Contact us at: sooddram@gmail.com

 

இந்நாட்டு மக்களின் இறைமையை எந்த சக்தியாலும் பறித்துவிட முடியாது

ஒரு தனி மனிதனுக்கு அல்லது ஒரு நாட்டுக்கு துன்பம் அல்லது அச் சுறுத்தல் ஏற்படும் போது அந்த மனிதன் அல்லது அந்த நாடு தன்னுடைய உண்மையான நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பதை இலகுவில் இனம்கண்டு கொள்ள முடியும். இலங்கைக்கு எதிராக யுத்தம் முடிவடையவிருந்த கடைசி சில தினங்களின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுகள் இடம் பெற்றன என்ற முறைப்பாட்டினை தற்போது சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா அமைப்பின் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் அமெரிக்காவும் அதன் மேற்குல நேச நாடுகளும் வலியுறுத்தக்கூடிய பிரேரணை ஒன்றை கொண்டுவரப் போவதாக அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் எங்களுக்கு உதவுவதற்கு முன்வந்திருப்பது சீனா, இந் தியா, தாய்லாந்து மற்றும் உகண்டா போன்ற ஆபிரிக்க நாடுகளும் அரபு உலக நாடுகளுமேயாகும். இலங்கையின் நட்பு நாடுகளான இவை, எமது நாட்டின் இயற்கை வளங்களையோ, பொருளாதாரத்தையோ சூறை யாடும் எண்ணமின்றி, நட்புக்கு முக்கியத்துவம் அளித்தே இவ்விதம் இலங்கைக்காக சர்வதேச அரங்கில் குரல் கொடுக்கின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் எங்கள் நாட்டின் வரலாற்றை பின்னோக்கி பார்த்தல் அவசியமாகும். 1505ம் ஆண்டு முதல் போர்த்துக்கேயர், ஒல் லாந்தர் அதையடுத்து ஆங்கிலேயர் எங்கள் நாட்டை ஆக்கிரமித்து, எமது பொருளாதாரத்தை சூறையாடியதுடன் நின்றுவிடாமல், நம்நாட்டு மக்களை அடிமைகளைப் போல் வழிநடத்தி வந்தார்கள். குறிப்பாக, மலையகத்தின் பெருந்தோட்டங்களுக்கு இந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர் கள் தென்னிந்தியாவில் இருந்து அடிமைகளாக பலவந்தப்படுத்தி கொண்டுவந்த தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் இன்றும் அதே நிலையில் லயன் வாழ்க்கையில் முடங்கிக் கிடக்கக்கூடிய வகை யிலேயே அமைந்துள்ளது.

பிரிட்டிஷார் தொடர்ந்தும் எமது நாட்டின் செல்வத்தை சூறையாட முடியாது என்று தெரிந்து கொண்டவுடன் வேறு வழியின்றி, இலங்கைக்கு சுதந்திர த்தை கொடுத்துவிட்டு, கம்பி நீட்டினார்கள். அதையடுத்து, எங்கள் நாட் டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஐக்கிய தேசியக்கட்சியின் கோர்ட் சூட் அணிந்திருந்த தலைவர்கள், வெள்ளையர்களின் பாணியி லேயே மலையக மக்களின் நல்வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

1956ம் ஆண்டுக்குப் பின்னர் பதவிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலை மையிலான கூட்டமைப்பு அரசாங்கமே மலையக மக்களின் நல்வாழ்வு க்கு ஒரு சிறந்த அடிதளத்தை அமைத்தது. இது விடயத்தில் மலையக மக்களுக்காக பெருந்தொண்டாற்றிய மலையகத்தின் தந்தை என்று பாரா ட்டப்படும் செளமியமூர்த்தி தொண்டமான் என்ற பெரியவரின் பங்களிப் பும் பாராட்டுக்குரியதாக இருந்தது.

