Contact us at: sooddram@gmail.com

 

கத்தி முனையில் நடக்கும் துனீஷியா

துனீஷியாவின் சுய விபரக் கோவையை புரட்டிப் பார்த்தால், அரபுலகில் மிதவாத நாடு, ஒரே ஜனநாயக எதிர்பார்ப்பு நாடு, மதச் சார்பற்ற கொள்கை கொண்ட நாடு என்று ஏகப்பட்ட நற்சான்றிழ்கள் இருக்கும். என்ன நாற்சான்றிதழ் கொடுத்தாலும் பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகளில் இருந்து துனீஷியாவால் தப்பிவிட முடியாது. இதற்கு நல்ல உதாரணமாக கடந்த புதன்கிழமை தலைநகர் டியுனிஷில் பட்டப் பகலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட கண்மூடித் தனமான தாக்குதலை குறிப்பிடலாம். இராணுவ உடையுடன் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் தலைநகரில் இருக்கும் பிரபலமான பார்தோ அருங்காட்சியத்திற்குள் நுழைந்து கண்ணில் தென்பட்டவர்களை சுட்டிருக்கிறார்கள். இரண்டு மணிநேரம் இந்த தாக்குதல் நீடித்திருக்கிறது. கடைசியில் இரண்டு துப்பாக்கிதாரிகளும் கொல்லப்பட்டனர். துனீஷியா நாட்டின் பஸ் ஓட்டுநர், பொலிஸார் உட்பட மூவர் பலியானார்கள். ஐந்து ஜப்பானியர்கள், நான்கு இத்தா லியர்கள், இரண்டு கொலம்பியர்கள், இரு ஸ்பானியர் மற்றும் பிரிட்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், போலந்து நாட்டைச் சேர்ந்த தலா ஒருவர் என்று ஒட்டுமொத்தமா கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆகும்.

துப்பாக்கிதாரிகளுடன் உதவியாக இருந்த மூவர் தப்பிவிட்டினர். அவர்களை தேடி இரண்டு நாட்களாக துனீஷிய பாதுகாப்புப் படையினர் சல்லடையிட்டனர். நான்கு பேர் வரை கைது செய்யப்பட்டார்கள். தாக்குதலை அடுத்து வழமைபோல உள்நாட்டு தலைவர்களும் வெளிநாட்டு தலைவர்களும் அகராதி புரட்டி கடுமையான வார்த்தைகளைச் சேர்த்து கண்டனங்களை வெளியிட்டனர்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் தமது நாடு இனி இரக்கம் காட்டாது என்று துனீஷிய ஜனாதிபதி பெஜி ஸைட் எஸ்ஸெப்சி கூறியிருந்தார். இந்த தாக்குதலாளிகள் மூர்க்க குணம் கொண்ட ஒரு சிறு தொகையினர் என்று முத்திரை குத்தினார்.

இந்த பயங்கரவாதத் தாக்குதலால், ஜனநாயகத்தை நோக்கிய துனீஷியாவின் பயணம் பின்னடையாது என்று ஐ.நா பாதுகாப்புச் சபை தன் பங்குக்கு கண்டனம் வெளியிட்டது. ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் துனீஷியாவுக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தன.

தாக்குதலுக்கு பெருமையோடு எவரும் உடனடியாக பொறுப்பேற்காத போதும் அடுத்த நாளே தாக்குதல்தாரிகள் அடை யாளம் காணப்பட்டார்கள். தனது20 வயதுகளில் இருக்கும் யாஸின் அபதி மற்றும் ஹதம் கஹச்னோய் என்ற இருவருமே தாக்குதல் நடத்தியவர்களாவர். இவர்கள் அல் கொய்தாவுடன் தொடர்பு பட்டவர்கள்.

துனீஷிய நாட்டு தெருவோர வியாபாரி முஹமது பவ்சிசி நகர சபையோடு ஏற்பட்ட பிராச்சினையால் தீக்குழிக்க அது 2011 ஆம் ஆண்டு அரபு வசந்தத்தையே கிளரிவிட்டது.

