Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் கூட்டமைப்பின் நிலைப்பாடும் தடுமாற்றங்களும்

இலங்கையின் மீதான வெளி அழுத்தங் களை எதிர்த்து நாடுதழுவிய ரீதியில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தலைமையில் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை எதிர்க்கும் போராட்டங்களே நடந்துள்ளன. இந்தப் போராட் டங்களுக்கு இலங் கையின் பெரும்பாலான கட்சிகள் ஆதரவளித் துள்ளன. சிங்களக் கட்சிகள் பெரும்பாலும் தேசிய நிலைப்பாட்டு சிந்தனையுடன் இயங்கியுள்ளன. இலங்கையின் மீதான எத்தகைய அழுத்தங்களும் இலங்கையர் அனை வரையும் பாதிக்கும் என்ற உணர்வு சிங்களக் கட்சிகளிடம் இருந்துள்ளது. ஐ.தே.க. கூட இதனை ஏற்றுக் கொண்டுள்ளது. இதேவேளை, தமிழ் தரப்பிலும் இந்த விசயத்தில் ஓரளவு ஒத்த நிலைமையே காணப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மட்டுமல்ல, முற்றிலும் வேறான ஒரு அரசியல் நிலைப்பாட் டையுடைய தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) கூட இந்த விச யத்தில் அதனுடைய அரசியற் பாரம் பரியத்துக்கும் சிந்தனைப் பாரம்பரியத்துக் கும் அப்பால் ஒரு தீர்மானத்தை எடுத் திருக்கிறது.

தென்பகுதி மக்கள் ஒருமுகப்பட்டு நிற்கும் போது அதற்கெதிராகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்பட முடியாது என்றும் தற்போதுள்ள நிலைமையில் மிகக் கவனமாகவே முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும் இலங்கையில் சமூகங்களுக்கிடையிலான பதற்றத்தைத் தணிப்பதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அந்தக் கட்சியின் தலை வர் திரு இரா. சம்பந்தன் அறிவித்திருந்தார்.

வெளிப்படையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளி அழுத்தங்களை எதிர்க்கவில்லை. ஆனால், அது அமெ ரிக்கா கொண்டு வரவிருந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை இலங்கை அரசை எதிர்த்து, ஜெனிவாவில் எதிர்நிலைப்பாட்டோடு திரளவுமில்லை.

புலம்பெயர் நாடுகளில் இருக்கும் கணிசமான தமிழர்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஜெனிவாவில் திரண்டிருந்த சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அப்படியான ஒரு நிலைப்பாட்டுடன் ஜெனிவாவில் நின்றிருக்க வேண்டும் என அவர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வளவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிக அண்மையில் அமெரிக்கப் பிரதிநிதிகள் சந்தித்திருக்கின்றனர். 'தமிழ்ச் சிவில் சமூகப் பிரதிநிதிகள்' என்று கூறப்படும் அணியினர் சந்தித்திருக்கின்றனர். இந்தியப் பிரதிநிதிகள் சந்தித்திருக்கின்றனர்.

இத்தனைக்குப் பிறகும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது என்பது கவனத்திற்குரிய ஒன்று.

ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளப் போவதில்லை என்று திரு இரா. சம்பந்தன் அறிக்கையை விடுத்திருந்தார்.

இந்த அறிக்கையை அடுத்துப் பல குழப்பங்களும் அறிவிப்புகளும் விமர்சனங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும் அதனைச் சுற்றியும் எழுந்துள்ளன.

குறிப்பாகக் கூட்டமைப்பின் தலைவர் திரு இரா சம்பந்தனை நோக்கியும் அவருடைய நெருங்கிய சகாவாகவும் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் மூளையா கவும் கருதப்படுகின்ற திரு. சுமந்திரனையும் நோக்கியுமே இந் தக் குற்றச் சாட் டுகளும் விமர் சனங்களும் கிளம்பியுள்ளன. தற்போது திரு சம்பந்தனும் திரு சுமந்திரனும் அறிவித்த இந்த முடிவை, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற, அந்தக் கட்சியின் பேச்சாளராக இருக்கின்ற, அந்த அமை ப்பின் மூத்த உறுப்பினராக இருக்கின்ற திரு சுரேஸ் பிரேமச்சந்திரனே நிராகரித் திருக்கிறார்.

