Contact us at: sooddram@gmail.com

 

ரஷ்ய அரசியலில் விளாதிமிர் புட்டின்

ரஷ்யாவில் இன்று ஜனாதிபதித் தேர்தல்

ரஷ்யாவில் இன்று (04) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதால் எல்லோருடைய கண்களும் கிரம்ளினுக்குள் மீண்டும் விளாதிமிர்புட்டின் நுழைவாரா என்பதையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. ரஷ்ய அரசியலில் விளாதிமிர் புட்டின் அணையா விளக்கு. பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் மாறி மாறிப் பதவி வகித்து அயல் நாடுகளையும் அகிலத்தையும் ஒரு கலக்குக் கலக்கியவர். 1999 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ரஷ்யாவின் ஜனாதிபதியாக பொரிஸ்யெல்ஸ்ரின் கடமையாற்றும் போது பிரதமராகவிருந்து பிரபலம் பெறத் தொடங்கியவரே விளாதிமிர் புட்டின். பின்னர் 2000 ஆம் ஆண்டு முதல் 2008 வரை இரண்டு முறைகள் ஜனாதிபதியாகவிருந்தார். ரஷ்ய அரசியலமைப்பின் படி நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும். ஒருவர் எத்தனை முறைகளேனும் ஜனாதிபதியாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து இரண்டு முறைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது.

மூன்றாவது முறையாகவும் பதவி வகிக்க விரும்பினால் ஒருமுறை விட்டுக் கொடுக்க வேண்டும். இதனால் 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆசனத்தை விட்டு கொஞ்சம் இறங்கியிருக்க நேர்ந்தது. இதனால்தான் மெத்விடிவ் 2008 முதல் 2012 வரை ஜனாதிபதியாகப் பதவி வகித்தார்.

அப்போதைய தேர்தலில் எதிர்க் கட்சிகள் பலமாகயிருந்தாலும் மெத்விடிவ் என்பவரை புட்டினே நெறிப்படுத்துகிறார் என்பதற்காகவே ரஷ்ய மக்கள் மெத்விடிவை ஜனாதிபதியாக்கினர்.

இவருடைய ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவில் பல பிரச்சினைகள் எழுந்த போதும் பிரதமராக புட்டின் இருந்து இயக்கியதால் சகல பிரச்சினைகளும் தீர்வுக்கு வந்தது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பாராளுமன்றத் தேர்தலின் போது புட்டின் கட்சி கடுமையான பின்னடைவைக் கண்டது. இந்நிலை மீண்டும் புட்டினையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை தோற்றுவித்தது. 2008 முதல் 2012 வரை மெத்விடிவ் ஜனாதிபதியாக இருந்த காலத்தில்கூட புட்டின் மெத்விடிவ் இடையே அடிக்கடி பனிப்போர் மூண்டதும் பின்னர் இணக்கம் வந்ததும் தெரிந்ததே.

புட்டின் தலைமை தாங்கும் ஐக்கிய ரஷ்ய கட்சியில் திறைமையில்லாத அனுபவமற்ற வேட்பாளரை களமிறக்கி இம்முறை எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக எதிர்க் கட்சிகள் செய்யாத முயற்சிகளே இல்லை. புட்டினையும் மெத்விடிவையும் மோதவிட்டு ஐக்கிய ரஷ்யக் கட்சியை உடைக்க வேண்டுமென்ற முயற்சி வெற்றியடைய எதிர்க்கட்சிகள் வேண்டாத தெய்வமுமில்லை.

அமெரிக்கா உள்ளிட்ட ரஷ்யாவின் எதிரி நாடுகளிடமும் எதிரணிகள் ஆலோசனை கேட்டன. இதன் எதிரொலிகளே இப்போது ரஷ்யாவெங்கும் ஆர்ப்பாட்டங்கள்.

மேலைத்தேய நாடுகளின் தூண்டுதலினால் புட்டின் தலைமைதாங்கும் ஐக்கிய ரஷ்ய கட்சியை பிளவுபடுத்தவும், தோற்கடிக்கவும் பிரயத்தனங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் கண்டும் காணாதது போல் பாவனை செய்யும் புட்டின் அண்மையில் கடுமையான தொனியில் எச்சரித்தார்.

