Contact us at: sooddram@gmail.com

 

மாற்றத்தை ஏற்படுத்தியது அறிக்கை விடவும் பேரணி நடத்தவும் அல்ல

கடும் பிரயத்தனத்திற்குப் பின்னர் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய அரசியல் தலைமையிலான ஆட்சி மாற்றத்தில் தமிழ் பேசும் மக்களாகிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்குப் பெரும் பங்கு உள்ளது. இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்படப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் வெளிப்படை யாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர். அதனால் இந்த மாற்றமான சூழலுக்கு வழிகோலிய இச்சிறுபான்மை மக்களுக்கு இந்த ஆட்சியிலும் நிச்சயம் பங்கு உள்ளது. இப்போது இம்மக்கள் இந்தப் புதிய அரசாங்கத்தின் பங்காளிகளாகவே உள்ளனர்.

நிலைமை இவ்வாறிருக்க சிறுபான்மை மக்களாகிய இவ்விரு சமூக மக்களும் இன்னமும் கடந்த கால அரசாங்கங்களிடம் குறிப்பாக கடந்த ஆட்சியில் ஒவ்வொரு விடயத்திற்கும் போராட்டம் நடத்தியது போன்றே இப்போதும் முயற்சிப்பது ஏன் என்பது புரியாதுள்ளது. இந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்குப் பல உறுதி மொழிகளை வழங்கியே அம்மக்களது ஆதரவைப் பெற்று ஆட்சியையும் அமைத்தது. அவ்விடயத்தில் உறுதிமொழிகளை வழங்கிய ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியாகவே உள்ளனர்.

ஆனால் ஆட்சி மாற்றத்திற்குப் பக்கபலமாக இருந்த சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் சிலர் இன்றும் தமது மக்களது தேவைகளை நிறைவேற்றத் தேவையற்ற ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இவ்வார முற்பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி தேவையற்றதொன்றாகவே கருத வேண்டும். அதனால்தான் அந்த ஆர்ப்பாட்டம் எதிர்பார்த்தவாறு முழுமையாக இடம்பெறவில்லை. ஊடகங்கள் சிலவே அதனைப் பெரிதாகப் படம் பிடித்துக் காட்டியதே தவிர அது தேவையற்றதொன்று என்பதைச் சில கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

ஆட்சியமைக்க ஆணிவேராக இருந்துவிட்டு அறுபது நாட்கள் கடக்க முன்னரேயே மறைமுகமாக அந்த அரசாங்கத்தையும் குறை கூறுவது போன்றதொரு ஆர்ப்பாட்டத்தை நடத்துவது முறையற்றதொன்றாகவே கருத வேண்டும். கடந்த ஆட்சியில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தமை உண்மையே. அவற்றைத் தீர்க்கப் பல போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. சர்வதே சத்திற்கு அதனூடாகப் பல தகவல்களை வழங்க வேண்டியிருந்தது. ஒரு வகையில் அதன் விளைவாகவே ஆட்சியைக்கூட மாற்ற முடிந்தது.

ஆனால் இன்று புதிய அரசாங்கத்திற்கு கால அவகாசம் எதனையும் வழங்காது எடுத்த எடுப்பிலேயே முன்னரைப் போன்று ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தி, அறிக்கை விட்டு சங்கடத்திற்குள் தள்ளுவது முறையாகாது. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி விடயங்களைத் தெளிவுபடுத்தி ஒவ்வொன்றாக வென்றெ டுக்கும் வழிமுறைகளைக் காண வேண்டும். அதுவே தேர்தலில் இணைந்து செயற்பட்டமைக்கு உரிய அர்த்தமாகும். அதனை விடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களையெல்லாம் குறை கூறிக் கொண்டிருந்தால் அது இறுதியில் சிங்கள மக்களது வெறுப்பையே சம்பாதிக்க நேரிடும்.

காணாமற் போனோர் தொடர்பான விவகாரம் இன்று நேற்று எழுந்த ஒரு விடயமல்ல. யுத்த காலத்திலும், இறுதி யுத்தத்தின் போதும், ஏன் அதற்குப் பின்னரான கடந்த ஐந்து வருட காலப் பகுதியிலும் பலர் காணாமற் போயுள்ளனர். இவ்விடயம் இன்று முழுச் சர்வதேசத்திற்கும் நன்கு தெரிந்த ஒன்று. குறிப்பாக இவ்விடயத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கடந்த பத்து வருடங்களாகக் குரல் எழுப்பி வருகிறார். வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இலங்கைக்கு வருகை தந்த இராஜதந்திரிகள் ஊடாக சர்வதேசத்திற்கு இவ்விடயத்தை முதலில் கொண்டுவர அவரே காரணமாக இருந்துள்ளார்.