திரு சம்பந்தனின் அறிவிப்புத் தனக்கும் கட்சிக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாகவும் அத்தகைய தீர்மானம் தனிப்பட்ட ரீதி யில் திரு சம்பந்தனுடைய நிலைப்பாடா கத்தான் இருக்கிறது எனவும் திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் பி.பி.ஸி. தமி ழோசையில் 26.02.2012 அன்றிரவு தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த நிலையை உடனடியாகவே மறுத்து மீண்டும் எல்லோரையும் அதிர் ச்சியடைய வைத்தார் திர . சம்பந்தன், ஜெனிவாவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செல்வதில்லை என்ற முடிவானது பொதுவான தீர்மானமே என்றும் இதைக் குறித்து ஏற்கனவே விளக்க மளிக்கப்பட்டது எனவும் இது தொடர்பாக மேலதிக விளக்கம் கொடுக்கப்படும் எனவும் உடடினயாகவே தனது மறுப்பை வெளியிட்டிருந்தார் திரு சம்பந்தன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் திரு. சம்பந்தனும் திரு. சுமந்திரனும் நிலைமைகளை ஓரளவுக்கு விளங்கிக் கொண்டு யதார்த்தமாகச் சிந்திப்பவர்கள் என்பதை அவதானிக்கலாம். வெளிநாடுகளின் இராஜதந்திரிகளையும் இவர்களே அடிக்கடி சந்திப்பவர்கள் என்ற வகையிலும் அரசியல் அணுகுமுறைகள் குறித்த புரிதல்கள் இவர்களுக்கு ஏனையவர்களை விடவும் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.

இதனாற்தான் திரு சம்பந்தன் தன்னுடைய பதில் அறிக்கையை வெளிப்படுத்தும் போது கூட்டமைப்பின் நேசநாடுகளின் ஆலோசனை செய்தே தாம் இந்த முடிவை எடுத்ததாகச் சொன்னார். அர சாங்கத்தைப் பகைத்துக் கொள்ளாமல், அதனுடன் உறவைப் பேணும் வகையில் திரு சம்பந்தனும் சுமந்திரனும் நிலைமைகளைக் கையாள்கின்றனர்.

அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்ள முடியாத ஒரு நிலைவரத்துக்கு இன்று கூட்டமைப்பும் வந்துள்ளது. இதனையடுத்து எழுந்துள்ள சர்ச்சைகளிற்குப் பதிலளிக் கும் போது 'எனது மக்கள் நீதியுடனும் சமத்துவத்துடனும் வாழ வேண்டும் என் பதற்காகவே நான் என்னை அர்ப்பணித் துள்ளேன். ஆகவே நான் எதனைச் செய்ய வேண்டியுள்ளதோ அதனை நிறைவேற்ற வேண்டும்' என்று கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு இணையத் தளத்திற்கு வழங்கிய நேர்காணில் திரு சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இங்கே பிரச்சினை என்னவென்றால், சம்பந்தன் நிலைமைகளை விளங்கிக் கொள் கிறார். அதன்படி முடிவெடுக்க முயற்சிக்கிறார். ஆனால், அதைச் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவர் திணறுகிறார்.

புலம்பெயர் மக்களின் அபிப்பிராயத்தை யும் தமிழ்த் தேசிய அலையையும் தமக்கான பலமாகக் கொண்டு தங்களுடைய அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள கூட்டமைப்பின் பிற உறுப்பினர்கள் சிந்திக்கிறார்கள்.

(கே. அரவிந்தன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com