Contact us at: sooddram@gmail.com

 

சர்வதேச மன்னிப்பு சபையின் ‘நம்பகத்தன்மை' ஒரு நோக்கு

ஒரு நிறுவனத்துக்காக நிதிசேகரித்தல், தொண் டாற்றுதல், சிறப்பேற்பாடு களை மேற்கொள்ளல், தன்னார்வ நட வடிக்கைகளில் ஈடுபடுதல் அனைத்துமே ஏற்புடமை கொண்ட நடவடிக்கைகளே! குறித்த நிறுவனம்- பலராலும் ஏற்றுக் கொள் ளத்தக்கதான பொதுவானது ராஜதந்திரம் மிக்கதுமான நடவடிக்கைகள் மேற் கொள்ளத்தக்கதானதாக இருக்குமிடத்து அதன் நம்பகத்தன்மை கட்டுக்குலையாததாக இருத்தல் வேண்டும் என்பது பலராலும் ஒத்துக் கொள்ளத்தக்கதே! அந்தவகையில் அத்தகைய ஸ்தாபனம் தனது நடுநிலைப் போக்கைத் தக்கவைத்துக் கொள்வதும், அதற்கேற்றவாறு பணியாற்றுவதும் அத்தியாவசியமானதாகும்.

சர்வதேச மன்னிப்புச் சபை

சர்வதேச மன்னிப்பபுச்சபையானது- சர்வதேச அரச சார்பற்ற ஒரு நிறுவனமாகும். சமகாலத்தில் இலங்கையை குற்றம் பிடி க்கும் நிறுவனங்களில் ஒன்று. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள்’ அமுலாக்கம், பொறுப்புக்கூறல், வெளிப்படைத் தன்மை, நியாய விசாரணை என்றெல்லாம் இல ங்கை மீது நிறைவேற்றுப் பொறுப்புகளை சுமத்தி வருகின்ற சர்வதேச மன்னிப்புச் சபையும் இலங்கைக்குப் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு உண்டு என இலங்கை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டு கின்றனர்.

தார்மீகமென்ன?

இலங்கையினதும் இலங்கை அரசாங் கத்தினதும் பரம விரோதிகளாக இருந்தவர்கள் புலிகள். எச்சசொச்சமானவர்கள் அல்லது எச்சசொச்சமான நடவடிக்கைகள் தொடர் பாகவும் அரசாங்கம் அவ்வப்போது கூறிவருவதையும் அறிந்து கொண்டிருக்கி றோம். இந்த நிலையில் நாடு கடந்த தமிbழ அரசாங்கம் என்ற போர்வையில் கனடாத் தமிழர் இணையம்- சர்வதேச மன்னிப்புச் சபைக்காக நிதி சேர் நடை பயின்று நிதி சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை படங்கள் மூலமும், செய்திகள் மூலமும் தெரியவந்துள்ளது. இங்கு நிதிசேர்த்ததும், சேர்த்துக் கொடுத்தமையுமல்ல பிரச் சினை- சர்வதேச ரீதியாக, மனித உரிமைகளுக்காக போராடும் சர்வதேச நிறு வனமொன்று குறித்த தமிழர் இயக்கத்திடம் பணம் பெற்றுக் கொண்டு மனித உரிமை சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள இலங்கையில்- குறிப்பாக தமிழர் தொடர்பாக மனித உரிமை மீறல் குற்றச்சாட் டுக்காக இலங்கையை கேள் விக்குட்படுத்தும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தார்மீகம் என்ன என்பதே இலங்கைப் பெரும்பான்மைச் சமூகத்தின் கேள்வியாகவுள்ளது.

அடைக்கலம்

பதங்களை விட படங்கள் கூடுதலாக பேசும் என்பது போல நிதிசேர் நடைப வனியுடன் கூடியதான படங்களும் வெளியாகியுள்ளன. மனித உரிமைகளுக்காக பிரசாரம் பண்ணுகின்றதேவேளை, அதன் மர்மமான பங்கையும் சர்வதேச மன்னிப்புச் சபையாற்றியுள்ளதை காணமுடிவதாக கூறப்படுகிறது. நியூயோர்க்கை தளமாகக் கொண்ட சட்டத்தரணி விஷ்வநாதன் ருத்திரகுமாரன் என்பவரால் தலைமை தாங்கப்படும் ருத்ரகுமாரன் பிரிவு எனத் தெரியவரும் நாடு கடந்த தமிbழ அரசுடன் சர்வதேச மன்னிப்புச் சபையின் தொடர்புபற்றிய புலனாய்வு வட்டாரங்களின் தகவல்களுடன் மீதி, மிச்சமாக உள்ள புலிகளுக்கு சர்வதேச மன்னிப்புச் சபையும் ஒரு அடைக்கலமாக உள்ளமை வெளிப்படையாகிறது.

