Contact us at: sooddram@gmail.com

 

சிரியா விவகாரத்தில் தடுமாறும் ஐ.நா.

சிரியாவில் அதிகரித்துள்ள படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் என்பன நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்து உலக சமாதானம் என்ற தனது பொறுப்பை நிலைநாட்டுவதில் ஐக்கிய நாடுகள் சபையானது பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. சிரியாவில் மலிந்துள்ள உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. சிரியாவில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்துடன் உலகம் சிரியாவின் மீதான தனது கவனத்தைக் குவித்துள்ளது. வடக்கே துருக்கியையும் மேற்கில் லெபனானையும், தென்மேற்கில் இஸ்ரேலையும், ஜோர்தானையும் கிழக்கில் ஈராக்கையும் எல்லையாகக் கொண்டது சிரியா. இங்கு தற்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இது வன்முறைகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. எங்கும் மரண ஓலம். வெறிச்சோடிய நகரங்களில் இரும்புத் தொப்பிகளுடன் இராணுவ நடமாட்டம். உறுமும் யுத்த டாங்கிகள், கவசவாகனங்களின் ஓசையில் மிரண்டு துயில் கலையும் காலைப் பொழுதுகள் சாவுக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கை என அங்கு சோகம் தொடர்கிறது.

மத்திய கிழக்கில் உருவெடுத்துள்ளஅரபு வசந்தத்தின்ஒரு அங்கமாக சிரியாவிலும் உள்நாட்டு குழப்பங்கள் தோன்றியுள்ளன. 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி சிரியாவின் அமைதியை குலைக்கும் கிளர்ச்சி மக்கள் ஆர்ப்பாட்டமாக உருவெடுத்தது.

ஜனாதிபதி பஷர் அல் - அஸாத் (Bashar al- Assad) இராஜினாமாச்செய்ய வேண்டும். அவரது தலைமையில் ஆட்சியிலுள்ள பஹா ஆத் கட்சி (Ba ath Party) அரசு கலைக்கப்பட வேண்டும் என்பன கிளர்ச்சியாளர்களின் பிரதான கோரிக்கைகளாக அமைந்தன.

இந்தக் கிளர்ச்சியை அடக்கவும் தமது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் அஸாத் அரசு இராணுவத்தை கட்டவிழ்த்து விட்டு புரட்சியை இருப்புக்கரம் கொண்டு அடக்க நினைத்தது. கிளர்ச்சியாளர்கள் பணியவில்லை. மாறாக அவர்களும் சிரிய இராணுவத்திற்கு பதிலடி கொடுக்கத் தொடங்கினர். எனினும், எகிப்து, லிபியா ஆகிய அரபு நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சிகளை போல் தொடங்கிய வேகத்தில் இலக்கை அடைவதில் சிரிய புரட்சியாளர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது.

குறிப்பாக சிரிய விடுதலை இராணுவம் (free Syrian Army) என்ற பெயரின் கீழ் ஆரம்பமான இந்த புரட்சியாளர் குழுவுக்கு சிறந்த தலைமைத்துவம் வாய்க்காமை பிரதான குறைபாடாக சர்வதேச அரசியல் வல்லுனர்களால் குறிப்பிடப்படுகிறது.

மேலும், சிரிய விடுதலை இராணுவத்தில் சுன்னி முஸ்லிம்களின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படுவதாக அவ் விடுதலை இராணுவத்தில் அங்கம் பெறும் ஏனைய பிரிவினர் விசனப்பட்டுக் கொண்டனர். இன்னும் சிலர் குழுக்களாக இயங்க ஆரம்பித்தனர் அதிருப்தியாளர்கள் ஒரு தலைமையின் கீழ் இயங்காமல் பிரிந்து செயற்படத் தொடங்கினர்.

இதனால் உத்வேகமான ஒரு புரட்சிப்படையாக சிரிய விடுதலை இராணுவத்தால் இயங்க முடியாது போக, அதன் விடுதலை என்ற இலக்கு தள்ளிப்போடப்பட்ட நிலையில் அங்கு வன்முறைகள் தொடர்கின்றன. படுகொலைகள், அரசியல் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள், பொருளாதார நெருக்கடிகள் என மனித அவலங்கள் நீள்கின்ற பூமியாக சிரியா மாறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி இது வரையில் சிரிய வன்முறைகளில் சுமார் 8,000 தொடக்கம் 11,000 வரையிலானோர் உயிரிழந்துள்ளதாகவும் இதில், சுமார் 3600 வரையானோர் கிளர்ச்சியாளர்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இது தவிர, பல ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்திருப்பதாகவும் சுமார் 10ஆயிரத்துக்கும் அதிகமான கிளர்ச்சியாளர்கள் சிரிய அரசினால் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டுகின்றது.

மேலும் ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் அறிக்கையொன்றின் படி (UNICEF) சிரிய வன்முறைகளின் நடுவே சுமார் 400 இற்கும் அதிகமான சிறார்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 400 இற்கும் அதிகமான சிறார்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 1100 தொடக்கம் 8000 வரையிலானவர்களே இதுவரையில் உயிரிழந்திருப்பதாகவும் இதில், சுமார் 2200 தொடக்கம் 3600 வரையானோர் கிளர்ச்சியாளர்கள் எனவும் சிரிய அரசு கூறியுள்ளது.

