Contact us at: sooddram@gmail.com

 

பழைய குப்பையை கிளறும் பங்களாதேஷ்

(எஸ். பிர்தௌஸ்)

பங்களாதேஷில் இப்போது என்ன நடக்காவிட்டாலும் நாளாந்தம் மறக்காமல் ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு பஞ்சமில்லை. எல்லாம் பழைய குப்பையை கிளறப்போய் ஏற்பட்ட வினைதான். பங்களாதேஷ் என்ற நாடு சும்மா உருவாகவில்லை. 1971ஆம் ஆண்டு ஒரு பாரிய யுத்ததை எதிர்நோக்கி பல்வேறு அரசியல் விளையாட்டுகளுக்கு பின்னர் உருவான நாடே பங்களாதேஷ். இந்த சம்பவமெல்லாம் இடம்பெற்று இப்போது 40 ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போதுதான் பங்களாதேஷ் அரசு இந்த பழைய குப்பையை கிண்டி நீதிதேட புறப்பட்டிருக்கிறது. விளைவு கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பங்களாதேஷ் எங்கும் ஆர்ப்பட்டம்... கலவரம்... 60க்கு மேலானவர்கள் பலி.

எல்லாம் ஓர் அரசியல்தான். இந்த அரசியல் கதையை சொல்வதற்கு முன்னர் ஆரம்பக்கதையை பார்ப்போம். ஆரம்பக்கதை என்றதும் பிரிட்டனின் காலனித்துவ கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது. உலகில் இப்போதைய பிரச்சினைகளுக்கு பாதிக் காரணம் இந்த காலனித்துவ கலாசாரம்தான். அது ஒரு தனிக்கதை. ஆனால் தெற்காசியாவை தனது கைக்குள் வைத்திருந்த பிரிட்டன் 1947ஆம் ஆண்டு இந்தியாவை விட்டுச் சென்ற போது இந்தியா - பாகிஸ்தான் என்ற பிரிவினையை விதைத்துவிட்டே சென்றது. இவ்வாறு பிரிந்த பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என பிரிந்த நிலத்தொடர்பற்ற ஒரு தேசமாக செயற்பட்டது. இது உலக வரைபடத்தில் இந்தியா நடுவிலிருக்க இரு பக்கத்தாலும் நறுக்குவதுபோல் கிழக்கு, மேற்கு பாகிஸ்தான்கள் இருந்தன.

இதிலே இப்போதைய பங்களாதேஷ்தான் கிழக்கு பாகிஸ்தானாக இருந்தது. இன்றைய பாகிஸ்தான் அன்று மேற்கு பாகிஸ்தான். இவை இரண்டும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு என செயற்பட்ட போதும் மேற்கு பாகிஸ்தான் கையில்தான் ஆட்சி அதிகாரங்கள் இருந்தன. இதனால் கிழக்கு பாகிஸ்தான் அதிக பாரபட்சங்களை எதிர்நோக்கியது. இதுவே பங்களாதேஷ் உருவாக காரணமாக இருந்தது.

பாகிஸ்தானின் முதலாவது ஆளுனரான மொஹமட் அலிஜின்னாஹ் 1948ஆம் ஆண்டு டாக்கா சென்று அனைத்து பாகிஸ்தானுக்கும் உருது மொழியே பொதுவானது என அறிவித்துவிட்டார். பங்களாதேஷ் மக்களுக்கு உருதுவை உச்சரிக்கக்கூட முடியாது. அவர்களது மொழி பங்காலி. அன்று தொடங்கிய பாரபட்சம் படிப்படியாக சூடேறியது.

ஏன் பட்ஜட் போடுவதிலும் கிழக்குப் பாகிஸ்தான் இரண்டாம் பட்சமாகவே கணக்கில் எடுக்கப்பட்டது. அதாவது கிழக்கு பாகிஸ்தானின் மக்கள் தொகை அதிகம் ஆனால் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் கிழக்கு பாகிஸ்தானுக்கு குறைவு.

