Contact us at: sooddram@gmail.com

 

துச்சாதனர்களைத் தோலுரிப்போம்

முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் பிணவாடை வீசிக் கொண்டிருக்க, பிணங்களின் மேல் நடந்து சென்று சரணடைந்தவர்களும், அங்கே வசந்தம் வீசுவதாக கோசம் போட்டவர்களும் இன்று ஜெனீவாவில்……

புத்திசாலித்தனமும், புத்திசாதுரியமும் தமக்குத் தான் உள்ளது என்று கருதிக் கொள்ளக் கூடாது

ஜெனிவா தீர்மானத்தை முறியடிக்க – 56 பேர் கொண்ட பெரியதொரு பட்டாளத்தை கொண்டு போனது அரசாங்கம். அவர்களில் தமிழர்கள் பலரும் அடக்கம். பிணங்களின் மேல் நடந்து சென்று சரணடைந்தவர்களும், முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் பிணவாடை வீசிக் கொண்டிருக்க, அங்கே வசந்தம் வீசுவதாக பிரசாரம் செய்தவர்களும் அரசுக்கு ஆதரவு தேட ஓடிப் போனார்கள். இப்படியான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒதுங்கி நின்று கொண்டது. நாங்கள் சொல்ல வேண்டியவர்களுக்கெல்லாம் சொல்லி விட்டோம் என்று கூறித் திருப்திப்பட்டுக் கொண்டது கூட்டமைப்பு. தற்போதுள்ள நிலையற்ற சூழல் தொடருமேயானால், அது வன்முறைக்கு வித்திடலாம், குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சுகிறது. தற்போதைய சூழ்நிலையிலே அமைதி காக்கப்படுவதும், பிரச்சினைகளைத் தவிர்ப்பதும் அவசியமான செயற்பாடுகளென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது. இந்தக் காரணங்களால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்பதை தவிர்த்துக் கொண்டதாக, கடந்தவாரம் அதன் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.

ஜெனிவா கூட்டத்துக்குச் செல்வதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவும் சரி, அதற்காக சொல்லப்பட்ட காரணமும் சரி, தமிழர்களில் பலராலும் நியாயமானதாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. தற்போதைய நிலை தொடருமேயானால் வன்முறைகள் தோன்றலாம் என்றும், அதனால் குடிமக்கள் பாதிக்கப்படலாம் என்றும், அமைதி காக்கப்படுவதே அவசியம் என்றும் கூறப்பட்டுள்ள நியாயம் எந்தளவுக்கு சரியானது என்பது சந்தேகம் தான். இன்றைய சூழலில் எந்தவொரு வன்முறைகள் வெடித்தாலும், அது சர்வதேச அளவில் தமிழருக்கு சாதகமாக அமையுமே தவிர, ஒருபோதும் அரசுக்குச் சார்பாக அமையாது. இதை அரசாங்கமும் சரி, சிங்களப் பேரினவாத சக்திகளும் சரி நன்றாகவே புரிந்து கொண்டிருக்கின்றன.

இன்னொரு 58, 77, அல்லது 83 கலவரத்தை சிங்களப் பேரினவாதிகள் எத்தகைய வடிவத்தில் தோற்றுவித்தாலும், அது தமிழர் தரப்புக்கு தனி ஈழத்தை தங்கத்தட்டில் கொண்டு போய்க் கொடுத்தாகவே அமையும். அதனால் தான் புலிகளின் காலத்தில், சிங்களத் தேசியவாதம் தூண்டிவிடப்பட்ட பல சந்தர்ப்பங்களில் கூட, இனமோதல்கள் பெரிதாக வெடிக்கவில்லை. இந்தநிலையில், இரா.சம்பந்தனின் அறிக்கையில் வன்முறைகள் என்றும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு என்றும், அமைதி காக்கப்படுவது அவசியம் என்றும் கூறப்பட்டிருப்பது காலத்துக்கு ஒவ்வாத- யதார்த்தமற்ற கருத்தாகவே உள்ளது. ஏதோ ஒரு காரணத்துக்காக முடிவை எடுத்து விட்டு, அதை நியாயப்படுத்துவதற்காக- எங்கேயோ தேடிப்பிடித்துச் சொல்லப்பட்டுள்ள நொண்டிச்சாட்டாகவே இது கருதப்படுகிறது.