இப்படி துனீஷியாவில் ஏற்பட்ட அரச எதிர்ப்பினால் அங்கு இரண்டு தசாப்தமக ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி பென் அலி தப்பியோட ஜனநாயகம் பிறந்தது என்று மக்கள் கூச்சல் இட்டார்கள். துனீஷியாவில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் ஜனநாயகத்தை மாத்திரம் கொண்டு வரவில்லை ஜிஹாதிக்களையும் தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பியது.

துனீஷியா மூட்டிய தீ அரபுலகெங்கும் பதற்றத்தை ஏற்படுத்தி பிராந்திய நாடுகளான லிபியா, சிரியா, எகிப்து என்று தீப்பற்றி எரிந்தது. இதனால் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) போன்ற விகாரமடைந்த ஜஹாதிக் குழுக்கள் தோன்றின. எனவே ஆரம்பித்த வைத்த துனீஷியாவால் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க முடியாது.

உலக வரைபடத்தைப் பார்த்தால் வட ஆபிரிக்காவில் மத்தியதரைக் கடலுக்கு கீழ் மேற்கில் அல்ஜீரியாவும் தெற்கில் லிபியாவும் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கும் குட்டி நாடுதான் துனீ ஷியா. அரபு வசந்தத்திற்குப் பின்னர் அங்கு ஜனநாயக முறையில் இஸ்லாமியவாதிகள் தான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் எகிப்தைப் போன்றே துனீஷியாவிலும் முன்னர் அதிகாரத்தில் இருந்தவர்கள் ஆட்சி நடத்த வழி விடவில்லை.

கடைசியில் அண்மையில் நடந்த பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் இஸ்லாமியவாதிகளை பின்தள்ளி மதச்சார்பற்ற பென் அலி ஆட்சிக் காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் அதிகாரத்தை கைப்பற் றினார்கள். அரபு வசந்தம் ஏற்பட்ட ஏனைய நாடுகளை ஒப்பிடும்போதும் துனீஷியா எவ்வளவோ பரவாயில்லை.

அங்கு அனைத்து தரப்புகளுக்கும் இடையில் ஜனநாயக முறையில் போராடும் பெருமை இருக்கிறது. இதனால் தான் அரபு வசந்தம் ஏற்பட்ட நாடுகளில் அமைதியான ஆட்சி மாற்றம் நிகழ்ந்த ஒரே நாடாக துனீஷியாவை அடையாளப்படுத்த முடியுமாக இருக்கிறது.

என்றாலும் 2011இல் பென் அலி துரத்தப்பட்டத்தில் இருந்து ஜிஹாத் குழுக்களின் செயற்பாடுகள் துனீஷியாவில் தீவிரம் கண்டன. குறிப்பாக சிரியா, ஈராக்கில் கணிசமான நிலத்தை கைப்பற்றிக் கொண்டு பூச்சாண்டி வேலைகள் எல்லாம் செய்யும் இஸ்லாமிய தேசம் குழுவின் தாக்கம் ஏனைய பிராந்திய நாடுகளைப் போன்று துனீஷியாவிலும் தென்பட ஆரம்பித்தது.

சிரியா, ஈராக் உட்பட வெளிநாடுகளில் ஜிஹாத் போராட்டங்களில் 3000 வரையான துனீஷியா நாட்டவர்கள் ஈடுபட்டிருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இப்படிப் போராடச் சென்றவர்களில் கிட்டத்தட்ட 500 பேர் வரை மீண்டும் நாடு திரும்பி இருப்பதாக அதிகாரிகள் பயப்படுகிறார்கள்.

துனீஷியாவில் மதச்சார்பற்றவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் இந்த ஜிஹாத் குழுக்களை கடுமையாக ஒடுக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சி யாளர்கள் அணுகும் முறையால் ஆயுததா ரிகளும் தீவிரமான எதிர்வினையாற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.

மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு பின்னரான தேர்தலில் வெற்றிபெற்ற இஸ்லாமியவாத அன்னஹ்தா கட்சி ஜிஹாத் குழுக்கள் விடயத்தில் மிதமான கொள்கையை கையாள்வாதாக பொழுது போக்கிற்கெல்லாம் குற்றம் சுமத்தியி ருந்தார்கள். இதில் 2013 ஆம் ஆண்டு மதச்சார்பற்ற அரசியல்வாதிகளான சொக் ரியா பிளைத் மற்றும் முஹமது பிரைஹ்மி கொல்லப்பட்ட சம்பவங்கள் அன்னஹ்தா கட்சியரின் தலையில்தான் விடிந்தது.

மறுபக்க துனீஷியா தனது அல்ஜீரிய நாட்டு எல்லையில் அல்கொய்தா இஸ்லாமிய மக்ரெப் கிளையோடு நீண்ட காலமாக போராடி வருகிறது. இந்த இஸ்லாமிய மக்ரெப் குழு கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் துனீஷிய மலைப் பிராந்தியத்தில் இரண்டு இராணுவ சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தி 14 படையினரை கொன்றது. இது 1956ஆம் ஆண்டு பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் துனீஷியாவில் படையினர் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாக பார்க்கப்பட்டது.

கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் அல் கொய்தாவுக்கு எதிராக துனீஷிய படையினர் தலைவழி, வான்வழி தாக்குதல்களை தவிரப்படுத்தி இருந்தனர். அதற்கான பதிலடியாகவே கடந்த ஆண்டு இடம்பெற்ற தாக்குதல் பார்க்கப்பட்டது.

எப்படி இருந்த போதும் பிராந்தியத்துடன் ஒப்பிடுகையில் துனீஷியாவிடமே மிகச் சிறிய இராணுவம் இருக்கிறது. அதேபோன்று ஆயுததாரிகளை எதிர்கொள் வதிலும் இந்த இராணுவத்திற்கு பெரிதாக அனுபவம் இல்லை. இராணுவத்திற்கான பயிற்சி, ஆயுத உபகரணங்கள் எல்லாவற் றுக்கும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிடம் தங்கியிருக்க வேண்டிய சூழலே அங்கு காணப்படுகிறது.

துனீஷியாவின் சலபி இஸ்லாமியவாத குழுவான அன்சார் அல் ஷரியா நாட்டின் குழப்பங்களுக்கு சிறந்த பங்காற்றுகிறது. இதனை தீவிரவாத குழுவாக முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. 2012 செப்டெம்பரில் லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலுக்கு இந்த குழு மீதுதான் குற்றம் சாட்டப்பட்டது.

அன்சார் அல் ஷரியாவின் தலைவர்களில் ஒருவரான அஹமது அல் ருஸ்ஸி ஐ.எஸ்.குழுவை லிபியாவில் நிறுவுவதற்கு உதவியாக சிர்த் நகருக்கு சென்றிருந்தார். ஆனால் அங்கு அவர் கடந்த வாரம் கொல்லப்பட்டார். இது அன்சார் அல் ஷரியா குழுவுக்கு பெரும் பின்னடைவாகும்.

அருங்காட்சியத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அஹமது அல் ருஸ்ஸியின் கொலைக்கு பதிலடியாக இருக்கலாம் என்று கூட துனீஷிய அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

லிபியாவில் கொல்லப்பட்ட அஹமது அல் ருஸ்ஸி துனீஷிய சிறையில் இருந்த வர். பென் அலி பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இவ்வாறு விடுதலையனவர்களில் மீண்டும் தீவிர ஆயுதப் போராட்டத்திற்கு திரும்பியவர் இவர் மாத்திரம்தான்.