கிழக்கு பாகிஸ்தானியர் இராணுவத்தில் சேர்க்கப்பட்டதும் குறைவு. ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் இராணுவத்தில் அவர்கள் 5 வீதத்தைக் கூட தாண்டவில்லை. சரி சனத்தொகை அதிகமாக இருக்கிறது. மக்கள் ஆதரவு மூலம் ஆட்சியை கைப்பற்றப்போனால் கிழக்கு பாகிஸ்தானியர் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு தடவையும் இராணுவ புரட்சிகளால் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

இந்த கதையின் உச்ச கட்டம் 1970ஆம் ஆண்டு இடம்பெற்றது. கிழக்கு பாகிஸ்தான் தேர்தலில் ஷெய்க் முஜுபுர் ரஹ்மானின் அவாமி பீக் கட்சி 169 ஆசனங்களில் 167 ஆசனங்களை வென்றது.

இதனால் 313 ஆசனங்களை கொண்ட பாகிஸ்தான் தேசிய அசம்பிலியில் அவாமி கட்சி ஆட்சியை பிடிக்க சந்தர்ப்பம் ஏற்ட்டது.

ஆனால் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் சுல்பிகார் அலி பூட்டோ முஜூபுர் ரஹ்மான் பிரதமராவதற்கு எதிர்ப்பு வெளியிட்டார். இதனால் அரசு அமைப்பதில் நீண்ட இழுபறி ஏற்பட்டது. கடைசியில் முஜுபுர் ரஹ்மான் பிரதமராகவும் பூட்டோ ஜனாதிபதியாகவும் கூட்டணி அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இராணுவம் இதற்குள் மூக்கை நுழைக்க குழப்பம் பெரிதானது.

இந்த பின்னணியில் 1971ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் திகதி டாக்காவில் முஜுபுர் ரஹ்மான் ஆற்றிய உரையில்எமது போராட்டம் எமது சுதந்திரத்திற்கானதுஎன கூறிவிட்டார். இந்த வாசகம்தான் கிழக்கு பாகிஸ்தான் சுதந்திரப்போராட்டத்தின் ஆரம்பமாக இருந்தது.

மேற்கு பாகிஸ்தானுக்கு நிலைமை புரிந்துவிட்டது. இராணுவ ஜெனரால் டிக்கா கான் உடனடியாக டாக்கா விரைந்து கிழக்கு பாகிஸ்தானின் ஆளுனராக பொறுப்பேற்றார். ஆனால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க கிழக்கு பாகிஸ்தான் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் 1971 மார்ச் மாதம் 10 முதல் 13ஆம் திகதிகளில் பாகிஸ்தான் சர்வதேச விமானசேவையின் அனைத்து சர்வதேச விமானப் பயணங்களும் இரத்துச்செய்யப்பட்டு எல்லா விமானங்களும் கிழக்கு பாகிஸ்தானை நோக்கி விரைந்தன. அனைத்து விமானங்களிலும் சிவில் உடை பூண்ட இராணுவத்தினர்தான் இருந்தனர்.

இவ்வாறு கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்ற இராணுவத்தினர் அங்கு வீடு வீடாக தீவிர சோதனைகள் மேற்கொள்ள ஆரம்பித்தனர். இந்த பதற்றத்திற்கு மத்தியில் பங்காளி தேசிய முன்னணி தோற்றுவிக்கப்பட்டு பிரதான நகரங்கள் கைப்பற்ற அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் தனது இராணுவ கெடுபிடியை அதிகரித்தது.

இந்த சூழலிலேயே 1971 மார்ச் 20ஆம் திகதி முஜுபுர் ரஹ்மான் பங்களாதேஷ் சுதந்திரப் பிரகடனம் மேற்கொள்ள அவர் பாக். இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு மேற்கு பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் இந்த பிரகடனத்துடன் பங்களாதேஷ் விடுதலை யுத்தம் ஆரம்பமானது. இந்த யுத்தத்தின் விளைவு லட்சக்கணக்கானோர் இந்தியாவில் தஞ்சமடைய ஆரம்பித்தார்கள்.

ஏற்கனவே மேற்கு பாகிஸ்தானுடன் காஷ்மிர் விடயத்தில் முறுகலில் இருக்கும் இந்தியா தனது சந்தர்ப்பம் வரும்வரை காத்திருக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது பாகிஸ்தான் இராணுவம் தான். 1971 டிசம்பர் 3ஆம் திகதி பாகிஸ்தான் விமானப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய விமானத் தளங்களை தாக்க இந்தியப்படை கிழக்கு பாகிஸ்தானில் ஊடுருவி கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து பாக். இராணுவத்தை தாக்க ஆரம்பித்தனர்.