இலங்கை இன்று சர்வதேச சமூகத்தினால், உன்னிப்பாக கண்காணிக்கப்படும் நிலையில் உள்ளது. இந்தநிலையில் இனவன்முறைகள் பற்றி சிந்திக்க எந்தத் தரப்பும் தயாரில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா செல்வதால் வன்முறைகள் வெடிக்கும் என்றால், அது எந்தவகையில் என்பது சாதாரண மக்களால் புரிந்து கொள்ள கூடிய விளக்கமாக இல்லை. என்னதான் காரணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொன்னாலும், ஜெனிவாவில் சர்வதேச சமூகத்தின் முன்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை சொல்லுகின்ற வாய்ப்பை அது தவறவிட்டுள்ளது என்பதே உண்மை. இதற்கு எத்தனை நியாயங்களை அவர்கள் கூறினாலும் அது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து எடுக்கப்படவில்லை என்பதை சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறிய கருத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு கட்டத்தில் எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் என்று கூறினார்கள். பின்னர், ஒருவருக்கு மட்டும் தெரியாது என்று கூறினார்கள். இன்னொரு கட்டத்தில் சுரேஸ் பிறேமச்சந்திரன் நாடு திரும்பியதும் அதுபற்றி விளக்கமளிக்கப் போவதாக கூறினார் இரா.சம்பந்தன்.

இதிலிருந்து சுரேஸ் பிறேமச்சந்திரனுக்குத் தெரியாமல் தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது உறுதியானது. இந்த முடிவு விடயத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள்ளேயே, ஒற்றுமையில்லாத நிலையில், தமிழ்மக்களுக்கு அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்திருக்கும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது தவறானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையில் எதற்காக இந்த முடிவை எடுத்தது என்பதை வெளிப்படுத்தவில்லை. அதைவிட, செய்தியாளர்கள் துருவித்துருவி கேள்வி எழுப்பினால், “எல்லாவற்றையும் வெளிப்படையாக கூறிக் கொண்டிருக்க முடியாதுஎன்று நழுவிக் கொள்ளும் போக்கு இரா.சம்பந்தனிடம் காணப்படுகிறது. அதுபோலவே தான் இதற்கும் பதிலளித்துள்ளார் அவர். அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் நெருக்கமான தொடர்பில் இருக்கும் கூட்டமைப்பு, இந்த முடிவை எடுத்ததற்கு காரணம் யார் என்பதை அல்லது என்ன என்பதை வெளியே சொல்லாத வரை பல்வேறு கேள்விகளும் வதந்திகளும் உலா வரவே செய்யும்.

ஜெனிவா தீர்மானத்தை முறியடிக்க – 56 பேர் கொண்ட பெரியதொரு பட்டாளத்தை கொண்டு போனது அரசாங்கம். அவர்களில் தமிழர்கள் பலரும் அடக்கம். பிணங்களின் மேல் நடந்து சென்று சரணடைந்தவர்களும், முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் பிணவாடை வீசிக் கொண்டிருக்க, அங்கே வசந்தம் வீசுவதாக பிரசாரம் செய்தவர்களும் அரசுக்கு ஆதரவு தேட ஓடிப் போனார்கள். இப்படியான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒதுங்கி நின்று கொண்டது. நாங்கள் சொல்ல வேண்டியவர்களுக்கெல்லாம் சொல்லி விட்டோம் என்று கூறித் திருப்திப்பட்டுக் கொண்டது கூட்டமைப்பு.

இலங்கை அரசாங்கம் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எப்படியெல்லாம் பாடுபட்டுக் கொண்டிருக்க, கூட்டமைப்பினால் எப்படி அமைதியாக இருக்க முடிந்தது என்பது கேள்வி தான்.

எல்லாவற்றையும் அமெரிக்கா பார்த்துக் கொள்ளும் என்ற அசட்டைத்தனமா?

இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் கேள்விகளுக்கு எந்த வகையிலும் நியாயம் கூறவோ தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவோ முடியாது.

