகநூல் இப்போது பங்குச் சந்தையிலும் கால் பதிக்கவிருக்கிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com