இறுதியில் 1971 டிசம்பர் 16ஆம் திகதி 93,000 பாகிஸ்தான் படையை இந்திய இராணுவம் சுற்றிவளைக்க மேற்கு பாகிஸ்தான் தோல்வியை ஏற்றுக் கொண்டது. பின்னர் பாகிஸ்தான் இராணுவத்தை எந்த விசாரணையும் இன்றி விடுவிக்க இந்தியா ஒப்புக்கொண்டதோடு பங்களாதேஷ் என்ற நாடு உருவானது.

ஒன்பது மாதங்கள் நீடித்த பங்களாதேஷ் யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள், கொலை. கொள்ளை, கற்பழிப்புகள் பதிவானது. அதே போன்று மூன்று மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு கூறியது. ஆனால் அது பற்றி எந்த ஆவணப்படுத்தல்களோ, சட்டரீதியான நடவடிக்கைகளோ இன்றி பல தசாப்தங்களும் கடந்து விட்டது.

இந்த நிலையில் 2008ஆம் ஆண்டு அவாமி கட்சி மூன்றில் இரண்டு வாக்குகளுடன் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து 1971 யுத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசேட நீதிமன்றத்தை அமைத்து விசாரணைகளை ஆரம்பித்தது. ஆனால் இந்த விசாரணை தொடர்பில் எந்த சர்வதேச தரமும் பேணப்படவில்லை என்பதோடு சர்வதேச அளவில் ஆலோசனைகள் கூட பெறப் படவில்லை.

1600 பேர் மீது யுத்த குற்றசாட்டு சுமத்தப்பட்டது. அவாமி கட்சியின் பிரதான எதிரிகளான ஜமாதே இஸ்லாமி கட்சி மற்றும் பங்களாதேஷ் தேசிய கட்சியின் தலைவர்களுக்கு எதிராகவே யுத்தக்குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. குறிப்பாக கூறுவதென்றால் ஜமாதே இஸ்லாமியின் 9 தலைவர்கள் மற்றும் பங்களாதேஷ் தேசிய கட்சியின் இரு தலைவர்கள் மீது யுத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இவர்களில் மூவர் மீது விசாரணை நடத்தித் தீர்ப்பும் அளிக்கப்பட்டு விட்டது. மூவரும் ஜமாதே இஸ்லாமி தலைவர்கள். கடைசியாக கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஜமாதே இஸ்லாமி தலைவர் டெல்வார் ஹுஸைன் சயீதிக்கு யுத்த நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த மரணதண்டனை தீர்ப்பை அடுத்தே பங்களாதேஷில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.

ஜமாதே இஸ்லாமி கட்சி பங்களாதேஷ் சுதந்திர போராட்டத்திற்கு எதிராக பாகிஸ்தானுடன் இணைந்திருக்க வேண்டும் என்ற கருத்தை கொண்டிருந்தது. இதனால் 1973 பங்களாதேஷ் தேர்தலில் ஜமாதே இஸ்லாமிக்கு தடைவிதிக் கப்பட்டிருந்தது. எனினும் 1978 தேர்தலில் அந்த கட்சிக்கு போட்டியிட அனுமதிக்கப்பட்டது.

2001ஆம் ஆண்டு தேர்தலில் ஜமாதே இஸ்லாமி கட்சி 18 ஆசனங்களை வென்று ஏனைய கட்சியுடன் சேர்ந்து கூட்டு அரசை அமைத்தது. தெளிவாக சொல்வதென்றால் ஜமாதே இஸ்லாமி பங்களாதேஷில் ஒரு அரசியல் சக்தியாக படிப்படியாக முன்னேறி வருகிறது.

இந்த பின்னணியிலேயே யுத்த நீதிமன்றம் என்ற கதையெல்லாம் ஆரம்பமானது. இப்படிப்பார்க்கப்போனால் இங்கே நீதி நிலைநாட்டுவதை விடவும் அரசியல் காரணங்கள்தான் அதிகமாக இருக்கிறது.

பொதுப்படையாகச் சொல்வதென்றால் பங்களாதேஷ் எப்போதும் தெற்காசியாவின் அரசியல் உதைப்பந்தாட்ட களமாகவே இருந்து வருகிறது. பிராந்திய அதிகாரி சக்திகள் உதைத்துக் கொள்வதற்கு நல்ல ஆடுகளம் பங்களாதேஷ்தான். இந்த யுத்த நீதிமன்றம் கூட அதிகார சக்திகளின் இன்னுமொரு உதைபந்தாட்டப் போட்டி போலவே தெரிகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com