அத்துடன் இந்தக் காணாமற்போனோர் விவகாரத்திற்கு கடந்த அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனும் கருத்திற்கும் நிச்சயமாக மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் இப்போது எமக்குத் தேவை இவ்வாறு காணாமற் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவ தாகவே இருக்க வேண்டும். அதற்கு இனியும் ஆர்ப்பாட்டம் நடத்திப் பிரயோ சனம் இல்லை. இந்த அரசாங்கத்தில் பங்காளிகளாக தமிழ்க் கட்சிகள் பலவும் இருப்பதால் அரசாங்கத்துடன் இணைந்து விசாரணைகளை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும்.

இதனை விடுத்து யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அது பாதிக்கப்பட்ட உறவுகளை மேலும் கவலை கொள்ளவே செய்யும். இதனைப் போலவேதான் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் விடயத்திலும் நிதானமாகச் செயற்பட வேண்டும். இனியும் கொழும்பில் கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி ஊடக அறிக்கை விட்டுக் கொண்டிருக்க இப்போது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஆட்சியில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்விரு விடயங்களைப் போன்றதுதான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக்கான சபையின் போர்க்குற்ற விசாரணையும் அமைகிறது. விசாரணையை எப்படி, எங்கு நடத்துவது, அறிக்கையை வெளியிடக் கால அவகாசம் கொடுத்தது என்பதெல்லாம் பேசித் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள். இலங்கையில் போர்க் குற்றம் இடம்பெற்றுள்ளது என ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டு விசாரணை நடத்த முன் வந்தமையே பெரிய விடயம். அந்தப் போர்க்குற்றத்தைச் செய்த அரசாங்கம் இப்போது ஆட்சியில் இல்லாதபடியால் விசாரணையை உரிய முறையில் நிச்சயம் மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய முடியும்.

உள்ளக விசாரணையில் திருப்தி இல்லாவிடின் அதனை அரசாங்கத்தினதும் ஐக்கிய நாடுகள் சபையினதும் கவனத்திற்குக் கொண்டு வந்து ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தி அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டுமே தவிர முன்னரைப் போன்று வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவது முறையாகாது. ஏனெனில் இந்த அரசாங்கம் உங்களது ஆதரவில் அமைந்த ஒரு அரசாங்கம். இதனையும் நீங்கள் தேவையில்லாது எதிர்த்தால் நாட்டில் மீண்டும் நீங்கள் குற்றச் சாட்டை முன்வைத்திருக்கும் தரப்பினரே ஆட்சி அமைக்கும் நிலை உருவாகும்.

அத்துடன் தமிழ்த் தரப்பை திருப்திப்படுத்த முடியாது எனும் மனோ நிலையும் சர்வதேசத்தில் ஏற்படும். அதனால் நீங்கள் கொண்டு வந்த இந்த அரசாங்கத்துடன் இணைந்து காரியங்களைச் சாதிக்க வேண்டும். இந்த விடயத்தில் தமிழ்த் தரப்பின் அனுபவம் மிக்க சிரேஸ்ட தலைவர்கள் எடுக்கும் முடிவுகளைச் சில விபரமறியாத தலைவர்கள் விமர்சித்து அவற்றைக் குழப்பியடிக்க முயன்றும் வருகின்றனர். சில தமிழ் ஊடகங்களும் சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் இந்தக் குழப்பியடிக்கும் கைங்கரியத்தில் மீண்டும் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

உண்மையில் இனிவரும் காலத்தில் இத்தகைய செயற்பாடுகளைத் தவிர்த்து ஆக்கபூர்வமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் தமது மக்களைச் சரியான வழியில் வழி நடத்த வேண்டும். அரசியல் கைதிகள் விடயத்தில் புதிய அரசாங்கம் உறுதியளித்தவாறு அவர்களுடன் பேசி மனோ கணேசன் ஏற்கனவே பல படிமுறைகளைக் கண்டுவிட்டார். விரைவில் அதற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். அதுவரை அதனை எவரும் குழப்பாதிருக்க வேண்டும்.

இவ்வாறு சகல விடயங்களிலும் வெற்றி காணலாம். அதற்கு விட்டுக் கொடுப்புக்களுடன் நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். அதற்காக போர்க் குற்றத்தையோ, யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறலையோ அல்லது கொலைகளையோ, காணாமற்போனோர் விடயத்தையோ எவ்வகையிலும் விட்டுக் கொடுக்குமாறு கூறவில்லை. அதனைச் செய்ததாகக் கூறப்படும் அரசாங்கம் இப்போது இல்லை. அதனால் முறையாக விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுங்கள். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது இனியும் அறிக்கை விடவும் பேரணி நடத்தவும் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்பதே எமது கோரிக்கையாகும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com