சர்வதேசத்தின் கவனம்

சிரியாவில் தலைவிரித்தாடும் வன்முறைகள் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் (EU) அரபு லீக் நாடுகள் ( Arab League) வளைகுடா அரேபிய அரசுகளுக்கான கூட்டுறவு கழகத்தின் கீழ் உள்ள நாடுகள் (Cooperation Council for The Arab States of the Gulf) என்பன வலியுறுத்தியுள்ளன. இங்கு வன்முறைகளுக்கு மத்தியில் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்படுவதற்கும் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதற்கும் இந்நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அத்துடன் இவை சிரிய விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கும் கொண்டுள்வந்துள்ளன. சிரிய விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா, சிரியாவில் கடந்த சில மாதங்களாக ஜனாதிபதி அல் - அஸாத்துக்கு எதிராகப் போராட்டம் நீடிக்கிறது. அவர் பதவி விலக மறுத்து வருகிறார். அவரை பதவியிலிருந்து அகற்றி விட்டு அமைதியான ஜனநாயக அடிப்படையில் புதிய அரசை அமைப்பது குறித்து உலக நாடுகளுடன் பேசி வருகிறேன்.

லிபியாவைப் போல சிரியா விவகாரத்தில் செயல்பட முடியவில்லை. எனினும் ஜனாதிபதி அல் - அஸாத்துக்கு நாட்கள் எண்ணப்படுகின்றன என்றார். இது இவ்வாறு இருக்க, ரஷ்யா, சீனா ஆகிய இரு நாடுகளும் சிரியாவின் உள்நாட்டு குழப்பங்களை எந்தவிதமான பதற்றமும் இன்றி மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. வெளிநாட்டு தலையீடுகள் இந்த விடயத்தில் தேவையற்றவை எனக் கருதும், இவ்விரு நாடுகளும், அந்நிய சக்திகளின் தலையீட்டினால் சிரியாவின் நிலைமை மேலும் மோசமடையும் என்ற கருத்தை கொண்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை

தொடர்கின்ற வன்முறைக ளால் சிரியாவில் தலைவிரித்தாடும் கோரங்களையும் மனித உரிமை மீறல்களையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு உள்ளது. சிரிய அரசானது பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான கொடூர தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக ஐ. நா. சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார். சிரிய ஜனாதிபதி அல் - அஸாத் தனது பதவிக்காக மனிதத்துக்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

சிரியாவில் நிகழும் மனித அவலங்களுக்கு அஸாத் அரசே பதில் சொல்ல வேண்டும். இதற்காக அஸாத் அரசு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை களுக்கு முகம் கொடுக்க நேரிடும். மனிதத்துவத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையில் சிரியா மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், சிரிய வன்முறைகள் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையானது ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவோ அல்லது தலையிடவோ முடியாது

தடுமாறுகின்ற நிலையே தென்படுகிறது. சிரிய விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையானது இன்னும் முடிவொன்றை எடுக்காமல் இருப்பதானது உலக மக்களின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்குள்ள பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது.

பாதுகாப்பு சபையில் ஒருமித்த தீர்மானத்தை எட்ட முடியாமலேயே சிரியாவின் உள்நாட்டு குழப்பங்களை முடிவு கட்டுவதற்கான நடவடிக்கைகளை ஐ. நா.வினால் மேற்கொள்ள இயலாமல் போனதற்கு காரணமாகும். குறிப்பாக சிரியாவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐ. நா.வால் எடுக்கப்பட்ட முயற்சியை ரஷ்யா, சீனா ஆகிய இரு நாடுகளும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தோற்கடித்தன.

ஐ. நா. சட்ட பிரிவு 27ல் வரையறுத்து கூறப்பட்டுள்ளதன்படி வீட்டோ அதிகாரத்தைக் கொண்ட சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளில் ஒன்றேனும் பாதுகாப்பு சபையில் எடுக்கப்படும் தீர்மானத்தை எதிர்த்தால் அத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்ற விதி உள்ளது.

இதன் பிரகாரம் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் எதிர்ப்பால் சிரியா விவகாரத்தில் ஐ. நா.வால் தலையிட முடியாது போனது.

எனினும், சிரியாவினுள் ஐ. நா. மனிதாபிமான தொண்டர்களையாவது அனுமதிக்குமாறும், இதன் மூலம் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவும் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவை மேற்குலக நாடுகள் எதிர்பார்த்துள்ளன. இந்த நிலையில், சிரிய விவகாரத்தில் ஐ.நா. என்ன செய்யப் போகின்றது? சிக்கல்கள், இடர்பாடுகளைத் தாண்டி உலக சமாதானம் என்ற தனது பொறுப்பினை அது நிறைவேற்றுமா என உலகம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

(க.பவன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com