எதிர்காலத் தேர்தல்களில் கூட இது தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் எச்சரிக்கைக்கு பயந்து கூட்டமைப்பு ஒதுங்கிக் கொண்டதா அல்லது இந்தியாவின் ஆலோசனைப் படி ஒதுங்கிக் கொண்டதா அல்லது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் வேண்டுகோளுக்கு அமைய ஒதுங்கிப் போனதா என்று தான் பலரும் கேள்விகளை எழுப்புகின்றனர். இந்தக் கட்டத்தில் கூட்டமைப்பு சொல்லும் நியாயங்களை எவரும் பெரிதாக எடுத்தாளவில்லை. ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னதாக இரா.சம்பந்தன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைச் சந்திக்கச் சென்றது சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அது தெரிவுக்குழு சார்ந்த சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும், அது கூட்டமைப்பு ஜெனிவா செல்லும் முயற்சிகளைக் கைவிட வைப்பதற்கான சந்திப்பு என்றே பலரும் சந்தேகிக்கின்றனர்.

அரசதரப்பில் மகிந்த ராஜபக்ஸவுடன், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவும் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் கூட்டமைப்பு சார்பில் இரா.சம்பந்தன் மட்டும் தான் பங்கேற்றிருந்தார். வழக்கமாக, தனிப்பட்ட சந்திப்பு என்றால் உதவியாளர் இன்றியே நடக்கும். ஆனால், இரா.சம்பந்தன் தனியாகச் சென்று சந்தித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளை, தனிப்பட்ட சந்திப்புக்கு அழைத்து விட்டு மேலும் இருவர் ஜனாதிபதியுடன் பங்கேற்ற போது அதற்கு இரா.சம்பந்தன் எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜெனிவா செல்லும் முடிவை முன்னதாகவே கைவிட்டிருந்தால், இந்தச் சந்திப்பை அவர் தவிர்த்திருக்கலாம்.

அது விமர்சனங்களில் இருந்து அவரையும் கூட்டமைப்பையும் காப்பாற்றியிருக்கும்.

கூட்டமைப்பு எந்தக் காரணத்தை முன்வைத்து இதை நியாயப்படுத்தினாலும் அது தமிழ் மக்களின் காதுகளில் ஏறும் போலத் தெரியவில்லை.

இராஜதந்திர நகர்வுகளில் இரகசியம் பேணுதல் எந்தளவுக்கு முக்கியமோ அதுபோலவே வெளிப்படைத் தன்மையும் முக்கியமானது. நம்பிக்கை உள்ளவரை தான் இரகசியம் முக்கியத்துவம் பெறும். நம்பகத்தன்மை இழக்கப்படும் நிலை தோன்றினால், அங்கே வெளிப்படைத்தன்மை பற்றிய கேள்விகள் எழும். இப்போது வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுமாறு இலங்கை அரசை சர்வதேச சமூகம் கேட்பது போல, கூட்டமைப்பிடமும் தமிழ்மக்கள் கேள்வி கேட்கும் நிலை வந்து விடப் போகிறது.

புத்திசாலித்தனமும், புத்திசாதுரியமும் தமக்குத் தான் உள்ளது என்று கருதிக் கொள்ளக் கூடாது. கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடித்தால், அது தமக்குத் தாமே சூடு வைத்துக் கொண்டது போலாகி விடும். கடும் நெருக்கடி உருவான நிலையில் தான், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மனிதஉரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கு கடிதம் எழுதினார். அதுகூட முன்னரே திட்டமிட்டிருந்தபடி எழுதப்பட்டதா அல்லது சுமந்திரனின் உருவபொம்மை யாழ்.பல்கலைக்கழகத்தில் தொங்கிய பின்னர் எழுதத் தீர்மானிக்கப்பட்டதா என்ற கேள்வி இருக்கவே செய்கிறது. எவ்வாறாயினும், இந்தக் கடிதத்தின் மூலம் தமது கறைகளை கழுவிக் கொள்ளலாம் என்று கூட்டமைப்பு கருதுவது தவறானதொரு முடிவாகவே இருக்கும்.

(தொல்காப்பியன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com