மோசடிகள், கலகங்களூடாக ஐக்கிய ரஷ்யக் கட்சியை தோற்கடிக்க முடியாததெனவும் சூளுரைத்துள்ளார்.

இன்று நடைபெறும் தேர்தலில் 59.9 வீதமான வாக்குகளைப் பெற்று விளாதிமிர் புட்டின் மூன்றாவது முறையாகவும் ரஷ்யாவின் ஜனாதிபதியாவார் என்று கணிப்பீடுகள் காட்டியுள்ளன.

கொமினியூஸ்ட் கட்சி வேட்பாளர் ஷியாகனோ 15.1 வீத வாக்குகளையும் மற்றுமொரு கட்சி வேட்பாளர் 7.1 வீத வாக்குகளையும் பெறுவர் என்ற தகவல்கள் வெளியானதால் ரஷ்யாவுக்கெதிரான நாடுகள் அலட்டாகிவிட்டன.

செச்னிய தீவிரவாதிகளைக் கொண்டு புட்டினைக் கொலை செய்யவும் முயற்சிகள் நடந்துள்ளன. எதிரியை எவ்வாறாயினும் தேர்தல் களத்திலிருந்து வீழ்த்த வேண்டுமென்ற வேகத்தில் சில வெளிநாடுகள் ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் தலையை நுழைத்துள்ளன.

வழமையாக நான்கு ஆண்டுகளைக் கொண்ட ஜனாதிபதி பதவிக்காலம் இம் முறையிலிருந்து ஆறு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே ரஷ்யாவின் வளர்ச்சியை விண்ணளவுக்கு உயர்த்தியுள்ள விளாதிமிர் புட்டின் மீண்டும் ஜனாதிபதியாவது எதிரி நாடுகளுக்கு வயிற்றெரிச்சலே.

அரபு நாடுகள் மீதான மேற்குலகின் பார்வையிலிருந்து ரஷ்யா வேறுபட்டு நிற்கின்றமை, ஈரான் சிரியா விடயங்களில் ரஷ்யாவின் நிலைப்பாடுகள் அமெரிக்காவையும், மேற்குலகையும் கோபமூட்டியிருக்கும். எனவேதான் ரஷ்யாவில் நீண்ட காலமாகவுள்ள ஐக்கிய ரஷ்ய கட்சியின் ஆட்சியை வீழ்த்திப் பார்க்க ஆசைப்படுகின்றன.

ஆட்சியிலுள்ள கட்சியென்பதால் அரச வளங்களையும் இயந்திரங்களையும் புட்டின் நிறையவே கையாள்வார் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் மாகாண ஆளுநர் ஒருவர் பதவி விலகியுள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாகவே பதவியை இராஜினாமாச் செய்வதாக இவர் கூறினாலும் புட்டினுக்கு ஆதரவாக வேலை செய்தார் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

எப்படியாவது தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்பதற்காக மெத்விடிவ் காலத்து குறைகளை எல்லாம் களையும் நோக்கில் பம்பரம் போல் செயற்படுகின்றார் புட்டின். அண்மையில் இடிந்து வீழ்ந்த தொடர் மாடிக் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்ட சேத விபரங்களை நேரடியாகச் சென்று விளாதிமிர் புட்டின் பார்வையிட்டதுடன் அம்மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகளையும் அள்ளி வீசினார்.

இப்போது ரஷ்யாவில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் புட்டினின் அரசியல் வாழ்வை பாதிக்குமா அல்லது ஐக்கிய ரஷ்யக் கட்சியை வீட்டுக்கு அனுப்பி வைக்குமோ தெரியாது. இவையெல்லாவற்றை யும் விட விளாதிமிர் புட்டினின் உயிரைப் பறித்துக் கொள்ளுமோ என்ற அச்சமும் ஆதரவாளரிடமுள்ளது. ஆனால் இவ்வாறான தாக்குதல்கள் அச்சுறுத்தல்களுக்கு அடங்கிப் போகும் கோழையுமல்ல புட்டின். ஏன் எனில் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் இல்லாது ஒரு அரசியல் வாதியால் வாழ முடியாது என்று புட்டின் கூறியுள்ளாரே.

ஏ. ஜி .எம். தௌபீக்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com