Contact us at: sooddram@gmail.com

 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை இந்திய மீனவர்களிடையே நட்பு பாலத்தை ஏற்படுத்தியுள்ளார்

கடல் தொழிலாளர்களின் காவல் தெய்வமான புனித அந்தோனி யார் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களிடையே இருந்துவரும் சிறு மனஸ்தாபங்களையும், பகைமை உணர்வையும் போக்கி அவர் கள் மத்தியில் நல் உணர்வையும், சகோதரத்துவத்தையும், நல் இணக் கப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கு அருள் புரிவார் என்ற நம்பிக்கை கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் பலிப் பூஜை நிகழ்வுகளில் கலந்து கொண்ட இலங்கை, இந்திய மக்கள் குறிப்பாக இவ்விரு தேசங்களின் கடல் தொழிலாளர் மனதில் வேரூன்றியிருக்கிறது. இலங்கை இந்திய கடல் தொழிலாளர் மத்தியில் இந்த நல்லுணர்வையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கு எமது நாட்டின் பாரம்பரிய கைத் தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா, ஒரு சிறந்த அனுசரணையாளராக தனது பங்களிப்பை வழங்கியமை பாராட்டக்கூடிய விடயமாகும்.

இருநாட்டு கடல் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர் பாக இந்திய மற்றும் இலங்கை மீன்பிடி அமைச்சுகளுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி, சிறந்ததொரு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு என்னாலான சகல முயற்சிகளையும் எடுப்பேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த சந்திப்பின் போது இருசாராருக்கும் உறுதி மொழி வழங்கினார்.

ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா தனது வெளிநாட்டு விஜயத்தை சுருக்கிக் கொண்டு, கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவசரமாக நாடு திரும்பி கச்சத் தீவிற்கான யாத்திரையை மேற்கொண்டார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா வில் கலந்து கொண்ட இந்திய மற்றும் இலங்கை கடல் தொழிலா ளர்களின் பிரதிநிதிகளை தான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய தாகவும், இந்த சந்திப்பின் போது இரு தரப்பினரும் எதிர்கொள் ளும் பிரச்சினைகள் தொடர்பில் தமக்கு விளக்கிக் கூறியதாகவும் அமைச்சர் கச்சத்தீவில் வைத்து இலங்கை இந்திய ஊடகவியலாளர் களுக்கு தெரிவித்தார்.

30 ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாதம் இலங்கையில் வேரூன்று வதற்கு முன்பு இலங்கை இந்திய கடல் தொழிலாளர்களிடையே நல்லுறவும், மிதமிஞ்சிய நட்பும் நிலவி வந்தது. அன்று இந்தியா வில் தட்டுப்பாடாக இருக்கும் சவர்க்காரம், தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களை எமது கடல் தொழிலாளர்கள் இந்திய கடல் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுத்து, அவற்றிற்கு பதிலாக பண்டமாற்றாக இந்திய கடல் தொழிலாளர்களிடம் இருந்து புடவை கள், வேஷ்டி, சாரம், உருளைக்கிழங்கு, பருப்பு, செத்தல்மிளகாய் போன்றவற்றை வாங்கிக் கொள்வதுண்டு. இதனை இலாபமீட்டும் வர்த்தக செயற்பாடு என்று எவரும் கருதுவதில்லை. அயல்நாட்ட வர்களுக்கு இரு தேசத்து கடல் தொழிலாளர்களும் செய்யும் உதவி யாகவே இந்த பண்டமாற்று செயற்பாடு அன்று கருதப்பட்டது.

இந்த பண்டமாற்று செயற்பாட்டையும் மீறி பிரபாகரனின் பிறப்பிடமான வல்வெட்டித்துறையிலும் இந்திய விலை உயர்ந்த பட்டுப் புடவை களின் கடத்தல் போன்ற சட்டவிரோதமான இலாபமீட்டும் செயற் பாடுகளும் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் வலுப்பெற்று விளங்கின.

இந்த காலகட்டத்திலேயே தென்னிந்தியாவில் குறைந்த வருமானமுடைய ஆண்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு வந்து தொழில்புரிந்து வருமானம் ஈட்டும் முயற்சிகளும் இடம்பெற்றன. இவ்விதம் சட்ட விரோதமாக இலங்கை வரும் இந்தியர்களை அன்று தென்னி லங்கையில் கள்ளத்தோணிகள் என்று கிண்டல் செய்வதும் உண்டு.

இவ்விதம் சிறப்பாக நடந்து கொண்டிருந்த இலங்கை இந்திய கடல் தொழிலாளர்களுக்கு இடையிலான நட்பு பாலம் 1975ம் ஆண்டள வில் ஆரம்பமாகிய தமிழ் இளைஞர்களின் பயங்கரவாதத்தினால் சீர்குலைய ஆரம்பித்தது. இந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் கடல் தொழிலாளர்களைப் போன்று வேடமணிந்து தங்கள் படகுகளில் ஆயுதங்களை இலங்கை க்கு கடத்தி வந்தார்கள்.

இதுபற்றிய இரகசியத் தகவல் இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்றதை அடுத்து அரசாங்கம் எமது கடற்படையினருக்கு இலங் கையை அடுத்துள்ள கடல் பிரதேசத்தில் நடமாடும் மீனவப் படகு களை கண்காணித்து சந்தேகத்திற்கு இடமான படகுகளில் ஆயுதங் கள் இருக்கின்றனவா என்று சோதனை இடுமாறு உத்தரவு பிறப் பித்தது.

அதையடுத்து, இலங்கை மற்றும் இந்திய மீனவப் படகுகள் சோதனை யிடப்பட்டன. சில படகுகளில் எல்.ரி.ரி.ஈ.யினரின் ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அந்த படகுகள் பறிமுதல் செய்யப் பட்டு சம்பந்தப்பட்ட கடல் தொழிலாளர் இலங்கையர்களாகவோ அல்லது இந்தியர்களாகவோ இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுவே இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையில் கசப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அடிதள மாக அமைந்தது. இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களை வேண்டுமென்று இலங்கை கடற்படையினரிடம் தங்களை காட்டிக் கொடுக்கிறார்கள் என்று சந்தேகித்தனர். இதனால் ஆழ்கடலிலும் இருதேச மீனவர்களுக்கிடையில் மோதல்களும், துப்பாக்கி சண்டை களும் இடம்பெற்றிருக்கின்றன. அதையடுத்து, தீவிரமடைந்த எல்.ரி .ரி.ஈ. பயங்கரவாத யுத்தத்தினால் நிலைமை மேலும் மோசமடை ந்தது.

இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிக்கும் இந்திய கடல் தொழிலாளர்களுக்கு எதிராக இலங்கை கடல் தொழி லாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, நீங்கள் எமது கடல் வளத்தை சூறையாடுகிaர்கள் என்று குற்றம் சுமத்தும் போதும், இருதேச கடல் தொழிலாளர்களுக்கிடையில் பகைமை உணர்வு மேலும் மோச மடைகிறது.

இத்தகைய சூழ்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை இந்திய கடல் தொழிலாளர்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற் படுத்துவதற்கு எடுத்துவரும் முயற்சிகளுக்கு நிச்சயம் இலங்கை இந்திய அரசாங்கங்கள் தமது பூரண அனுசரணைகளை அளிக்கும் என்று நாம் நம்பலாம்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com