ஆதாரம்

கனடாவில் புலிகளின் ஆதரவுக்குழு வுடன் மன்னிப்புச் சபைக்குள்ள தொடர் புகளுக்கு பணம் சேகரிப்பையும் விட மேலதிக சான்று தேவையில்லை. கனேடிய தமிழ் காங்கிரஸ் தங்களது இணையத்தளம் மூலமாக வெளியாக்கிய நிதிதிரட்டல் படங்களை காண்கையில்- பயங்கரவாத தேவைகளுக்காக பணம் திரட்டும் பிரபல்ய குழு ஊடாக நிதி சேகரிப்பதன் மூலம் மக்களின் உரிமைகளை எவ்வாறு மனித உரிமைகள் காப்பாளரான மன்னிப்புச் சபை மீறியுள்ளது என்பதை அவதானிக்க முடிகிறதாம்.

நிரூபணம்

தங்களது வழியைப் பின்பற்றாத அல்லது எதிர்த்தவர்களையும், சொந்த இனத்தைச் சேர்ந்தவர்களையும் துவம்சம் செய்ததன் மூலம் மனித உரிமைகளை மீறிய புலிகளுடன் தோழமை பூண்டு சார்புப் போக்கை - மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து அர்ப்பணிப்புடன் பணி யாற்றுவதாக கூறும் மன்னிப்புச் சபை கடைப்பிடித்துள்ளமை கவலையளிப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அந்த வகையில் இந்த மனித உரிமைகள் பாதுகாப்பாளராக சுய பிரகடனம் செய்து கொண்டவரான மன்னிப்புச் சபை எல்.ரி.ரி.ஈ. யினால் புரியப்பட்டதான வெறுக்கத்தக்க குற்றங் களை எவ்வாறு மறந்திருக்க முடியும் என கேள்வி எழுப்பப்படுகிறது.

விடை தேடல்

தங்களது அபிலாஷைகளை நிறை வேற்றிக் கொடுக்கும் ஒரு நிறுவனத்தின் சார்பிலான உரிமைக் கோரிக்கைக்கு தலைசாய்க்கும் வகையிலான இலங்கையில் பொறுப்புக்கூறல் கடப்பாட்டுக்காக சர்வதேச விசாரணை கோரி கூக்குரலிட எந்தடிப்படையில் சர்வதேச மன்னிபுச் சபையால் முடியும் என்ற கேள்விக்கு இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் விடை தேடுகிறார்கள். பொறுப்புக் கூறல் கடப்பாடு தொடர்பில் ஜெனீவாவில் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு கனடாவில் தமிழ் இணையம் ஆதரவு தேடுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை கனடாவால் பல்வேறுதரப்பட்ட விசா ரணைகளுக்குட்படுத்தப்பட்டு தற்சமயம் அமெரிக்கத் தடுப்புக்காவலில் உள்ள ஆயுதக் கொள்வனவு தொடர்பான முக் கிய நபர் ஒருவரின் சகபாடியாக சர்வதேச மன்னிப்புச் சபைக்கு நன்கொடை வழங் கிய தமிழ் இணையத்தளத் தலைவர் திகழ் வதாக புலனாய்வு விட்டாரங்கள் தெரி விக்கின்றன. கனடாவிலுள்ள புலிச்சார்பு இயக்கம் வெளிப்படையாகவே எலர்.ரி.ரி.ஈ. கோட்பாடுகளை விருத்தி செய்து நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், முன்னணி புலி சார்பு இயக்கத்தின் குறி க்கோளுக்கு துணை நிற்பதன் மூலம் தங் களது மடத்தனத்தை சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச ஸ்தாபனம் காட்சிப்படுத்த முனையக்கூடாது என்று காட்சிகளை கண்ணுற்றோர் கூறுகின்றனர்.

மனித உரிமைகள் காப்பகம்

முன்னர் ஒருதடவை மனித உரிமைகள் காப்பகம், வருடாந்தம் கனடாவில் வாழும் 250,000 க்கு மேற்பட்ட தமி ழர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய் வதாக புலிகளை குற்றஞ்சாட்டியிருந்தது. அதேநேரம் கனடாவிலுள்ள தமிழ் இயக்கமொன்றின் தீவிர அங்கத்தவராக இருந்த ஒருவர்- இலங்கையிலுள்ள தற் போதைய அமைதியை சீர்குலைக்குமாதலால், கனேடிய தமிழ் இணைய பிரசாரத்தால் பிழையான வழிகாட்டலுக்கு உள்ளாக வேண்டாம் என்று அங்குள்ள தமிழர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய பங்காற்றுகை