லிபியா மற்றும் துனீஷியாவில் இஸ்லாமிய ஆயுதப் போராட்டத்தை தீவிரமாக மேற்கொண்ட ருஸ்ஸிக்கு தீவிரவாதத்தின் கறுப்புப் பெட்டி எனறு புனைப் பெயர் கூட இருக்கிறது. அன்சார் அல் ஷரியா குழு ஆயுதப் போராட்டம் மாத்திரம் நடத்த வில்லை. நாட்டில் மோசமடைந்திருக்கும் வேலையில்லா பிரச்சினை மற்றும் வறுமை நிலையை பயன்படுத்தி மனிதா பிமான சேவைகளும் செய்கிறது. என்றா லும் அன்சார் அல் ஷரியாவின் ஆதரவு வட்டம் மிகக் குறுகியது என்று ஆய்வா ளர்கள் கருதுகிறார்கள்.

இந்த குழு ஐ.எஸ்ஸ¤டனும் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது பிராந்தியத்தில் சுமூகமான ஆட்சி மாற்றத்தை பெற்றிருக்கும் துனீஷியாவுக்கு அச்சுறுத்தலாக மாறியி ருக்கிறது.

துனீஷியாவின் மற்றொரு மிகப்பெரிய தலையிடி அயல் நாடான லிபியா. முஅம்மர் கடாபி பதவி கவிழ்க்கப்பட்டது முதல் லிபியாவின் பிரச்சினை முடிந்த பாடில்லை. யார் ஆட்சியில் இருப்பது என்பது ஐன்ஸ்டைனின் கோட்பாடுகளை விடவும் புரிந்துகொள்ள முடியாத பிரச்சினையாக இருக்கிறது. துனீஷியாவின் நிலைமை எவ்வளவு மோசமென்றால் அங்கு மரக்கறி சந்தை அளவுக்கு ஆயுதச் சந்தைகள் மலிந்து போய்விட்டன.

லிபியாவின் இந்த நிலைமை அருகில் இருக்கும் துனீஷியாவைத்தான் நேரடியாக பாதிக்கிறது. லிபியா மற்றும துனீஷிய இஸ்லாமிய ஆயுததாரிகளுக்கு இடையில் பெரிய தடங்கல் இல்லாத வலையமைப் பொன்று ஏற்பட்டிருக்கிறது. இதனால் எல்லை தாண்டிய ஆயுதக் கடத்தல்கள் மற்றும் ஜிஹாதிக்களின் போக்குவரத்திற்கு குறைச்சலில்லை.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக துனீஷியாவில் அல் கொய்தாவினர் இயங்கி வருகின்றனர். கடந்த 2002 ஆம் ஆண்டு துனீஷியாவின் டெஜர்பா தீவில் நடத்திய தற்கொலை தாக்குதலை அங்கு யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த தாக்குதலில் 14 ஜெர்மன் நாட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். துனீஷிய - லிபிய எல்லைப் பகுதி இப்படி என்றால் மறுபக்கம் துனீஷிய - அல்ஜீரிய எல்லை பகுதியிலும் ஜிஹாத் போராட்டக்காரர்களுக்கு குறைச்சலில்லை.

இங்கிருக்கும் சாம்பி மலைப்பிராந்தியத்தில் இஸ்லாமிய ஆயுததாரிகளுக்கு எதிராக துனீஷிய இராணுவம், அல்ஜீரியப் படையினருடன் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆயுததாரிகளை ஒழித்துக் கட்ட கூட்டு படை நடவடிக்கையை முன்னெடுத்தது. என்றாலும் இன்றுவரை இறுதி வெற்றிப் பிரகடனம் வெளிவந்ததாக தெரியவில்லை. 2013 ஆம் ஆண்டு தெற்கு அல்ஜீரியாவில் எரிவாயு ஆலை ஒன்றில் நடத்திய பாரிய தாக்குதலிலும் பெரும்பாலும் துனீஷிய மற்றும் லிபிய போராளிகள்தான் பங்கேற் றிருந்தார்கள்.