1505ம் ஆண்டின் போர்த்துக் கேயர் இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு முன் னரே நம்நாட்டுக்கு சீன வியாபாரிகளும், அரபு நாடுகளைச் சேர்ந்த வியா பாரிகளும் 13ம் நூற்றாண்டில் இருந்தே இலங்கைக்கு வந்து எமது விலை மதிப்பற்ற இரத்தினக் கற்களையும் வாசனைத் திரவியங்களையும் வாங் கிச் சென்றார்கள். அதற்கு பதிலாக அவர்கள் எமது நாட்டுக்கு விலை உயர்ந்த கம்பளங்கள் மற்றும் பட்டுப் புடவைகள் ஆகியவற்றையும் வேறு பல பொருட்களையும் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

இந்த சீன மாலுமிகளுக்கோ அரபு நாடுகளைச் சேர்ந்த வியாபாரிகளுக்கோ இலங்கையை ஆக்கிரமிக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கவில்லை. அவர்கள் அன்று முதல் இன்று வரை இலங்கையின் நண்பர்களாகவே இருந்து எங்களுக்கு ஆபத்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உதவி செய்யவும் தயங்குவதில்லை.

இன்று கூட உலகின் பொருளாதார வல்லரசாக வளர்ந்து வரும் சீனா மற்றும் அரபு உலக நாடுகள் இலங்கைக்கு பல வகையிலும் பொருளாதார உதவி களை செய்து கொண்டிருக்கின்றன. இலங்கையை தொடர்ந்தும் பொரு ளாதார ரீதியில் சூறையாட முடியாது என்பதை புரிந்து கொண்டத னாலோ என்னவோ, இந்த மேற்குலக நாடுகள் இலங்கையை சின்னா பின்னமாக்குவதற்காக இத்தகைய சர்வதேச சதி முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

இலங்கைக்கு எப்போதும் உதவி செய்யும் ரஷ்யா கூட இப்போது ஜெனீவா மனித உரிமை பேரவை மாநாட்டில் மேற்குலக நாடுகள் இலங்கையின் மீது அநாவசியமான தலையீடுகளை செய்து அந்நாட்டின் பொருளாதார முயற்சிகளை சீர்குலைக்கலாகாது என்று அறிவித்திருக்கிறது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாரம்பரியமாக மத ரீதியிலான சம்பிரதாயபூர்வமான உறவுகள் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின் றன. இந்தியாவின் சில குறுகிய நோக்கத்தையுடைய, சுயலாபத்திற்காக அரசியல் நடத்தும் சில அரசியல் தலைவர்கள் இலங்கையை கண்டித்து, கோசமிழைத்து, ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள மேற்குலக நாடுகளின் பிரேரணையை ஆதரிக்க வேண்டுமென்று இந்திய மத்திய அரசாங்கத்திற்கு இப்போது பாரிய அழுத்தங்களை கொண்டு வருகின்றன.

எத்தகைய அழுத்தங்களை கொண்டுவந்தாலும் இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்க முடியாது என்பதை ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மீள்வாழ்வு திட்டங்களுக்கு தமது அரசாங்கம் கோடான கோடி ரூபாவை உதவியாக வழங்குகிறது என்றும் ஏற்கனவே 50ஆயிரம் வீடுகளை வடபகுதியில் நிர்மாணித்து யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களுக்கு அவற்றை வழங்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிவித்துள்ளது.

தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியோ, தற்போ தைய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவும் இலங்கை மக்களுக்காக எவ்வளவுதான் முதலைக் கண்ணீர் வடித்தாலும், நம்நாட்டு மக்கள் அவ ர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதற்கு பதில் தங்களுக்கு புதுவாழ்வை அளிப்பதற்கு ஏற்கனவே நல்ல பல நடவடிக்கைகளை எடுத்துவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு, தங்கள் பூரண ஆதரவை அளிப்பதை எந்தவொரு சக்தியினாலும் தடுத்துவிட முடியாது.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com