பயங்கரவாதிகளே படு மோசமான மனித உரிமை மீறல்காரர்கள். அதற்கு புலிகள் விதி விலக்கான வர்களல்ல. அவர்களும் முதன்மை உதாரணத்துக்கு கொண்டுவரப்படலாம். புலிகளின் முன்னணி நிறுவனங்கள் நிதியளித்து மனித உரிமை நிறுவனங் களுக்கு ஆதரவளித்துள்ள தாக அந்த முக்கிய நபர் கூறினார். இலங்கையில் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பிறகு வெளிநாடுகளிலுள்ள முன்னணி அலுவலகங்கள் மனித உரிமைகள் தொடர்பான செம்பியன்கள் என்ற புதிய பங்காற்று கையை ஆரம் பித்தது. ஒரு கட்டத்தில் மோசமான மனித உரிமை மீறல்களைப் புரிந்த எல்.ரி.ரி.ஈ., ஒரு புறமிருக்க இன்றைய அவர்களுடைய சகபாடிகள், பிரசாரகர்கள், நிதியிடுவோர், ஆயுதகொள்வனவு உத்தியோகத்தர்கள் போன்றோர் மனித உரிமைப் பேரவையை நோக்கி கவனம் செலுத்தியுள்ளனராம்.

அவசியம்

சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் மேற்குலகுள்ளும் தங்களது கால்களை நீட்டியுள்ள பயங்கரவாத சார்புக் குழுக்களின் நிதிநிலைமைகளை அறியாமலல்ல. இத்தகைய பணம் படைத்த பயங்கரவாத குழுக்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தங்களது இருப்புக்காகவும், கூட்டு நடவடிக்கைகளுக்காகவும் பணம் தேவையே, அதேநேரம் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகள் பேரவை போன்ற ஒவ்வொரு அமர்வுகளின் போதும் பயங்கராவத குழுக்களின் நிகழ்ச்சி நிரலை உயிரோட்டமுள்ளவையாக வைத்திருக்க வேண்டிய தேவை அத்தகைய குழுக்களுக்கு அவசியமாக உள்ளது.

அர்த்தமற்ற அக்கறை

இப்பேற்பட்ட குழுக்கள் தொடர்பில் அக்கறை கொண்டு மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக கவலையை வெளிப்படுத்த முயற்சிப்பது சர்வதேச மன்னிப்பு சபையை பொறுத்தவரை வெட்கப்படக் கூடிய விவகாரமில்லையா என்ற கேள்வியை ஆர்வலர்கள் எழுப்புகின்றனர். எந்த அடிப்படையில் அவர்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கவலை கொண்டு சமாதானத்தையும், அமைதியையும் ஊக்குவிப்பவர்களாக இருக்க முடியும்?

இதேவேளையில், உலகமே கண்வைத்துக் கொண்டிருந்த இலங்கைக்கு எதிரான உத்தேச பிரேரணை அல்லது தீர்மானம் எதிர்பார்த்த காலப்பகுதிக்கு முன்பாகவே பேரவை முன்பாக வைக்கப்பட்டுள்ளது. தோல்வி வெற்றிக்குப் புறம்பாக எடுத்த சபதத்தை நிறைவேற்றியே தீருவது என்பது போன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையின் அற்புதம் யாதெனில்- நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுலாக்குங்கள் என்பதாகும். அத்துடன் அது தொடர்பான சட்டக்கடப்பாடுகள் மற்றும் சகல இலங்கையர்களுக்குமாக நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், சமத்துவம், நீதி போன்றவற்றை நிச்சயப்படுத்துவதற்காக நம்பத்தகுந்ததும், சுயாதீனமானதுமான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அர்ப்பணசிந்தையை வெளிப்படுத்துமாறும் பிரேரணை கோருகிறது.

அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை மீறியதான குற்றச்சாட்டுகள் போன்றன தொடர்பில் புரிந்து கொள் ளத்தக்கதான வேலைத்திட்டத்தையும் எதிர்பார்க்கிறது எவ்வாறாயினும் பல நாடுகளது வாதப் பிரதிவாதங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் உள்ளாகக்கூடிய பிரேரணையை வென்றெடுப்பதற்கு கடு மையான பிரயத்தனங்களில் ஈடுபடவேண் டிய தேசியக் கடமை அரசாங்கத்துக் குண்டு ஏனெனில் அமுலாக்கங்களு க்கான பணியை அரசாங்கம் முன் னெடுத்துள்ளதாகவும் பிரேரணை முன் வைக்க வேண்டிய தேவை கிடையாது என்று இலங்கை அமைச்சர்கள் சுட்டிக் காட்டிய பிறகுமே பிரேரணை முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com