மறுபக்க ஐ.எஸ். குழு துனீஷியாவில் நேரடியாக செல்வாக்கு செலுத்த முயற்சித்து வருகிறது. சிரியா மற்றும் ஈராக்கில் போராடச் சென்ற பெரும்பாலான துனீஷிய நாட்டவர்கள் ஐ.எஸ். குழுவின ருடன்தான் இணைந்திருக்கிறார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை யினர் மீண்டும் நாடு திரும்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 2014 டிசம்பரில் ஐ.எஸ்.வெளியிட்ட வீடியோவில் துனீஷியர்களுக்கு தம்முடன் இணையுமாறு அது நேரடி அழைப்பு விடுத்திருந்தது.

ஏற்கனவே அரபு வசந்தம் என்றும் உள்நாட்டு அரசியல் இழுபறி என்றும் நாட்டில் ஸ்திரமின்மையை சந்தித்து வந்த துனீஷியா அருங்காட்சியகத்தின் மீதான தாக்குதல் மூலம் நாட்டுக்கு கணிசமான வருவாயை ஈட்டித்தரும் சுற்றுலா துறையிலும் பின்னடைவை சந்திக்கும் ஆபத்திற்கு முகம் கொடுத்தி ருக்கிறது.

துனீஷியாவில் சுற்றுலாத் துறையை நம்பியே குறிப்பிடத்தக்க தொழில்துறைகள் இருக்கின்றன.

ஆயுததாரிகளின் இந்த தாக்குதலின் தேவையும் துனீஷியாவின் பொருளாதாரத்தை குழப்புவதாக இருக்க வேண்டும். ஒரு நாட்டுக்கு ஆழமாக ஊடுருவ அந்த நாட்டின் ஸ்திரத்தன்மையை குழப்புவதுதான் முதலாவது வேலையாக இருக்க முடியும். ஐ.எஸ்.குழு அதனை கச்சிதமாக செய்து வருகிறது. எங்கெல்லாம் ஸ்திரமில்லாத ஆட்சி இருக்கிறதோ அங்கெல்லாம் ஐ.எஸ்.பிரசன்னமாகிவிடுகிறது. சிரிய, ஈராக், லிபியா, எகிப்தின் சினாய் என்று ஐ.எஸ். கால்பதித்த இடங்களை பார்த்தால் புரிந்துகொண்டுவிடலாம்.

துனீஷியாவை பொறுத்தவரை 2011 மக்கள் எழுச்சி போராட்டம் அங்கு ஆரம்பித்தாலும் நாடு குழப்பத்திற்குள் செல்லாமல் சுமூகமான ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. இதற்கு பென் அலி பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்த இஸ்லாமியவாதிகளான அன்னஹ்தாவும் குறிப்பிடத்தக்க பங்காற்றி இருக்கிறது.

என்றாலும் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் மதச்சார்பற்ற நிதா துனீஷ் சட்சி நாட்டின் பாரம்பரியங்கள் புரியாமல் அதிக மேற்குல சார்புநிலையை எடுப்பது அங்கு ஜிஹாத் குழுக்களுக்கு சாதகமான சூழலையே ஏற்படுத்தியது. பிராந்தியத்தில் இருக்கும் ஏனைய நாடுகள் போன்று அல்லாமல் துனீஷியாவில் இந்த சலபி ஜிஹாத் குழுக்கள் பல்கலைக்கழக மாணவர்களிடம் அதிக கவர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது அரசின் மேற்குலக சார்பு கொள்கைகளுக்கு எதிர்வினையாகவே பார்க்கப்படுகிறது.

துனிஷியா பிராந்தியத்தில் ஒரு ஸ்திர மான மற்றும் ஜனநாயகம் நாடக இருந்தபோது அதனை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் அது தொடர்ந்து கத்திமுனையில் நடக்க வேண்டிய நிர்ப்பந் தத்திலேயே இருக்கிறது.

எஸ். பிர்தௌஸ் ...-

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com